Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் புதைந்த முகங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலில் புதைந்த முகங்கள்....

கவிதை - இளங்கவி

பாத்தி கட்டி

நீர் பாச்சிய வயல்களில்

இரத்த ஆறு

உடைப்பெடுத்து ஓடிய

இறுதி நாட்கள்....

வருடங்கள்

இரண்டின் முன்தான்

எங்கள் வலிகள்

உச்சங்கண்ட நாட்கள்.....

அழுத குழந்தையின்

ஏக்கம் தீரமுன்

அதன் மூச்சே நின்றுபோன

கொடூர நாட்கள்.....

எங்கள் மரண ஓலங்கள்

மண்ணுக்குள்ளேயே

புதைந்துபோன நாட்கள்...

எங்கள் வயிற்றுப் பசிக்கு

மரணத்தைப

பரிசளித்த நாட்கள்.....

எங்கும்

கொலைகளின் உச்சம்....

கூக்குரல்களின் உச்சம்....

காம வேட்டையின் உச்சம்....

கொண்டொளித்த

பிணங்களும் உச்சம்.....

ஆம்...மிஞ்சிப்போன

எம் உயிரின்

மரணத்தின் விளிம்பில்

அவனின் இரும்புக் கையின்

கொடூரப் பிடியின் உச்சம்.....

எதிரியின்

ஆனந்த இரவுகளுக்காய்

தமிழிச்சியின் மானங்கள்

அறுத்தெறியப்பட்ட

இரவுகளும்.....

பசியென்று

சொல்லி அழும்

குழந்தையின் குரல்கூட

அதன் உமிழ்நீரிலேயே

கரைந்துபோய்

சிறிது தூக்கம் கொள்வதும்..

மறுபடியும் எழுந்து

வானைப் பிளக்க

வீரிட்டடு அழுவதும்

ஐயோ.... நினைத்தாலே

ஓடும் குருதிகூட

ஒருகணம் நின்றுவிடும்....

கொடூர வினாடிகளாய்....

எங்கள் கவசங்கள்

பிடுங்கி எறியப்பட்டால்

எங்களுக்கு

காடுகூட மிஞ்சாதென்று.....

புரிந்த கணத்தில்

களத்தில்

கொத்துக் கொத்தாய்

நம் காவல் தெய்வங்கள்......

அவர்கள் தம்

கல்லறையில்

படுத்துறங்கும் உரிமைகூட

மறுக்கப்பட்டு

தாம் நேசித்த மண்ணில்

முகம் புதைத்துக் கிடந்த

சோகத்தினைச் சொல்லி

எங்கள் நாட்கள்

மெதுமெதுவாய்

நகர்ந்து கொண்டிருக்கிறது...

சரித்திரப் புத்தகத்தில்

நம் வாழ்வின் பக்கஙகள்

ஒவ்வொன்றாய்

கூடிச் சென்றாலும்

முள்ளிவாய்க்கால்

பக்கத்தை விட்டு

எங்கள் முகம்

அகல மறுக்கிறது...

இன்றும்

எங்க்கள் வயல்களூடே

மிதந்து வந்து

வருடும் தென்றலிலோ

இரத்தவாடைதான் வீசுகிறது....

எங்கள்

உக்கிப்போன எலும்புகள்

அவனின் தேநீர் கடைகளில்

விறகாய்

எரிந்து கொண்டிருக்கின்றன....

நம் மாவீரர்

கல்லறையை மூடி

ஊமத்தை முளைத்திருக்கிறது....

கார்த்திகைப் பூக்களும்

பூக்க மறுத்து

சுதந்திரமாய்

கல்லறைபோகும் நாள்பார்த்து

காத்துக் கிடக்கிறது.....

கைப்பற்றி நடந்த

உறவுகளின்றி

நடக்கும் வெற்றுக் கால்கள்.....

தனக்குள்ளூம்

வேதனையை சொல்லி

அழ முடியாது

அடக்குமுறைக் கரங்களுக்குள்

சிக்கித் தவிக்கிறது....

உன் இதயத்தைக

குத்திக் கிழித்த

முள்ளிவாய்க்காலெனும்

முள்ளைப் பிடுங்க்கிவிடாதே.....

அது இருந்தால் தான்

உனக்கு வலியிருக்கும்

வலியிருந்தால் தான்

வேதனையுன்னை வாட்டும்

வேதனை வாட்டினால் தான்

உன் மனம்

விடுதலை கேட்கும்.....

உன் விடுதலை தான

உன் வலியைப் போக்கும்....

உன் ரணங்களை

கணைகளாக்கு

உன் காலைச் சுற்றிய விலங்கி

தெறித்துப் பறக்கும்

அதன்பின் தான்

உன் வாழ்வுக்கும்

வழி கிடைக்கும்......

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பகிர்வுக்கு நன்றி ........சோகம் சுமக்கும் இதயங்களுக்கு மீண்டும் ஒரு குருதி வடியும் நினைவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரித்திரப் புத்தகத்தில்

நம் வாழ்வின் பக்கஙகள்

ஒவ்வொன்றாய்

கூடிச் சென்றாலும்

முள்ளிவாய்க்கால்

பக்கத்தை விட்டு

எங்கள் முகம்

அகல மறுக்கிறது...

இன்றோடு ஈராண்டு ஓடி விட்டது.இன்றும் நெஞ்சை விட்டு அகலா சோகம் இறக்கும் வரை இருந்து கொண்டே இருக்கப்போகிறது.கவிதைக்கு நன்றி, இளங்கவி.

  • கருத்துக்கள உறவுகள்

கைப்பற்றி நடந்த

உறவுகளின்றி

நடக்கும் வெற்றுக் கால்கள்.....

தனக்குள்ளூம்

வேதனையை சொல்லி

அழ முடியாது

அடக்குமுறைக் கரங்களுக்குள்

சிக்கித் தவிக்கிறது....

நிஜத்தைத் தொட்டுச்செல்கின்றன, உங்கள் வரிகள்.

பொழுது ஒரு நாள் விடியும்!

அது வரை தவிப்பது தான் எமது தலைவிதி போல் உள்ளது!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை பகிர்வுக்கு நன்றி ........சோகம் சுமக்கும் இதயங்களுக்கு மீண்டும் ஒரு குருதி வடியும் நினைவுகள்.

நிலாமதி அக்காவுக்கு

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி....

முள்ளிவாய்க்கால்....எங்கள் எந்தத் தலைமுறையும் மறக்கமுடியாத / மறக்கவும் கூடாத ஓர் மனிதப் பேரவலம் நடந்த தமிழீழ மண்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றோடு ஈராண்டு ஓடி விட்டது.இன்றும் நெஞ்சை விட்டு அகலா சோகம் இறக்கும் வரை இருந்து கொண்டே இருக்கப்போகிறது.கவிதைக்கு நன்றி, இளங்கவி.

nunavilan...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்....

எங்கள் வரலாற்றில் இரத்தம் படிந்ததும் எங்கள் முகம் என்றுமே விட்டகல மறுப்பதுமான ஓர் பக்கம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிஜத்தைத் தொட்டுச்செல்கின்றன, உங்கள் வரிகள்.

பொழுது ஒரு நாள் விடியும்!

அது வரை தவிப்பது தான் எமது தலைவிதி போல் உள்ளது!!!

Punkayooran

கருத்துக்கு மிக்க நன்றிகள்....

தமிழீழத்தில் தற்போது வாழ்வதற்கான அன்றாட இயங்கியலே நடைபெறுகிறதே தவிர, சசுதந்திரக் காற்றை ஒருதுளிகூட சுவாசிக்க முடிவததில்லை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.