Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பைல்ஸ் (Piles ) எனப்படும் மூலவியாதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பைல்ஸ் (Piles ) எனப்படும் மூலவியாதி.

மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.

மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது.

மூல நோய் இரு வகைப் படும் -உள் மூலம், வெளி மூலம், உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.

1. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது அது மூல வீக்கத்தை ஏற்படுத்தி மூல வியாதியைத் தோற்றுவிக்கும். தமிழ் வைத்தியத்தில் “வயது போக, வயிறு பெருக்க, மூலம் புறப்பட” என்ற சூத்திரம் இருக்கிறது.

2. நீண்ட நாள் மலச் சிக்கல் மூலத்தைப் புடைக்கச் செய்கிறது.

3. உடற்பயிற்சி இல்லாமை, நார் சத்து இல்லாத மாவு உணவு, மூல வாசலில் எரிச்சல் என்பனவும் மூல வியாதியைத் தோற்றுவிக்கின்றன.

4. அதிக நேரம் நின்றபடி வேலை செய்தல் அல்லது அதிக நேரம் உட்கார்ந்த படி வேலை செய்தல் மூல நோய்க்குக் காரணமாகின்றது.

5.மூல நோய் பரம்பரை நோயாகவும் சில குடும்பங்களில் இடம் பெறுகிறது.

6. வயதுவ காலத்தில் முதுமையின் பரிசுகளில் ஒன்றாக மூலவியாதியும் ஏற்படுவது வழமை. இதைத் தவிர்க்க முடியும். கட்டாயமாக முதுமை அடைந்த காலத்தில் மூல நோய் ஏற்படத்தான் மேண்டுமென்ற விதி கிடையாது.

7. கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதி அழுத்தம் ஏற்படுகிறது. மகப் பேற்றின் போது குழந்தையை முக்கி வெளியேற்றும் போது மூலம் புறப்படும். ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மூல நோய் மறைந்துவிடும்.

மூலவியாதி வருவதைத் தடுப்பதற்கு சில வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள வெண்டைக்காய் போன்ற வழுவழுப்பான மரக்கறிகளையும் இலை வகை களையும் உணவாக்க வேண்டும். முதலாம் கட்ட மூலவியாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இது போதுமானது. நிறையத் தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.

வயதானவர்களுக்கு மூல இரத்தக் குழாய் வீக்கம் கூடுதலாக இருக்கும். பைன்டிங் (Binding ) என்ற சிகிச்சை முறையை மருத்துவ ஆலோசனையுடன் பயன் படுத்தி நன்மை அடையலாம். இந்தக் கட்டம் இரண்டாம் கட்ட மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.

மூன்றாம் கட்டம் பற்றி இவ்விடத்தில் பார்ப்போம். அறுவை சிகிச்சை தவிர்ந்த பிறிதொரு மருத்துவ முறையும் மூலவியாதியைக் கட்டுப்படுத்த முடியாதென்ற நிலை தோன்றும் போது அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை அப்படியானவர்களுக்கு சிறந்த நிவாரணமாக அமையும். இப்போது சில நிமிடங்களில் முடியும் லேசர் அறுவை சிகிச்சை வந்து விட்டது. அதைப் பயமின்றிப் பயன் படுத்தலாம்.

www.tamilkathir.com.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: :lol: :lol:

ஒரு சின்ன குத்துவலிக்கும் ஒப்பிரேசன் தியேட்டர் பக்கம் போய் வந்திருந்தால்......இந்த நொய்...லொள்ளு எல்லாம் வராது.... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி thanks for the information :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில், நல்லூர்க் கந்தசாமி கோவிலின், மணி ஐயர் மடத்தில் உள்ள தீர்த்தக்குளத்தின் தண்ணீர் மட்டத்திற்குச் சற்று மேலேயுள்ள கடைசிப் படியில் பல முதியவர்கள் சப்பாணி கட்டி உட்காந்திருப்பார்கள்!

இவர்களுக்கு இந்த வருத்தம் இருப்பதாகப் பலர் பேசுவதைக் கேட்டிருக்கின்றேன்!

இந்தத் தீர்த்தம் இந்த வியாதியைக் குணப்படுத்துவதாக இவர்கள் நம்புகின்றார்கள்!

எனக்குத் தெரிந்த இருவர் ஊரில் நாட்டு வைத்திய சிகிச்சைகள் மூலம் தங்களது மூல வியாதியை குணப்படுத்தியுள்ளனர். நாட்டு வைத்தியர்கள் தங்கள் வைத்திய முறைகளை இரகசியமாக வைத்திருப்பதால், இந்த சிகிச்சை முறைகள் வழக்கொழிந்து போயிருக்கலாம்.

ஆடாதோடை இலையை சூடாக்கி பிழிந்து கொடுத்தால் நிவாரணம் வரும். அத்துடன் பப்பாளிபழம், வாழைப்பூ ஆகியவற்றை உட்கொண்டால் தற்காலிக நிவாரணம் வரும். ஆமை இறைச்சி உண்பதாலும் குணமடைவதாகக் கேள்விப்பட்டதுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமை இறைச்சி உண்பதாலும் குணமடைவதாகக் கேள்விப்பட்டதுண்டு.

நானும் இப்படி கேள்விப்பட்டனான்- சின்ன வயசில் . வேலை செய்யுமோ தெரியாது.

எனக்கு தெரிந்த சிறிய சாராம்சம்..மூல வியாதி..நேர்குடலில் உள்ள நாளங்கள்- காலில் வரும் வரிகோஸ் வேயின் போல- வீங்கி பெருப்பதால் ஆகும். இன்னமும் மருத்துவத்தில் கண்டுபிடிக்கபடாத/ விளங்க முடியாத வருத்தங்களில் ஒன்று- இது நாடியோ நாளமோ என்று... ஏன்னெனில் நாளக்குருதி-மூல வியாதியில் வரும் குருதி போல் பிரகாசமான சிவப்பு அல்ல- ஆனால் உந்த விண்ணாம் ஒன்றும் தெரிய தேவையில்லை..ஆரும் வசூல் ராஜாக்கள் அறிந்தால் சரி.

பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக பார்க்க வேண்டியது - ஏதேனும் கட்டி / கான்சர் இருக்கவென.. விசேடமாக புதிதாக, குறைந்த காலத்தில் புதிதாக வந்திருந்தால்.

மற்றது இந்த piles வழமையாக வலி அற்றது. கிருமி தோற்று வந்தாலோ, அல்லது இரத்தம் குழாயில் கட்டிபட்டாலோ நோ இருக்கும்.

குளத்திற்குள் இருப்பது..சிட்ஸ் பாத் என்று சொல்லுகிறது. அதே மாதிரி அசுப்பதிரியிலும் செய்கிறவர்கள்- ஆனால் குளத்து தண்ணி விட்டல்ல.

இன்னுமொரு வருத்தம் இதனுடைய அண்ணன் தம்பி..rectal prolapse - நேர்குடல் இறக்கம். முக்கிய வித்தியாசம் வலி..காட்டியாய் வெளித்தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.