Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை நாம் தொடங்கி விட்டோம்! மகிந்த ஆவேசம்

Featured Replies

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்தும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

இதே தினத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவருக்கு தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிலாரி கிளின்டனுக்கு எழுதியுள்ள கடிதம் சம்பந்தமாகவே தன்னை சந்திக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

”வெளிநாடுகளில் அவர்களுக்கு எதிரான யுத்தத்தை நாம் தொடங்கி விட்டோம். அதை திடசங்கற்பத்துடன் முன்னெடுத்துச் செல்வோம்”என்று தியதலாவையில் இராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தோல்வியுற்ற விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புக்கள் பல நாடுகளில் ஒன்றிணைந்துள்ளன. இவர்களின் நோக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியுறச் செய்த படை வீரர்களை குற்றவாளிகளாக்கி நாட்டின் கீர்த்திக்கு களங்கம் ஏற்படுத்துவதே என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அண்மைக்கால நிகழ்வுகளான ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை ரத்துச் செய்யப்பட்டமை, அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்த நாட்டின் ராஜாங்க அமைச்சருக்கு இலங்கை விடயம் பற்றி கடிதம் எழுதியுள்ளமை, ஐ.நா.செயலாளர் இலங்கை விடயம் பற்றி ஆலோசனை வழங்க குழு ஒன்றை நியமித்தமை என்பன மிகவும் அவதானம் செலுத்தப்பட வேண்டிய நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன.

ஐ.நா குழு இலங்கை வந்து இலங்கையின் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதாயின் அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=16211:2010-12-24-14-05-38&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

சிங்களத்தின் அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் "புலிகளின் ஆதரவாளர்கள்" என்ற அணுகுமுறை மேலும் தமிழர் நியாயத்தை வலுவடையச்செய்யும்.

புலம்பெயர் மக்கள் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு அமைய எது செய்தாலும் மகிந்தர் கூட்டத்தால் ஒன்றும் செய்யமுடியாது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் "புலிகளின் ஆதரவாளர்கள்" என்ற அணுகுமுறை மேலும் தமிழர் நியாயத்தை வலுவடையச்செய்யும்.

புலம்பெயர் மக்கள் அந்தந்த நாட்டு சடங்களுக்கு அமைய எது செய்தாலும் மகிந்தர் கூட்டத்தால் ஒன்றும் செய்யமுடியாது.

உங்களின் அலட்சியமான இந்தப் போக்கினால் தான் இந்த நிலையை நாம் அடைந்திருக்கின்றோம். அவன் ஒரு சின்ன சம்பவத்தை இத்தனை பாரதூரமாக்கி, எம் மீது நடவடிக்கை எடுக்கத் துடிக்கும்போது, ஏன் இவ்வளவு அலட்சியமாகச் சிந்திக்கின்றீர்கள்...

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்தும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

மே 2009 க்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள பல முக்கிய புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கும், சர்வதேச விதி முறைகளுக்கும் அமையவே உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழர் பேரவைகள், உலகத்தமிழர் பேரவை குறிப்பிடத்தக்கவை.

இவற்றை "விடுதலைப்புலிகளின்" அமைப்போடு தொடர்பானவை என பிரச்சாரம் செய்வதில் சிங்கள அரசு தொடர்ந்தும் ஈடுபடுகின்றது. ஆனால் இந்த அமைப்புக்கள் ஒரு சனநாயக அமைப்புக்கள் என்ற ரீதியிலும், கணக்கு - வழக்குகளை ஒவ்வொரு வருடமும் பொது மக்களுக்கு வெளியிட்டால், அந்தந்த நாட்டு உளவு அமைப்புக்களுடன் தொடர் கருத்துபரிமாற்றத்தை ஏற்படுத்தினால், ஏற்படுத்துவதால் இந்த பிரச்சாரம் எடுபடாமல் போய்விடும்.

Edited by akootha

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்தும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலம்பெயர் தமிழர் தரப்பு ஆதாரங்களுடன் போர்க்குற்ற தரவுகளை முன்வைத்துக்கொண்டு இருக்கையில் இவற்றை பிரச்சாரம் என சிங்களம் சொல்லித்தான் ஆகவேண்டும். இல்லை அவற்றை உண்மை என ஒப்புகொண்டதாகிவிடும்.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்துவது எமது தரப்புக்கு ஆதரவாக உள்ளது.

தொடர்ந்து போர்குற்ற ஆதரங்களை நீடிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைய முன்னர் அனுப்பி வைப்போம்.

”வெளிநாடுகளில் அவர்களுக்கு எதிரான யுத்தத்தை நாம் தொடங்கி விட்டோம். அதை திடசங்கற்பத்துடன் முன்னெடுத்துச் செல்வோம்”என்று தியதலாவையில் இராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

"வெளிநாடுகளில் யுத்தம்" என்பது அதிகமாக எமது மக்களை குழப்புவது, அதற்கு ஆதரவாக ஊடகங்களை உள்வாங்குவது, தனிப்பட்டவர்களை விலைக்கு வேண்டுவது என்பன முன்பும் செய்யப்பட்டது, இப்பொழுதும் தொடர்ந்து செய்யப்படும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் தொடர்பாக புலம் பெயர் மக்கள் வெகு அவதானமாயிருக்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக புலம் பெயர் மக்கள் வெகு அவதானமாயிருக்க வேண்டும்.

இந்த விசயத்தில மட்டும் மஹிந்த ஏன் முட்டாள்தனமாக நடந்துக்கிறார். மஹிந்த பேசாமல் இருந்தால் அவர் நினைக்கிறது சில நேரம் நடக்கலாம். ஆனால் படம் காட்டினா நம்ம புலம்பெயர் ஆட்கள் விடமாட்டங்களப்பா..

இலண்டனுக்கு படம் கட்ட வந்து பட்டபாடு தெரியாது போல இருக்கே... இன்னுமா??

இந்த விடயம் தொடர்பாக புலம் பெயர் மக்கள் வெகு அவதானமாயிருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருக்கும் சிங்கள பயங்கரவாத அமைப்புக்களை தடை செய்யும் முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். சிங்கள பயங்கரவாதிகளுடன் இயங்கும் ஒருசில தமிழ் புல்லுருவிகளையும் இனம்கண்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் கடுப்படுத்த வேண்டும்.

மேலும் மகிந்தவின் இந்த கூற்றை சகல அரசுகளுக்கும், வெளியுறவுத்துறைக்கும், பாதுகாப்புத் துறைக்கும் அறிவித்து சிங்கள அரச பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அடியோடு கிள்ளியெறிய முயலவேண்டும்.

முன்னெச்சரிக்கையே சிறந்த தற்பாதுகாப்பு அரணாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.