Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் சிங்கள கடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் நூலகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Oct 24, 2010 / பகுதி: செய்தி /

மீண்டும் சிங்கள கடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் நூலகம்

ஏ9 சாலை திறக்கப்பட்டதில் இருந்து தென்பகுதி உல்லாசப் பயணிகள் யாழ்க் குடாநாடு வருவது அதிகரித்துள்ளது. இதனால் பல போக்குவரத்து நெரிசல், கலாச்சாரச் சீரழிகள் ஏற்படும் நிலையில் நேற்று அவர்கள் அடாவடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலையில் யாழ். நூலகத்தை முற்றுகையிட்ட தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தாம் உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது.

இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதனால் நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர்.

இது தொடர்பான அறிவித்தல் பதாகைகள் நூலகத்தில் மாட்டப்பட்டிருந்தன. வழக்கமாக மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரைக்கும் பார்வையாளர்கள் நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட நேரத்தில் பெருந்தொகையான தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் நூலகத்திற்கு வந்திறங்கினர்.

36 பஸ்களில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கானவர்களும் தாம் நூலகத்திற்குள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றனர். ஆனால் அவர்களைக் காவலர்கள் உள்ளே நுழைய அனுமதிக்காததால் முறுகல் நிலை ஏற்பட்டது.

நேற்றைய கூட்டம் குறித்து அங்கு எழுதித் தொங்கவிடப்பட்டிருந்த பதாகைகளைக் கிழித்தெறிந்து சுற்றுலாப் பயணிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். நிலைமையைச் சமாளிக்க அருகில் இருந்த யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உயரதிகாரி உட்பட பொலிஸார் வந்தனர்.

ஆனால் அவர்களைப் பார்த்த அங்கிருந்த ஒருவர் ”நான் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வந்திருக்கிறேன். இதில் நீங்கள் தலையிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என மிரட்டினார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே பொலிஸார் பின்வாங்கிவிட்டனர். அங்கிருந்த இராணுவமும் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டது.

எவர் சொல்லையும் கேட்காத சுற்றுலாப் பயணிகள் விடாப்பிடியாக தாம் உள்ளே நுழைய வேண்டும் என்றனர். இவர்களுடன் நூலக நிர்வாகிகள் பேச்சு நடத்தியதோடு, பாதுகாப்புத் தரப்பினர் யாழ். மாநகர முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசினர். நிர்ப்பந்தங்களும் அழுத்தங்களும் அதிகரித்ததை அடுத்து மாலை 5.30 மணியளவில் தென்னிலங்கைவாசிகள் நூலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

^_^:) :)

டிஸ்கி: நாங்கள் ஓடலாம்.. ஆனால் அவனிட்டை இருந்து ஒளிக்க முடியாது.. :rolleyes:

மலை மணிக்கு உள்ளுக்குள் வந்தவர்கள் என்ன செய்தார்களோ தெரியவில்லை. நிச்சயம் பெருமைப்பட்டு இருப்பார்கள் சிரில் மாத்தியூ, காமினி திஸ்ஸநாயகே ஆகியோரை எண்ணி.

யார் எரித்தார்கள் அந்த நூலகத்தை?

மே 1981 இறுதியில் தேர்தல் தொடர்பான வன்முறையில் சில காவலர்கள் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். தொடர்ந்து, யூ.என்.பி கட்சியின் அமைச்சர்களான சிரில் மாத்தியூ, காமினி திஸ்ஸநாயகே ஆகியோர் தூண்டுதலில் காவலர்களும் குண்டர்களும் சேர்ந்து நடத்திய வெறித் தாக்குதலில் ஜூன் 1, 1981 அன்று நூலகம் எரிக்கப்பட்டுள்ளது. பல பழைமையான சுவடிகள், எண்ணற்ற நூல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக இது விளங்கியது.

இதெல்லம் வெறும் டிரெய்லர் தான், இனித் தான் Main Picture

  • கருத்துக்கள உறவுகள்

.

சுற்றுலா வாற சிங்களவன், நாக விகாரைக்கும், நயினாதீவுக்கும் போய் விட்டு.... இறால் கருவாட்டையும், புழுக்கொடியலையும் வாங்கிக் கொண்டு ஊருக்குப் போறதை விட்டுட்டு.... தமிழ் வாசிக்கத் தெரியாதவங்களுக்கு நூலகத்துக்குள்ளை என்ன வேலை....

.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :D

டிஸ்கி: நாங்கள் ஓடலாம்.. ஆனால் அவனிட்டை இருந்து ஒளிக்க முடியாது.. :D

முற்றிலும் உண்மை. சிறிலங்காவின் புதிய வெளிநாட்டுக்கான புலனாய்வுதுறை நிச்சயமாக புலம் புயர் தமிழரையும் அவர்கள் செயல்பாடுகளையும் சிதைக்கவே.இனிமேல் நம் ஓட இடம் இல்லை ஆகவே இங்கு ( புலம் பெயர் நாடுகளில்) நாம் போராடத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

சுற்றுலா வாற சிங்களவன், நாக விகாரைக்கும், நயினாதீவுக்கும் போய் விட்டு.... இறால் கருவாட்டையும், புழுக்கொடியலையும் வாங்கிக் கொண்டு ஊருக்குப் போறதை விட்டுட்டு.... தமிழ் வாசிக்கத் தெரியாதவங்களுக்கு நூலகத்துக்குள்ளை என்ன வேலை....

.

அவங்கள் வாறது சுற்றுலாவுக்கு இல்லை.தங்கட இனம் எங்கட இன்த்துக்கு செய்த சேவையில் :lol: திருப்த்திப்படத்தான்.இன்னும் ஒரு கொஞ்சக்கதலத்துக்குதான் எங்கட கூச்சல்களும் ஆர்ப்பாட்டங்களும்.எங்கட சனம் விரும்பி தங்கள் நிலங்களை சிங்களவனுக்கு காசுக்கு விக்குதுகள்.அதுல காசு கிடைத்த பெருமை வேற :D மிகுதியை அவன் பலம் கொன்டு ஆக்கிமிரிக்கறான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப்பார்த்தால் யாழ் நூலகத்தில சிங்களப் புத்தகங்களையும் வைப்பார்கள்.

பௌத்த சிங்கள பேரினவாதமும் அதன் திராவிடத்துக்கு எதிரான போக்கும் இதில் உள்ள இரு ஒளிப்பதிவு

இணைப்புக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது

http://in-the-name-of-buddha.blogspot.com/

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

» யாழ். பொதுநூலகம் என்ன உல்லாச புரியா? மாநகரசபை உறுப்பினரின் ஆதங்கம் இது உல்லாசப் பயணிகளைக் கட்டுப்படுத்துமாறும் அவர் பிரேரணை

சமாதான நோக்கத்துக்காகவே உல்லாசப் பயணிகள் பொது நூலகத்தைப் பார்வையிட அனு மதிக்கப்பட்டனர். இதை அவர் கள் துஷ்பிரயோகம் செய்வார்களா யின் அதைப் பார்வையிட அனும திப்பது இமாலயத் தவறாகும். எனவே இதைக் கட்டுப்படுத்து வதற்கு நடவடிக்கை எடுக்கு மாறு மாநகர சபைக்குப் பிரே

யாழ். பொதுநூலகம் என்ன உல்லாச புரியா?

மாநகரசபை உறுப்பினரின் ஆதங்கம் இது

உல்லாசப் பயணிகளைக் கட்டுப்படுத்துமாறும் அவர் பிரேரணை

யாழ்ப்பாணம், ஒக். 25

சமாதான நோக்கத்துக்காகவே உல்லாசப் பயணிகள் பொது நூலகத்தைப் பார்வையிட அனு மதிக்கப்பட்டனர். இதை அவர் கள் துஷ்பிரயோகம் செய்வார்களா யின் அதைப் பார்வையிட அனும திப்பது இமாலயத் தவறாகும்.

எனவே இதைக் கட்டுப்படுத்து வதற்கு நடவடிக்கை எடுக்கு மாறு மாநகர சபைக்குப் பிரேரணை வடிவில் தீர்மானம் முன்மொழி யப்பட்டுள்ளது.

இவ்வாறு யாழ். மாநகர சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தெரி வித்துள்ளார்.

பொதுநூலகம் என்ன உல் லாசபுரியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

யாழ். மாநகரசபை உறுப்பின ரான நான், யாழ். மாநகரசபை யால் பொதுநூலகத்துக்கென நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள் ளேன். இந்த வகையில் நான் விசாரித்தறிந்த விவரங்களை இங்கே சமர்ப்பிக்கின்றேன்.

பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் மருத்துவச் சங்க மாநாடு கடந்த 22ஆம் திகதியிலி ருந்து நேற்றுவரை நடத்த அனு மதி வழங்கப்பட்டது. இந்த மூன்று நாள்களும் மாலை 5.30 மணி யின் பின்னரே பார்வையாளர் களுக்கென நேரம் ஒதுக்கப்பட்டது.

எனினும் நேற்றுமுன்தினம் தெற்கு உல்லாசப் பயணிகள் சுமார் 300 பேர்வரை நூலக வாயி லில் குவிந்தனர். உள்ளே நுழைய விடுமாறு கலவரத்தில் ஈடுபட் டுள்ளனர்.

வாயில் காவலாளி தடுத்த போது கதவின் பூட்டுக்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முற்பட்டவேளை நிலைமை எல்லை மீறவே முதல்வருக்கு அறிவிக்கப்பட் டது. முதல்வர் பொலிஸாருக்கு அறிவித்தபோது பொலிஸார் வருகைதந்து சமரசப் படுத்தியுள் ளனர்.

உடனே உல்லாசப் பயணி கள் இராணுவத்துடன் தொடர்பு கொண்டதன் பிரகாரம் அவர்க ளால் கதவு திறக்கப்பட்டு உல் லாசப் பயணிகளை உள்ளே விட் டனர்.

உள்ளே சென்ற உல்லாசப் பயணிகள் புத்தகங்களை அடுக் கிலிருந்து எடுத்துச் சிதறியடித்து அருவருக்கத்தக்க நடவடிக்கை களில் ஈடுபட்டதாக அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர்.

இக்களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வாசகர்கள் பலர் நூலகத்தைவிட்டுப் பின் பக்கமாக வெளியேறிவிட்டனர். மொத்தத்தில் இது ஒரு ஆக்கிர மிக்கப்பட்ட நாகரிகமற்ற நடவ டிக்கை என அங்கிருந்த வாசகர் கள் விசனம் தெரிவித்தனர்.

நூலகம் என்பது அமைதி யான வழியில் பயன்படுத்தப்படும் ஒரு இடம். அது சுற்றுலாப் பய ணிகளுக்கான உல்லாசபுரியல்ல என்பதைச் சம்பந்தப்பட்டோர் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஒ16)

http://www.uthayan.com/Welcome/full.php?id=4107&Uthayan1288004265

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.