Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம்-கார்த்தி சிதம்பரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம்-கார்த்தி சிதம்பரம்

543_chennai_kartik_chidambaram__11_5001.jpg

சென்னை: இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தில் ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் [^] கமிட்டி உறுப்பினருமான கார்த்தி கூறினார்.

சென்னையில் நடந்த சிதம்பரத்தின் 65வது பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசுவதில்லை. அவர்கள் எல்லை தாண்டி பேசினால் ஒன்று நதி நீர் பிரச்சனை பற்றி பேசுவார்கள் அல்லது இலங்கைப் பிரச்சனை குறித்து பேசுவார்கள்.

காஷ்மீர் பிரச்னை, பொருளாதார தாராளமயமாக்கல், உலக வங்கி பற்றியெல்லாம் திராவிடக் கட்சிகள் பேசுவதில்லை.

தமிழர்களுக்கு தேசியமும் மிக அவசியம் தேவை. தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம். ஏனெனில் இந்தியா செழித்தால் தான் தமிழகம் செழிக்கும்.

இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தில் ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்றார்.

சிதம்பரத்தால் தமிழகத்துக்கே பெருமை-தங்கபாலு:

விழாவில் பேசிய தமிழ்நாடு [^] காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சிதம்பரத்தால் தமிழகத்துக்கே பெருமை. கடந்த 35 ஆண்டுகளாக ப.சிதம்பரத்தின் நல்ல நண்பனாக இருந்து வருகிறேன். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முதன்முதலாக அவரது பெயரை முன்மொழிந்தவன் நான் தான்.

தனது உறவினர்கள் ஜவுளித் தொழிலில் இருப்பதால் தனக்கு ஜவுளித் துறைக்குப் பதிலாக வேறு துறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்ட பண்பாளர் தான் சிதம்பரம் [^].

நிதியமைச்சராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியவர். உள்துறை அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருபவர். விவசாயக் கடன் தள்ளுபடி, உயர் கல்விக்கு கடன் ஆகியவை அவரது சாதனைகளில் சில.

தமிழகத்தில் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை நமது நாடு முழுவதும் விரிவுபடுத்தியதில் முக்கிய பங்கு வகித்த சிதம்பரம், தன்னடக்கம் மிகுந்தவர்.

மிக ஒழுக்கமானவர், மென்மையானவர், உறுதியானவர் என்றார் தங்கபாலு.

http://thatstamil.oneindia.in/news/2010/09/21/indian-important-tamils-karti-chidambaram.html

--------------------------------------------------------------------------------------------------------------------

2931-29918-halwa2.jpg

இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் ஒரு தலைமுறை உருவாகி இருப்பதாக உண்மை தகவலை வெளியிட்ட கார்த்திக் சிதம்பரத்திற்கு ஸ்பெசல் " திருநெல்வேலி அல்லவா" பரிசளிக்க படுகிறது...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தனது உறவினர்கள் ஜவுளித் தொழிலில் இருப்பதால் தனக்கு ஜவுளித் துறைக்குப் பதிலாக வேறு துறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்ட பண்பாளர் தான் சிதம்பரம்

தேர்த்தலில் முதலில் தோல்வியடைந்து (அதுவும் கனணிமயப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பில்) பின்னர் ஏதோ பம்மாத்து பண்ணி தேர்த்தலில் வெல்ல வைக்கப்பட்டவர்.எப்படி இவர் பண்பாளார் ஆவர்? ஒரு கம்முனாட்டியாகும் தகுதி கூட இல்லை. :D:o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தலில் முதலில் தோல்வியடைந்து (அதுவும் கனணிமயப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பில்) பின்னர் ஏதோ பம்மாத்து பண்ணி தேர்த்தலில் வெல்ல வைக்கப்பட்டவர்.எப்படி இவர் பண்பாளார் ஆவர்? ஒரு கம்முனாட்டியாகும் தகுதி கூட இல்லை. :D:o

சிவகங்கையில் வாகை சூடிய சிதம்பரம்:

தட்டிப் பறிக்கப்பட்டதா கண்ணப்பனின் வெற்றி? :)

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=240&rid=12

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திக் சிதம்பரம் அவர்களது தந்தை, இந்தியாவின் உள்துறை அமைச்சர். இந்திய உளவுத்துறையும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில உறவுத்துறையினிலும் அனைத்து நிறுவனங்களுடனும் ஒட்டிக்கொண்டிருக்கும் நடுவன் அரசின் ஒற்றர்களும் வாராவாரம் உள்துறைக்கு இரகசிய அறிக்கையைத் தருவது வழக்கம். அவ்வறிக்கையில் தமிழ்நாட்டில் நிலைமை கொஞசமென்ன நிறையவே கைமீறப்போவதாக அறிக்கை கிடைத்திருக்கலாம். அதனை அப்பன்காரன் மகனுக்கு கதையோட கதையாகத் தெரிவித்திருக்கலாம் அதுதான் கார்த்திக் தமபி "எங்கஅப்பன் குதிருக்குள்ள இல்லை" எண்டமாதிரி மேடையில பேசியிருக்கிறார். அப்போ என்னமோ நடக்குது எல்லாம் நன்மைக்கே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி எழுத மறந்துவிட்டேன்..

டிஸ்கி:

மாநாடு முடிந்தவுடன் கலந்து கொண்ட அனைத்து அகிம்சாவாதி கதர்சட்டை காங்கிரஸ்கார தொண்டர்கள் அனைவருக்கும் சுவையான முனியாண்டிவிலாஸ் பிரியாணி பரிமாறப்பட்டது தாகம் தீர்க்க கட்டீங்கும் மேலும் கலந்து கொண்டைமைக்காக அன்றைய பேட்டா காசு ( தினக்கூலி) ரூபா 500 வழங்கபட்டது... இதில் அடிதடி ஏற்பட்டு கதர் சட்டைகளை காங்கிரஸ் தொண்டர்கள் கிழித்து கொண்டார்கள்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம்-கார்த்தி சிதம்பரம்

காஷ்மீர் பிரச்னை, பொருளாதார தாராளமயமாக்கல், உலக வங்கி பற்றியெல்லாம் திராவிடக் கட்சிகள் பேசுவதில்லை.

அதுசரி, கஸ்மீர் பிரச்சனையை எங்கே உங்கட கட்சி சரியாக அணுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசுக்கு வாக்குப் போட்ட தமிழக மீனவர்களை காக்க...... இந்திய மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ( இதுவரை 500 மீனவர் பலி). இதுவே மற்ற மாநிலத்தில் நடந்திருந்தால் மத்திய அரசின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்திருக்கும். தாங்கள் சொகுசு வாழ்க்கை வாழ மட்டும் தமிழன் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.