Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில் இந்தியா போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில் இந்தியா போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியது:-

24 மார்ச் 2011

வன்னியில் இடம்பெற்றஇறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில போர்நிறுத்தம் ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததாக விக்கிலீக்ஸ் தனவல்களை வெளியிட்டுள்ளது.

அப்போது இலங்கையின் அமெரிக்கத் தூதராலயத்தில் உயர் நிலை அதிகாரியாக கடமையாற்றிய பீட்டர் பர்லே தனது குறுந் தகவல் மூலம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு இது குறித்த செய்திகளைப் பரிமாறியதாக விக்கிலீக்ஸ் குறிப்பட்டுள்ளது.

உக்கிரமான இறுதிப் போரின் போது இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தமையினை விக்கிலீக்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு இணங்க உடனடிப் போர் நிறுத்தமொன்றுக்கு செல்லுமாறு இலங்கையை வலியுறுத்தி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் அமெரிக்கத் தூதரைச் சந்தித்து தமது விஜயம் குறித்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் வியக்கியதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

அதன் போது தமது சந்திப்பு நாளில் இருந்து அடுத்து வரும் இரண்டொரு நாட்களுக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவர்கள் உறுதி கூறியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்த உறுதிமொழிகளை கருத்தில் கொள்ளாது தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் தலைமையை குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்க வைத்து யுத்தத்தை முன்கொண்டு செல்வதிலேயே ஆர்வம் காட்டியதாகவும் விக்கிலீக்ஸ் தனது தகவலில் தெரிவித்துள்ளது.

gtn

எல்லாவற்றையும் நம்பமுடியாது. அது வீக்கிலீக்ஸாக இருந்தாலும்.

எல்லாவற்றையும் நம்பமுடியாது. அது வீக்கிலீக்ஸாக இருந்தாலும்.

சுத்தப்பொய். பொதுமக்களை, காயபப்ட்டவர்களை கப்பல் ஏற்ற கப்பல் அனுப்பலாமா என நோர்வே கேட்டபோது கூட மறுப்பு தெரிவித்தது இந்தியா.

விகிலீக்ஸ் என்பது அமெரிக்க தூதரக அதிகாரிகளின் கருத்து.... அவர்களால் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட ரகசிய செய்திகள்.

அவர்களின் தூதரக உள்ளக மற்றும் வெளியாக புலனாய்வு பிரிவினர்களால் சேகரிக்கப்பட்ட செய்திகள். அதன் உண்மைத் தன்மை சூல்நிலைகளுக்கேட்ப மாறுபடலாம்..... ஆனால் அது தான் முற்றிலும் உண்மை என்று நம்பி விட இயலாது.... இவர்களின் பிரதிநிதிகள் களத்தில் நின்றிருந்தால் மட்டுமே (விக்கிலீக்ஸ்)இவர்கள் களத்தில் நடந்த விடயங்களை பற்றி வெளியிடும் கருத்தின் உண்மை தன்மை பற்றி ஆராயலாம். அதனை இந்து போன்ற பத்திரிகைகள் உண்மையை மறைத்து திரித்தும் வெளியிடலாம்.....

எது எப்படியாயினும் உண்மையான முழு முதல் குற்றவாளி கோத்தாவோ மகிந்தவோ என்பதட்குமப்பால் ... யுத்தத்தின் இறுதி 3 நாட்களில் 45000 மக்கள் மேல் துடிதுடித்து சாக காரணமான முதல் குற்றவாளி நூற்றி இருபது கோடி மக்களின் பிரதி நிதியான முன்னால் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகன் மயன்கோத் கேளாத் நாராயணன்(M.K.Narayanan )... தமிழ் சொற்களை, எழுத்துக்களை மக்களைக் கண்டாலே பாம்பாக சீரும் இந்த பாலக்காட்டு நாகத்தின் இறுதி யுத்தத்தின் பங்களிப்பு ஆதாரத்துடன் விரைவில் வெளிவரும்.... அந்த உண்மை வெளிவரும்போது இந்த நாகரீக உலகின் மிக கொடிய மனிதனாக இந்த நாராயணனே இருப்பான்...

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவிற்கு வெள்ளை வேட்டி கட்டும் முயற்சி. அதற்கு ஒரே வழி, அதற்கு ஒரே வழி, மக்களின் மனத்தைக்குழப்புவது....

அடிப்படையில் எமது எதிரி சிங்களவன், குறிப்பாக அவன் ஆட்சியாளர்கள் அவர்களின் கொள்கைகள். எமது மறுக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரத்தையும் விடுதலையையும் அவனிடம் இருந்து தான் நாம் பெற தொடர்ந்தும் முயலுகின்றோம். அதற்கு தேவையான காய்நகர்த்தல்களை நாமும் மாறும் உலகில் மறக்காமல் தொடர்ந்து நகர்த்தவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.