Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்திய ஜெயலலிதா.

Featured Replies

ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளான் இதுதான்.

1. தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்ப்பது, கேட்கிற தொகுதிகளை கொடுப்பதாக கூறுவது, எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது, கடைசி நேரத்தில் கை கழுவி விடுவது.

2. விஜயகாந்த் ஆரம்பத்திலிருந்தே தனித்துப் போட்டி, மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார். விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்கள் அனைத்தும் திமுக, அதிமுகவை விரும்பாதவர்களின் ஓட்டுக்கள்தான்.எனவே, கூட்டணிக்குள் விஜயகாந்த் வந்து விட்டாலே அவரது வாக்கு வங்கியில் பெரும் ஓட்டை விழும் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும்.

3. விஜயகாந்ததை கூட்டணி வலையில் சிக்க வைப்பதன் மூலம் அவரது வாக்கு வங்கியை பலவீனப்படுத்தி, கடைசியில் அவரையும் பலவீனப்படுத்தி கூட்டணியிலிருந்து அவராகவே வெளியேறும் நிலையை ஏற்படுத்துவது ஜெயலலிதாவின் திட்டம்.

4. தேமுதிகவை பலவீனப்படுத்தி விட்டால் திமுகவை சமாளிப்பது மிக மிக எளிது. இதற்கு ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உதவியாக இருப்பதால் அதை மட்டும் வைத்துக் கொண்டு திமுகவை வீழ்த்த வியூகம் அமைப்பது. இதுதான் ஜெயலலிதாவின் தற்போதைய அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னணிக் காரணமாக கூறப்படுகிறது. தற்போது ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியுள்ளார் ஜெயலலிதா.

தேமுதிக இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சரி அல்லது வெளியேறினாலும் சரி அல்லது யாருடனாவது சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் சரி, விஜயகாந்துக்கு மக்களிடம் முன்பு இருந்து செல்வாக்கு, ஆதரவு இருக்காது என்பது ஜெயலலிதா மற்றும் அவரது ஆஸ்தான ஆலோசகர்களின் எண்ணமாகும்.

இந்த கோணத்தில்தான் ஆரம்பத்திலிருந்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஒருவித தாமதத்தை அதிமுக கையாண்டதாகவும் தற்போது சந்தேகிக்கப்படுகிறது. மேலும், கடைசி வரை உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்ற ரீதியில் அனைவருடனும் பேசியதன் மூலம், அனைவரும் வேறு கூட்டணிக்குப் போக முடியாத நிலையையும் ஏற்படுத்தி விட்டார் ஜெயலலிதா.

இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நேற்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. அதாவது வேறு 'ஆப்ஷனே' இல்லாமல் செய்து விட்டார் ஜெயலலிதா. ஒரு வேளை தேமுதிகவை இழுக்காமல், மற்ற கட்சிகளுக்கும் கேட்ட தொகுதிகளை தர முடியாது என்று முன்பே கூறியிருந்தால், தற்போது வெகுண்டெழுந்துள்ள அனைவரும் (இடதுசாரிகள் தவிர்த்து) காங்கிரஸை தனியாக கூட்டிக் கொண்டு போய் தனிக் கூட்டணி அமைத்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பார்கள்.

ஆனால் அது நடந்து விடக் கூடாது என்பதால்தான் மிக மிக கவனமாக, காங்கிரஸ் , திமுக தொகுகிப் பங்கீடு, ஒதுக்கீடு முடியும் வரை காத்திருந்து கவனமாக காய் நகர்த்தி சரியான நேரத்தில் ஆப்பு வைத்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த மாஸ்டர் பிளான் எந்த அளவுக்கு அதிமுகவுக்கு பயன்படும் என்பது தெரியவில்லை. ஆனால் விஜய்காந்துக்கு ஜெயலலிதா கொடுத்துள்ள அடி மிகப் பெரிய அடி என்பது மட்டும் உண்மை.

இதனால் தான் தொகுதிகள் விஷயத்தில் போர்க்கொடி உயர்த்திய கட்சிகளில் இடதுசாரிகளை மட்டும் உடனே அழைத்து சமரச முயற்சியை ஜெயலலிதா தொடங்கினாரே ஒழிய, தேமுதிகவுடன் சமரசப் பேச்சுக்களை மாலை வரை தொடங்கவில்லை. நிச்சயம் திமுகவே கூட ஜெயலலிதாவின் இந்த அதிரடியால் அயர்ந்து போயிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

இச்செய்தி தொடர்பான படங்களுக்கு.....

http://www.thedipaar.com/news/news.php?id=25677

ஜெயலலிதா சொந்த செலவில் தன்னுடைய கட்சிக்கு சூனியம் வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்காக தமிழ் நாட்டு மக்கள் வாக்களிக்காவிட்டாலும் இலவசங்களுக்கு தமிழ் நாட்டு மக்கள் வாக்களித்தே ஆவார்கள். இம்முறையும் ஜெயலலிதா அம்போ தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சரி அல்லது வெளியேறினாலும் சரி அல்லது யாருடனாவது சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் சரி, விஜயகாந்துக்கு மக்களிடம் முன்பு இருந்து செல்வாக்கு, ஆதரவு இருக்காது என்பது ஜெயலலிதா மற்றும் அவரது ஆஸ்தான ஆலோசகர்களின் எண்ணமாகும்.

http://www.youtube.com/watch?v=9908qzvMDTg

அடுத்தவனை சொறிவதே சிலருக்கு வேலை...

சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி ...அவன் அந்த காலத்தில் இருந்து அப்படித்தான் இருந்தான் இருக்கிறான்.. அது போக கூட கூட்டணி சேர்ந்தவர்க்ள் நதி மூலம் ரிசி மூலம் ஆராயவேண்டாமா..

அன்றே சொன்னார் கண்ணதாசன் குணம் சரியில்லை என்றாலும் ஒழுங்கான குலத்தில் பெண் எடுத்தால் .. நாலு அறைக்குள் புருசனை போட்டு கும்மாங்குத்து குத்தினாலும் . வெளியில் தனது கணவனை விட்டு தரமாட்டாள்.

Mysore-Palace.jpg

ஒழுங்கான பிறப்புக்கு ஒழுக்கம் வரும் . மைசூர் மகாராஜாவின் ( .... ) மகளுக்கு எப்படி இதெல்லாம் வரும்?

மற்றும்படி இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

குவாட்டர் ஒல்டு மங்கு ரம்முக்கு முன் ஏதும் நிற்க ஏலாது.. :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பவும் எதிர்பார்க்க வேண்டாம். இந்த அரசியல்வியாதிகளுக்கு சூடு,சுரணை என்றுமே இருந்ததில்லை. கருணாநிதி ஆடிய நாடகத்திற்கு பதிலடியாக ஜெயலலிதாவால் நடத்தப்படும் மலிவான உத்தி தான் இந்த கூட்டணி பிகுகளும், சிணுங்கல்களும்.

நாளை பாருங்கள் இதே மானமிகு தலைகள், 'பிணக்குகளை தீர்த்து வைத்தார் எம் காவிரித் தாய்' என நா கூசாமல் புகழாரம் சூட்டி ஆரத் தழுவுவார்கள்.

மொத்தத்தில் மக்களுக்கு அன்றாட வேலைகளைக் கூட கவனிக்க நேரமில்லாமல், மெல்வதற்கு அவலும், ஒரே தமாசும், தாமசுந்தான்... இதில் 2G அலைக்கற்றைகளும், முள்ளிவாய்க்கால்களும் அடியோடு அடித்துச் செல்லப்படும்.

முடிவில் வைக்கோவும், சீமானும் அரசியல் அகதிகளாக...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.