Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான் அறிக்கை

Featured Replies

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு காணாத வகையில் ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,அராஜகம்,மணற்கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம்,நிர்வாகச் சீர்கேடு,

இனத் துரோகம்ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி.அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.

மக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்திற்காகவே ஆட்சி நடத்தினார் கருணாநிதி. மக்கள் எதிர்ப்பையும்,அரசியல் கட்சித்தலைவர்களின் எதிர்ப்பையும் அடக்குமுறைச் சட்டங்கள் மூலமும் காவல் துறையின் ஒடுக்குமுறைகள் மூலமும் பொது அரங்கிற்குக் கொண்டு வராமல் செய்தார். இதன் பின்னும், ஓயாத திமுக காங்கிரசு அரசுகள் ஈழத்தில் எம் மக்களை பல்லாயிரக்கணக்கில் சிங்களப் பேரினவாதம் கொன்றொழிக்க பல வகையில் பேருதவி புரிந்தன. இனப்படுகொலைக்கு எதிரான எம் மக்களின் ஒப்பாரியைக்கூட யாருக்கும் கேட்காமல் அச்சுறுத்தி தடை செய்தன.

இந்த மக்கள் விரோத,இனவிரோத ஆட்சி தொடர்ந்து நீடித்தால் என்றும் மீட்க முடியாத அபாயச் சூழலில் தமிழ்நாடு சிக்கிக் கொள்ளும் நிலைமை இருந்தது. ஆனாலும் தேர்தலில் பணபலத்துடன் மக்களை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற பாசிச ஆட்சியாளர்களின் ஆசையில் மண் அள்ளிப் போட்டிருக்கின்றார்கள் எம் மக்கள். தி.மு.க.காங்கிரசுக் கூட்டணியைப் படு தோல்வி அடையச் செய்திருக்கின்றனர்.

ஈழத்தில் நமது ரத்த உறவுகளை சிங்களன் கொன்று குவிக்க பேருதவி புரிந்த சோனியாவின் காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்னும் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்தது. காங்கிரஸ் கட்சி தான் நமக்கு முதல் எதிரி. இனத்தை அழித்த காங்கிரசுக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படவேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கினோம். அதற்காக அனைத்து தொகுதியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் வீடு வீடாகச் சென்றும் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று தீவிரப் பரப்புரை செய்தோம்.இனத்திற்காக நாம் செய்த கடமையை மக்கள் அங்கீகரித்து இன எதிரிக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

தி.மு.கவிடம் மிரட்டிப்பெற்ற 63 தொகுதிகளில் 6 தொகுதியில் கூட வெல்லமுடியாதபடி காங்கிரசை வீழ்த்தியிருக்கிறார்கள். தமிழர்கள் வீரமும் விவேகமும் மட்டுமல்ல தன்மானமும் இனமானமும் உள்ளவர்கள் என்பதை தற்பொழுது மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர். ஈழத்தில் ரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை,இங்குள்ள தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது நம் இனத்திற்குக் கிட்டிய வெற்றி.காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி.இனத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த நாம் தமிழர் உறவுகளுக்கும் இணைந்து பாடுபட்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்.

நன்றி.நாம் தமிழர் இணையம்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு காணாத வகையில் ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,அராஜகம்,மணற்கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம்,நிர்வாகச் சீர்கேடு,

இனத் துரோகம்ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி.அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.

மக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்திற்காகவே ஆட்சி நடத்தினார் கருணாநிதி. மக்கள் எதிர்ப்பையும்,அரசியல் கட்சித்தலைவர்களின் எதிர்ப்பையும் அடக்குமுறைச் சட்டங்கள் மூலமும் காவல் துறையின் ஒடுக்குமுறைகள் மூலமும் பொது அரங்கிற்குக் கொண்டு வராமல் செய்தார். இதன் பின்னும், ஓயாத திமுக காங்கிரசு அரசுகள் ஈழத்தில் எம் மக்களை பல்லாயிரக்கணக்கில் சிங்களப் பேரினவாதம் கொன்றொழிக்க பல வகையில் பேருதவி புரிந்தன. இனப்படுகொலைக்கு எதிரான எம் மக்களின் ஒப்பாரியைக்கூட யாருக்கும் கேட்காமல் அச்சுறுத்தி தடை செய்தன.

இந்த மக்கள் விரோத,இனவிரோத ஆட்சி தொடர்ந்து நீடித்தால் என்றும் மீட்க முடியாத அபாயச் சூழலில் தமிழ்நாடு சிக்கிக் கொள்ளும் நிலைமை இருந்தது. ஆனாலும் தேர்தலில் பணபலத்துடன் மக்களை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற பாசிச ஆட்சியாளர்களின் ஆசையில் மண் அள்ளிப் போட்டிருக்கின்றார்கள் எம் மக்கள். தி.மு.க.காங்கிரசுக் கூட்டணியைப் படு தோல்வி அடையச் செய்திருக்கின்றனர்.

ஈழத்தில் நமது ரத்த உறவுகளை சிங்களன் கொன்று குவிக்க பேருதவி புரிந்த சோனியாவின் காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்னும் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்தது. காங்கிரஸ் கட்சி தான் நமக்கு முதல் எதிரி. இனத்தை அழித்த காங்கிரசுக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படவேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கினோம். அதற்காக அனைத்து தொகுதியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் வீடு வீடாகச் சென்றும் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று தீவிரப் பரப்புரை செய்தோம்.இனத்திற்காக நாம் செய்த கடமையை மக்கள் அங்கீகரித்து இன எதிரிக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

தி.மு.கவிடம் மிரட்டிப்பெற்ற 63 தொகுதிகளில் 6 தொகுதியில் கூட வெல்லமுடியாதபடி காங்கிரசை வீழ்த்தியிருக்கிறார்கள். தமிழர்கள் வீரமும் விவேகமும் மட்டுமல்ல தன்மானமும் இனமானமும் உள்ளவர்கள் என்பதை தற்பொழுது மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர். ஈழத்தில் ரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை,இங்குள்ள தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது நம் இனத்திற்குக் கிட்டிய வெற்றி.காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி.இனத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த நாம் தமிழர் உறவுகளுக்கும் இணைந்து பாடுபட்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்.

நன்றி.நாம் தமிழர் இணையம்.

சரி.. இனி என்ன?.. வழக்கம்போல ஆர்ப்பாட்டம் ஒண்டு நடத்திப்போட்டு ஜெயிலுக்கு போவோமா?

காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான் அறிக்கை

இந்த வெற்றி முழுமையாக்கப்பாடல் வேண்டும்.

தமிழகமும், இந்தியாவும்; நிரந்தரமாகவும், நிம்மதியாகவும் இருக்க:

- கச்சதீவு மீள பெறப்படல் வேண்டும்

- இலங்கையில் சீனாவின் ஊடுருவல் மட்டுப்படுத்தப்படல் வேண்டும். அதற்கு தமிழர்களின் அரசியல் தீர்வு முக்கியமானது.

இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும்

காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான் அறிக்கை

இந்த வெற்றி முழுமையாக்கப்பாடல் வேண்டும்.

தமிழகமும், இந்தியாவும்; நிரந்தரமாகவும், நிம்மதியாகவும் இருக்க:

- கச்சதீவு மீள பெறப்படல் வேண்டும்

- இலங்கையில் சீனாவின் ஊடுருவல் மட்டுப்படுத்தப்படல் வேண்டும். அதற்கு தமிழர்களின் அரசியல் தீர்வு முக்கியமானது.

இது அவர்களுக்கு தெரியாதா?

எனகென்னொவோ.. தமிழர்களுக்கென தனிநாடு இலங்கையை விட இந்தியாவில் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அரசியல் காரணிகளும் இருப்பதாகவே தோண்றுகிறது...

தமிழ்நாடு தனிநாடான........ இலங்கை கதி அதோகதிதானெண்டு நான் சொல்லத்தேவயில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா முன்னேறவேண்டும் என்று விரும்புகிற இந்தியாவிற்கு விசுவாசமான ஒருவன் இந்திய பிரதமர் ஆனால்............. எமது பிரச்சனை அரைவாசி முடிந்துவிடும். இந்திய துரோகிகளை இந்திய மக்கள் தூக்கி ஏறியவேண்டும்.

முள்ளிவாய்க்கால் படுகொலையை இலங்கை சிங்கள காடைகளைவிடமும் முன்னின்று நடத்தியது இந்திய பேய்களே......... இவை முழுதுமாக கருணாநிதிக்கும் தெரிந்திருந்ததனால்தான் அற்பமாக ஒரு மூன்றுமணி நேர நாடகத்தையாவது ஆடவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. குடும்ப அரசியலுக்ககா நாட்டை விற்பவர்களும்................. ஊழல் லஞ்சங்களுக்கா கொள்ளை அடிப்பவர்களும் இருந்ததால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலை அரங்கேறியது...............

சீனாவை நாம் முழுதாக எதிர்க்க கூடாது உள்மனதால் எதிர்த்தாலும் வெளியாக பாசாங்கு செய்யவதே இப்போதைக்கு தகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை காலமும் தவழ்ந்து கொண்டிருந்தது தமிழ் நாடு!

இன்று தான் எழுந்து நடக்கத் துவங்குகின்றது!

இது ஓட்டமாக மாற சீமான் போன்றவர்கள் தொடர்ந்து ''முள்ளி வாய்க்காலை' எமக்கு நியாயம் கிடைக்கும் வரை முன்னிலைப் படுத்திய படியே இருக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்கள் சினிமாவிற்கும், தொலைக்காட்சியில் நாடகம், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் தான் அதிக நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருந்தார்கள் என்று நினைத்தேன். நேற்றுக் குடுத்த, சம்மட்டி அடியை பார்த்தவுடன் எனது மனநிலையை மாற்றிக்கொண்டேன். நன்றி சீமான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்கள் சினிமாவிற்கும், தொலைக்காட்சியில் நாடகம், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் தான் அதிக நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருந்தார்கள் என்று நினைத்தேன். நேற்றுக் குடுத்த, சம்மட்டி அடியை பார்த்தவுடன் எனது மனநிலையை மாற்றிக்கொண்டேன். நன்றி சீமான்.

அவர்களை பொருத்தவரை அரசியல் அடக்குமுறை என்பது இல்லை அதுதான் அவர்கல் ஜாலியாக சினிமா பார்ப்பார்கள்....

பார்த்தால் சினிமா

பாயந்தால் சிறுத்தை

என்பதை ஜனநாயக முறையில் நிருபித்துள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை பொருத்தவரை அரசியல் அடக்குமுறை என்பது இல்லை அதுதான் அவர்கல் ஜாலியாக சினிமா பார்ப்பார்கள்....

பார்த்தால் சினிமா

பாயந்தால் சிறுத்தை

என்பதை ஜனநாயக முறையில் நிருபித்துள்ளனர்

தமிழகத்தில் அரசியல் அடக்கு முறை இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தமிழக அரசியல் வாதிகள், சுத்த கோடாலிக் காம்புகள்.

தமிழக மக்கள் சினிமாவிற்கும், தொலைக்காட்சியில் நாடகம், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் தான் அதிக நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருந்தார்கள் என்று நினைத்தேன். நேற்றுக் குடுத்த, சம்மட்டி அடியை பார்த்தவுடன் எனது மனநிலையை மாற்றிக்கொண்டேன். நன்றி சீமான்.

புலத்தில் உள்ள சிலதுகளுக்கு இதுதான் பிரதானமே, மே18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை இங்கு சிலருக்கு ஞாபகபடுத்தினேன் அவர்கள் அடுத்த சிசன் வந்துட்டுதா என கேட்டார்கள்.

திரும்பவும் சொல்கிறேன்...

தமிழ்நாட்டால் ஒண்டும் புடுங்க முடியாது.....

அறிக்கை விட்டு நேரத்தை வீணாக்குவதை தவிர....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.