Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது

Featured Replies

மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது

நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்.

மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும் மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து சற்று நிறுத்தி மெல்ல விடுங்கள்.

கடினமான மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலிஇ உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

சிரியுங்கள்

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும்.

வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள் உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும் எல்லா நேரமும் தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள்.

யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது.

ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள் நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும் ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

மற்றவர்களையும் கவனியுங்கள்

உங்கள் விருப்பங்களையும் உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது.

உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள் பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !!!

இவ்வளவும் செய்ய எங்க நேரம் இருக்கு என்று மட்டும் கேட்காதீர்கள் நாங்கள் தான் நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும்..................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை குத்தியிருக்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் வழிமுறைகள் சொன்னாலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது கஸ்டம் என்பது என் கருத்து...நன்றி பதிவுக்கு தமிழ்மாறன்

நல்லதொரு பதிவு. இன்றைய வாழ்க்கை முறையில் பலருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதுவும் புலம் பெயர்ந்தவர்களுக்கு இன்னும் கூடுதலான வீதத்தில். மன அழுத்தம் வராமல் தடுப்பதே நல்லது.

  • தொடங்கியவர்

பச்சை குத்தியதிற்கு நன்றிகள் சயீவன்

சகோதரி ரதி அவர்களே..........உங்களின் கருத்துடன் ஒத்துப் போக முடியவில்லை

உண்மையில் வாழ்க்கையை சரிவர தீர்மானிக்காமல் திடட்மிடாமல் அளவுக்கு அதிகமான தேவைகளை

தினம் தினம் அதிகரித்துக் கொண்டு அர்த்தமில்லா ஒன்றிற்காக வாழ்க்கையை துலைத்து விட்டு

ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் தான் மன அழுத்தத்தில் வாழுகிறார்கள்....................

எப்போதும் போதும் என்ற மனதும் சந்தோசமான மனநிலையும் தன் வாழ்க்கையை இப்படித்தான் வாழ

வேண்டும் என்ற குறிக்கோள் இதை சரியாக கடைப்பிடித்து வாருங்கள் சந்தோசமான மனிதர்களில்

நீங்களும் ஒருவராகுவீர்கள்!!!!!

இறுதியாக என் காலுக்கு விலை உயர்ந்த செருப்பு இல்லையே என்று கவலைப்பட்டு மன துன்பத்தை அதிகரிப்பதை விட

காலே இல்லாத ஒருவனைப் பார்த்து எனக்கு கால் இருக்கிறதே என்று சந்தோசப்படுங்கள்

இந்த உதாரணம் எல்லாவற்றிற்கும் பொருந்தும்......

ஒருவனுக்கு அமைதி என்பது அவனின் மனதில் தான் இருக்கிறது

அதை வேறு எங்கேயும் தேடி அலைய வேண்டியதில்லை.............

மனதில் அமைதி இருந்தால் மற்றும் மற்றவனை ஏமாற்றி வாழாமல் இருந்தால் மன அழுத்தம் எட்டியும் பார்க்காது.................

அன்புடன் தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவரைப் பார்த்து பொறாமைப்படுவதாலோ அல்லது ஆசைப்படுவதாலோ மட்டும் மன அழுத்தம் வருவதில்லை...ஒருவருக்கு பிரச்சனைகள் அதிகமானால் அதில் இருந்து தப்ப தெரியாமல் அதாவது பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் அதனால் கவலைப் பட்டு கூட மன அழுத்தம் வரலாம் என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவரைப் பார்த்து பொறாமைப்படுவதாலோ அல்லது ஆசைப்படுவதாலோ மட்டும் மன அழுத்தம் வருவதில்லை...ஒருவருக்கு பிரச்சனைகள் அதிகமானால் அதில் இருந்து தப்ப தெரியாமல் அதாவது பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் அதனால் கவலைப் பட்டு கூட மன அழுத்தம் வரலாம் என்பது என் கருத்து

நான் நினைக்கிறேன் இதுக்கு பெயர் மன அழுத்தம் இல்லை என்று.(சரியாக தெரியாது)ஆனால் மனவழுத்தம் என்பது ஆசை பொறாமை என்பதால் மட்டும் இல்லை.உதாரனத்துக்கு ஒரு கற்பனையை செயற்படுத்தும் வரைக்கும் உள்ள இடை வெளியும் அதில் சொதப்பினால் அடுத்த சந்தர்ப்பம் வரைக்கும் உள்ள இடை வெளிகரையும் நாட்டகளும் மன அழூத்தம்தான் :rolleyes::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.