Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் யாழ் செல்ல மீண்டும் பாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May 6, 2011 / பகுதி: செய்தி /

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் யாழ் செல்ல மீண்டும் பாஸ்

வெளிநாடுகளில் நிரந்தரமாக வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்வதற்குப் பாஸ் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்று வாழும் புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் கடவுச்சீட்டுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு செல்வதானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை அல்லது வதிவிட விசாவை ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் காண்பிக்க வேண்டும் எனக் கேட்கப்படுகின்றனர்.

எதுவித முன் அறிவிப்பும் இன்றித் திடீரென அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமது உறவினர்களைப் பார்க்க யாழ். சென்றோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.கொழும்பிலுள்ள ஊடகவியலாளர் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் தமது உறவினர்களுடன் நேற்றுக் காலை யாழ். சென்றபோது, ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாத காரணத்தால் மீண்டும் கொழும்பு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

இது எவ்வளவு காலம் தொடடு இருக்குது

http://onlineuthayan.com/News_More.php?id=70618216007712552

... நாடு அந்த மாதிரி ... அங்கே எல்லாம் இயல்பு ... போய் வாருங்கள் தெரியும் ... என்று இங்குள்ள ஓர் தொல்லைக்கட்சியில் விளம்பரம் வேறு!!! ... எம் கூலிகள் அவ்விளம்பரங்களில் ... ஆனால் ... நிலைமை .... !!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது?

தார்மீக பூமி எண்டுறாங்கள்!

சுதந்திர பூமி எண்டுறாங்கள்!

பிரச்சனை முடிஞ்சுது எண்டுறாங்கள்!

எல்லாரையும் அழிச்சாச்சு எண்டுறாங்கள்!

திருப்பியும் பாஸ் எண்டுறாங்கள்???????????????????

  • கருத்துக்கள உறவுகள்

இது வந்து சமாதான காலம் தொட்டு இருக்கிறது என நினைக்கிறேன்...கலைஞனும் இது தொடர்பான திரியை ஆரம்பித்து இங்கே பிறந்த பிள்ளைகள் அங்கே போவது என்டால் எப்படி பாள் எடுக்கிறது எனக் கேட்டு இருந்தார்...நான் 2 மாதத்திற்கு முன்னால் போகும் போது கூட பாஸ் எடுத்தே சென்றேன்...MOD எடுப்பது என சொல்வார்கள் MOD என்டால் Ministry of defence அனுமதி இல்லாமல் போக முடியாதாம் <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கு செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற 4 நாட்களிற்கு முன்னர் விண்ணப்பிக்கவேண்டும்!

Posted by uknews On May 8th, 2011 at 2:44 pm / No Comments

வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக வன்னிப்பிரதேசம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என மீண்டும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முன்னறிவித்தலின்றி இறுக்கமாக செயற்படுத்தப்படுவதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு வருகின்ற வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்களும் இந்த அனுமதியைப் பெற்று பிரயாணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அனுமதி பெறாமல் வடபகுதிக்குச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந் நடைமுறை புதிதாக உருவாக்கப்பட்டதல்ல ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு விடயம் எனவும் இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் விபரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல பி.பி.சி செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன், இலங்கைப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்துள்ள வெளிநாட்டுப் பிரஜை மற்றும் இலங்கையில் பிறந்து வெளிநாட்டு கடவுச் சீட்டைக் கொண்டிருப்பவர்களும் இலங்கையில் பிறந்து, வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்றிருப்பவர்களும் இந்த அனுமதியைப் பெற வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வடபகுதிக்குச் செல்வதற்கான முன் அனுமதியைப் பெறுவதானால் 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் அதாவது நான்கு நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன் அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் தொலைநகலில் பதிலைப் பெறுவதற்கான இலக்கத்தைக் கொடுத்தல் வேண்டும் அவ்வாறு தொலைநகலில் பதிலைப் பெற முடியாதவர்கள் நேரடியாகப் பாதுகாப்பு அமைச்சின் அலவலகத்திற்குச் சென்றே தமக்குரிய பதிலைப பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

saritham.com

1. போர்குற்ற விசாரணைகளை திசை திருப்ப, இன்னும் புலிகள் உள்ளார்கள் என காட்டுவதற்கும் இந்த நகர்வு உதவும் என சிங்களம் எடை போடலாம். ஆனால், சர்வதேச நாடுகள் ஏமாறாது என நம்பலாம்.

2. அதேவேளை, "இங்கு வாருங்கள்"; "முதலீடு செய்யுங்கள்" என்பன எல்லாம் போலியான அழைப்புக்களே. அங்கு தமிழன் அடிமையாகவே வைக்கப்படுள்ளான்.

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததென்னு

எப்பண்ணா வந்ததென்னு எனக்கும் தெரியல்லண்ணா

அப்பண்ணா நாம இன்னும் அடிமைகள் தானா அண்ணா :rolleyes:

May 6, 2011 / பகுதி: செய்தி /

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் யாழ் செல்ல மீண்டும் பாஸ்

...

இது புலத்தில் வாழும் இளையோரில் இருந்து முதியோர் வரை சிங்களவனுக்கு எதிராக செயல் படுவதைத் தடுப்பதற்கு என்று நினைக்கிறன்.

boycott sri lankan airlines , cricket , garments என்று புலத்தில் இளையோர்களால் முன்னெடுக்கும் போராட்டங்களின் எதிரொலியாகக் கூட இருக்கலாம். இந்தப் போராட்டங்களினால் சிங்கள அரசிற்கு பல மில்லியன் ரூபாய் நட்டமென அண்மையில் இங்கு தான் ஒரு இணைப்பில் பார்த்து இருந்தேன். இப்படி பயமுறுத்தி வைச்சால் சனம் உந்தப் போராட்டங்கள் என்று போகாது என்று நினைக்கிறான் போல... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணப்பக்கம் போறதெண்டால் பாஸ் வேணும்??????????????? அப்ப நாடு இரண்டு பிரிவாய் இருக்கெண்டுறியள் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.