Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் அரசியல் தீர்வை வழங்கத் தயார் - ஜனாதிபதி :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 ஜூன் 2011

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க..

நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் அரசியல் தீர்வை வழங்க தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது, ஊடக நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அடுத்த வருடம் கட்டாயமாக வட மாகாண தேர்தல் நடத்தப்படும் என கூறினார்.

அதேவேளை பொதுச் சேவை கட்டமைப்பின் கீழ் இரண்டு லட்சம் ரூபா ஊதியம் வழங்க முடியாது என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய காவற்துறை மா அதிபர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரது பெயர் நாளை(29) அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேபோல் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63276/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் தான் பெரும்பான்மையாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றாங்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக மாறிமாறி இவங்கள் தமிழருக்கு என்ன தந்தவங்கள் என்று எல்லோருக்கும் தெரியும் இனி என்னத்தை தரப்போறாங்கள்!?

Edited by தமிழ் அரசு

இந்தியாவிடமிருந்து அழுத்தம் எதுவுமில்லை: ஜனாதிபதி

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குமாறு இந்தியாவினால் தான் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார். எந்தவொரு தீர்வும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பாகவோ 13 பிளஸ் தொடர்பாகவோ இந்தியாவிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை என அவர் கூறினார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரின் இலங்கை விஜயம் தொடர்பான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், அவர்கள் வழக்கமான இரு தரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இந்திய உயர் மட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்த யோசனை முன்வைத்ததை சிவ் சங்கர் மேனன் தன்னிடம் சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பது காலம் கடத்தும் தந்திரமல்ல எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எந்தவொரு தீர்வும் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படும் எந்தத் தீர்வையும் நான் அங்கீகரிப்பேன் என அவர் கூறினார்.

இச்சந்திப்பில் பங்குபற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஐ.நா. அறிக்கையில் அரசாங்கத்தின் மீது போர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் அனைத்து நாடுகளும் இலங்கையை எதிர்க்கவில்லை எனக் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/23866-2011-06-28-10-12-13.html

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றின் தீர்மானமே அரசியல் தீர்வு: ஜனாதிபதி _

வீரகேசரி இணையம் 6/29/2011 2:24:02 AM Share

பாராளுமன்றின் தீர்மானத்திற்கமைய அரசியல் தீர்வை வழங்கத் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுச் சேவை கட்டமைப்பின் கீழ் இரண்டு லட்சம் ரூபா ஊதியம் வழங்க முடியாது என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க முடியாதுள்ளது என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32428

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றின் தீர்மானத்திற்கமைய அரசியல் தீர்வை வழங்கத் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மலை முக்கி, எலியைப் பெத்தது மாதிரி ஒரு தீர்வு தான் இந்தப் பாராளுமன்றத்தினுள் இருந்து வரும்!

சர்வ வல்லமை கொண்ட நிறைவேற்று சனாதிபதி மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் கொண்டுள்ளார்.

இவர் நினைத்தால் பாராளுமன்றம் எதையும் நிறைவேற்றலாம். அதன் மூலம் மகாவம்சத்தில் தனது பெயர் இடம்பெறாமல் தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் சர்வ வல்லமை உடைய சிறிலங்கா ஜனாதிபதி உலகுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும் சொல்வது யாதெனில் இது சிங்கள தேசம் ஒரே நாடு ஒரே மக்கள்.தமிழர் சிங்களவர் என்று வேறுபாடு கிடையாது .தமிழருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.ஆகவே அரசியல் தீர்வு அது இது என்று யாரும் கதைக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் சர்வ வல்லமை உடைய சிறிலங்கா ஜனாதிபதி உலகுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும் சொல்வது யாதெனில் இது சிங்கள தேசம் ஒரே நாடு ஒரே மக்கள்.தமிழர் சிங்களவர் என்று வேறுபாடு கிடையாது .தமிழருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.ஆகவே அரசியல் தீர்வு அது இது என்று யாரும் கதைக்கக் கூடாது.

நீங்க வேறை...புலவர்.

ஒட்டுக்குழுக்கள் தமிழருக்கு பிரச்சினை இருக்குது, அதற்கு தீர்வு வேணும் என்று... எப்பவாவது கேட்டாங்களா? பொறுக்கித் தின்னிப் பயல்கள்.

போகிற போக்கில் மகாவம்சமே இல்லாமல் போகப்போகுது.

தீர்வு என்ற சொல்லைப் பாவித்துக்கொண்டு பழய பல்கலைகழக தரப்படுத்தல் கூட கொண்டுவர மாட்டாங்க்ள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.