Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சில கோடிகளில் கைமாறிய 'தினக்குரல்' நாளேடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'தினக்குரல்' விற்கப்பட்டு விட்டதாம்: சில கோடிகளில் கைமாறிய மாற்றுக் குரல்

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் தமிழ்த் தேசியத்தை தமக்கான கருத்தியலாக கொண்டு வெளிவந்த ஊடகங்களின் பங்கு கணிசமானது. சுதந்திரனிலிருந்து இன்று வெளிவரும் தினக்குரல் வரைக்கும் அதற்கென்று ஒரு தனியான வரலாறே உண்டு.

எந்தவொரு அரசியல் நிலைப்பாடும் அதனை ஆதரிக்கும் ஊடகங்களின் துணையின்றி மக்கள் மத்தியில் நிலை கொள்ள முடியாது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற கடந்த ஒரு காலத்தில் 1995ல் இருந்து தமிழ்த் தேசிய செய்திப்பத்திரிகையான தினக்குரல் கருத்தியல் ரீதியாக கனிசமான பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறது.

அதே வேளை கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஒரேயொரு தமிழ்த் தேசியப் பத்திரிகையாகவும் தினக்குரலே விளங்கியது என்றால் அது மிகையல்ல.

ஆனால் தனது பதினைந்தாவது ஆண்டை நிறைவு செய்திருக்கும் நிலையில் வெளிவந்திருக்கும் ஒருசெய்தி, தினக்குரலின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது.

புதினப்பலகைக்கு கிடைத்த தகவல்களின் படி தினக்குரல் பத்திரிகையை, பிறிதொரு முக்கிய தமிழ்ப் பத்திரிகை நிறுவனமான வீரகேசரி முகாமைத்துவம் சுமார் 15 கோடி பெறுமதியில் முழுமையாக வாங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

புதினப்பலகையின் சுயாதீன விசாரணைகளில் இருந்தும் இந்த தகவலை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அப்படியே தருகின்றோம்.

தினக்குரல் நிறுவனத்தின் இயக்குனரான தொழிலதிபர் சாமிக்கும் வீரகேசரி நிறுவனத்தினருக்கும் இடையில் ஒரு வியாபார பேரம் இடம்பெற்றுள்ளது. அதன்படி 55 வீதமான பங்குகள் வீரகேசரிக்குச் செல்லும். இதன் மூலம் கொழும்பு, யாழ்ப்பாணம் தினக்குரல் பதிப்புகள், வீரகேசரியின் கைகளுக்குச் செல்லும். இதற்காக 15 கோடி ரூபா பேசப்பட்டதாகத் தகவல்.

இன்னும் 3 மாத காலத்தில் தினக்குரலின் 65 வீத பங்குகள் வீரகேசரி வசமாகும் எனவும் மேலும் சில மாதங்களில் முழுமையாகவே தினக்குரலின் சகல நிர்வாகமும் வீரகேசரியிடம் போய்ச் சேரும் எனவும் அத்தகவல் தெரிவிக்கின்றன.

இந்த பேரத்துக்கு இரண்டு பின்னணிக் காரணங்கள் உள்ளன என்றே அறிய முடிகின்றது. ஒன்று - தினக்குரல் நிர்வாகம் ஒழுங்கான முறையில் கணக்குகளைப் பேணவில்லை. அது ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் உடமையாக இருந்தமையால் உரிமையாளர்கள் கையாடும் பெருந்தொகையான பணம் குழுமத்தின் நட்டமாகக் காட்டப்பட்டு வந்தது…

15 ஆண்டு காலமாக இவ்வாறு நட்டமாகக் காட்டப்பட்டதால் பணியாளர்களின் ஈ.பி.எப் கூடக் கட்டுப்படவில்லை. இப்போது யாழ்ப்பாணத்தில் சாமி குடும்பத்தினர் கட்டிவரும் பிரம்மாண்டமான மருத்துவமனைக்குப் பெருமளவு பணம் தேவையாக உள்ளது.

மேற்படி சொந்தக் குடும்ப நலன்சார் காரணங்களின் அடிப்படையில், தினக்குரல் கடந்த பதினைந்து ஆண்டு காலமாக கட்டியெழுப்பிய நன்மதிப்பை விற்றுப் பணமாக்க சாமி முடிவு செய்துள்ளார். இதனை வீரகேசரி சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

வீரகேரரியைப் பொறுத்தவரையில், டெயிலி மிரர் நிறுவனம் விரைவில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவே ‘தமிழ் மிரர்’ வெளிவருவது தனது வாசகர் தளத்தை அசைக்கும் என வீரகேசரி உணர்கின்றது.

தற்போது 'தமிழ்மிரர்' இணையத்தில் மட்டுமே இயங்கிவருகின்றது. வீரகேசரி, தினக்குரல் என இரண்டு பத்திரிகைகள் வெளிவரும் நிலையில் மூன்றாவது பத்திரிகை ஒன்றுக்கு இடமில்லை எனவும் வீரகேசரி நிர்வாகம் கருதுகின்றது.

அதனால் தினக்குரலை பெயரளவுக்காவது கொண்டுவர அவர்கள் விரும்புகின்றார்கள். வீரகேசரியின் இந்த அச்சத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள தினக்குரல் நிர்வாகம், தாம் பத்திரிகையை மூடும் நிலையில் இருப்பதாகவும் அதனை வேண்டும் என்றால் நீங்கள் எடுங்கள் எனவும் வீரகேசரியிடம் கேட்டுள்ளது. இதன் மூலம் தினக்குரலுக்கு இருக்கக்கூடிய நன்மதிப்பை விற்றுக் காசாக்க சாமியும் பிள்ளைகளும் தீர்மானித்துள்ளார்கள்.

இந்தப் பின்னணியில்தான் வியாபாரப் பேரம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பேரம் மிகவும் இரகசியமாகவே இடம்பெற்ற போதிலும் தினக்குரல் ஆசிரியர்குழு மற்றும் பணியாளர்களுக்கு செய்தி கசிந்ததையடுத்து, நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் அதனை மறுத்திருந்தார்கள்.

இருந்த போதிலும் இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியான பின்னர் நிர்வாகத்தால் மறுக்க முடியவில்லை. அவ்வாறான ஒரு பேரம் உள்ளது. ஆனால், உத்தியோகபூர்வமாக எதுவும் நிகழவில்லை என்றவாறு சாட்டுச் சொல்லியிருக்கின்றனர்.

இந்தநிலையில் அவ்வாறான ஒரு உடன்பாட்டுக்குப் போனால் தம்மால் தொடர்ந்தும் வேலை செய்ய முடியாது என ஆசிரியர் பீட உறுப்பினர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் நிலைமை அப்படியே உள்ளது.

நிறுவனம் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் இதில் முதலீடு செய்யக் கூடியவர்கள் யாராவது இருந்தால் கொண்டுவருமாறும் தினக்குரல் உரிமையாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.

எனினும் பிந்திய தகவல்களின்படி தற்போது தமிழ்த் தேசிய பத்திரிகையான தினக்குரலை சாமி குழுவினர் முழுமையாக வீரகேசரிக்கு விற்றுவிட்டனர்.

ஏற்கனவே போட்டிப் பத்திரிகை ஒன்றை நடத்திவரும் வீரகேசரி நிர்வாகம் தினக்குரலையும் எடுத்து தற்போதுள்ள நிலைமையில் செய்யுமா என்பதில் தினக்குரல் ஆசிரியர் பீட உறுப்பினர்கள் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். அத்துடன், இதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

இந்த நிலையில்தான் நிர்வாகத்தின் வியாபார நோக்கங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என ஆசிரியர் பீடம் தீர்மானித்துள்ளது. அத்துடன், தம்முடைய உழைப்பால் பெற்றுக்கொண்ட நன்மதிப்பை விற்றுப் பணமாக்கும் முயற்சியில் சாமியும் குடும்பத்தினரும் ஈடுபட்டிருப்பதும் பணியாளர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதற்கு இடையில் இந்த வியாபார பேரத்தை புலம்பெயர் நாட்டில் இயங்கும் நோர்வேயை தளமாகக்கொண்டு தமிழ்த் தேசியத்தை கூறுபோடும் ஆங்கில இணையத்தளம் பிறிதொரு கோணத்தில் பதிவு செய்துள்ளது. இதனை கே.பி என அறியப்படும் செல்வராசா பத்மநாதன் தனக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் வாங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த வணிகபேரத்தை தங்களது குழுநிலை மோதல் அரசியலுக்கு பயன்படுத்த முயல்கின்றதோ என்றும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

மேலும் இது தொடர்பில்..,

மேற்படி தகவல்கள எமது சுயாதீன விசாரணைகளில் இருந்து அறிந்து கொண்டவை ஆனால் புதினப்பலகையுடன் தொடர்புடைய தமிழ்த் தேசிய ஆய்வாளர்கள் குறிப்பாக ஈழத்தில் இருந்து இயங்கிவரும் குறிப்பிடத்தக்க சிலர் இது பற்றி வேறு கோணத்திலும் கருத்துக்களை பகிர்ந்த கொண்டிருந்தனர். அதனையும் நாம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

2009 – மே.19 இற்கு பின்னர் ஈழத்தின் அரசியல் பெரும்பாலும் ஊடக வழியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுதான் சரியானதொரு வழி என்று எந்தவொரு ஊடகத்தாலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் ஒரளவில் தமிழ்த் தேசிய அரசியல் ஊடகங்களின் வழியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாகவே மக்கள் மத்தியில் தமிழத் தேசியம் தொடர்பான நம்பிக்கையையும் பேணிக் கொள்ள முடிகிறது. இதில் ஈழம் என்று தனித்து நோக்கினால் தினக்குரல், உதயன், வலம்புரி போன்ற பத்திரிகைகள் மட்டுமே தமிழ்த் தேசிய நோக்கிலான அச்சு ஊடகங்களாக இருக்கின்றன.

இந்த பின்புலத்தில்தான் தினக்குரல் விலை பேசப்பட்டுள்ளது. உதயன், வலம்புரி ஆகிய இரு பத்திரிகைகளும் யாழ்பாணத்துடன் மட்டுபட்ட பிராந்திய பத்திரிகைகளாகும். தினக்குரல் ஒன்று மட்டுமே கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரேயொரு தமிழ்த் தேசிய நோக்கிலான பத்திரிகையாகும்.

வீரகேசரி தமிழ்த் தேசிய நோக்கிலான கட்டுரைகளை வெளியிட்டு வந்தாலும் மலையகத்தை தமக்கான முக்கிய தளமாகக் கொண்டிருக்கும் வீரகேசரியால் அவ்வாறு இருக்கவும் முடியாது. அத்துடன் வீரகேசரி அடிப்படையிலேயே இந்திய பின்னனி கொண்டது என்பதும் இரகசியமான ஒன்றல்ல.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய நோக்கில் வெளிவரும் பத்திரிகையான தினக்குரலையும் தம்வசப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியம் தொடர்பான கருத்துக்களை வியாபாரமாக்கும் ஏகபோக உரிமையை வீரகேசரி நிர்வாகம் முழுமையாவே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

மேலும் இதில் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களால் விருப்பத்துடன் படிக்கப்பட்டு வந்த தினக்குரலை எந்தவிதமான சுய பரிசீலனையும், தினக்குரலின் வளர்ச்சிக்காக பாடுபட்டோரின் ஆலேசனையுமின்றி, தனது குடும்ப நலனுக்காக அதனை விற்று காசாக்கியுள்ள சாமி போன்ற வணிகர்கள் குறித்தே தமிழ் மக்கள் கவனம் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் வன்னியுடன் தொடர்புகளைப் பேணி, தான் தமிழ்த் தேசியத்தின் பக்கமென்று சொல்லிய இவ்வாறான சந்தர்ப்பவாத நபர்களின் அர்த்தத்தில் தமிழ்த் தேசியம் என்பதும் ஒரு வியாபாரப் பொருளே! நல்ல விலை கிடைத்ததும் வியாபாரி அதனை விற்றுவிட்டார்.

நன்றி: புதினப்பலகை

  • கருத்துக்கள உறவுகள்

'தினக்குரல்' விற்கப்பட்டு விட்டதாம்: சில கோடிகளில் கைமாறிய மாற்றுக் குரல்

இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது தோல்வியின் பின்னர் தமிழ் தேசிய ஆர்வமுள்ள முதலாளிகள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை நாம் எந்தளவுக்குப் புரிந்துகொண்டுள்ளோம் என்கிற கேழ்வி எழுகிறது. நட்டத்தையும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் செலவையும் தாங்கும் வகையில் வெளிநாட்டு தமிழரின் முதல்லீடுகள் செல்லாவிட்டால் தமிழ் தேசிய முதலாளிகள் என்று யாருமே மிஞ்சப் போவதில்லை. கண்மூடித்தனமாக முதலீடுகலை எதிர்க்கிறதில் உள்ள அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேணும். இலங்கைக்கு முதலீடுகளைத் தடுப்பதன் மூலமல்ல முதலீடுகளை சரியான திசையில் நெறிப்படுத்துவதன் மூலம்தான் நாம் எதிர்கால அரசியல் பொருளாதரம் கட்டமைக்கக்கூடும். இல்லாவிட்டால் ஏற்படவுள்ள வர்த்தக கைதொழில் முதலாளித்துவ வளற்ற்ச்சி வாய்ப்புகள் யாவும் சிங்கள முதலாளிகளின் குடியேற்றங்களுக்கே வாய்ப்பாகிவிடும். அரசியலும் பொருளாதாரமும் இரண்டு பக்கமும் வெட்டுகிற கத்தி. 1940பதுகளில் இருந்தே நமது அரசியல் பொருளாதாரம் சிறுபிள்ளைத் தனமாகவே கையாலப் பட்டுள்ளது. தயவு செய்து இனியாவது சிந்தியுங்கள். சாமி போன்ற அச்சுறுத்தப்பட்ட அருகிவரும் தமிழ் தேசிய முதலாளி ஒருவரைத் திட்டுவதற்க்குப்பதில் தினக்குரல் போன்ற தமிழ் நிறுவனங்களை பேணவும் வளர்க்கவும் நாம் என்ன செய்தோம் என்ன செய்ய் உள்ளோம் என்ப்பது பற்றி விவாதிப்பது விடுதலை சார்ந்ததும் பயனுள்ளதுமாகும்.

தினக்குரல் எனற பத்திரிக்கையில் வேலை செய்யும் முக்கிய ஆசிரியரில் இருந்து முக்கிய தொழில்நுற்ப்வியாளர்கள் அனைவரும் வீரகேசரியில் இருந்து பிரிந்து வந்தவர்கள்.

இன்றைக்கு தினக்குரலின் போட்டியாளிரமே அதை விக்க வேண்டிய தேவை ஏன் வந்தது என்பது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
:) தினக்குரல் பத்திரிக்கை சில வாரங்களுக்கு முன்னர் வரை பசில் ராசபக்ஷவுக்குச் சொந்தமான வர்த்த நிறுவனம் ஒன்றிற்காக கே.பீ மூலமாக வாங்கப்பட இருந்ததாகத்தான் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. தமிழர் பக்க நியாயத்தை இதுவரையிலும் எழுதிவந்த ஒரு பத்திரிக்கை தமிழின அழிப்பினை நியாயப்படுத்துவதற்காக சிங்கள இனவழிப்புத் தேசியவாத்தத்தினால் உள்வாங்கப்படப்போகிறதே என்கிற கவலை பலருக்கும் இருந்து வந்தது. அந்த வகையில் அந்தப் பத்திரிக்கை இன்னொரு சகோதர தமிழ் பத்திரிக்கை நிறுவனத்தால் ( இன்னும் சொல்லப்போனால் தனது தாய்ப்பத்திரிக்கையிடமே) மீளவும் உள்வாங்கப்படப்போகிறதென்பது மனதிற்கு ஆறுதலளிக்கும் செய்திதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.