Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த கிருஸ்ணா சந்திப்பு நடைபெற்றது.

Featured Replies

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சற்றுமுன் ஜனாதிபதி இல்லத்துக்கு சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணாஇ இருதர‌ப்பு உறவை மே‌ம்படு‌த்துவது தொட‌ர்பான அ‌ம்ச‌ங்க‌ள் மற்றும் த‌மிழ‌ர்க‌ள் மறுகுடியம‌‌ர்‌த்துத‌ல் கு‌றி‌த்து ‌விவா‌தி‌‌க்க உ‌ள்ளா‌ர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடு‌த்து இல‌‌‌ங்கை ‌பிரதம‌‌ர் டி.எம்.ஜயர‌ட்னவை ச‌ந்‌தி‌த்து பேசு‌ம்‌ ‌கி‌ரு‌ஷ்ணாஇ ‌பி‌ன்ன‌ர் அ‌ம்பாந்தோட்டை செ‌ன்று இ‌ந்‌திய துணை தூதரக அலுவலக‌த்தை ‌திற‌ந்து வை‌க்க உ‌ள்ளா‌ர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சற்றுமுன் ஜனாதிபதி இல்லத்துக்கு சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணாஇ இருதர‌ப்பு உறவை மே‌ம்படு‌த்துவது தொட‌ர்பான அ‌ம்ச‌ங்க‌ள் மற்றும் த‌மிழ‌ர்க‌ள் மறுகுடியம‌‌ர்‌த்துத‌ல் கு‌றி‌த்து ‌விவா‌தி‌‌க்க உ‌ள்ளா‌ர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடு‌த்து இல‌‌‌ங்கை ‌பிரதம‌‌ர் டி.எம்.ஜயர‌ட்னவை ச‌ந்‌தி‌த்து பேசு‌ம்‌ ‌கி‌ரு‌ஷ்ணாஇ ‌பி‌ன்ன‌ர் அ‌ம்பாந்தோட்டை செ‌ன்று இ‌ந்‌திய துணை தூதரக அலுவலக‌த்தை ‌திற‌ந்து வை‌க்க உ‌ள்ளா‌ர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ நாதம்

அப்போ..... யாழ்ப்பாண துணைத் தூதரகத்தை யார் திறப்பது?

அப்போ..... யாழ்ப்பாண துணைத் தூதரகத்தை யார் திறப்பது?

சீனா ஹாபர் திறக்கும் போது இந்தியா துரதகமாவது திறக்க வேண்டாமா...??

  • கருத்துக்கள உறவுகள்

சீனா ஹாபர் திறக்கும் போது இந்தியா துரதகமாவது திறக்க வேண்டாமா...??

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பது போல்.......

அவனவன் தங்கடை வசதிக்கேற்றதைத் தானே..... திறக்க முடியும்.

பல்லுள்ள சீனா, பகோடா சாப்பிடுது. அதைப்போல இந்தியாவால் செய்ய முடியாது தானே.....

  • தொடங்கியவர்

மேலதிக செய்திகள்........... http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க தகுந்த தருணம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவர் என இந்தியா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் திறக்கப்படும் இந்திய தூதரக கிளைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடையுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், வீடமைப்பு மற்றும் அரசியல் தீர்வு என்பவைக் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

mahi%20kirushna.jpg

மாவீரர் நாளன்று நாளை நல்ல நாளாம். நாளை 27 நவம்பர் யாழ்ப்பாணத்தில் தூதரகத்தை திறக்கிறாராம் கிருஸ்ணா.. கூட்டமைப்பு எம்.பிக்கள் மற்றும் டக்கு ஆகியோரும் கட்சி வேறுபாடுகளை மறந்து பங்குபற்றுகின்றார்களாம்.

Edited by உமை

யார் பாவம் செய்தாரோ அவரே பிராயச்சித்தம் செய்ய வேண்டும்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.இந்திய உதவித் தூதரகத்தை திறந்து வைப்ப தற்காக யாழ்ப்பாணம் வரும் அமைச்சர் கிருஷ்ணாவிடம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு ஏராளம்.

குசேலர்,கிருஷ்ண பரமாத்மாவை எத்துணை எதிர்பார்ப்புக்களுடன் சந்தித்தாரோ அதனை விடப் பல மடங்கு அதிகமான எதிர்பார்ப்பை யாழ்ப்பாணம் வரும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். பட்ட துன்பம் கோடிக் கணக்கு.அதைவிட, தமிழன் என்ற மிடுக்கு குலைந்து மானம் போய், வாய் மூடி மெளனிகளாக இருக்கும் துயரம் மறுபுறம். உலகில் எந்த இனத்திற்கும் இந்தக் கதி ஏற் படக்கூடாது என்ற அளவில் நாங்கள் பட்ட துயரம் ஏராளம்.ஆரோக்கியமான அரசியல் தலைமை இல்லை.ஒற்றுமை இல்லை.எங்கள் இளம் சமூகத்திடம் இப்போது இனப்பற்று இல்லை. எல்லாம் களியாட்டம்; வெறியாட்டம்; கைத் தொலைபேசியில் விரசம்.

ஆ! கடவுளே !என்ன மாதிரி இருந்த இனத் திற்கு இப்படி வாழ்மானம் வந்ததே என்று தலை யில் அடித்து கிருஷ்ணா! கிருஷ்ணா! கற்றைக் குழல் பிடித்து,

கோவிந்தா! அற்றைக்கு திரெளபதி மானம் காத்த நீ இற்றைக்கு எங்களை காத்தருள மாட்டாயோ என்று ஏங்கும் வேளையில், கிருஷ்ண நாமத்தில் இந்திய தேசத்தின் வெளியுறவு அமைச்சர் யாழ்ப்பாணம் வருவது மிகவும் முக்கியமான விடயமே. யாழ்ப்பாணம் வரும் கிருஷ்ணாவிடம் எங்கள் பிரச்சினையை எடுத்துக் கூறுவோம்.

ஐயா கிருஷ்ணா! பாவம் செய்தவனே அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென ‘மனுஸ்மிருதி’ வேதம் சொல் கிறது.ஆகவே கிருஷ்ணா! இந்திய தேசம் தான் அந்தப் பிராயச்சித்தத்தைச் செய்யவேண்டும். இந்தியாவைத் தவிர இலங்கைத் தமிழரின் பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாது என்ற நிஜத்தை இடித்துரைப்போம். கிருஷ்ணாவின் மனம் இரங்கட்டும். சோனியா அம்மையார் மனம் மாறட்டும்.

அட ! கூடவே கலைஞர் கருணாநிதி கடிதம் எழுதட்டும்.தமிழர் பிரச்சினை தீர்ந்தால்தான் இலங்கைத் தீவில் அமைதியும் சாந்தமும் நிலைபெறும் என்ற பேருண்மையை பெளவியமாகக் கூறுவோம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=12607

  • தொடங்கியவர்

தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியான இராணுவ செல்வாக்கு, சிங்கள குடியேற்றம் என்பன தமிழர்க்கு மட்டுமல்ல அது இந்திய நலன்களை கூடவே பாதிக்கும்.

வடக்கு கிழக்கு சிங்களமயமாக்கப்படும் போது இந்தியாவின் எதிராளிகளின் செல்வாக்கு ஓங்கும் என்பதில் இந்தியா எவ்வளவு கரிசனை கொண்டுள்ளது.

தமிழர்கள் பண்பாடு சிங்கள, சீன, பெளத்த வாதத்துடன் எப்போதும் ஒட்டாது.. ஆகவே இந்த விடயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதிலாவது இந்தியா சிந்திக்குமானால் தமிழர் தாயகத்தில் தமிழர்க்கான சுயமான கட்டமைப்பு உருவாக்க ஒன்றை இந்தியா ஆதரவு கொடுக்க வேண்டும். இதுதான் இந்தியாவிற்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றுமே புரியல

பூனைக்கும் எலிக்குமிடையேயான பிரச்சினையில் நாய்க்கு என்ன வேலை.....???

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றுமே புரியல

பூனைக்கும் எலிக்குமிடையேயான பிரச்சினையில் நாய்க்கு என்ன வேலை.....???

அப்படிச் சொல்லப் படாது, விசுகு.

நாய் வந்தால்...... பூனை ஓடும், எலி தப்பும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருவருமே தமிழர்களுக்கு எதிரிகள்?

இதில்...

என்ன ஆதாயத்தை ஈழமக்கள் எதிர்பார்க்கமுடியும்?

படத்தில் மகிந்தவின் ஆள் நிருபமா மகிழ்ச்சியாகவும், முதல் பிச்சை வாங்க வந்துள்ள கிருஷ்ணா படபடப்புடன் இருப்பதையும் உணர முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் மகிந்தவின் ஆள் நிருபமா மகிழ்ச்சியாகவும், முதல் பிச்சை வாங்க வந்துள்ள கிருஷ்ணா படபடப்புடன் இருப்பதையும் உணர முடிகிறது.

mahi%20kirushna.jpg

படத்தில், எல்லோரும் தங்கள் மடியில் கை வைத்துள்ளார்கள்.

பொந்துக்கு பயந்து, விந்தை கட்டுப்படுத்துகிறார்களா....?

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.