Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகள் தாயிடம் மோதுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெண் பக்குவமான மனநிலையை இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது. தெய்வத்தின் மறுஉருவமாகவே நடந்து கொள்கிறாள். ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அவளது கையில் தான் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்வது தாய் தான்.

ஒரு தாய் தன் பிள்ளை என்னதான் தவறே செய்தாலும், அவளை அரவணைத்தே செல்வாள். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாமல் இருக்கும் போது தான் அதன் அருமை தெரியும். அதே போல் தான் தாயின் அருமையும்.

பள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள். அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உணவைத் தயார் செய்து கொடுப்பாள். அவளது முதுகைத் தட்டிக் கொடுத்து செல்லமாகத் தூங்க வைப்பாள். ஆனால், ஒருநாள் தாய் வெளியூர் சென்றாலும் கூட, அவள் இல்லாமல் தனிமையில் தவித்துக் கொண்டு இருப்பாள் மகள். அப்போது தாய் அவளுக்குச் செய்த கடமைகளைத் தற்போது `தானே செய்ய வேண்டிள்ளதே’ என்று எண்ணி வருத்தபடுவாள். தள்ளி இருக்கும் போது தான் அம்மாவின் பணிவிடைகள் மகளுக்குத் தெரியத் தொடங்கும்.

பருவ வயது பெண்களுக்கு அம்மா மேல் அவ்வளவாக பிரியம் வருவதில்லை. தன்னை போல நவீனமாக அம்மா யோசிப்பதில்லை. மதம், சமயம், பக்தி, கருத்துக்கள் என்று பழைய நடைமுறைகளுடனே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறாள் என்பதே அவர்களது எண்ணத்திற்கு காரணம்.

தன்னால் சாதிக்க முடியாததை மட்டும் என் மீது சுமத்துகிறாள் என்று தன் தாயிடம் பருவவயது மகள் குறை காண்கிறாள். ரசனைகள், விருப்பங்கள், தேர்வுகள் இவை ஒவ்வொரு தலைமுறையிலும் மாறிக் கொண்டே இருக்கும் என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் எது நல்ல விஷயமோ அதை கடைபிடித்து வாழ்வதே உத்தமம்.

தாயானவள் தன் காலத்தில் எப்படி முழுமை பெற்று நின்றாளோ, அதேபோல் மகளும் அவள் காலத்தில் முழுமை பெற்று நிற்கும் போது பெருமைபட வேண்டுமே தவிர, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளக் கூடாது.

அம்மாவை நிறைவு பெற வைக்க அவள் கூட உட்கார்ந்து உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். உங்கள் சுமையில் பாதியை அவள் இதயத்தில் சுமக்கத் தொடங்கிவிடுவாள். பல குடும்பங்களில் சிக்கல்கள் உருவாக முக்கிய காரணம் போதிய தகவல் தொடர்பு இல்லாதது தான். ஒரு கட்டத்துக்கு பின் அம்மாவிடம் எதையுமே சொல்லாமல் நாமே பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு பெண் பிள்ளைகள் வந்து விடுகிறார்கள். இந்த `பெரிய மனுஷித்தனம்’ தேவையற்ற இடைவெளியை அம்மா விடம் ஏற்படுத்தி விடும்.

பிறந்தது முதல் படிப்படியாக வளர்ந்துவரும் தன் பெண்ணின் தேவையை அம்மாவால் புரிந்து கொள்ள முடியாதா?

`உனக்கு ஒண்ணும் தெரியாது? சும்மாயிரு’ என்று சொல்லும்போது அம்மா மனதளவில் உடைந்து விடுகிறாள். இதுவே பெரிய குறையாக நாளடைவில் அவளுக்குள் வளர்ந்து விடுகிறது. வலி காணும் மனதுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பவள் தாய் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீங்கள் தப்பே செய்து விட்டு வந்தாலும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் தான் தாய். அவளை புரிந்து கொள்வதற்கு தேவை, பொறுமை மட்டுமே.

வாசித்ததில் பிடித்தது

வாத்தியார்

***********

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ..........

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

.

உலகிலேயே தாயின் அன்பிற்கு ஈடாக எதுகும் இல்லை. இணைப்பிற்கு நன்றி வாத்தியார்.

http://www.youtube.com/watch?v=1aF0eSl67jI&feature=related

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் பெண்கள் பூப்பெய்தியதும் தாய்மார்கள் தங்கள் மகளிடம் அதிகம் கட்டுப்பாடு விதிப்பார்கள் அதனால் பெண்கள் தாயை விட தந்தையிடமே அதிக பாசமாக இருப்பார்கள் என்டு

  • கருத்துக்கள உறவுகள்

போன வாரம் தொலைக்காட்ட்சியில் பார்த்தது.. :unsure:

அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் ஒரு ஊர். அங்கே ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு வீட்டிலிருந்து வெடியோசை கிளம்புகிறது. இளம்பெண் ஒருத்தி அலறியபடியே வீட்டைவீட்டு ஓடிவருகிறாள். அயல்வீடு ஒன்றுக்குள் புகுந்தவள் அந்த வீட்டவரின் தொலைபேசியின் மூலம் 9-1-1 அழைப்பை மேற்கொள்கிறார். :huh:

காவல்துறையினர் விரைந்து சென்று வீட்டை முற்றுகையிடுகின்றனர். கதவைத்திறந்துகொண்டு உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி.. படுக்கையறைக் கட்டிலில் ஒரு பெண்ணின் உடல். தலையில் சுடப்பட்ட அடையாளம் தெரிகிறது. இரத்தமும் முளையுமாக சிதறல்கள் கூரைவரை தெளித்திருந்தது. :blink:

கழிவறைக்குப் பக்கத்தில் ஒரு ஆணின் உடல். நெஞ்சில் ஒரு தோட்டா.. :o

காவல்துறை புலனாய்வாளர்கள் விசாரணையைத் தொடங்குகிறார்கள். உயிர் தப்பி ஓடி வந்தவள் இறந்துபோன தம்பதியரின் ஒரே மகள் (16 வயது) எனத் தெரிய வருகிறது. மகளிடம் விசாரித்தபோது, யாரோ சிலரின் பேச்சுச் சத்தம் கேட்டதாகவும், பிறகு வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் கூறுகிறாள்.

அயலவர்களை விசாரிக்கிறார்கள். அப்போது இன்னுமொரு தகவல் வெளிவருகிறது. உயிர்தப்பிய மகளுக்கு மெக்சிக்கோ நாட்டுக் காதலன் (19 வயது) ஒருவன் இருப்பதாகத் தெரியவருகிறது. இந்தக்காதல் பெற்றோருக்குப் பிடிக்கவில்லையெனவும் அவர்கள் கண்டித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

காதலனை விசாரித்தபோது அவன் கொலை நடந்த நேரத்தில் வேறொரு இடத்தில் இருந்ததற்கான சாட்சிகள் இருந்தன. ஆகவே அவன் கொலையாளியாக இருக்க வாய்ப்பில்லை எனத் தீர்மானிக்கிறார்கள்.

கொலை செய்யப்பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை ஆராய்ந்தபோது அது அந்த வீட்டிற்குச் சொந்தமான ஆயுதம் என்பது தெரியவருகிறது. வீட்டில் திருட்டு நடந்திருப்பதற்கான ஆதாரமும் இல்லை.

வீட்டின் குப்பைத்தொட்டியை ஆராய்ந்தபோது இரத்தம் தோய்ந்த கையுறை ஒன்றும், உடை ஒன்றும் கிடைக்கின்றன. அந்த உடைக்குச் சொந்தக்காரி அந்தப் பதினாறு வயது மகள். ஆனால் இரத்தம் அந்த ஆடையின் பின்பக்கத்திலேயே தெளித்திருக்கிறது. ஆதலால் அவள் சுட்டிருக்க வாய்ப்பில்லை.

கையுறையின் மற்றைய சோடி அந்த வீட்டுக்குள் காணப்படுகிறது.

இரு நாட்கள் கழித்து இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. மகள் பலத்த அலங்காரப் பூச்சுகளுடனும் சிரித்த முகமுமாக வருகிறாள். பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

புலனாய்வாளர்கள் அவளை மீண்டும் விசாரித்தபோது அவளது மேற்கையில் தோள்ப்பட்டைக்குச் சற்றுக் கீழே அடையாளம் ஒன்று காணப்படுகிறது. துப்பாக்கியை சுடும்போது ஏற்படும் அடையாளம்.

மகள் கைது செய்யப்படுகிறாள். விசாரணையில் தெரியவந்தது இதுதான். அவள் புத்திசாலி என்பதால், மேலாடையைப் பின்புறமாகப் போட்டுக்கொண்டு முதலில் உறங்கிக்கொண்டிருந்த தாயின் தலையில் ஒரு சூடு. சத்தம்கேட்டு கழிவறையிலிருந்து வெளிவந்த தந்தைக்கு நெஞ்சில் ஒரு சூடு.

சுட்டால் இரத்தம் தெறிக்கும் என்பது தெரிந்ததால், குளிக்கும்போது பயன்படும் குளியல் தொப்பியை அணிந்துகொண்டு சுட்டிருக்கிறாள். அதனால் இரத்தம் தலைமுடியில் ஒட்டவில்லை. பிறகு அந்தத் தொப்பியை கழிவுத்தொட்டிக்குள்ளால் வெளியேற்ரிவிட்டாள். கொலைக்கான காரணம் தாய் தந்தையுடனான தகராறு. :wub:

தாயிற்சிறந்த கோயிலுமில்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மூளையுடன் திட்டமிட்டு கொலைகளை செய்த அந்தப் பெண் ஒரு கணம் தனது பெற்றோரின் அறிவுரையைக் கேட்டிருந்தால் இப்போது கம்பி எண்ண வேண்டி இருந்திருக்காது :wub: .

வாத்தியார்

**********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.