Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடாநாட்டின் கொலைகள் தனிப்பட்டவை நெவில் பத்மதேவ – மக்களின் கேள்விக்கு திணறல் - செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டின் கொலைகள் தனிப்பட்டவை நெவில் பத்மதேவ – மக்களின் கேள்விக்கு திணறல் - செய்தியாளர்:-

உள்ளுர் ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பெருப்பித்து பிரமாண்டப்படுத்துவதாக

குடாநாட்டில் இடம்பெறுகின்ற கொலைகள் தனிப்பட்டவை நெவில் பத்மதேவ – மக்களின் கேள்விக்கு திணறல் - செய்தியாளர்:-

யாழ்பாண குடாநாட்டில் இடம்பெறுகின்ற கொலைகள் தனிப்பட்ட ரீதியில் இடம்பெறுகின்ற கொலைகள் என யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் விரசிங்கம் மண்டபத்தில் பொது அமைப்புக்கள் வர்த்த சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர் சகிதம் இடம்பெற்ற குடாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக மகாநாட்டிலேயே நெவில் பத்மதேவ இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளுர் ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பெருப்பித்து பிரமாண்டப்படுத்துவதாக தெரிவித்த அவர் ஊடகவிலாளர்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் தம்முடன் உரையாடினால் நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்தார். எனினும் கொள்ளைகளுடன் தொடப்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டவில்லை என்பது பற்றி அவர் எதுவுமே கூறவில்லை. யாழ் குடாநாட்டின் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படுவதாக ஊடகங்களே செய்திகளை பெரிதுபடுத்தி செய்திகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டிய அவர் காவற்துறையினர் உங்களுக்காக நித்திரையின்றி பணிகளை ஆற்றி வருவதாகவும் உங்களது நிம்மதியான நித்திரைக்காகவே காவற்துறையினர் அர்ப்பணிப்புடன் சேவையை செய்வதாகவும் தெரிவித்தார்.

எனினும் சந்தேகத்திடமான முறையில் படையினரோ காவற்துறையினரோ வருகை தந்தால் கூட அவர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தாவிட்டால் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே உடமைகளை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பற்றது எனத் தெரிவித்த அவர் வங்கிகளில் அவற்றை வைக்குமாறும் தெரிவித்தார்.

அவரது கருத்துக்கள தொடர்பில் சீற்றம் கொண்ட அங்கு பிரசன்னமாகியிருந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் காட்டமான கருத்துக்களையும் முன்வைத்தனர். காவற்துறையினர் தமது கடமைகளை சரிவர ஆற்றவில்லை எனவும் நகரப் பகுதிகளில் மாத்திரமே தமது கடமைகள் என அவர்கள் நினைப்பதாகவும் புறநகர்பகுதிகளையோ அல்லது கிராமங்களையோ கண்டு கொள்வதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். காவற்துறையினருக்கு முறைப்பாடுகளை செய்தால் அவர்கள் பல மணி நேரத்திற்குப் பின்னரே சம்பவ இடத்திற்கு வருவதாகவும் இந்த நிலையில் பல சம்பவங்களின் பின்னால் காவற்துறையினரின் பங்கும் உண்டா என தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குடாநாட்டில் 40 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ள நிலையில் எவ்வாறு படையினரின் பிரசின்னமின்றி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற முடியும் எனவும் பல பொது அமைப்புக்கள் அங்கு அப்பட்டமாக கேள்விகளை எழுப்பின. அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது காவற்துறை தரப்பு திண்டாடியதாக எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/56246/language/ta-IN/article.aspx

சிங்களத்திற்கு தமிழர்களை கொல்ல / கடத்த தேவையும், விருப்பும் உள்ளது. ஆனால், தமக்கு சர்வதேச ரீதியில் கெட்டபெயர் ஏற்படக்கூடாது எனவும் கவனம் உள்ளது.

இதனால் அதற்காக பொய்களை சொல்லவேண்டிய தேவை உள்ளது. ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் விரைவில் குறி வைக்கும்.

குடாநாட்டின் கொலைகள் தனிப்பட்டவை நெவில் பத்மதேவ

தனிப்பட்டவை என எடுத்துக்;கொண்டாலும் கொலையாளிகளை பிடித்துவிட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்டவை என எடுத்துக்;கொண்டாலும் கொலையாளிகளை பிடித்துவிட்டீர்களா?

வலை வீசி தேடுகிறார்களாம் என்னும் பிடிபடவில்லையாம் :D

குடாநாட்டில் 40 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ள நிலையில் எவ்வாறு படையினரின் பிரசின்னமின்றி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற முடியும் எனவும் பல பொது அமைப்புக்கள் அங்கு அப்பட்டமாக கேள்விகளை எழுப்பின.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/56246/language/ta-IN/article.aspx

என்ன சின்னப்புள்ளத்தனமால்லாம் கேள்விகேட்டுக்கிட்டு........

Edited by நெருப்பு நீலமேகம்

யாழில் இந்திய துணைத் தூதரகம் அமைத்த பின்னர் தான் கொலைகள் பரவலாக தொடர்ந்து இடம்பெறுகின்றன. தமிழினத்தை தொடர்ந்து அழிக்க இங்கு நிலை கொண்டிருக்கும் இந்திய பயங்கரவாதிகளின் கூட்டு சதித்திட்டமாக இருக்கலாம்.

யாழில் இந்திய துணைத் தூதரகம் அமைத்த பின்னர் தான் கொலைகள் பரவலாக தொடர்ந்து இடம்பெறுகின்றன. தமிழினத்தை தொடர்ந்து அழிக்க இங்கு நிலை கொண்டிருக்கும் இந்திய பயங்கரவாதிகளின் கூட்டு சதித்திட்டமாக இருக்கலாம்.

யாழில் இந்திய துணைத் தூதரகம் அமைத்த பின்னர் தான் கொலைகள் பரவலாக தொடர்ந்து இடம்பெறுகின்றன. தமிழினத்தை தொடர்ந்து அழிக்க இங்கு நிலை கொண்டிருக்கும் இந்திய பயங்கரவாதிகளின் கூட்டு சதித்திட்டமாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.