Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கெட்:இலங்கை படுதோல்வி

Featured Replies

கிரிக்கெட்:இலங்கை படுதோல்வி

இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கார்டிஃப் நகரில் திங்கட்கிழமை முடிவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்துள்ளது.

மழையால் இடையிடையே தடங்கல் ஏற்பட்ட இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 496 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

இங்கிலாந்து அணியின் ஜோனதான் டிராட் இரட்டை சதம் அடித்தது இந்தப் போட்டியின் சிறப்பசமாகும். அவரைத்தவிர இங்கிலாந்து அணியின் சார்பில், குக் மற்றும் பெல் ஆகியோரும், இலங்கையின் சார்பில் பிரசன்ன ஜெயவர்தனவும் சதங்களை அடித்தனர்.

இறுதிநாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிராம் ஸ்வான் மற்றும் டிரெம்லெட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. மேலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும், ஐந்து ஒருநாள் மற்றும் இருபது ஓவர்களைக் கொண்ட ஒரு போட்டியிலும் இந்த இரு அணிகளும் மோதவுள்ளன.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/05/110530_lankaenglandcricket.shtml

IJL Trott ஓர் சிறந்த மட்டையடி வீரர், இவரது இரட்டை சதம், அத்துடன் மேலும் இருவர் இங்கிலாந்து சார்பாக சதம் அடித்தார்கள். நீண்டகாலமாக குறுகிய காலத்தில் பல ஐபிஎல் போட்டிகள் விளையாடிவிட்டு பின்னர் உடனடியாக ஐந்து நாட்கள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவகையில் இலங்கையின் முக்கிய முன்னணி துடுப்பாட்ட வீரர்களினால் மட்டையடியில் பிரகாசிக்க முடியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை. பந்துவிச்சில் மு.மு இல்லாமையும் சிறீ லங்கா அணிக்கு ஓர் பலவீனமே. தவிர இங்கிலாந்தின் டெஸ்ட் ஆட்ட அணி மிகவும் பலமானது.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி "பிரெசின்ட் அணி"யாக இருப்பதனால்தான் தோல்வி கண்டுள்ளதாமே!

முன்னாள் தலைவர்கள் மற்றும் தற்போதைய தலைவர் சங்ககார, ஜெயவர்த்தன, டில்சான் ஆகியோர் நீண்டகாலம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார்கள். ஒவ்வொருவரும் சுமார் பதின்ரெண்டு போட்டிகள் அண்மையில் விளையாடியுள்ளார்கள் என்று நினைக்கின்றேன். ஐபிஎல் இல் மட்டையடி செய்வது சூதாட்டம் போன்றது, அதாவது கிடைத்தால் ஆறு தவறினால் பொல்லு. ஆனால்..ஐந்து நாள் டெஸ்ட் போட்டியில் மட்டயடி செய்வதற்கு நிறைய பொறுமை தேவை. நிச்சயம் ஐபிஎல் போட்டிகள் மூலம் பெற்ற அவசர அனுபவம் வீரர்களை நிதானம் இழக்கச்செய்வதில் செல்வாக்கு செலுத்தி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தப்போட்டியில் சிங்கள அணி எதிர்ப்பாராத விதமாக படு தோல்வி அடைந்ததினால் சிங்கள தேசத்து சிங்கள அணி மீது காதல் கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா வினால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட இனப்படுகொலை செய்யும் ஒரு நாட்டோடு கிரிக்கெட் விளையாடுவது என்பது இங்கிலாந்தின் முன்னைய நிலைப்பாடுகள் குறித்து சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இன சுத்திகரிப்பு.. மற்றும் இனப்படுகொலை குற்றம் சுமத்தி.... ஐநா குற்றச்சாட்டற்ற.. சிம்பாபே நாட்டின் அணியோடு போட்டிகளை ரத்துச் செய்து புறக்கணிப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து அணி.. ஐநா போர்குற்ற குற்றச்சாட்டை கொண்ட நாட்டோடு கிரிக்கெட் விளையாடுவது.. எந்த வகையில் நியாயம்..?????!

இது குறித்த வினவல்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.. மற்றும் அமைச்சுகளுக்கு அனுப்பி வையுங்கள்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா வினால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட இனப்படுகொலை செய்யும் ஒரு நாட்டோடு கிரிக்கெட் விளையாடுவது என்பது இங்கிலாந்தின் முன்னைய நிலைப்பாடுகள் குறித்து சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இன சுத்திகரிப்பு.. மற்றும் இனப்படுகொலை குற்றம் சுமத்தி.... ஐநா குற்றச்சாட்டற்ற.. சிம்பாபே நாட்டின் அணியோடு போட்டிகளை ரத்துச் செய்து புறக்கணிப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து அணி.. ஐநா போர்குற்ற குற்றச்சாட்டை கொண்ட நாட்டோடு கிரிக்கெட் விளையாடுவது.. எந்த வகையில் நியாயம்..?????!

இது குறித்த வினவல்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.. மற்றும் அமைச்சுகளுக்கு அனுப்பி வையுங்கள்..!

சிம்பாவே நாட்டில் ஆக்கிரமித்த வெள்ளைக்காரர்களுக்கு(இங்கிலாந்து) எதிராக முகம்பே செயற்பட்டதினால் சிம்பாவேக்கு எதிராக இருக்கிறது இங்கிலாந்து. ஈழத்தில் ஆக்கிரமிப்பு செய்த வெள்ளைக்காரர்களினால்( இங்கிலாந்து) ஈழத்தை சிங்களவனின் சிறிலங்காவுடன் இணைத்ததினால் சிங்களதேசத்தினால் ஈழத்து மக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டும் காணாமல் பசாங்கு செய்கிறது இங்கிலாந்து.

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்ட் இண்டீஸ்ச நிலமை தான் சிறிலங்கன் ரீம்முக்கு வரும்... :wub:

கொஞ்சக் காலம் தான்..

  • தொடங்கியவர்

இங்கிலாந்து : இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது

இங்கிலாந்து : இலங்கை அணிகளுக்கு இடையில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவுற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 486 ரன்களை எடுத்தது.

ப்ரியர் 126 ரன்களையும், கூக் 96 ரன்களையும் எடுத்தனர்.

பந்துவிச்சில் வெலகதெர 4 விக்கெட்டுக்களை எடுத்தார். பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 479 ரன்களை எடுத்தது. டில்ஷான் 193 ஓட்டங்களையும், பரவினதாரன 65 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் ஃபின் 4 விக்கெட்டுக்களையும், ஸ்வான் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 335 ரன்களை பெற்றிருந்த போது டிக்ளே செய்தது. கூக் மீண்டும் 106 ரன்களை அடித்தார்.

பந்துவீச்சில் ஹேரத் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இன்று ஐந்தாவது நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இப்போட்டி சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.4tamilmedia.com/ww5/index.php/all/sports/5026-sl-england-match-drawn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.