Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போத்துக்கல் நாட்டுப் பாய்க்கப்பலின் சுற்றுப் பயணம்

Featured Replies

அத்திலாந்திக் மாகடலை எல்லையாகக் கொண்ட ஐரோப்பிய நாடு போத்துக்கல் கி.பி 1143ல் நிறுவப்பட்டது. 15ம் நூற்றாண்டில் நீண்ட தூரக் கடற்பயணங்களை ஆரம்பித்த போத்துக்கல் மாலுமிகள் புதிய நிலப்பரப்புக்களின் கண்டுபிடிப்புக் காலத்தைத் (Age of discovery) தொடங்கினர்.

அமெரிக்கா, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு போத்துக்கல் நாட்டுக் கப்பல்கள் சென்றன. போத்துக்கலுக்கும் பிறேசில், ஆபிரிக்கா, இந்தியா, சீனா, யப்பான். தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றிற்கும் இடையில் வர்த்தகக் கடற்பாதையை அமைத்தனர்.

போத்துக்கல் ஒரு பாரிய கடல் கடந்த சாம்ராச்சியத்தை உருவாக்கியது. 20ம் நூற்றாண்டு வரையில் போத்துக்கல் சாம்ராச்சியத்தின் சிறிய எச்சங்கள் இந்தியாவில் கோவா, இந்தோனேசியாவில் கிழக்கு திமோர், சீனாவில் மக்கங் மாத்திரம் எஞ்சியிருந்தன.அவையும் கைவிட்டுப் போயுள்ளன

கண்டி தவிர்ந்த இலங்கையின் பிற பகுதிகள் போத்துக்கல் சாம்ராச்சியத்தின் பகுதிகளாக இருந்தன. யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,ஆகிய தழிழ்ப்பகுதிகள் ஒல்லாந்தர்கள் 20 யூன் 1659ல் கைப்பற்றும் வரை போத்துக்கல் ஆட்சியரின் பிடியில் இருந்தன. போத்துக்கல் ஆட்சியின் போது கத்தோலிக்க கிறித்தவம் இலங்கையில் குறிப்பாக யாழ் குடாவின் கரையோரப் பகுதிகளில் தோன்றியதோடு இன்றுவரை நிலைத்துள்ளது. யாழ்ப்பாணத் தமிழில் அலவாங்கு, அலுமாரி, குசினி, பாண், பனிஸ், போன்ற போத்துக்கேய மொழிச் சொற்கள் கலந்துள்ளன.

சாம்ராச்சியமும் பொருளாதார வலுவும் இழந்த போத்துக்கல் இன்று நிதி நெருக்கடிக்கு உட்பட்டாலும் தனது பெருங்கடல் தொடர்பை வெளிக்காட்டும் ஆர்வத்தை மாத்திரம் கைவிடவில்லை.

முன்னாள் காலனித்துவ நாடுகளைப் பார்க்கும் நோக்குடன, என் ஆர் பி சாகிரெஸ் என்ற பாய்க் கப்பலை 15 சனவரி 2010ல் பதினொரு மாதக் கடற் பயணத்தில் போத்துக்கல் ஈடுபடுத்தியுள்ளது. நல்லெண்ணத் தூதுவனாகச் செல்லும் சாகிரெஸ் (Nrpsagres) கப்பல் பூமியைச் சுற்றி 36,000 கடல் மைல்களைக் கடந்தபின் போத்துக்கல்லின் லிஸ்பன் (Lisbon) நகருக்கு 23 டிசெம்பர் 2010ல் திரும்புவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. போத்துக்கலின் கிழக்கு நாடுகளுடனான 500 வருடத் தொடர்பை இந்தக் கடற்பயணம் நினைவுறுத்தும் என்றும் பயணத் திட்டமிடலாளர்கள் கூறுகின்றனர். முன்னாள் கொலனிகளான பிறேசில், கோவா, மலாக்கா, மக்கவ் போன்றவற்றிற்கு இந்தக் கப்பல் செல்லவுள்ளது.

யப்பானுக்கும் போத்துக்கல்லுக்கும் இடையலான 150 வருட இராசதந்திரத் தொடர்புகள் தாய்லாந்திற்கும் போத்துக்கல்லுக்கும் இடையிலான 500 வருடத் தொடர்புகள் ஆகியவற்றையும் சாகிரெஸ் கப்பலின் பயணம் நினைவுறுத்தும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டீசல் எரிபொருளில் இயங்கும் பாரிய கொள்கலன் கப்பல்கள், எண்ணைத் தாங்கிகள் உல்லாசப் பயணிகள் சுற்றுலாச் செல்லும் அரண்மனை போன்ற கப்பல்கள் சஞ்சரிக்கும் பெருங்கடலில் சாகிரெஸ் தனித்துவமான காட்சி தருகிறது.

சாகிரெஸ் கப்பலில் மூன்று பெரிய வெள்ளைநிறப் பாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்னாள் கப்பல்கள் போல் அது கடற் காற்றைப் பயன்படுத்தி பயணிக்கும் அதனுடைய சராசரி வேகம் மணிக்கு 16.5 கடல் மைல்கள் காற்று இல்லாத போது அவசர தேவைக்காக 1000 குதிரை வலுவுள்ள ஒரு டீசல் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் எந்திரத்தின் உதவியோடு மணிக்கு 9 கடல் மைல் வேகத்தில் செல்ல முடியும். சாகிரெஸ் கப்பலின் எடை 1,893 தொன் முதலாவது பாயின் உயரம் கப்பலிலிருந்து 45.5 மிற்றர் இந்த சென்றகாலத்திற்குரிய நவீன கப்பலைப் பார்த்தோர் கண்கொள்ளாக் காட்சி என்று வர்ணித்துள்ளனர்.

சாகிரெஸ் கப்பல் 1937ம் ஆண்டில் ஜேர்மனியின் ஹம்பூர்க் துறைமுகத்தில் அந்த நாட்டின் தேவைக்காக கட்டப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தபின் அது வெற்றிபெற்ற அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டது. சிறிது காலத்தின் பிறகு நல்லுறவின் நிமித்தம் 5000 டொலர் சொற்ப விலைக்கு அமெரிக்கா பிறேசிலுக்கு இந்தக் கப்பலை விற்பனை செய்தது. பிறேசில் இதைச் சிறிது காலம் வைத்திருந்தபின் 150,000 டாலருக்கு போத்துக்கல்லுக்குக் கையளித்துள்ளது.

சாகிரெஸ் என்ற போத்துக்கல் நகரின் பெயர் கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 35 கடற்படை மாணவர்கள் உட்பட 149 மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.வறுமை அடைந்தாலும் பழமையை மறவாத நாடகப் போத்துக்கல் இடம்பெறுகிறது.

இதற்கு சாகிரெஸ் கப்பலும் அதன் சுற்றுப்பயணமும் சாட்சி பகருகின்றன. பிற கடற்தொடர்பு உடைய நாடுகளும் போத்துக்கலைப் பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி தவிர்ந்த இலங்கையின் பிற பகுதிகள் போத்துக்கல் சாம்ராச்சியத்தின் பகுதிகளாக இருந்தன. யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,ஆகிய தழிழ்ப்பகுதிகள் ஒல்லாந்தர்கள் 20 யூன் 1659ல் கைப்பற்றும் வரை போத்துக்கல் ஆட்சியரின் பிடியில் இருந்தன

யாழ்ப்பாணத்திற்கு போகவில்லையோ? சங்கிலி மன்னனை சிறைப்பிடித்து கோவாவில் தூக்கில போட்டவங்களென்று கேள்விப்பட்டேன்.நீங்கள் தான் எங்கள் முதல் ஆக்கிரமிட்பாளர்கள் போய் யாழ்ப்பாணத்தயும் பாருங்கோ என தந்தி அடிப்ப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு போகவில்லையோ? சங்கிலி மன்னனை சிறைப்பிடித்து கோவாவில் தூக்கில போட்டவங்களென்று கேள்விப்பட்டேன்.நீங்கள் தான் எங்கள் முதல் ஆக்கிரமிட்பாளர்கள் போய் யாழ்ப்பாணத்தயும் பாருங்கோ என தந்தி அடிப்ப்போம்...

புத்தனுக்கும், கருணாநிதியின் தந்தி அடிக்கிற வியாதி தொடங்கீட்டுது. :rolleyes:

  • தொடங்கியவர்

கருத்தைப் பதிந்த புத்தனுக்கும்.தமிழ் சிறிக்கும் நன்றிகள்.இப்ப இந்தக் கப்பல் வருவதானால் மாந்தை துறைமுகத்திற்கு வரவேண்டும்,ஆனால் இந்த துறைமுகம் இருக்கோ தெரியாது.முதலில் இங்குதான் வந்ததாக செங்கைஆழியானின் கடல்கோட்டை நாவலில் சிறுவயதில் படித்தேன்.

"உறுமி" மலையாளப்படம் யாராவது பார்த்தீர்களா? சந்தோஸ் சிவன் படம்.பிருதிவிராஜ்,ஜெனீலியா நடித்தது

வஸ்கொடகாமாவின் இந்திய பயணம் பற்றியது என்று சொன்னார்கள்.மிக நல்ல படம் என்று விமர்சனம் வாசித்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.