Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழம் - பொதுஅறிவு

Featured Replies

31) தேவி? :roll:

  • Replies 326
  • Views 30.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் வர்ணன்...

வார இதழின் பெயர் சரி...

"எப்பொது" என்பதற்கும் முயற்சியுங்கோவன்....

நர்மதாவின் கேள்வி ஒன்றும் பதில்

வேண்டி நிற்பதை உறவுகள் கவனிக்க...

அதே மாதிரி,21வது,30வது கேள்விகளும்

உங்கள் பதில்களை வரவேற்கின்றன

31) தமிழ்ப் பத்திரிகை உலகத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் முதன் முதலாக நேர்காணல் வழங்கியது எப்போது?அவ் வார இதழின் பெயர் என்ன?

(உதவிக் குறிப்பு- 1985 இல் வழங்கப்பட்ட இது தமிழக வார இதழ் ஆகும்

அனிதா பிரதாப் அவர்களுக்கு வழங்கிய பேட்டி என்று நினைக்கின்றேன். ஆனால் எப்போது என்று ஞாபகம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றமா,

முயற்சிக்கு பாராட்டுக்கள்...

சரியான பதிலான "தேவி" வார இதழ் என்பதை வர்ணன் ஏற்கனவே தந்துவிட்டார்..

எப்போதுதான் என்று சொல்லவில்லை...பின்னர் அதற்கான பதில் வரும் என்று நினைக்கிறேன்..

இல்லாவிட்டால் தரப்படும்...

"தமிழ்ப் பத்திரிகை உலகு" என்று கேள்வி சரியாகத்தானே இருந்தது....

இதைவிட எவ்வாறு தெளிவாகக் கேள்வியைக் கேட்பது..? இதுவரை எனது கேள்விகள் எதுவும் "சும்மா மொட்டையாக"த் தரப்படவில்லை என்பதைக் கவனிக்க;

கேள்விகளைச் சரியாக வாசித்தாலே

பதில்கள் இலகுவாகிவிடும்..

றமா,

முயற்சிக்கு பாராட்டுக்கள்...

சரியான பதிலான "தேவி" வார இதழ் என்பதை வர்ணன் ஏற்கனவே தந்துவிட்டார்..

எப்போதுதான் என்று சொல்லவில்லை...பின்னர் அதற்கான பதில் வரும் என்று நினைக்கிறேன்..

இல்லாவிட்டால் தரப்படும்...

"தமிழ்ப் பத்திரிகை உலகு" என்று கேள்வி சரியாகத்தானே இருந்தது....

இதைவிட எவ்வாறு தெளிவாகக் கேள்வியைக் கேட்பது..? இதுவரை எனது கேள்விகள் எதுவும் "சும்மா மொட்டையாக"த் தரப்படவில்லை என்பதைக் கவனிக்க;

கேள்விகளைச் சரியாக வாசித்தாலே

பதில்கள் இலகுவாகிவிடும்..

வர்ணன் சொன்னபடி தேவி வார இதழ். 1985ம் ஆண்டு தை மாத முதல் வார இதழ். சும்மா முயற்சி செய்கின்றேன். பிழை என்றால் மன்னிக்கவும்.

தென்தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் யார்?

கப்டன் அனித்தா :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருவி,

குறித்த மாவீரரின் பதவி நிலையை மீளச் சரிபாருங்கள்...

மேகநாதன் அண்ணா.. உங்கள் 30வது கேள்விக்கான விடை 'கதிர்காமம்' என்று நினைக்கிறேன் சரிதானா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்....

ஆனால்,உதவிக்குறிப்பிலே சொல்லி இருக்கிறேன்..

தென் தமிழீழ பிரதேசம் என்று....

பார்ப்பம்...

சரியான பதில் விரைவில் வரும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30) "பட்டிப்பளை" எனப்பட்ட கல்லோயா?

அல்லது கந்தளாய்?

சரியாகத் தெரியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவன் உங்கள் முயற்சி

பதிலைக் கட்டியதால்....வாழ்த்துக்கள்..

30) "இராஜ இராஜ சதுர்வேதி மங்களம் " என்ற பெயரில் சோழர் காலத்தில் புகழ் பெற்றிருந்ததும்,இன்று சிங்களமயப் படுத்தப்பட்டு வருவதுமான பாரம்பரியத் தமிழீழப் பிரதேசம் எது?

(உதவிக் குறிப்பு-இது தென் தமிழீழத்தில் உள்ளது)

சரியான பதில் "கந்தளாய்"

32) விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் படையணியின் முதல் தாக்குதல் தளபதி யார்?

33) பாரிஸ் நகரில் வைத்து சிங்கள அரசின் கைக்கூலிகளால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிய கப்டன் கஜன், வகித்த பொறுப்பு என்ன?

34) சந்திரிகாவின் ஆட்சிக் கலத்தில் சிறீலங்கா தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றிற்கு விடுதலைப் புலிகள் உரிமை கோரினார்கள். அது எந்தத் தாக்குதல் தாக்குதல்? எப்போது நடைபெற்றது? எங்கு நடைபெற்றது?

  • கருத்துக்கள உறவுகள்

34) கட்டுநாயக்காத் தாக்குதலா? ஆனால் இது கொழும்பு எல்லைக்குள்ளா வருகின்றது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

32) மேஜர் சோதியா?

33) ஈழமுரசின் பத்திரிகை ஆசிரியர்

34) 1996 இல் கொழும்புத் துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்

------------------------------

இவற்றில் 32 ஆவதற்கு பதில் தவறென்றால் மாற்றுப்பதில் வசந்தா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்து எனது கேள்விகள் மூன்று.

35) 01.02.1998 அன்று கிளிநொச்சிப் படைத்தளத்தைக் கைப்பற்றும் நோக்கில் விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலின்போது கிளிநொச்சிப் படைமுகாம் மீது தாக்குதல் நடத்தவென வாகனத்திற் கரும்புலிகளாகச் சென்று வீரச்சாவடைந்த மாவீரர்கள் யார்?

36) உயிர்ப்பூ திரைப்படத்தில் நாயகனாக நடித்த நகுலன் பின்னர் கரும்புலியாக வீரச்சாவடைந்தது தெரிந்ததே. எப்போது எத்தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார்?

37)தமிழகத்து முதுபெரும் பாடகர் டி.எம். செளந்தர ராஜன் அவர்கள் பாடிய தாயகப் பாடல் எது?

நல்லவன் உங்களின் விடைகள் அனைத்தும் சரியாவையே, பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதில் வராத 21வது கேள்வியும் சரியான பதிலும்

21)"தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்" அக்டோபர் 10 இல் ( முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் நினைவு நாள்) எந்த ஆண்டு முதன் முதலாக எழுச்சி கண்டது?

1995 இல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுமையான சரியான பதில் கிடைக்கப்பெறாத 31வது கேள்வியும் சரியான பதிலும் வருமாறு...

31) தமிழ்ப் பத்திரிகை உலகத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் முதன் முதலாக நேர்காணல் வழங்கியது எப்போது?அவ் வார இதழின் பெயர் என்ன?

(உதவிக் குறிப்பு- 1985 இல் வழங்கப்பட்ட இது தமிழக வார இதழ் ஆகும்)

1985 அக்டோபர் 16 ஆந் திகதி வெளியாகிய "தேவி" என்ற தமிழக வார இதழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்வரும் கேள்விக்கு குறித்த திட்டத்தின்

ஆங்கில எழுத்து இதுவரை தரப்படவில்லை...

ஆனால் அது முக்கியம்.

ஏனெனில்,இத் திட்டத்தின் கீழ்

(பல்வேறு பிரிவுகள்..ஆங்கில எழ்த்துக்கள்)

பல்வேறு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன....

19)வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தமிழர் தாயக ஆள்புலக் கோட்பாட்டைத் துண்டாடும் வகையில் "வெலி ஓயா" என்ற பெயரில் தமிழரின் "இதய பூமி" யான "மணலாறு" எத் திட்டத்தின் கீழ் சிங்கள மயமாக்கப்பட்டது?

( குறித்த திட்டத்தின் சரியான ஆங்கில எழுத்துத் தரப்பட வேண்டும்)

மகாவலி "L" வலயத் திட்டம்

36) உயிர்ப்பூ திரைப்படத்தில் நாயகனாக நடித்த நகுலன் பின்னர் கரும்புலியாக வீரச்சாவடைந்தது தெரிந்ததே. எப்போது எத்தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார்?

1996 ம் வருடம் கடைசிப்பகுதியில். (முல்லைத்தீவுத் தாக்குதலுக்கு முன்னர்.) திருமலைக்கடலில் மட்டு அம்பாறைத் தளபதியைப் பாதுகாக்கும் நோக்கில் பாதுகாப்பிற்காகச் செண்ற கப்ரன் நகுலன், கப்ரன் கண்ணாளனோடு டோறாரகப் படகைத்தகர்த்து வீரச்சாவடைந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலா,

உங்கள் விடை சரியன்று. இன்னும் முன்னதாகவே நடந்தது.

36) உயிர்ப்பூ திரைப்படத்தில் நாயகனாக நடித்த நகுலன் பின்னர் கரும்புலியாக வீரச்சாவடைந்தது தெரிந்ததே. எப்போது எத்தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார்?

1995 மார்ச் 9 இல் திருகோணமலை புல்மோட்டைக்கடலில் வைத்து டோராப் படகினைத்தாக்கி வீரச்சாவடைந்தார்.

photo474hx.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

35) 01.02.1998 அன்று கிளிநொச்சிப் படைத்தளத்தைக் கைப்பற்றும் நோக்கில் விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலின்போது கிளிநொச்சிப் படைமுகாம் மீது தாக்குதல் நடத்தவென வாகனத்திற் கரும்புலிகளாகச் சென்று வீரச்சாவடைந்த மாவீரர்கள் யார்?

37)தமிழகத்து முதுபெரும் பாடகர் டி.எம். செளந்தர ராஜன் அவர்கள் பாடிய தாயகப் பாடல் எது?

ஆகிய நல்லவனின் இரு கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் வராது இருக்கின்றன..

இவை வந்தால்

அல்லது நல்லவன் சரியான பதில்களைச் சரிவர அறியத்தந்தால்

புதுக் கேள்விகளுக்குப் பயணிக்கலாம்..

35 கேள்விக்குரிய விடை

கரும்புலி கப்டன் நெடியோன்

குலேந்திரம் ஞானசேகர்

தெல்லிப்பளை - யாழ்ப்பாணம்

கரும்புலி கப்டன் அருண்

அம்பிகாவதி அருட்சோதி

நாரந்தனை - யாழ்ப்பாணம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவன் பதில்களை உறுதிப்படுத்துங்கோவன்.நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.