Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமா? படிப்பா? விடுதலைப் புலிகளுக்கு இடமில்லை ‐ இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சுவரொட்டி அச்சுறுத்தல்‐

Featured Replies

ஈழமா? படிப்பா? விடுதலைப் புலிகளுக்கு இடமில்லை என்று யாழ் பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தும் சுவரொட்டிகளால் பதற்றம் ‐ இராணுவப் புலாய்வினரே ஒட்டியுள்ளனர்

இன்று காலை விடிந்த பொழுது ஈழமா? படிப்பா? என்ற கேள்விக்குறிகளுடன் விடுதலைப் புலிகளுக்கு இடமில்லை என்று அச்சுறுத்துகிற சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பல்கலைகழகச் சூழலில் கடும் பதற்றமும் குழப்பமும் நிலவுவதாக குளோபல் தமிழ் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவ விடுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. பல்லைக்கழக பாதுகாப்பு விதிமுறைகளை தாண்டி வந்து மிக மர்மமான முறையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்துக்காக என்ன நடந்தது? என்ற கேள்விக்குறியுடன் அமையும் குறித்த சுவரொட்டி ஈழத்திற்காக கண்ணீர் அல்லது இரத்தம் விட்டது என்பதைப் போலவும் ஈழத்திற்காக வீடு எரிந்தது என்பதைப் போலவும் அர்த்தத்துடன் வரையப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மாணவர் ஒன்றியம் என்றும் யாழ் பல்கழகம் 2010 என்றும் இந்த முகவரியிடப்பட்டடு ஒட்டப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதே நாட்களில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த 14 பேருக்கு சுவரொட்டி மூலம் கொலை அச்சுறுத்தல் நேரடியாக விடுக்கப்பட்ட பின்னர் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களில் புதிய பிரதிநிதிகள் பதவி ஏற்பதையும் மாவீரர் நாளையும் முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்துவதற்காக இப்படியான சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக தெரிவிக்கும் மாணவர்கள் இந்த சுவரொட்டிகளை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரே ஒட்டியதாக குற்றம் சுமத்துகிறார்கள் என்றும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

www.globaltamilnews.net

படிப்பும், ஈழமும் தான் தமிழரின் தேவை.

இந்தப் பின்னணியில் சுய ஆதாயத்துக்காக காட்டிக் கொடுக்கும் எட்டப்ப மனோபாவமுடைய "கூழ்" யாழ் பல்கலையினுள் நுழைந்தால் நிலைமை மேலும் மோசமாகும்.

1972 தரரதப்படுத்தல் தொடங்கி இன்றுவரை சிங்களம் எமது மாணவர்களை அடக்கவும் அழிக்கவும் முனைந்துகொண்டே உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.