Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ஐநா அறிக்கை சரியானதே’- த.தே.கூட்டமைப்பு

Featured Replies

‘ஐநா அறிக்கை சரியானதே’- த.தே.கூட்டமைப்பு

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்துள்ள குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஐநாவின் நிபுணர் குழு தயாரித்துள்ள இறுதியறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பந்தர் செவ்வி

ஐநா குழுவின் அறிக்கையிலிருந்து கசிந்துள்ள சாராம்சங்களை இலங்கையில் சில நாளிதழ்கள் அண்மையில் வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள தகவல்ககளை நிபுணர் குழு சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து எடுத்துள்ள தீர்மானங்களே என தமிழோசைக்குக் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கம் அதிலுள்ள விடயங்களை புறந்தள்ளாது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறினார்.

போர்க்காலத்தில் ஒவ்வொரு சம்பவங்கள் நடக்கும் போதும் அவற்றை தாம் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது பதிவு செய்துள்ளதாகக்கூறும் இரா.சம்பந்தன், தாம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய சம்பவங்களை நிபுணர்குழு விசாரணைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐநாகுழுவின் கசிந்துள்ளதாகக் கூறப்படும் இறுதி அறிக்கை சாராம்சங்களில், இலங்கை அராங்கத்துக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார்.

இனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண்பதற்காக, சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்த தாம் உதவியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அவர்களை ஆதரித்த கட்சி என்ற வகையில், சுயவிமர்சனம் ஒன்றை செய்துகொள்ளவும் நீங்கள் தயாரா என்ற கேள்விக்கு, தாம் பேச்சுவார்த்தைகளில் இருதரப்புக்கும் பாலமாக செயற்பட்டார்களே தவிர, இராணுவ ரீதிய தீர்வினை ஒருபோதும் ஆதரிக்கவில்லையெனவும் இரா. சம்பந்தன் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=65743

  • தொடங்கியவர்

நிபுணர் குழுவின் அறிக்கை கூட்டமைப்பும் ஆராயும்: த.தே.கூ

யுத்தம் குற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நபையின் அறிக்கை தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து தெளிவுப்படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ்பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போர்க்குற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களும் அறியக் கிடைக்கவில்லை. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களில் கூறப்பட்டுள்ள விடயங்களில் இருக்கின்ற உண்மைத்தன்மைகள் குறித்து ஆராய வேண்டியிருக்கின்றது.

மேலும் இந்த அறிக்கையில் குறைபாடுகள் இருக்கின்றனவா என்பது குறித்தும் பார்க்க வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31046

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவை ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையே நம்பாதபோது ததேகூட்டமைப்பு அதன் முன் சாட்சியமளிக்கப் போவதாக சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தது.இது சர்வதேசத்தை இந்த விடயத்தில் தலையிட வேண்டாம் என்று கூறுவது போன்று இருக்கின்றது.இப்போது ஐநா அறிக்கையை வரவேற்கிறோம் ஆராய்கிறோம் என்பது அதன் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. இந்த அறிக்கையைக் காரணம் காட்டி சிறிலங்கா அரசின் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோருவதும் சர்வதேசத்தின் மேற்பார்வையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதற்குக் கோருவதும் இன்றைய நிலையில் செய்ய வேண்டிய வேலைகள் அதைவிடுத்து தெய்வம் வரம் கொடுத்தாலும் ப+சாரி இடம் குடுக்காத கதையாக ததேகூட்டமைப்பின் நடவடிக்கைகள் இருக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாயக வீதிகளில் தான் நீதி கேட்டு இறங்க அனுமதியில்லை. ஆனால் ஐ நா விடம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கேட்டு சர்வதேச ஆதரவை தற்போது கோர முடியும்.

எமது அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு செயற்படுவதாகத் தெரியவில்லை.

தாயகத்தில் போராளிகளும் மக்களும் சரணடைந்த பின்னர் 13,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். பலர் இன்னும் வதை முகாம்களில் வாழ்கின்றனர். இவர்களின் எதிர்காலம் குறித்து எவராவது இந்தச் சூழலில் ஐநாவிடம் சர்வதேசத்திடம் கேள்வி எழுப்பி உள்ளனரா என்றால் இல்லை.

சம்பந்தன் இன்று விட்டுள்ள அறிக்கை சிறீலங்கா அரசு ஏதாவது தர வேண்டும் என்று கேட்கிறதே அன்றி சர்வதேசம் எமக்கு நீதி கிடைக்க தலையிட வேண்டும் என்று கோரவில்லை. ஏன்..??! சம்பந்தன் சிறீலங்கா படைகளையும் அதன் ஆயுதம் தாங்கிய கூலிக் கும்பல்களையும் தமிழ் மக்கள் மத்தியில் நிறுத்தி வைத்துக் கொண்டு தினமும் படுகொலைகளும் காணாமல் போதல்களும் தொடரும் நிலையில் சிறீலங்காவிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறார். இதன் பின்னால் இருக்கும் இராஜதந்திரம் தான் என்ன..???!

சிறீலங்கா அரசு அது செய்த போர் குற்றத்திற்காக தண்டிக்கப்படுவதோடு சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டின் கீழ் அதன் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களின் பாதுகாப்பு கொண்டு வரப்படுவதோடு தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வையும் அது பெற்றுக் கொடுக்க நாம் வலியுறுத்த எமக்கு சரியான வலுவான காரணங்கள் இன்றுள்ளன. ஆனால் நாம் இப்போதும் சிறீலங்கா ஏதாவது செய்யனும் என்று கொலையாளியிடம் இரைஞ்சும் குணத்தையே வெளிப்படுத்தி உள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசு.. சீமான்.. நெடுமாறன் ஐயா தவிர மற்றவர்கள் சிறீலங்கா சிங்கள அரசுக் கட்டமைப்பை இன்னும் நம்பும் நிலையை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளியிடும் தன்மையையே வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச சமூகம் இரட்டை வேடம் போடலாம். ஆனால் ஐநாவின் சிறீலங்கா அரசு மீதான தற்போதைய குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையானவை. விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து அந்த இயக்கம் அழிக்கப்பட்டது அல்லது செயற்பாடு இழந்துள்ளது என்ற நிலையில் அதனை விசாரிக்க எதுவும் இல்லை. ஆனால் சிறீலங்கா அரசிடம் இருந்தான தமிழ் மக்கள் மீதான ஆபத்து அச்சுறுத்தல் இனப்படுகொலைக்கான சாத்தியக் கூறுகள் இன்னும் இன்னும் பிரகாசமாக உள்ள நிலையில்.. சரணடைந்த போராளிகள் மக்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு.. தமிழர் நிலப்பரப்பு இராணுவ நிர்வாக மயமாக்கப்பட்டுள்ளது வரை தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்படுவது ஊடாக.. அவசரகாலச் சட்டம் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கும் சட்டங்கள் அமுலில் உள்ளவை அடங்க பல அம்சங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன.

இவை குறித்து தமிழ் மக்கள் தமது ஆதங்கத்தை.. சர்வதேசத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வருவதோடு.. சேர்பியாவில் அல்பேனிய மக்கள் மிலேசவிச்சை பதவி நீக்கும் வரை நடத்தியது போன்று தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். ஆனால் நாம்.. இராஜதந்திர நடவடிக்கை என்று எதையோ மக்களுக்கு தெரியாமல் எடுக்கிறோம் என்கிறோம். அப்படி என்னதான் இருக்கு மக்கள் அறியாத இராஜதந்திரம்..??!

மக்கள் தங்கள் பாதிப்புக் குறித்து சர்வதேச கவனத்தை இழுக்க இன்றைய சூழலில் வலுவான ஆதாரத்தை சர்வதேசமே கையளித்திருக்கும் நிலையில்.. மக்கள் அதை பயன்படுத்துவதை இராஜதந்திரத்தின் பெயரால் தடுத்து எதிரிக்கு வழங்கும் கால அவகாசங்கள் அவன் தன்னை பலப்படுத்திக் கொண்டு எம்மீது மீண்டும் மீண்டும் கொடிய அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடவே வழி செய்யும். அதற்கு சிங்களப் பேரினவாதம் முழு ஆதரவை அளித்தும் நிற்கும்.

அப்போதும் சம்பந்தன் சிறீலங்கா எதையாவது தந்தால் நல்லம் என்று கேட்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். அவரின் கண் முன்னாள் ஆயிரக்கணக்கான மக்கள் சாக அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். எனி தமிழ் மக்கள் இவர்களை நம்பிக் கொண்டிருக்க முடியாது. தமிழ் மக்கள் தங்கள் பாதுகாப்பை தாமே உறுதி செய்யும் வகையில் சர்வதேசத்திடம் தற்காலிக பாதுகாப்பை பெறுவதும்.. தம்மை தாமே நிர்வகிக்கக் கூடிய வகையில் சர்வதேசத்தின் உதவியோடு தமது நிலத்தை தாமே பரிபாலனம் செய்ய கோருவதுமே தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு.. சரணடைந்த போராளிகள் மக்கள் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை சர்வதேச சமூகம் உறுதி செய்து தரவும் அவர்களின் விடுதலையை உறுதி செய்யவும் மக்கள் சர்வதேசத்தை நோக்கி குரல் எழுப்ப வேண்டும்.

இராஜதந்திரம் செய்யிறவை செய்யட்டும். சோனியாவை சந்திக்கட்டும். ராஜபக்சவோட வட்ட மேசை போட்டு பேசட்டும். இவற்றால் தமிழ் மக்களுக்கு ஒரு உருப்படியான பாதுகாப்பு கிடைக்கக் கூடிய எந்த சாத்தியங்களும் தெரியவில்லை. ஆனால் ஐநாவின் இந்த போர் குற்ற விசாரணையை பரிந்துரைக்கும் ஆவணம்.. தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பாதுகாப்பை சர்வதேசம் உறுதி செய்து கொடுக்க வேண்டிய கடப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேசம் அதை தட்டிக் கழிக்க முடியாது. அந்த வகையில் தமிழ் மக்கள் சர்வதேசத்தின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு மீட்சியை நோக்கி விடிவை நோக்கி பயணிக்க முற்பட வேண்டுமே தவிர.. மேலும் மேலும் சிங்களவனை இந்தியாவை முழுமையாக நம்பி மக்களை பலியிடுவதை நிறுத்த முயல வேண்டும். இராஜதந்திரம் எமது மக்களை மண்ணை உரிமைகளை பாதுகாக்க வேண்டுமே தவிர அவற்றை பறிக்க வகை செய்யக் கூடாது. அப்படியான இராஜதந்திரங்கள் எமக்கு அவசியம் தானா என்றும் நாம் பரிசீலிக்க கடமைப்பட்டுள்ளோம்.

சர்வதேச அழுத்தத்தின் மூலம் இந்தியா போன்ற நாடுகள் எம்மை நோக்கி ஆதரவுக் கரங்களை நீட்டச் செய்ய வேண்டுமே தவிர நாம் அவர்களிடம் எனியும் சரணடைந்தால் எம்மினத்தை இலங்கைத் தீவில் அழிவில் இருந்து எவராலும் காப்பாற்ற முடியாத நிலையே தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் இன்று விட்டுள்ள அறிக்கை சிறீலங்கா அரசு ஏதாவது தர வேண்டும் என்று கேட்கிறதே அன்றி சர்வதேசம் எமக்கு நீதி கிடைக்க தலையிட வேண்டும் என்று கோரவில்லை. ஏன்..??! சம்பந்தன் சிறீலங்கா படைகளையும் அதன் ஆயுதம் தாங்கிய கூலிக் கும்பல்களையும் தமிழ் மக்கள் மத்தியில் நிறுத்தி வைத்துக் கொண்டு தினமும் படுகொலைகளும் காணாமல் போதல்களும் தொடரும் நிலையில் சிறீலங்காவிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறார். இதன் பின்னால் இருக்கும் இராஜதந்திரம் தான் என்ன..???!

எனக்குத் தெரிய எதுவும் இல்லை நெடுக்ஸ்.

இந்திய சுதந்திரம் தவிர்க்க முடியாது என பிரித்தானியா உணர்ந்து கொண்ட போது, கௌரவமாக இந்தியாவை விட்டு வெளியேறக் காந்தி வழி சமைத்துக் கொடுத்தார்.காந்தி கடைசி வரை பிரித்தானிய சாம்ராச்சியத்தின் பிரஜையாகவே தன்னை அடையாளப் படுத்தியும் கொண்டார்.இதையே தான் சம்பந்தரும் செய்கின்றார் போல உள்ளது!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.