Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாயக தமிழர்கள் தமிழீழத்தை நிராகரித்துவிட்டனராம்: காதில் பூச்சுத்துகிறார் சுமந்திரன்

Featured Replies

தமிழீழத்துக்கு ஒப்பான ஒரு அலகு வேண்டும் என தேர்தலில் நின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவுகொடுக்காததை வைத்தே தாயகத் தமிழர்கள் அதை (தமிழீழத்தை) நிராகரித்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழர்கள் காதில் பூச்சுற்ற முயல்கிறார் தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

இன்று சிட்னியில் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுமக்களுடனான சந்திப்பிலே பொதுமகன் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்து பலரின் கோபத்துக்கு ஆளானார் சட்டத்தரணியான சுமந்திரன். பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் ஏன் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லையென்ற கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது தமிழ் தேசியக்க கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டமைப்பை விட்டு விலகியதாகவும் சளாப்பினார் சுமந்திரன். கட்சி உறுப்பினர்கள் மட்டும்தான் தேர்தலில் நிற்க அனுமதிக்கப்பட்டார்கள் என்றால் சிறிதரன் எந்தக் கட்சியின் உறுப்பினர்? (தேர்தலில் போட்டியிடும்போது) அல்லது தேசியப்பட்டியல் மூலம் கொல்லைப் புறமாக பாராளுமன்ற உறுப்பினரான தான் (சுமந்திரன்) எந்தக் கட்சியின் உறுப்பினராக இருந்தார் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தமிழர்கள் ஜனநாயக வழியில் பயணிப்பதே சாலச்சிறந்தது எனக் குறிப்பிட்ட தமிழர்களின் பிரச்சினைக்குரிய தீர்வு கிடைப்பதற்கு பலவருடங்களோ பல தசாப்தங்களோ அல்லது பல நூற்றாண்டுகளோ ஆகலாம் எனக் குறிப்பிட்ட சுமந்திரன். தமிழர்கள் ஜனநாயகத்தை மறந்திருப்பார்கள் அதனால் அவர்கள் ஜனநாயக நடைமுறைகளை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சிக்கு பல இடங்களில் வக்காலத்து வாங்கிய திரு சுமந்திரன் அவர்கள் தமிழ் மக்களின் போராட்டத் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அதானல் தற்போது சம்பந்தன்தான் தமிழர்களின் தலைவர் என்ற பொருள்படக் கருத்துக் கூறியதுடன், பொதுமக்கள் கேட்ட சில கேள்விகளுக்கு மழுப்பலாகவும் சில கேள்விகளுக்கு உண்மையற்ற பதில்களையும் ஒரு கேள்விக்கு புலம்பெயர் தமிழர்களை புண்படுத்தும் விதமாகவும் பதிலளித்தார்.

பொதுக்கூட்டத்தின் முடிவில் அவரிடம் ”தமிழ்தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும்விதமாக தமிழரசுக்கட்சி செயற்படுகிறதே” என்று ஒருவர் கேட்டபொழுது அப்படியொன்றும் இல்லையே என்று முழுப்பூசனிக்காயை சோற்றில் புதைக்க முயன்றார். ஆனால் கடைசியாக நடந்த உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையிலே பல இடங்களில் தமிழரசுக் கட்சி என்று அழுத்தம் திருத்தமாக இருந்ததே என்று கேட்ட பொழுது ”உங்களுக்கு ஒன்று தெரியுமா தமிழரசுக் கட்சியின் சின்னத்தில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகிறது அதனால்தான் அப்படி” என்றார். ஆனால் கடந்த தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறது என்ற ஒற்றைவரியில் மட்டுமே தமிழரசுக் கட்சி என்ற வார்த்தை வரும் மற்றும்படி இப்ப வருவது மாதிரி வருவதில்லையே என்றபோது அப்படித்தான் வந்தது என்று மழுப்பினார். (கடந்தகாலத் தேர்தல் அறிக்கைகளைப் இணையத்தில் தேடிப்பார்த்தபோது சுமந்திரன் சொன்னது பொய் எனத் தெரிந்தது). பாவம் அவரும் என்னதான் செய்ய அவர் வழக்கறிஞராச்சே தன்கட்சிக்காரர்களுக்காத்தானே (சம்பந்தன், மாவை, சிவஞானம்) கதைக்க முடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ்மக்களில் அபிலாசைககளை அரசியல்ரீதியில் வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முதல் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெருவெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் கூட்டமைப்பில் இருந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி விலகியபோது தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடலாம் எனத் தீர்மானிக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார்கள். ஆகவே தமிழரசுக் கட்சியின் சின்னத்துக்காக மக்கள் வாக்குப் போடுகிறார்கள் என நினைத்துக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யவிடாமல் முட்டுக்கட்டை போட்டு தமிழரசுக்கட்சி தனிப்பாதை எடுக்க முயல்கிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறியது மாதிரி செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன்போன்றோரையும் வெளியேறச் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்களிடம் உள்ள ஆதரவைத் தமிழரசுக் கட்சிக்கு மாற்றி அதை வைத்து பிழைப்பு அரசியல் செய்ய சம்பந்தன் மாவை சிவஞானம் மற்றும் சுமந்திரன் ஆகியோர் முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை குறைகூற முயலும் திரு சுமந்திரன் போன்றவர்கள் அவர்களது தியாகத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களின் தியாக மனப்பான்மையில் 0.000005 வீதமாவது தமிழரசுக் கட்சிக்கு காவடி எடுக்கும் திரு சுமந்திரன் போன்றவர்களுக்கு இருக்குமாயின் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்யாமல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி அரசியல் செய்வார்கள்.

http://www.pooraayam.com/mukiaya/1254-2011-03-20-10-43-57.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்கு ஒப்பான ஒரு அலகு வேண்டும் என தேர்தலில் நின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவுகொடுக்காததை வைத்தே

தாயகத் தமிழர்கள் அதை (தமிழீழத்தை) நிராகரித்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழர்கள் காதில் பூச்சுற்ற முயல்கிறார் தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

இப்படி அவர் தெரிவித்திருந்தால்

அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பின்கதவால் வந்ததுகளெல்லாம் கழுதை மாதிரி கத்த வெளிக்கிட்டால் இப்பிடித்தான் இருக்கும்.

சுமத்திரன் என்பவனிடம் ஈழத் தமிழர் எந்த பொறுப்பையும் கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தொடர்ந்து சிறிலங்காவில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் கதைக்க வேண்டும் ,அவர் சொல்வதிலும் நிஜாயம் இருக்கு,நாங்கள் புலத்தில இருந்து இந்தியாக்காரனுக்கு வால் பிடிப்பதிலும் பார்க்க கூட்டமைப்பினர் களத்தில் சிங்களவனுக்கு வால் பிடித்து எதாவது பாதிக்கபட்ட மக்களுக்க்கு கிடைப்பதற்கு வழி செய்யட்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சூழலில் தமிழ்தேசிய கூட்டமைப்பினர்தான் தாயக மக்களுக்கு எதாவது செய்யமுடியும்....அவர்களையும் பிளவடையவிடாமல் பார்த்துகொள்ள வேண்டியது புலம் பெயர் ஊடகவியாளர்களின் கடமை

தேசிய இன முரண்பாடு தான் இலங்கையின் பிரதான முரண்பாடு என்பதையும், தேசிய இனனங்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கான தேவை 80 களை விடவும் இன்று அதிகமாகக் காணப்படுகிறது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உறுதியான அரசியல் வழிமுறைகளற்ற, சோரம் போகும் அரசியல் வாதிகளைக் கொண்ட, இந்திய இலங்கை அரச ஆதரவிற்காக ஏங்கும், உள்முர்ண்பாடுகளோடு ஒட்டுப் போடப்பட்டிருக்கும் கட்சி என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமிருக்க முடியாது.

இவ்வாறான சிக்கல்கள் எல்லாம் வன்முறைகள், மிரட்டல்களுக்கு மத்தியில் வாக்களிக்கச் சென்ற மக்களுக்குத் தெரியாத இரகசியங்களல்ல. இவை அனைத்துக்கும் மத்தியில் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான குறைந்தபட்சச் சுலோகங்களை முன்வைத்தவர்கள் என்ற ஒரே அடிப்படை தான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இச் சுலோகங்கள் கூட வாக்கு வேட்டைக்காக தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டவை என்பது கூட மக்களுக்குத் தெரிந்திருந்தும் மாற்று வழிகளின்றி வழங்கப்பட்ட ஆதரவு தான் இது.

டக்ளஸ் தேவானந்தாவின் அரச பணபலம், அபிவிருத்தி அரசியல், கருணாவின் அமைச்சர் பதவி, கருணா-பிள்ளையானின் பிரதேசவாதம், இவை அனைத்தையும் கடந்து ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒன்றின் போர்க் குரல் மறுபடி ஒலித்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆக, தமது நலன்கள் மீது பற்றும் அக்கறையும் கொண்டவர்களாக் வெளிப்படுத்த முயலும் ஒவ்வொருவருக்கும் தமது பிரதான தேவை இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டமே என மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.