Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் கனடியத் தமிழ்ப் பெண்மணி.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் கனடியத் தமிழ்ப் பெண்மணி.

2010ம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் சரித்திரம் படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் ஆகும். மார்க்கம் 7ம் 8ம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் டிசம்பர் 6ம் திகதி தனது சத்தியப் பிரமாணத்தினை எடுத்துக் கொண்டார். வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களினைக் கொண்ட திருவள்ளுவரினால் எழுத்தப்பட்ட திருக்குறளினைக் கொண்டு இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை இங்கு குறிப்பிடத் தக்கது மாத்திரமன்றி மிகவும் பாராட்டப் படக் கூடியதாகும்.

மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர்கள்இ பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் பங்கு கொண்டனர். ‘என்மீது நம்பிக்கை கொண்டு என்னைத் தெரிவு செய்த பெற்றோர்இ மார்க்கம் வாழ் மக்கள் அனைவருக்கும் நன்றியுடன் இருப்பதுடன் என்மீது நீங்கள் அனைவரும் வைத்துள்ள நம்பிக்கையினை எனது ஆதாரமாகக் கொண்டு என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு சிறந்த கல்விச் சூழலை ஏற்படுத்துவேன். அதுமட்டுமல்லாது எங்கள் சமூகத்தினைச் சேர்ந்த பெற்றோருக்கும் பாடசாலைச் சமுகத்தினருக்கும் ஓர் நல்லுறவினையும் தொடர்பினையும் ஏற்படுத்த நான் ஒரு பாலமாக இருப்பேன்’ என தனது உரையில் செல்வி யுணிற்றா நாதன் குறிப்பிட்டார்.

செல்வி யுணிற்றா நாதன் 60 % ற்கும் அதிகமான வாக்குகளினால் இத் தேர்தலில் வெல்வதற்கு காரணமாக இருந்தது எமது சமுகத்தினரிடம் மாத்திரமன்றி பல்லின சமுகத்தினரிடையேயும் அவருக்கு இருந்த மதிப்பும் அனைவருக்கும் உதவும் சேவை மனப்பான்மையுமே என்றால் மிகையாகாது. ‘பல்லின சமுகத்தினராலும் யுணிற்றா நாதன் அடையாளம் காணப்படுவதும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் உதவிக் கரங்களை நீட்டி எந்த நேரத்திலும் உதவும் பாங்குமே இவருடைய வெற்றிக்கு மூலகாரணம் என மார்க்கம் வாழ் பிரசையும் சமூக சேவகியுமான மீனா லகானி குறிப்பிட்டார்.

நான்கு வருட சேவைக்காலத்தினைக் கொண்ட இப்பதவி நவம்பர் 30 2014ல் முடிவடையும். இப் பதவிக் காலத்தில் இதற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கல்வி சம்பந்தமான மாற்றங்கள்இ படிமுறைகள்இ கல்வித் தரம் போன்ற விடயங்களிலும் மற்றும் வெவ்வேறு சமுகத்தவர்களுக்கும் கல்விச் சபைக்கும் ஒரு பாலமாகவும் தொழிற்படுபவர்கள்.

http://meenakam.com/2010/12/08/15517.html

Trustee-Juanta-Nathan03.jpg

கனடிய சட்டப்புத்தகத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்திருந்தால் நல்லாயிருந்திருக்கும் ......திருக்குறள் மீது சத்தியபிரமாணம் செய்து என்ன சாதிக்க முடியும்...தமிழ்நாட்டிலயே கண்டு கொள்ளமாட்டங்கள் திருக்குறளை

திருக்குறள் மீது கைவைத்து சத்தியப்பிரமாணம் செய்தது உண்மையில் நல்லதோர் முன் உதாரணம்.

" வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களினைக் கொண்ட திருவள்ளுவரினால் எழுத்தப்பட்ட திருக்குறளினைக் கொண்டு இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை இங்கு குறிப்பிடத் தக்கது மாத்திரமன்றி மிகவும் பாராட்டப் படக் கூடியதாகும். "

கனடிய சட்டப்புத்தகத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்திருந்தால் நல்லாயிருந்திருக்கும் ......திருக்குறள் மீது சத்தியபிரமாணம் செய்து என்ன சாதிக்க முடியும்...தமிழ்நாட்டிலயே கண்டு கொள்ளமாட்டங்கள் திருக்குறளை

அங்கு தமிழையே கண்டு கொள்ள மாட்டாங்கள் பிறகு எப்பிடி,,,,,,,,,,,,,,,

சில வேளை மகாவம்சத்தில சத்திய பிரமாணம் எடுத்திருந்தா எதாவது சாதிக்கலாமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறந்ததொரு ஆரம்பத்தைத் தந்துள்ளார். புலம்பெயர்ந்து வாழ்வைத் தொடங்கியுள்ள எம்மால் மதிக்கப்படும் தமிழர் அற நூலாகிய 'திருக்குறள்' மீது வைத்துள்ள சத்தியப் பிரமாணம் இவரது தனித்துவமான உளப்பாங்கை வெளிப்படுத்தியுள்ளது.

பாராட்டுகிறோம். பெருமைப்படுகிறோம்.

தொடரட்டும் மக்கள் தொண்டு!!

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பத்தைக் கொடுத்துள்ளார்..! நன்றிகள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொர் எடுத்துக் காட்டாய் அச் சகோதரி விளங்கியுள்ளார்.அச் சகோதரிக்கு எனது பாராட்டுகள்

... செய்கிறதை சரியாக/உன்மையாக.சத்தியவழி செய்தால் ... குறளும் தேவையில்லை, பைபிளும் தேவையில்லை, குர் ஆனும் தேவையில்லை ...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி! :icon_idea:

இவர் எனது தொகுதிதான் .இவருக்கு தான் நானும் வாக்கு போட்டேன்.ஆனால் கட்டுரையாளரின் பில்ட் அப் கொஞ்சம் கூடிவிட்டது.ஏற்கனே தமிழர் ஒருவர்தான் இதே தொகுதியில் கல்விச்சபை உறுப்பினர் ஆக இருந்தார்.நீதன் சான்.இம்முறை அவர் கவுன்சிலருக்கு போட்டியிட்டதால் யுனீத்தா போட்டியிட்டார்.நீதனின் கல்யாணவீட்டிற்கு போனவர்களுக்கு உந்த திருக்குறளை அன்பளித்தார்கள்.முதலில் திருக்குறளில் பதவி பிரமாணம் எடுக்க அனுமதித்த சிற்றிக்கும்,அதை நடைமுறைபடுத்திய யுனித்தாவுக்கும் வாழ்த்துக்கள்.

ஒரு இயக்கம் கூட தமது உறுப்பினர்களை திருக்குறளிலும்,கொம்னிஸ்ட் மனுபஸ்டோவிலும் சத்தியப் பிரமாணம் எடுக்கவைத்தாதாக சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்ன பில்டப் பண்ணப்பட்டுள்ளது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.