Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தாபய பயணம் செய்த உலங்குவானூர்தியில் கோளாறு – இறுதிநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் தப்பினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2011, 01:24 GMT ] [ கார்வண்ணன் ]

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்குப் பயணம் செய்யவிருந்த உலங்குவானூர்தியில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருந்தது கடைசிநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் கிளிநொச்சி சென்றிருந்தார்.

கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இவர்கள் பங்கேற்றிருந்தனர்.

தெற்காசியாவில் மிக உயரமான இந்தத் தொலைத்தொடர்புக் கோபுரம் அடிப்படையில் இராணுவத் தேவைகளுக்கே பயன்படுத்தப்படவுள்ளது.

சிறிலங்கா அரச தொலைக்காட்சி, வானொலிச் சேவைகளைத் தரமுயர்த்தவும் இது பயன்படுத்தப்படவுள்ளது. அதேவேளை எதிர்காலத்தில் இதனை வர்த்தகப் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டமும் உள்ளது.

இந்தக் கோபுரத் திறப்பு விழாவுக்கு சிறிலங்கா அதிபரும் கோத்தாபய ராஜபக்சவும் புறப்பட முன்னரே ரணில் விக்கிரமசிங்கவின் தயார் நளினி விக்கிரமசிங்கவின் மரணச் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.

மாலையில் இறுதிநிகழ்வுகள் நடைபெறவிருந்ததால் சிறிலங்கா அதிபரும் கோத்தாபய ராஜபக்சவும் அவசரமாக கொழும்பு திரும்ப முயன்றனர்.

அவர்களை ஏற்றிச் செல்ல முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு உலங்குவானூர்திகள் கிளிநொச்சியில் காத்திருந்தன.

அவற்றில் ஒன்றில் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றார்.

அவர் மாலை 5 மணியளவில் கொழும்பு திரும்பி நளினி விக்கிரமசிங்கவின் உடலுக்கு இறுதிவணக்கம் செலுத்தினார். ஆனால் கோத்தாபய ராஜபக்ச வரவில்லை.

அவரும் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவும் பயணம் செய்வதற்காக உலங்குவானூர்தியில் ஏறி அமர்ந்திருந்த நிலையில்- அதில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டுபிடித்தார்.

இதனால் அதில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்று விமானி கூறியதால், வேறொரு நிரந்தர இறக்கை விமானம் மூலம் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு வர நேரிட்டது.

உலங்குவானூர்தியில் ஏற்பட்ட கோளாறு கடைசிநேரத்தில் கண்டிபிடிக்கப்படாது போயிருந்தால், நடுவானில் பாரிய விபத்து ஒன்றை சந்திக்க வேண்டியிருந்திருக்கும் என்று சிறிலங்கா விமான்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

புதினப் பலகை.

  • கருத்துக்கள உறவுகள்
Heli_Smiley.gif ச்சீய்..... அருமந்த சான்ஸ் மிஸ்சாயிடுச்சு.smilie_pc_040.gif

பாரிய அனர்த்தமா?

உந்த கோத்தாபாய போனா இன்னோரு குப்பாடி சோமபல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட... கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போய் விட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரும் கோத்தாவும் போயிருக்கினம்..! :rolleyes:

ம்ம்ம்.. அண்ணன்காரன்தான் வயரைக் கழட்டிவிடச் சொல்லியிருப்பானோ??!! :lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரும் கோத்தாவும் போயிருக்கினம்..! :rolleyes:

ம்ம்ம்.. அண்ணன்காரன்தான் வயரைக் கழட்டிவிடச் சொல்லியிருப்பானோ??!! :lol::wub:

அண்ணன்காரன், தன்ரை கெலிகொப்டரிலை தம்பியை கூட்டிக் கொண்டு போகாமல்,

வயர் களட்டின.. கெலிகொப்டரிலை தம்பியை வரச் சொல்லிப் போட்டு....

தம்பி போன கெலிகொப்டர் வெடித்து, விழுந்து, நொருங்கி, எரிஞ்சாப் பிறகு,

கிளிநொச்சியில் இன்னும் புலிகளின் தாக்குதல் இருக்குது, எண்டு உலக நாடுகளை ஏமாற்றச் செய்த சதியை, பைலட் கண்டு பிடிச்சுப் போட்டான். :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன்காரன், தன்ரை கெலிகொப்டரிலை தம்பியை கூட்டிக் கொண்டு போகாமல்,

வயர் களட்டின.. கெலிகொப்டரிலை தம்பியை வரச் சொல்லிப் போட்டு....

தம்பி போன கெலிகொப்டர் வெடித்து, விழுந்து, நொருங்கி, எரிஞ்சாப் பிறகு,

கிளிநொச்சியில் இன்னும் புலிகளின் தாக்குதல் இருக்குது, எண்டு உலக நாடுகளை ஏமாற்றச் செய்த சதியை, பைலட் கண்டு பிடிச்சுப் போட்டான். :D

:lol:

சிங்கள அரச பயங்கரவாதிகளின் சதி முயற்சி பலிக்கவில்லை.

இதில் ஒரு பயங்கரவாதி அழிந்திருந்தால் மகிழ்ந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு நல்லசெய்தி வராமலேயே போயிட்டுது

பெரிய பயங்கரவாதி முந்துகிறாரா? அல்லது சின்னப் பயங்கரவாதி முந்துகிறாரா? என்பதைப் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட நிலமை இப்படியாப் போச்சு :unsure::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.