Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஞ்சா நெஞ்சன் எங்கள் ஜனாதிபதி - பீரிஸ் புகழாரம்

Featured Replies

"கீத்ரோ' விமான நிலையத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டிருந்ததுடன் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை நான் என் காதால் கேட் டேன். அதில் பல பின்னணி இருக்கி ன்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அச்சு றுத்தல் இருக்கின்றது என்று வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தால் ஜனாதி பதியினால் எந்தவொரு வெளி நாட்டிற்கும் செல்ல முடியாது. ஆனால் ஜனாதிபதி அஞ்சாதவர் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடை பெற்ற வெளி விவகார அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதியின் பயணத்தை தடுப்பதற்கும் பெரிய பிரித்தானியாவில் அவரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன அந்த சவால்களை ஏற்றுக் கொண்டே ஜனாதிபதி பயணித்தார்.

ஜனாதிபதியை கைது செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. சவாலை ஏற்றுக் கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அவர் 50 சதத்திற்கு கூட கணக்கில் எடுக்கவில்லை. அச்சுறுத்தலுக்கு இனங்காத சிறைச்சாலைக்கு செல்வதற்கும் தயாரான துணிச்சல் மிக்க தலைவர் அவராவார்.

புலிகள் பெரும் தொகையை செலவழித்து பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருந்திரளான புலி ஆதரவாளர்களை திரட்டுவதற்கு முயற்சித்தனர். எனினும் அங்கு 600 பேர் மட்டுமே இருந்தனர். அதில் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை என் கண்ணால் நான் கண்டேன் அதில் பல பின்னணி இருக்கின்றது. போக வேண்டாம் என ஜனாதிபதிக்கு பலரும் ஆலோசனை வழங்கினர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கும் பாதயாத்திரைக்கும் அஞ்சி ஓடுபவன் நாள் அல்ல என்று தெரிந்து கொண்டே தீர்மானத்தை எடுத்தார்.

யார் வெற்றி, யார் தோல்வி என்று பார்க்க முடியாது. ஒக்ஸ்போட் பல்கலைக்கழக சங்கத்தின் கடிதத்தை பார்க்க வேண்டும். பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு அழைப்பிதழை வாபஸ் பெற்றுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சுறுத்தியே ஜனாதிபதியின் உரையை இடை நிறுத்தினர். தனது நிலைப்பாட்டை உலகிற்கே கூறுவேன் என்று கூறிய நாட்டு தலைவர் என்று பெருமைப்பட வேண்டும். புலிகள் தாலாட்டுகின்றனர். இது முழுமையான துரோகத்தனமான நடவடிக்கையாகும். சவாலுக்கு அஞ்சி வீட்டில் ஒளிந்திருந்தால் ஜனாதிபதியால் எந்தவொரு நாட்டிற்கும் செல்ல முடியாது என்றார்.

வீரகேசரி

புலம்பெயர்ந்தோரின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பொறுப்பற்ற கருத்துக்களை கூறவேண்டாம்:மனோ கணேசன்

லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் பின்னணியை ஆராயாமல் அவற்றை  தாறுமாறாக விமர்சனம் செய்வதன் மூலம் ஜனாதிபதியை சந்தோஷப்படுத்துவதற்கு புதிதாக அரச தரப்பிற்கு சென்றுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள; என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் இங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களை திருப்பிவிடும் என்று எச்சரிக்கும் இவர்களது கருத்துக்கள் சிங்கள ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டுள்ளன. உண்மையில் தமிழ் அரசியல்வாதிகளின் வாய்மூலமாக இத்தகைய கருத்துக்கள் வெளியாவதுதான், சிங்கள மக்கள் மத்தியில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

லண்டனில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில் எந்தவிதமான அடிப்படை தெளிவும் இல்லாமல், தங்களது அரசியல் தேவைகளுக்காக இத்தகைய பொறுப்பற்ற  கருத்துகளை தெரிவிப்பதை இந்நபர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன மேலும் கூறியுள்ளதாவது, லண்டனில் வாழும் இலங்கையர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழராவர். இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பிலே அக்கறை காட்டுவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கும் புலம்பெயர்ந்துவாழும் இலங்கை மக்களுக்கு முழுமையான உரிமைகள் இருக்கின்றன.

லண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரிவு சிங்களவர்களும் கலந்துகொண்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்

இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் இலங்கையிலும் நடைபெறுகின்றன. இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களை அரசதரப்பு அமைச்சர்களே நடத்தியுள்ளார்கள்.

கடந்த காலத்தில் இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டார். இந்நிகழ்வும் அவ்வேளையில் நடைபெற்ற இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் நடைபெற்றது.

எனவே இத்தகைய சம்பவங்களை இலங்கை வரலாற்றில் தொடர்ச்சியாக பார்த்திருக்கின்றோம். ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை இரத்து செய்யப்பட்டது. பாரதூரமானதாகும். இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டதற்கான பின்னணியை ஆராய வேண்டும். இம்மாதிரியான  சூழல் நிலவுகின்ற வேளையிலே இலங்கை ஜனாதிபதி எந்த அடிப்படையில் லண்டனுக்கு சென்றார் என்பது ஆராயப்படவேண்டும்.

ஜனாதிபதியை லண்டனுக்கு செல்லுமாறு ஆலோசனை கூறியவர்கள் எவர் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும். ஜனாதிபதியை லண்டனுக்கு வரவழைத்து அவமானப்படுத்தியவர்கள் யார் என்பது ஆராயப்படவேண்டும்.

டாக்டர் ஜயலத் ஜயவர்தனவையும், கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவையும், கரு ஜயசூரியவையும் விட்டு விட்டு அரசாங்கத்திற்குள்ளே இருந்தபடி ஜனாதிபதியை சிக்கலில் மாட்டிவிட்டுள்ள குழுவை அரசாங்க கட்சிகாரர்கள் கண்டுபிடிக்கவேண்டும்.

கொழும்பிலே இன்று தமிழ், முஸ்லிம் மக்கள் அகற்றப்படும் திட்டம் தீர்மானகரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. சுமார் 60 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை எதிர்வரும் மாதங்களில் முழு மலையகமும் எதிர்நோக்கவுள்ளது.

இத்தகைய எரியும் பிரச்சினைகள் தொடர்பில் தாங்கள் இணைந்துள்ள அரசாங்கத்திடம் ஏற்றுக்கொள்ளத்தக்க பதில்கள் இருக்கின்றனவா என்று இந்த அரசியல்வாதிகள் தேடி மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12710-q-q.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியை சிக்கலில் மாட்டிவிட்டுள்ள குழுவை அரசாங்க கட்சிகாரர்கள் கண்டுபிடிக்கவேண்டும்.

கீத்ரோ' விமான நிலையத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டிருந்ததுடன் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை நான் என் காதால் கேட்டேன். அதில் பல பின்னணி இருக்கி ன்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பீரிசின் திட்டம் இம்முறை சறுக்கி விட்டது. மகிந்த தனது திட்டத்தை அறிய முதல் அவரை வாயார புகழ்கிறார். :rolleyes::)

"சவாலுக்கு அஞ்சி வீட்டில் ஒளிந்திருந்தால் ஜனாதிபதியால் எந்தவொரு நாட்டிற்கும் செல்ல முடியாது" என்றார்.

வீரகேசரி

இந்த நிலை வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சா நெஞ்சன் எங்கள் ஜனாதிபதி - பீரிஸ் புகழாரம்

http://www.youtube.com/watch?v=QD8LkTA-hvc

வாங்குன காசுக்கு மேல கூவுறாண்ட... ங்கொய்யால....அஞ்சு பத்து குடுத்து விடுங்கப்பா... இவன மாதிரி கைத்தடிகளை உங்க பக்கமும் திருப்பலாம்... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.