Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாவம் இன்னொரு சரத் பொன்சேகா:வடக்கில் புலிகளுக்கு எதிராகப் போராடிய இராணுவ அதிகாரி மீது இலங்கைப் பொலிஸார் சித்திரவதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இன்னொரு சரத் பொன்சேகா:வடக்கில் புலிகளுக்கு எதிராகப் போராடிய இராணுவ அதிகாரி மீது இலங்கைப் பொலிஸார் சித்திரவதை

[Friday, 2011-03-04 12:56:39]

இலங்கைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தான் மனிதாபிமற்ற முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஐந்து மாதங்களாக தடுப்பிலிருந்த போது உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இலங்கை இராணுவத்தின் லெப்டினன் கேணல் தர அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.

உயர் நீதிமன்றத்தில் லெப்டினன் கேணல் பெரேரா தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றின் பணிப்புக்கமைய சிரேஷ் சட்ட வைத்திய அதிகாரி இந்த இராணுவ அதிகாரிக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களின் தன்மை மற்றும் இந்தக் காயங்கள் உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடியதா என்பது தொடர்பான அறிக்கையினைச் சமர்ப்பித்திருக்கிறார்.

மனிதத்துவமற்ற வகையில் இந்த அதிகாரி தாக்கப்பட்டிருப்பதையும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களிற் சில உயிராபத்தினை ஏற்படுத்தக் கூடியவை என்று மருத்துவ ரீதியிலான ஆதாரங்கள் சுட்டிக்காட்டுவதாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையில் சிரேஷ் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் அனந்த சமரசேகர குறிப்பிட்டிருக்கிறார்.

லெப்டினன் கேணல் பெரேரா தாக்கல் செய்திருக்கும் வழக்கில் வழக்கின் எதிராளிகளாக குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கிறார்.

1985ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் ஒரு கடேற் அதிகாரியாக இணைந்து பெரோரா படிப்படியாக வளர்ந்து தற்போதிருக்கும் நிலையினை அடைந்திருக்கிறார். 1987ம் ஆண்டு இடம்பெற்ற வடமாராட்சி படை நடவடிக்கை, 1991ல் இடம்பெற்ற அகுனு பகாரா நடவடிக்கை, அதே ஆண்டு இடம்பெற்ற அசாக சேன நடவடிக்கை, 1995ம் ஆண்டு இடம்பெற்ற சூரியக்கதிர் நடவடிக்கை, 1998ம் ஆண்டு இடம்பெற்ற சத்ஜெய நடவடிக்கை, 2001ல் இடம்பெற்ற கினிகர நடவடிக்கை, 2002ம் ஆண்டு இடம்பெற்ற அக்கினிகீல நடவடிக்கை ஆகிய படை நடவடிக்கைகளில் இந்த அதிகாரி பங்கெடுத்திருக்கிறார். போர்க் களங்களில் துணிவுடன் செய்றபட்டமைக்கான விருதினை இரண்டு முறையும் வடமாராட்சி படை நடவடிக்கைக்கான பதக்கத்தினையும், ரிசிரச சேவை விருது என்பதையும் இந்த அதிகாரி பெற்றிருக்கிறார்.

எவ்வாறிருப்பினும் இந்த அதிகாரி விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் தொடர்பினைக் கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 14 மே 2009 அன்று இரத்மலானயிலுள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதன் பின்னர் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மே 22 2009 அன்று கொழும்பிலுள்ள குற்றவியல் பிரிவில் லெப்டினன் கேணல் பெரேரா தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இங்கு வைத்துதான்தான் கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரே நாளில் மாத்திரம் நான்கு தடவைகள் மோசமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அதே நாள் மாலையில் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட இந்த அதிகாரி மீண்டும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

இதன் பின்னர் யூன் 22ம் திகதியன்று இந்தப் படை அதிகாரியின் கண்கள் மீண்டும் கட்டப்பட்டதோடு சுய நினைவினை இழக்கும் வரைக்கும் மோசமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இவருக்குச் சுய நினைவு திரும்பிய போது தான் மோசமாகத் தாக்கிக் காயப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டாராம்.

மறுநாள் பெரேராவினைப் பரிசோதித்த மருத்துவ அதிகாரி ஒருவர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரேரா பின்னர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

தான் இந்த நாட்டினது சட்டத்தினை மதித்துச் செயற்படும் ஒரு குடிமகனாகவும் கடமையுணர்வு மிக்க படைவீரனாகவுமே கடமையாற்றிதாக தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டிருக்கும் லெப்டினன் கேணல் பெரோரா தான் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்ததாகக் கூறுப்படுவது சுத்தப்பொய் என்றும் கூறியிருக்கிறார்.

தான் கைதுசெய்யப்பட்டு மனிதத்துவம் அற்ற வகையில் சித்திரவதைக்கு உட்படுத்தமையானது அடிப்படை உரிமை மீறல் என நீதிமன்றம் தீர்பளிக்கவேண்டுமெனக் கோரியிருக்கிறார். தன்னை உடனடியாக விடுதலை செய்யுமாறு நீதிமன்ற இடைக்கால உத்தரவினை வழங்கவேண்டும் எனவும் லெப்டினன் கேணல் பெரேரா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

seithy.com

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.

நல்லதொரு செய்தி.

இதனை இணைத்த 'கறுப்பி' எப்போதும் வெட்டி ஒட்டுதல், களவாடிய செய்திகள், போன்ற 'கறுப்பு' நடவடிக்கைளில் விருப்பம் உள்ளவர் போல் தெரிகின்றது. இது பலதடவைகள் கவனிக்கப்பட்டு இன்று இது வெளிப்படுத்தப்படுகின்றது.

இந்த செய்தி கொழும்பில் இருந்து வெளியாகும் DailyMirror - By Susitha R. Fernando க்கு சொந்தமான செய்தியாகும். அது புதினப்பலகை என்னும் தளத்தில் தி.வண்ணமதி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட செய்தியாகும்.

இதில் இரண்டு பிரச்சனைகள் ஒன்றில் இந்த செய்தி DailyMirror ரை ஆதாரமாகக் கொண்டது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இரண்டாவது யார் இந்த செய்தியை எழுதியது அல்லது மொழிபெயர்தது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் தங்களுடைய செய்தி போல் இதனை ஒரு தளம் பிரசுரிக்க அதனை கறுப்பி எடுத்துவந்து தனது நாளாந்த கடமையாக இங்கு ஒட்ட என்ன யாழ் பார்வையாளர்கள் என்ன 'விரல் சூப்பும் பச்சை மண்ணுகள்' என்று ஏமாற்ற முயற்சிக்கிறாரா?

யாழ். இணையம் திறந்த வெளியென்றால் இவ்வகையான 'சுத்துமாத்துகள்' 'வெளிக்கிருக்கிற' மணத்தையெல்லாம் நாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமோ?

ஆங்கிலச் செய்தியை படிக்க: http://print.dailymirror.lk/news/news/37198.html

தி.வண்ணமதியின் மொழிபெயர்ப்பை படிக்க: http://www.puthinappalakai.com/view.php?20110304103319

Edited by தி.ஆபிரகாம்

செய்தியைப் பகிர்ந்து கொண்ட கறுப்பிக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியைப் பகிர்ந்து கொண்ட கறுப்பிக்கு நன்றி

கறுப்பி நீங்கள் உங்கள் கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும்....... நாய் நரிகளின் ஊளைகளைப் பற்றி கவலை வேண்டாம்....

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இன்னொரு சரத் பொன்சேகா:வடக்கில் புலிகளுக்கு எதிராகப் போராடிய இராணுவ அதிகாரி மீது இலங்கைப் பொலிஸார் சித்திரவதை

[Friday, 2011-03-04 12:56:39]

-------

-----

seithy.com

வணக்கம்.

நல்லதொரு செய்தி.

------

இந்த செய்தி கொழும்பில் இருந்து வெளியாகும் DailyMirror - By Susitha R. Fernando க்கு சொந்தமான செய்தியாகும். அது புதினப்பலகை என்னும் தளத்தில் தி.வண்ணமதி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட செய்தியாகும்.

இதில் இரண்டு பிரச்சனைகள் ஒன்றில் இந்த செய்தி DailyMirror ரை ஆதாரமாகக் கொண்டது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இரண்டாவது யார் இந்த செய்தியை எழுதியது அல்லது மொழிபெயர்தது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் தங்களுடைய செய்தி போல் இதனை ஒரு தளம் பிரசுரிக்க அதனை கறுப்பி எடுத்துவந்து தனது நாளாந்த கடமையாக இங்கு ஒட்ட என்ன யாழ் பார்வையாளர்கள் என்ன 'விரல் சூப்பும் பச்சை மண்ணுகள்' என்று ஏமாற்ற முயற்சிக்கிறாரா?

யாழ். இணையம் திறந்த வெளியென்றால் இவ்வகையான 'சுத்துமாத்துகள்' 'வெளிக்கிருக்கிற' மணத்தையெல்லாம் நாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமோ?

ஆங்கிலச் செய்தியை படிக்க: http://print.dailymirror.lk/news/news/37198.html

தி.வண்ணமதியின் மொழிபெயர்ப்பை படிக்க: http://www.puthinappalakai.com/view.php?20110304103319

வணக்கம் ஆபிரகாம்,

கறுப்பி தான் பார்த்த செய்தியை தான்... யாழ் களத்தில் எம்மில் பகிர்ந்துள்ளதோடு.....

அந்த செய்தியை பார்த்த இணையத்தின் முகவரியையும் அடிச் செய்திக் குறிப்பில், பதிந்துள்ளார்.

இதில் நீங்கள் செய்தியின் நதி மூலம், ரிஷி மூலம் எல்லாம் பதிய வேண்டும் என்று, எப்படி கறுப்பியிடம் எதிர்பார்க்கலாம்?

எல்லோராலும் எல்லா இணையங்களுக்கும் சென்று பார்க்க முடியாது.

இதில் கறுப்பி அந்த சேவையை, யாழ் களத்துக்கு செய்கிறார்.

அதில், குறை சொல்லாதீர்கள் ப்ளீஸ். :)

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி தான் இணைத்த செய்தியின் மூலத்தை இணைத்திருக்கிறார். ஆபிரகாம் முதலில் அதனைக் கவனிக்க வேண்டும்.கறுப்பியின் சேவை தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி.கொம் யாழ் நிர்வாகத்தினால் தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல. அங்கிருந்து ஒரு செய்தியை இங்கே வெட்டி ஒட்டுவதற்கு கறுப்பிக்கு முழு உரிமையும் இருக்கிறது. அவ்வகையில் செய்தியைப் பகிர்ந்துகொண்ட கறுப்பிக்கு நன்றிகள்..! :rolleyes:

அநாவசியமாக கறுப்பியைக் கடிந்து கொண்ட உறுப்பினர் ஆபிரகாம் அவர்கள் தனது கருத்தை மீளப்பெற்றுகொண்டு தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்..! :unsure::wub:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.

நல்லதொரு செய்தி.

இதனை இணைத்த 'கறுப்பி' எப்போதும் வெட்டி ஒட்டுதல், களவாடிய செய்திகள், போன்ற 'கறுப்பு' நடவடிக்கைளில் விருப்பம் உள்ளவர் போல் தெரிகின்றது. இது பலதடவைகள் கவனிக்கப்பட்டு இன்று இது வெளிப்படுத்தப்படுகின்றது.

இந்த செய்தி கொழும்பில் இருந்து வெளியாகும் DailyMirror - By Susitha R. Fernando க்கு சொந்தமான செய்தியாகும். அது புதினப்பலகை என்னும் தளத்தில் தி.வண்ணமதி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட செய்தியாகும்.

இதில் இரண்டு பிரச்சனைகள் ஒன்றில் இந்த செய்தி DailyMirror ரை ஆதாரமாகக் கொண்டது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இரண்டாவது யார் இந்த செய்தியை எழுதியது அல்லது மொழிபெயர்தது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் தங்களுடைய செய்தி போல் இதனை ஒரு தளம் பிரசுரிக்க அதனை கறுப்பி எடுத்துவந்து தனது நாளாந்த கடமையாக இங்கு ஒட்ட என்ன யாழ் பார்வையாளர்கள் என்ன 'விரல் சூப்பும் பச்சை மண்ணுகள்' என்று ஏமாற்ற முயற்சிக்கிறாரா?

யாழ். இணையம் திறந்த வெளியென்றால் இவ்வகையான 'சுத்துமாத்துகள்' 'வெளிக்கிருக்கிற' மணத்தையெல்லாம் நாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமோ?

ஆங்கிலச் செய்தியை படிக்க: http://print.dailymirror.lk/news/news/37198.html

தி.வண்ணமதியின் மொழிபெயர்ப்பை படிக்க: http://www.puthinappalakai.com/view.php?20110304103319

இச்செய்தியின் தலைப்பை கூகிளில் தேடிப்பாருங்கள் எத்தனை தளங்கள் இச்செய்தியை பிரதி செய்துள்ளன என்று.கறுப்பி யாழில் தடைசெய்யப்படாத தளத்தில் இருந்து செய்தியை இணைத்துள்ளார்.கட்டாயம் மூலச்செய்தியில் இருந்து தான் இணைக்கப்பட வேண்டும் என்றொரு விதி யாழ்களத்தில் இல்லை என நினைக்கிறேன்.

ஏப்பிரகாம் நீங்கள் தான் இன்னொரு உறுப்பினரை நேரடியாக தாக்கி யாழ்கள விதியை மீறி உள்ளீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.