Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதயம் அணைந்து விட்டால் உலகம் இருண்டு விடும்

Featured Replies

நான்கு பகுதிகளைக் கொண்ட ஓர் அதிசயக் கோப்பை. இந்தக் கோப்பையில் எவ்வளவு ஊற்றினாலும் ஏற்றுக் கொள்கிறது. நிரம்பி வழிவதே இல்லை. அதனால் இது ஓர் அதிசயக் கோப்பை. இதயம் இயங்குவது இயக்கத்தினால் மட்டுமல்ல. நம்பிக்கையாலும்தான். அடுத்த இதயத் துடிப்பு உண்டு என்று நம்பாதவன் எதையும் செய்யமாட்டான். வாழ்க்கைப் பயணத்தில் நம்பிக்கைதான் வெளிச்ச விதைகளைத் தூவுகின்றது. சூரியன் மறைந்தாலும் மீண்டும் தோன்றுகிறான். விடியலில் நிலாவும் நட்சத்திரங்களும் மங்கினாலும் மீண்டும் பிரகாசிக்கின்றன. ஆனால் இதயத்தில் எரியும் நம்பிக்கை விளக்கு அணைந்தால் எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

உருதுக் கவிஞர் ஆஸி இதற்கு விடை தருகிறார்….

இதயம் அணைந்து விட்டால்

உலகம் இருண்டு விடும்

நிலா நட்சத்திரம் என்று

வானத்தின் எத்தனை விளக்குகள்

இருந்தாலும் என்ன?

என்கிறார் புகழ்பெற்ற ஒரு கஜல் கவிதையில். ஆம் இதயம் என்கிற தீபம் அணைந்து விட்டால் உலகம் இருண்டு விடும். வெளிச்சத்தின் ஒரு கீற்று, ஒரு சிறு சிந்தனைப் பொறியாகப் பற்றிக் கொள்ளும் போது அதுவே இருள் சூழ்ந்து விடாமல் வழிநடத்துகிறது. அதுவே எரியும் சக்தியைக் கொடுக்கிறது.

ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்வின் உயர்வுக்கான ஆற்றலின் ஊற்று ஒன்று இருக்கின்றது. ஆர்வம் இருந்தால் அதை மகத்தான முயற்சியால் பெருக்கெடுக்கச் செய்யலாம். எதைச் சவாலாக ஏற்கிறோமோ அதுவே வெற்றியைத் தருகிறது. வைராக்கிய உணர்வே வாழ்வை உயர்த்துகிறது. அந்த வைராக்கிய உணர்வுதான் இதயத்தில் எரியும் தீபம்.

உலகப் புகழ் பெற்ற தத்துவஞானி சோக்ரடீஸ் அவரைச் சந்திப் பதற்காக ஓர் இளைஞன் வந்தான். “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?” என்று கேட்டான் அவன். எப்படி இளைஞனுக்குப் புரிய வைப்பது என்று யோசித்தார் சோக்ரடீஸ். ஒரு சிந்தனைக் கீற்று உதயமானது. உடனே அந்த இளைஞனிடம் பக்கத்தில் இருக்கும் ஆற்றங்கரைக்கு மறுநாள் வரும்படி சொன்னார்.

இளைஞன் வந்தான். அவனைக் கழுத்தளவு தண்ணீர் இருக்கும் இடம் வரை அழைத்துச் சென்றார் சோக்ரடீஸ். திடீரென்று அவனுடைய தலையைத் தண்ணீருக்குள் வைத்து அழுத்தினார். சில நிமிடங்கள் அப்படியே இருக்கச் செய்தார்.சிறிது நேரத்தில் அவன் மூச்சுத் திணறினான். பிறகு சோக்ரடீஸ் அவன் தலையை விட்டார். சட்டென்று தண்ணீருக்குள் இருந்து தலையை எடுத்த இளைஞன் வேகவேகமாகக் காற்றை உள்ளுக்குள் இழுத்துச் சுவாசித்தான்.

அப்போது சோக்ரடீஸ் “தண்ருக்குள் மூழ்கி இருக்கும்போது உனக்கு எது முக்கியமாகத் தோன்றியது?” எனக் கேட்டார்.எப்படியாவது சுவாசிக்க வேண்டும் என்று தோன்றியது” என்றான் இளைஞன் அப்போது சோக் ரடீஸ் “சுவாசிப்பது எவ்வளவு முக்கியம் என்று நீ அந்த நேரம் எப்படி உணர்ந்தாயோ அதே போன்று வெற்றி பெற வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தால் உனக்கு வெற்றி கிடைக்கும். இதுதான் வெற்றியின் ரகசியம்” என்றார்.

துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு நாம் ஆற்றும் உண்மையான உதவி எது தெரியுமா? அவருடைய சோகங்களைச் சுமப்பது மட்டுமல்ல அதற்குப் பதிலாக அவரிடமே உள்ள பெரும் சக்தியைக் காண்பித்து அவருக்கு அவரே உதவி செய்து கொள்ளப் பயிற்சி கொடுப்பதுதான். தன் சுமைகளைத் தானே தாங்கிக் கொள்வதில்தான் வாழ்க்கையின் உயர்வு இருக்கிறது.

நேர்முகத் தேர்வில் பாய்ந்த வெளிச்சம்!

ஒரு நேர்முகத் தேர்வு. ஒவ்வொருவராக நேர்முகம் நடக்கும் அறைக்குள் மிகுந்த பயபக்தியுடன் போய் முடிவு தெரியாமல் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக ஒர் இளைஞன் அந்த அறைக்குள் நுழைகிறான். அதிகாரி உட்காரச் சொல்லுகிறார்.

இளைஞனின் தன்விபரக் குறிப்பை அதிகாரி படிக்கிறார். அவன் பல துறைகளில் அனுபவம் பெற்றிருந்தான். எந்தப் பணியைக் கொடுத்தால் அவனது திறமையை முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதை அவனிடமே கேட்க முடிவெடுத்தார் அதிகாரி. அதன்படியே இளைஞனிடம் கேட்டார்.

இளைஞன் கொஞ்சமும் பதட்டமில்லாம் “என் திறமைக்குத் தகுதியான வேலையை நீங்களே தீர்மானிக்கலாம்” என்றான்.அதிகாரியும் பதட்டமில்லாமல் கேட்டார். “உன்னை உனக்கு எத்தனை ஆண்டுகளாகத் தெரியும்?”

“25 ஆண்டுகள்.”

அது அவனது வயது

“25 வருடங்களாக உன்னை உனக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் உனக்குள் என்ன திறமை இருக்கிறது என்று உனக்குத் தெரியவில்லை. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே. உன்னைப் பார்த்த எனக்கு எப்படித் தெரியும்?” என்றார்.

அப்போதுதான் அந்த இனைஞன் தனது தவறை உணர்ந்தான். தன்னையே உள்ளுக்குள் உற்று நோக்கினான். தனக்குள் என்ன இருக்கிறது என்பதைத் தேடத் தொடங்கினான். தேடுபவர்கள்தான் கண்டடைகிறார்கள். விவிலியம் சொல்கிற வேத வாக்கியமும் இதுதானே!

உறுதிபடைத்த உள்ளம்தான் சக்தியைக் கொடுக்கிறது. இரவல் அறிவோ, ஒளியோ எப்போதும் துணைக்கு வராது. ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதைக் கண்டுபிடித்தாக வேண்டும். இன்றைய இளைஞர்கள் பலர் தமக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாமலேயே தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.தனக்குள்ளேயே எரியும் தீ இருப்பவர்கள்தான் விழிகளையே விளக்குகளாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கருத்தை உணர்த்தும் ஒரு ஜென் கதை…

ஆரவாரமில்லாத ஒரு காட்டில் ஒரு ஞானி வசித்து வந்தார். அவரைக் காணப் பலர் வந்தார்கள். அவரும் வந்தவர்களிடம் நல்லபடி உரையாடி உபசரித்து அனுப்பி வந்தார். ஒரு நாள் ஒரு சீடன் அவரைப் பார்ப்பதற்காக வந்தான். அன்று முழுவதும் அவரோடு இருந்தான். அவருடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே அவனுக்குத் தெரியவில்லை. அப்போது இருள் சூழத் தொடங்கிவிட்டது.

சீடன் புறப்பட விரும்பினான். ஞானி தடுத்தார். “இரவு இங்கேயே தங்கி நாளை காலையில் புறப்படு” என்றார். சீடன் மறுத்தான் “நான் இன்றிரவே போய்ச் சேர்ந்தாக வேண்டும்” என்றான்.நல்லது போய் வா” என்றார் ஞானி. வாசலுக்கு வந்த சீடன் தயங்கி நின்றான். காரணம் வெளியே இருள் சூழ்ந்திருந்தது. அங்கேயே தங்கவும் மனமின்றி புறப்படவும் துணிவு இன்றிச் சீடன் தடுமாறுவதைக் கண்டார் ஞானி. உள்ளே போய் ஒரு விளக்கை எடுத்து வந்தார் அவர். அதை அவன் கையில் கொடுத்து “இப்போது புறப்படு” என்றார்.

அவருக்கு நன்றி கூறி விடைபெற்றுக் கிளம்பினான் சீடன். அவன் சிறிது தூரம் நடந்ததும் “நில்” என்றார் ஞானி.சீடன் அப்படியே நின்றான். வேகமாக வந்த ஞானி வாயால் ஊதி விளக்கை அணைத்தார். பின்னர் மீண்டும் “புறப்படு” என்றார்.

சீடன் திகைத்தான். ஞானி தொடர்ந்தார். “இரவல் வெளிச்சம் நெடுந்தூரம் துணைக்கு வராது. உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது. உள்ளே துணிவிருந்தால் வெளியே விளக்குத் தேவை இல்லை. உள்ளே பயம் போகாத வரை உன்னால் முன்னேற முடியாது போ… இதே இருள், இதே பாதை இவை எப்போதும் இங்கேயதான் இருக்கும். உன் துணிவு என்னும் ஒளியால் உன் பயணம் தொடரும்” என்று உபதேச மொழிகளை மொழிந்தார்.

தெளிவடைந்த சீடன் இப்போது உறுதியுடன் நடக்க ஆரம்பித்தான். அவரவர்க்கு அகமே விளக்கு. கடைசி வரை அதுதான் வழிகாட்டும். விதை முளைப்பதற்கான ஆற்றல் விதைக்குள்ளேயே இருப்பதைப் போல் வாழ்க்கையின் வெற்றியும் அவரவர்களுக்குள்ளேயே இருக்கிறது.

புதுக் கவிதைகளால் இதய வயலில் நம்பிக்கை விதைகளைத் தூவிய கவிஞர் மு. மேத்தா எழுதுகிறார்….

ஒளி குறைந்த

வீதியில் நடக்கும் போதும்

உன் விழிகளுக்கு

வழி தெரியும்

இதயத்தில் தீபம்

எரிந்து கொண்டிருந்தால்.

ஆம் இளைஞனே! வெளியே மட்டுமல்ல உன் இதயத்திலும் எப்போதும் தீபம் எரிந்து கொண்டிருக்கட்டும்.

http://www.mahaveli.com/?p=13187#more-13187

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கிளி ரைகர்

வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்கு இதை விட வேறு உதாரணங்கள் தேவையில்லை

வாத்தியார்

**********

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல தகவல்கள்! கிளியவன்!! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.