Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்கள் நிலை அறிய ராகுல் தலைமையில் குழு இலங்கை செல்லும்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் நிலை அறிய ராகுல் தலைமையில் குழு இலங்கை செல்லும்-யுவராஜா

வியாழக்கிழமை, பிப்ரவரி 17, 2011, 16:04[iST]

ராமநாதபுரம்: இலங்கையில் தமிழர்களின் நிலையை அறிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் 10 பேர் கொண்ட குழு இலங்கைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமையும். இளைஞர் காங்கிரசில் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தும். காங்கிரஸ்-திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

இளைஞர் காங்கிரசுக்கு 20க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்போம். காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்குவதில் திமுக உரிய மரியாதையைத் தர வேண்டும். தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக காங்கிரஸ் விளங்கும்.

மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க எல்லைக்கோடு அமைக்க வேண்டும். இதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒருபோதும் செயல்படாது. ராஜபக்சே மனித இனத்திற்கு எதிரானவர். ஹிட்லரை போல சர்வாதிகார ஆட்சி நடத்தி தமிழர்களை கொன்று குவித்துள்ளார்.

தமிழகத்தில் பா.கவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என சோனியா காந்தி ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானவை. கூட்டணி கட்சியாக இருந்தாலும் திமுக அரசு செய்த தவறுகளை இளைஞர் காங்கிரஸ் சுட்டி காட்டியதே தவிர, திமுக மீது எந்தவித வெறுப்பும் இல்லை. இதை துணை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டுள்ளார்.

காங்கிரசுக்கு 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதால் கூடுதல் இடங்களை கேட்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தேர்தல் கூட்டணியை பாதிக்காது.

இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையை அறிய ராகுல்காந்தி தலைமையில் 10 பேர் கொண்ட குழு இலங்கைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது என்றார்.

ராகுலின் சர்பிரைஸ் கோழிக்கோடு விசிட்:

இந் நிலையில் நேற்று மாலை ரகசியமாக கோழிக்கோடு வந்தார். அங்கிருந்து அவர் எங்கு சென்றார் என்ற தகவல் தெரியாமல் கேரள போலீசார் திணறி வருகின்றனர்.

நேற்று மாலை 6 மணி அளவில் பெங்களூரில் இருந்து வந்த தனியார் விமானத்தில் ஒரு விவிஐபி வருவதாக கோழிக்கோடு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. விமானம் வந்த பிறகுதான் அது ராகுல்காந்தி என அவர்களுக்கு தெரிய வந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய ராகுல் உடனே அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அவரை தொடர்ந்து 2 காரில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் சென்றனர்.

அதற்குபிறகுதான் கோழிக்கோடு போலீசாருக்கு ராகுல் வந்த தகவல் தெரிந்தது. அங்குள்ள ராமநாட்டுகரை ஓய்வு விடுதியில் அவர் இரவு தங்குவார் என கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முடக்கி விட்டனர். ஆனால் கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் பின்னர் காரில் மைசூர் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு வெகுநேரம் வரை ராகுல் எங்கிருக்கிறார் என்ற தகவல் கோழிக்கோடு போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

thatstamil

ராகுலின் அப்பா ஒரு பிரதமராக சென்றபோது சிங்களத்தின் "அணி மரியாதையில்" துவக்குப்பிடியால் அடி வாங்கினார்.

மகன் சாதராண இந்தியனாக சென்றால், என்ன நடக்குமோ?

என்ன சூழ்ச்சிகள் பின்னப்படுமோ? அதை வைத்து என்னென்ன நாடகங்கள் அரங்கேறுமோ? யாரறிவார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kani.jpg

கனிமொழியையும் கூடவே அழைத்துச்செல்ல சொல்லுங்கள். winking0072-1.gif

தமிழகத்தில் இன்று ஒரு செய்தி கசியவிடப்பட்டுள்ளது. அதாவது ப.சிதம்பரம் அவர்கள், ஒரு தமிழர், அடுத்த இந்திய பிரதமர் ஆகும் வாய்ப்பு உண்டு என்பதே அது.

இதன் மூலம் காங்கிரசு அதிக இடங்களை தமிழகத்தில் வெல்லலாம் என கருதுகிறார்கள் போல உள்ளது. அதேவேளை இராசா அவர்களின் ஊழலையும் மக்கள் மனத்தில் இருந்து திசையும் திருப்பலாம் என எண்ணுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் நிலை அறிய ராகுல் தலைமையில் குழு இலங்கை செல்லும்

சிங்களவனுடன் கூடி நின்று கொலைசெய்ய அனுப்பிய இராணுவத்தினரும் உங்களின் மிச்ச சொச்ச எடுபிடிகளும் வந்து தமிழரின் நிலை பற்றி ஏதும் சொல்லவில்லையா? வந்து கொழும்பிலே ஒரு கோட்டலிலும் இந்திய தூரலாயத்திற்குள்ளும்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் வந்து பார்த்துவிட்டு............. இலங்கையில் தற்போது நிலமை நல்ல சீலாக உள்ளது என்ற அதே வாந்தியையும் எடுத்துவிட்டு போங்கள்.

சிங்களத்திகளை பார்க்க வாறதன்று சொன்னால் உங்களின் காந்திகுடும்ப கௌரவத்திற்கு குறைச்சல்??

... வருபவர்கள் எச்சமாக மிஞ்சியிருப்பவர்களையும் அழிக்க சிங்களத்துக்கு வழி கோலாது, உருப்படியான காரியங்கள் எதனையும் செய்கிறார்களா என்று பார்ப்போம்! ... நல்லவைகள் நடக்கட்டும் இனியாவது!

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்காக நடக்கும் கூத்துதான் இது. எல்லோரும் நன்றாகவே நடிக்கிறார்கள்.தி.மு.க. காங்கிரஸ் சிறிலங்கா அரசுகள். இதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த நினைக்கிறார்கள்.

1.இதுவரை தமிழக மீனவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது சிறிலங்கா கடற்படை அல்ல.3வது சக்தி(தமிழீழ மீனவர்கள் அல்லது புலிகள்)

2.உடனடியாக இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் கூட்டணிக் கட்சிகளான தி மு க காங்கிரஸ் இருதரப்பும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளதுடன் கனிமொழி கைது செய்யப்படும் அளவுக்கு ஆ(வேச)மான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.சட்டத்தை யார் மீறினாலும் கைது செய்வோம்.

3.சிறிலங்கா அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ராகுல் காந்தியையே அனுப்பி சிறிலங்கா அரசோடு பேச்சு வார்ததை நடத்தி இது போன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுப்போம்.

4.பிரச்சனை இரு தரப்பு மீனவர்களுக்க இடையேதானெ ஒழிய சிறிலங்கா கடற்படைக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் அல்ல.

5.முன்பு மீனவர்கள் சுடப்பட்ட பொழுது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததை யாரும் கேள்வி கேட்க மாட்டிPர்கள் மக்களின் மறதியின் மேல் எங்களுக்க நல்ல நம்பிக்கை உள்ளது.

6.கொமன்வெல்த் ஸ்பெக்ட்ரம் ஊழல்களையும் இநத களேபரத்தில் நீங்கள் மறந்து விட்டு எங்களுக்கே உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

7. மேலும் பல மாங்காய்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

http://thatstamil.oneindia.in/news/2011/02/17/24-more-tn-fishermen-apprehended-sri-lanka-aid0090.html

நிலைமை கைத்தடிகளினால் கைமீறி செல்கிறது...

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=48734

:(

http://thatstamil.oneindia.in/news/2011/02/17/24-more-tn-fishermen-apprehended-sri-lanka-aid0090.html

நிலைமை கைத்தடிகளினால் கைமீறி செல்கிறது...

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=48734

:(

"இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர் என்று தப்பி வந்த நாகை மீனவர் கூறினார்." :(

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=48734

தாங்கள் பிடித்தால் பிரச்சனை கிளம்புகிறது என்பதால், இலங்கை கடற்படையே, டக்ளஸ் தேவானந்தா ஆட்களை மீனவர்கள் போர்வையில் ஏவிவிட்டு பிடித்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1102/17/1110217051_1.htm

இலங்கையில் தற்போது அரச பயங்கரவாதம், அடக்குமுறைகள் தலைவிரித்தாடுவதாக முன்னாள் அ‌திப‌ர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சா‌ற்‌றியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1102/17/1110217013_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை கைத்தடிகளினால் கைமீறி செல்கிறது...

2eas7jb.jpg:( :( :( :(

காங்கிரசு காரன எதற்கு போராட்டம் நடத்துறான் என சத்தியமாக இதுவரை எனக்கு தெரியவில்லை.. நல்ல பிறப்பாக இருந்தால் சத்தியமாக் கலந்து கொள்ளமாட்டான்.. இதில் பிறப்பில் கோளாறு உள்ளது... :o

63.1277914121.5_gingee-fort.jpg

இந்த கைத்தடிகள் அஞ்சு பத்து விட்டெறிவதற்க்குள் எனது கோட்டையை பலபடுத்தி கொள்ள்வேணும்.. :o

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.