Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாங்கள் புலிப்பால் குடித்தவர்கள்; இலங்கை அரசை அழிப்போம் - நடிகர் விஜை

Featured Replies

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இது சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும். இலங்கை இராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது.

கடந்த சில வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

நாகை மீனவர் ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து கடலில் தூக்கி வீசி உள்ளனர். இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.

இலங்கை ராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும்.

ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் என்றார் விஜய்.

ஈழநாதம்

நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட.

அடுத்த படத்திற்கு சூப்பர் டைட்டில் அண்ணோய்......உங்கன்ட அண்ணர் விஜய்காந்த் வீரவசனம் பேசி கட்சி தொடங்கிற்றார் ...நீங்கள் அடுத்தோ?

புலிப்பால் அவ்வளவு சீப்பா போச்சு.

நாங்கள் புலிகள் என்று சொல்லவே 3 இல்ட்சம் மக்களை கொடுத்தோம்.

பார்ப்பம் தமிழ்நாட்டுகாரன் எத்தனை பேர் உயிர் கொடுக்க தயார் என்று?

கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டார், செயல் வடிவில் வருமா?

கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டார், செயல் வடிவில் வருமா?

நீங்கள் வேற ......தேர்தல் வந்தா உணர்ச்சி கடலில் மிதப்பாங்கள்

சினிமாக்காரனும், அரசியல்வாதியும் வீர வசனம் பேசுவது ஒன்றும் புதிது இல்லையே... :rolleyes:

லேஸ் டோக் மோர் வொர்க் ப்ளீஸ்!!

புலிப்பால் அவ்வளவு சீப்பா போச்சு.

நாங்கள் புலிகள் என்று சொல்லவே 3 இல்ட்சம் மக்களை கொடுத்தோம்.

பார்ப்பம் தமிழ்நாட்டுகாரன் எத்தனை பேர் உயிர் கொடுக்க தயார் என்று?

... நாங்கள் தொடர்ந்து உயிர் கொடுக்கிறதில் தான் நிற்கிறோம் ... கொஞ்சம் மூளையை பாவித்து அங்காலை போவமெண்டால் ... ம்கூம் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிப்பால் அவ்வளவு சீப்பா போச்சு.

நாங்கள் புலிகள் என்று சொல்லவே 3 இல்ட்சம் மக்களை கொடுத்தோம்.

பார்ப்பம் தமிழ்நாட்டுகாரன் எத்தனை பேர் உயிர் கொடுக்க தயார் என்று?

திமுக, அதிமுக என்ற ஆலமரங்களை வீழ்த்தும் எதுவுமே தமிழ்த்தேசியம் பயனடையும் கருவிகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நாங்க இருக்கிற நிலமையில யார் எமக்கு ஆதரவாகப் பேசினாலும் நக்கல் அடிக்காமல் கொஞ்சம் இருக்கிறது நல்லது.அவங்க தங்கள் நலத்திற்காக அரசியல் பேசினாலும் எமக்கு ஆதாயம் இருக்குமென்றால் அதக்க ஆதரவு குடுக்க வேண்டும்.விஜய் கலைஞரில் இருக்கிற கோபத்தில அரசியல் பேசிறார்.அவருடைய கலைஞருக்கு எதிரான அரசியல் தற்போதைய நிலமையில் காங்கிரசுக்கு எதிரான அரசியல் ஆகும்.பொறுத்திருந்து பார்ப்போம்

பஞ்ச் டயலாக் எல்லாம் பஞ்சாப் பறக்குதா இல்லையா என்று.

ண்ணங்கன்ணா!நானும் அரசியலுக்கு வர்ணங்கண்ணா!!!!!!

இப்ப நாங்க இருக்கிற நிலமையில யார் எமக்கு ஆதரவாகப் பேசினாலும் நக்கல் அடிக்காமல் கொஞ்சம் இருக்கிறது நல்லது.அவங்க தங்கள் நலத்திற்காக அரசியல் பேசினாலும் எமக்கு ஆதாயம் இருக்குமென்றால் அதக்க ஆதரவு குடுக்க வேண்டும்.விஜய் கலைஞரில் இருக்கிற கோபத்தில அரசியல் பேசிறார்.அவருடைய கலைஞருக்கு எதிரான அரசியல் தற்போதைய நிலமையில் காங்கிரசுக்கு எதிரான அரசியல் ஆகும்.பொறுத்திருந்து பார்ப்போம்

பஞ்ச் டயலாக் எல்லாம் பஞ்சாப் பறக்குதா இல்லையா என்று.

ண்ணங்கன்ணா!நானும் அரசியலுக்கு வர்ணங்கண்ணா!!!!!!

இல்லை எங்களை பாவித்து எங்களை நோகடிக்கிறார்கள். இவ்வளவு காலமும் எங்களை வைத்து அரசியல் நடாத்த விட்டு கண்ட பலன் என்ன?

முதல் தரம் தவறினால் சரி அது பிழைத்து விட்டது எங்கோ பிழை உள்ளது எனலாம், இரண்டாம் மூன்றாம் தரங்களும் அதே தவறுகள் நடந்தால் அது எங்களில் உள்ள பிழைகள், அடுத்தவன் அதை தனக்குச் சாதகமாக்கிறான் என்றாவது புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தமிழகத் தேர்தலிலும் ஈழத்தமிழரை வைத்து பிரச்சாரம் செய்து அவங்கள் தங்கள் சொத்துக்களை பெருப்பித்துக் கொண்டு போவதைத் தவிர தமிழகத்துக்கே ஆனது ஒன்றும் இல்லை என்று இனியாவது தமிழக சாதாரண மக்கள் அதனை உணர்ந்து கொண்டு இம்முறையாவது செயல்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=BnLkBhnqbNw

1947 இல் கிந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்கு ... இதுவரை எத்தனை எலக்சன் நடந்திருக்கு... ஜெயிச்சவன் எவனாவது நல்லது பண்ணி இருக்கானா? நாங்க மட்டும் பண்ண என்ன இளிச்ச வாயுனுங்களா? இல்லாத புது பழக்கத்தை ஏண்டா ஏற்படுத்த சொல்லிறீங்க... அப்படி நல்லது பண்ணா மத்த ஜெயிச்சவன் வந்து எங்க வீட்டு மேல கல்லெடுத்து எறிஞ்சானா ... நீ காப்பாத்துவியாடா? :o

தோழர்கள் தலைவருடைய காமெடியை கூர்ந்து பார்த்து ரசியுங்க... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.