Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்து

Featured Replies

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்து

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:

செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான வாழ்த்து

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தங்களுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட பிரித்தானிய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

ஈழத்தில் இடம்பெற்ற உரிமைப்போரில் இதுவரை இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறுதிப்போரில் மட்டும் மிக மோசமாகப் படுகொலை செய்யப்பட்டு, அல்லது காணாமல் போயுள்ளனர்.

வன்னியில் இறுதிப் போரில் பொதுமக்கள் 7,000 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் கூறிவந்த ஐக்கிய நாடுகள் சபையும், வெளிநாடுகளும், ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் பின்னர் 40,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அநியாயமாகவும், கோரமாகவும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளன.

இவ்வாறான பின்புலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய நாம், வன்னியின் இறுதிப்போரில் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பாக ‘அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை’ நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழினம் ஒரு முக்கிய வாழ்வுரிமைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில், ஆறரைக்கோடி மக்களின் தலைமையை ஏற்கவுள்ள தாங்கள், ஈழத்தமிழ் மக்களின் நீதிப் போராட்டத்திற்கு முக்கிய பங்களிப்பீர்கள் என நம்புகின்றோம்.

ஈழத்தமிழ் மக்கள் மீது இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை அங்கீகரித்து, அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கு கோரிக்கை விடுத்த அரசியல் தலைவர்களுள் தாங்கள் மிக முக்கியமானவர் என்பதுடன், தமிழ்நாடு தேர்தலின் பின்னரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தாங்கள் அறிக்கை வெளியிட்டிருந்ததை நாம் வரவேற்கிறோம்.

இன்று தாங்கள் ஜெயா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த தங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயற்படுவீர்கள் எனவும், வேண்டுமானால் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவேன் எனவும் கூறியுள்ளதையும் நாம் வரவேற்கிறோம்.

எனவே தங்களது எதிர்கால செயற்பாடுகள், ஈழத்தமிழ் மக்கள், மற்றும் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும் என நாம் முழுமையாக நம்புகின்றோம்.

மூன்றாவது தடவையாக தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கவுள்ள தங்களுக்கு, மீண்டும் ஒரு தடவை எமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

நன்றி.

வாழ்த்துடன்,

பிரித்தானிய தமிழர் பேரவை

Edited by akootha

  • தொடங்கியவர்

டென்மார்க் தமிழர் செல்வி. ஜெயலலிதாவுக்கு பாராட்டு !

தமிழகத்தில் இதுவரை நிலவிய மு.கருணாநிதியின் இருள் ஆட்சி அகன்று செல்வி. ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்தமைக்கு டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் பலர் தொடர்ந்து வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். ஈழத் தமிழருக்கு ஒரு நல்வாழ்வை தேடப்பாடுபடுவேன் என்று வெளிப்படையாக பேசிய செல்வி. ஜெயலலிதாவுக்கு மகத்தான வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது காங்கிரசுடன் சேர்ந்து கருணாநிதி குடும்பம் காத்த மௌனத்தால் நொந்து கிடந்த புலம்பெயர் தமிழ் மக்கள் இப்போது ஜெயலலிதாவின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது குடும்பத்திற்குக் கிடைத்த வெற்றிபோல அலைகள் காரியாலயத்திற்கு மக்கள் போன் செய்து செல்வி. ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக்கூற விரும்புவதாக தெரிவிக்கிறார்கள். தமிழக முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு எமது பாராட்டுக்கள்.

http://www.alaikal.com/news/?p=69734

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி ஜெயலலிதா வென்றமைக்கு.....

ஜேர்மனியில் இருந்து தமிழ்சிறி குடும்பத்தவர்கள், அவரின் நண்பர்கள் எல்லோரும் பாராட்டுகின்றார்கள்.

உலகம் உருண்டையோ என்னமோ,சுத்துது என்கிறார்கள்.உண்மைபோல்தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் உருண்டையோ என்னமோ,சுத்துது என்கிறார்கள்.உண்மைபோல்தான் உள்ளது.

சேர்ந்து சுத்தாவிட்டால் தலையை சுத்தும். :D

http://www.youtube.com/watch?v=z_65n23b-PM&feature=feedu

சேர்ந்து சுத்தாவிட்டால் தலையை சுத்தும். :D

இதே ஜெயலலிதா தானே புலிகளால் தனக்கு ஆபத்து அது இது என்று கூறி புலிகள் தடை செய்யப்படுவதற்கு முன் நின்று செயல்பட்டவர். தடா சட்டத்தையும் மும்மரமாக அமுல் செய்தவர்?

  • தொடங்கியவர்

இதே ஜெயலலிதா தானே புலிகளால் தனக்கு ஆபத்து அது இது என்று கூறி புலிகள் தடை செய்யப்படுவதற்கு முன் நின்று செயல்பட்டவர். தடா சட்டத்தையும் மும்மரமாக அமுல் செய்தவர்?

உண்மை. ஆனால், இன்று அதே ஜெயலலிதா உட்பட பல நாடுகளும் சிங்களம் போர்குற்றம் செய்தது எனக்கூறியும் அவர்களை உண்மையை கண்டறியவும் கேட்டுவருகின்றனர்.

எமது தேவையும் (அரசியல் தீர்வு) மாறிவரும் உலக நலன்களும் ஒன்றாக வரச்செய்து விடுதலையை வென்றெடுப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.