Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் டிவி தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா சென்னை விமான நிலையத்தில் கைது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சன் டிவி தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா சென்னை விமான நிலையத்தில் கைது.

03 ஜூலை 2011

சன் டிவியின் தலைமைச் செயல் அதிகாரியும், கலாநிதிமாறனின் கல்லூரி நண்பருமாகிய ஹன்ஸ்குமார் சக்ஸ்ஷேனா மோசடி வழக்கொன்றில் சென்னை விமான நிலையத்தில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சன் தொலைக்காட்சி சினிமாவிலும் கால் பதித்தது. சன் பிக்சர்ஸ் என்னும் பெயரில் திரைப்படங்களை வாங்கி விநியோகித்து வந்தது. சுமார் 600-க்கும் மேற்பட்ட திரையரங்கங்களை சன் தொலைக்காட்சி குழுமம் தன் கட்டுப்பாட்டில் வைத்து வந்ததது, இதனால் இவர்களை மீறி எவரும் சினிமா தயாரிக்கவோ, எடுத்த திரைபப்டங்களை ரிலீஸ் செய்யவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

திரைப்படங்களை எடுத்தால் சன் தொலைக்காட்சி, அல்லது கலைஞர் தொலைக்காட்சி, அல்லது அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் நடத்தும் தயாரிப்பு நிறுவங்களிடம் விற்று விடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். சென்னை கோடம்பாகத்தில் கடந்த ஐந்து வருடமாக கருணாநிதி குடும்பத்தினரின் அதிகாரச் செல்வாக்கால் சினிமாவை வளைத்தன் விளைவாய் பல சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிய கதையும் உண்டு.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கலைஞர், சன், அழகிரி, ஸ்டாலின் நிறுவானங்கள் திரைப்படங்களை இப்போதைக்கு வாங்குவதோ தயாரிப்பதோ இல்லை என்று முடிவு எடுத்துள்ளது. காரணம் கடந்த திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்ட பல திரைத்துறையினர் கருணாநிதி குடும்பத்தினரால் எப்படி தாங்கள் பாதிக்கப்பட்டோம் என்று காவல்துறையினரிடம் பட்டியல் இட்டனர்.

தவிறவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களின் அதிகார அடக்குமுறையால் முடங்கிப் போட திரைப்படங்களை வெளியிட முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற முடிவும் தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் படத்தின் தயாரிப்பாளர் செல்வராஜ் என்பவர் சன் பிக்சர்ஸ் செயல் அதிகாரியான சக்‌ஷேனா மீது மிரட்டல்,மோசடி புகார்கள் கொடுத்திருந்தார். தான் தயாரித்த படத்தை ஆளும் கட்சிச் செல்வாக்கில் வாங்கிக் கொண்ட சாக்‌ஷேனா 90 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக புகார் கொடுத்தார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார். இன்றூ மாலை சக்சேனாவை சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்பெக்டரம் வழக்கில் சிபிஐ சக்‌ஷேனாவிடன் விசாரணை நடத்தியது குறிப்பிடத் தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63546/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் சிலருக்கு சன் டிவி,கலைஞர் டிவி இல்லாவிடின் தொடர் நாடகம் பார்க்க முடியாத நிலை வரப்போகின்றது

கருணா நிதி வீட்டு உலக்கையும் ஊழல் செய்திருக்கும்...

சண் டிவியை இழுத்து மூடினால் நல்லது.

நல்ல மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமான செய்தி!

ஈழத் தமிழன் வளர்ச்சிக்குக் குறுக்கே நின்ற ஒரு தடை அகல்கின்றது!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரூ.1.25 கோடி மோசடி, கொலை மிரட்டல் புகார்: சன் பிக்சர்ஸ் சிஓஓ சக்சேனா திடீர் கைது!

திங்கள்கிழமை, ஜூலை 4, 2011, 9:35 [iST]

சென்னை: ரூ.1.25 கோடி மோசடி மற்றும் கொலை முயற்சி புகாரின் பேரில், சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா திடீரென நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். சினிமா பட வினியோகஸ்தரான இவர் கந்தன் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், "நான் சினிமா வினியோகஸ்தர் தொழில் செய்கிறேன். "சன்பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டுள்ள "தீராத விளையாட்டுப்பிள்ளை'' படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார். அதன்பேரில், ரூ.1.25 கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன்.

ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டுவிட்டார். நான் கொடுத்த ரூ.1.25 கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை. அந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா தராமல் இழுத்தடித்தார்.

கடந்த ஜனவரி மாதம் அதுபற்றி கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

இந்த புகார் மனு மீது சென்னை கே.கே.நகர் போலீசார் கடந்த 1-ந் தேதி அன்று கொலை மிரட்டல் மற்றும் மோசடி உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்கள்.

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சக்சேனா நேற்று இரவு 7 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் வைத்து அவரை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை அசோக் நகர் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார் என்று போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மோசடி மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சக்சேனா மீது ஏற்கெனவே சில புகார்கள் உள்ளதாகவும், அவையும் இந்த வழக்குடன் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

ஹோட்டலில் புகுந்து தாக்கிய சக்ஸேனா ஆட்கள்

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் செக்கர்ஸ் ஹோட்டலில் புகுந்து ஒரு பெரும் கும்பல் தாக்கி பெரும் ரகளை செய்தது நினைவிருக்கலாம். திமுகஆட்சியின்போது இந்த சம்பவம் நடந்தது. அந்த தாக்குதலைத் தூண்டி விட்டவரே சக்ஸேனாதான் என்பது குற்றச்சாட்டு. ஆனால் போலீஸார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.

சித்தார்த் என்பவர் சக்ஸேனா மீது குண்டர்களை வைத்து தன்னை மிரட்டுவதாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் சித்தார்த் செக்கர்ஸ் ஹோட்டலில் இருப்பதை அறிந்து அங்கு தனது ஆட்களை சக்ஸேனா அனுப்பி வைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டதாக அப்போது கூறப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/04/sun-pictures-saxena-arrested-police-aid0091.html

  • கருத்துக்கள உறவுகள்

சக்சேனாவை அடுத்து....., மருமக்களா....?

0.JPG

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கத்தை தொலைக்க வைத்த சக்சேனா

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா, போலீஸ் காவலில் சொன்ன பல உண்மைகள் பலரது தூக்கத்தைக் கெடு த்துவிட்டது.

‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படத்தின் விநியோகஸ்தர் செல்வராஜை ஏமாற்றியது, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜாமீன் கோரி கடந்த 4-ம் தேதி சக்சேனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சக்சேனாவை நீதிமன்றத்துக்கு போலீஸார் அழைத்து வராததால் அடுத் தநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சக்சேனா ஜாமீன் மனு மீது விசாரணையில் அரசுத் தரப்பில் ஏ.பி.பி. ஜெயந்திஆனந்த் ஆஜராக இருந்தார்.

இவர் சன் டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். சக்சேனாவிற்கு எதிரான வழக்கில் ஆஜரானால் சரியாக இருக்காது என்ற கருத்தை அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் கவனத்திற்கு அ.தி.மு.க.வினர் கொண்டு சென்றனர். இதன் அடிப்படையில் அரசுத் தரப்பில் வேறொரு வழக்கறிஞரை மாற்றம் செய்யவே, கால தாமதம் ஏற்ப ட்டது.

மறுநாள் 5-ம் தேதி காலை 11.20 மணிக்கு சக்சேனாவை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். சக்சேனாவை அவரது தந்தை கலங்கிய கண்களுடன் பார் த்துப் பேசினார். சன் குழுமத்தின் முக்கிய நபர்கள் எல்லாம் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அவர்களை போலீஸ் போட்டோகிராபர்கள் படம் எடுத்தனர். அவர்களின் பெயர் விவரங்களை நிறுவன ஊழியர்களிடமே போலீஸார் கேட்டு வாங்கினர்.

அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கோபிநாத் ஆஜராகி சக்சேனாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டார். இதற்கு, சக்சேனா வழக்கறிஞர் தினகரன் எதிர்ப்புத் தெரிவித்தார். பிற்பகலுக்குப் பிறகு சக்சேனாவுக்கு 2 நாள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டது. அவர் கலங்கிப் போனார்.

சக்சேனாவுக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டது. அந்த உணவை காரில் வைத்துச் சாப்பிட விரும்பினார் சக்சேனா. இதற்கு போலீஸார் அனுமதி மறுக்கவே, சாப்பிட மறுத்துவிட்டார்.

அப்போது, சன் நெட்வொர்க் முக்கிய நிர்வாகிகளின் செல்போன்கள் ஒவ்வொன்றாக சிணுங்க ஆரம்பித்தன. ‘‘ ‘எதையும் போலீஸாரிடம் சொல்ல வேண்டாம், தைரியமாக இருக்கவும்’ என்று சொல்லிவிட்டோம்’’ என மற்றொரு முனையில் பேசியவரிடம் அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, கண்கலங்கிய முகத்துடன் நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த சக்சேனாவின் மனைவியைப் பார்த்து சன் குழும நிர்வாகி ஒருவர் ‘டென்ஷன்’ ஆனார். ‘‘உங்களையெல்லாம் வரவேண்டாம் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறோம்...’’ என்று மிரட்டலாகப் பேசி, மீடியாவின் கண்களில் படாமல் அவரை காருக்குள் உட் கார வைத்தார்.

இதன்பின்னர், போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு செல்லப்பட்ட சக்சேனாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

முதல் நாள் விசாரணையில் அசோக் நகர் காவல் நிலையம், கோட்டூர்புரம் காவல் நிலையம், தனியார் கெஸ்ட் ஹவுஸில் வைத்து விசாரணை நடத்தினர். முதல் கட்டத் தில் போலீஸார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மௌனமாக இருப்பதும், ‘ஆமாம், இல்லை, எனக்குத் தெரியாது’ என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து வந்துள்ளார் சக்சேனா.

பொறுமை இழந்த போலீஸார், தங்கள் ‘ஸ்டைலில்’ கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்ள... ஓரளவுக்குப் பேச ஆரம்பித்திருக்கிறார் சக்சேனா.

சக்சேனா போலீஸ் விசாரணையில் கொடுத்த வாக்குமூலம் இதுதான்...

‘‘சன் பிக்சர்ஸ் சார்பில் படம் வாங்குவதும், பரிவர்த்தனை செய்வதும் நான்தான். ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படம் எங்களுக்கு எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கவில்லை. சன் பிக்சர்ஸ் படம் வெற்றிப் படம் என்று மக்கள் மத்தியில் கருத்து நிலவவேண்டும் என்பதற்காகவே, முக்கிய திரையரங்குகளில் கூட்டம் இல்லாவிட்டாலும் படத்தை ஓட்ட வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தினோம்.

எங்களுக்கு 11 லட்சம் நஷ¢டமாகியுள்ளது. சேலம் விநியோகஸ்தர் செல்வராஜுக்கு குறைவான தொகைதான் தர வேண்டியிருக்கும்’’ என்று மளமளவென்று தகவல்களைக் கொட்டினார்.

போலீஸாரின் பல கேள்விகளுக்கு ‘‘ஐயய்யோ.... கலாநிதி மாறனுக்குத் தெரியாமல் நானாக முடிவெடுக்க மாட்டேன். முக்கிய முடிவுகளெல்லாம் கலாநிதி மாறன்தான் எடு ப்பார்’’ என்று கூறினாராம் சக்சேனா.

போலீஸ் காவலில் எடுத்து சக்சேனாவை விசாரித்துவரும் நிலையில், அவரது இடதுகரமாக செயல்பட்ட தம்பிதுரை மற்றும் ஐயப்பன் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சக்சேனா கைது செய்யப்பட்ட அன்று, செக்கர்ஸ் ஹோட்டல் நிர்வாகிகளை அழைத்து போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். சினிமா தயாரிப்பாளர்கள் உள்பட இவர்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் வாங்கி வருகின்றனர். எனவே, தொடர்ந்து சக்சேனா மீது வழக்குகள் பாயக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தப்போவது யார்?

டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ‘மாறன் வீட்டிலிருந்து அலுவலகம்வரை கேபிள் பதித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதுகுறித்து விசாரித்தபோது, மாநகராட்சி அனுமதி இல்லாமல் சாலைகள் வெட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியாக வழக்குத் தொடர உத்தரவு போடப்பட்டுள்ளதாம். ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. வழக்குத் தொடர உள்ள நிலையில், தமிழக போலீஸும் வழக்குத் தொடர உள்ளது. கைது செய்வதில் யார் முந்தப் போகிறார்கள் என்பதுதான் இப்போதைய பரபரப்பு டாக்.

இரா.முருகேசன்

- குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.