Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓர் அரசு தனது சொந்த மக்களை விமானத்தால் தாக்கினால் அது போர்க் குற்றம் !

Featured Replies

obama21.jpg

ஓர் அரசு தனது சொந்த மக்களை விமானத்தால் தாக்கினால் அது போர்க் குற்றம் !

March 20, 2011

டென்மார்க் 20.03.2011 ஞாயிறு மதியம்

ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீது விமானங்காளால் குண்டு வீசித்தாக்கினால் அது சர்வதேச போர்க் குற்றம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி தனது சொந்த மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார். அனைத்துக் குற்றங்களுக்கும் அவரே பொறுப்பு என்றும் கோடிட்டுள்ளார். இதனுடைய கருத்து கடாபி அனைத்து குற்றங்களையும் ஏற்று சதாம்உசேன் போல சர்வதேச நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும் என்பதுதான். மேலும் அவர் இன்னொரு விடயத்தையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தனது சொந்த நாட்டு மக்களின் மீது போர் விமானத்தை பாவிப்பதும் போர்க்குற்றமே என்ற செய்தியையும் தெளிவாகக் கோடுபோட்டுள்ளார். பிரிட்டன் படைத்துறை அமைச்சர் இத்தாக்குதல் பற்றிக் கூறும்போது இது தருணம், இது தேவை, இது கட்டாயம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். தற்போது ஐ.நாவை சரியான பாதையில் வளைத்து ஓர் உலக ஜனநாயக அணி வீறு கொண்டுள்ளது. இந்த அணி ஈழத்தமிழினத்திற்கு புதிய விடிவை வரைவு செய்யும் இலக்குவரை போகும் என்பது தமிழ் மக்கள் அறிய வேண்டிய விடயமாகும். சிறீலங்கா அரசு நாகர்கோயில் மகாவித்தியாலயத்தில் வீசிய விமானத்தாக்குதல் சர்வதேச போர்க் குற்றத்திற்குள் வருவதை இத்தருணம் உணர்த்தி நிற்கிறது. ஈழத் தமிழர் தமக்கான உரிமையை தெளிவாக வரையறை செய்து வெளிவர சிறந்த முன்னுதாரங்கள் தற்போது சர்வதேச அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

alaikal.com

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா நித்திரையால் எழும்பிவிட்டார்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அவரை எழுப்ப 50 ஆயிரம் தமிழர்களின் புதைகுழிகள் போதவில்லை.

எண்ணைய் வளம் மிக்கவர் இருவர் இறந்தால் எழும்பிவிடுவார். :(:(:(

மேலை நாடுகள் மிருகங்கள் ! போரில் வெல்வேன்..! கடாபி

டென்மார்க் 20.03.2011 ஞாயிறு மதியம்ed

தற்போது லிபியாவிற்கு எதிராகத் தாக்குதல்களை நடாத்தும் மேலை நாடுகள் மனிதர்கள் அல்ல அவர்கள் மிருகங்கள் என்று நேற்று மாலை லிபிய தொலைக்காட்சியில் கடாபி பேசினார். தனது படைகள் தரைவழி தாக்குதலை நடாத்தி முன்னேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது களத்தில் நிற்கும் கூட்டுப்படையணி மிருகங்கள், பயங்கரவாதிகள், மோசமானவர்கள் என்று திட்டித் தீர்த்தார். மேலை நாட்டு படையணிகள் அன்று சர்வாதிகாரி ஹிட்லரும், முசோலினியும் செய்த தவறையே இன்று செய்கிறார்கள். இந்த நாடும், இங்குள்ள எண்ணெய் வளமும் எமக்கு ஆண்டவன் தந்த நன்கொடை இதை அன்னியர் கைப்பற்ற விட முடியாது. ஒவ்வொரு மக்களும் ஆயுதங்களுடன் களமிறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். நாம் ஒருபோதும் நாட்டைவிட்டு ஓடப்போவதில்லை இந்தப் போரில் நாம் வென்றேயாவோம் என்றும் சூழுரைத்தார். லிபியாவில் உள்ள ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் ஆயுதங்களை எடுத்து களமிறங்குங்கள் என்றும் அவர் கேட்டுள்ளார். மேலும் தொலைக்காட்சி அவருடைய முகத்தைக் காண்பிக்கவில்லை. தங்க நிறத்திலான ஒரு கை அமெரிக்க ஏவுகணையை உடைத்து நொருக்குவதைப் போன்ற ஒரு படத்தின் பின்னால் அவருடைய குரல் வெளி வந்தது.

alaikal.comj

.'' இந்த நாடும், இங்குள்ள எண்ணெய் வளமும் எமக்கு ஆண்டவன் தந்த நன்கொடை இதை அன்னியர் கைப்பற்ற விட முடியாது.'' ஒவ்வொரு மக்களும் ஆயுதங்களுடன் களமிறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

''மேற்குலகின் இந்த நீதி லிபிய மக்களுக்கும் மற்றும் எண்ணை வளம் கொண்ட நாட்டு மக்களுக்கும் மட்டுமே.சிலவேளை எங்களுடைய மக்களின் குருதி சில காலங்களுக்கு பின் பூமிக்கடியில் மசகு எண்ணையாக மாறினால் அது மேற்குலகிற்கு மணக்கும்.அதுவரை எங்களுக்கு நாங்களே.''

ஒபாமா நித்திரையால் எழும்பிவிட்டார்..! :D

அவர் எழும்பி என்ன பயன்?

தாய்லாந்து நட்சத்திர விடுதி பேச்சுவார்த்தைக் கனவுகளுடன் நித்திரை கொண்டிருக்கும் உருத்திரகுமாரனும், ஏனைய நா. க. த. ஈ. அரச பிரதிநிதிகளும் நித்திரையை விட்டு எழும்பாதவரை எதுவும் நகரப் போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈராக் எண்ணைக்கிணறுகளுக்கு அமெரிக்கா

லிபியா எண்ணைக்கிணறுகளுக்கு பிரான்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பயங்கரவாதிகள் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் அமெரிக்க இராஜங்க அமைச்சர் பிளேக்கு சொல்லிபோட்டாராம் என்று இன்னொரு தலைப்பில் யாரோ எழுதியுள்ளார்கள். அதை நாமும் நம்பி புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லவேண்டுமாம் என்பது எழுதியவரின் நப்பாசை.

அப்படியே இங்கே வந்தால் தனது சொந்த மக்களின் மீது குண்டுபோடுவது போர்க்குற்றமாம்..... அமெரிக்க ஜனாதிபதி!

இந்த பாழாய்போன அரசியல் புரியுதே இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.