Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப்பெண் தமிழகத்தில் பாலியல் வல்லுறவின் பின் கொலை

Featured Replies

போர்ச்சூழலினால் சிங்கள அரசின் ஒடுக்குமுறை தாங்காது தமிழகம் சென்ற ஈழமக்கள் நாளுக்கு நாள் அவலங்களை சந்திக்கின்றனர். அந்தவகையில்தான் தமிழகம் நெல்லை மாவட்டத்தில் வசித்த ஈழத் தமிழ்பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் புரிந்தபின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

.

நெல்லை மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

.

நெல்லை பாரதியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி என்பவரது மனைவியான 40 வயதுடைய தங்கம் என்ற பெண்ணே மர்ம நபர்களால் பாலியல்பலாத்காரத்தின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Bookmark/Search this post with:

Eelanatham

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் வெளியான மற்றொரு செய்தி மனிதம் அமைப்பின் அக்கினி சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டிருந்தார். அச்செய்தி வருமாறு:-

இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை.

by Agni Subramaniam on Friday, 01 July 2011 at 07:03

இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை. நடவடிக்கை எடுக்கக்கோரி 700 அகதிகள் உண்ணாவிரதம்\

தமிழ் நாடு, விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரியிலிருந்து 16 கி.மி. தொலைவில் உள்ள புதுப்பட்டு அகதிகள் முகாமில் சுமார் 800 குடும்பங்கள் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ரகுநாதன்-தேவதர்சினி தம்பதியருக்கு இரண்டாதாக பிறந்து குழந்தை திவ்யா (வயது 3), நேற்று இரவு ரகுநாதன் வெளியில் சென்றிருந்த வேளையில், முகாமிற்கு 200 மீட்டர் அருகில் உள்ள முதலியார் குப்பத்தை சேர்ந்த 23 வயதான சுகுமாரன் என்ற மீனவர், வீட்டிற்குள் புகுந்து திவ்யாவை பாலியல் வன்முறை செய்து, குழந்தையின் கன்னங்களை கடித்து துன்புறுத்தியுள்ளான். அலறல் சத்தம் கேட்டதும், குழந்தையின் தாய் தேவதர்சினி, ஓடி வரும் முன்னர், குழந்தை திவ்யாவை தூக்கி கொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளான். ஆட்கள் துரத்தவே, குழந்தையை கீழே எறிந்துவிட்டு ஓடிவிட்டான். படுகாயம் அடைந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வம்பவம் நடந்தவுடன், நேற்று இரவு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இன்று காலை முகாமில் உள்ள 700 குடும்பங்களை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டம், இந்நிகழ்வை கண்டித்து தொடங்கியுள்ளனர். காவல்துறையினர் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் சம்பவ இடத்திற்கு சில அதிரடிபடை வீரர்களுடன் வந்து விசாரித்து வருகிறார். காவல்துறையினர் இலங்கை அகதிகளையும் மிரண்டுவதாக மனிதம் அமைப்பிற்கு புகார் அளித்துள்ள இலங்கை அகதிகள் சொல்லுகின்றனர். புகார் மேல், மனிதம் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் ஈழத்தமிழப்பெண்கள் மீது தமிழகத்திலும் சரி தாயகத்திலும் சரி அதிகளவில் அண்மைக்காலங்களில் நடைபெற்று வருகிறது.

தற்போது நிமிடத்துக்கு நிமிடம் பெருகிவரும் பாலியல் தொழில். வன்னிமண்ணிலிருந்து பாலியல் தொழிலாளிகளாக மாறும் எமது தங்கைகள் அக்காக்களின் நிலமையிலிருந்து அவர்கள் காப்பாற்றப்படாதவிடத்து எச்ஐவி தொற்றால் எமது இனம் அழிவை எளிதில் சந்திக்க வேண்டிய நிலமை தவிர்க்க முடியாததாகிவிடும். தாய்லாந்து மும்பாய் போன்ற நிலமைக்கு வன்னி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

இந்நிலமையை மாற்ற புலம்பெயர் சமூகம் தனது கவனத்தைச் செலுத்தி அவர்களை மீட்க வேண்டும்.

ஈழப்பெண் தமிழகத்தில் பாலியல் வல்லுறவின் பின் கொலை

இலங்கை ஆமியும், இந்திய ஆமியும் இவற்றை போர் ஆயுதமாகப் பாவிக்கும் போது இப்படி ஒரு தலைப்பு தனி நபர் குற்றத்திற்கு அவசியமா?

"மர்ம நபர்களால்" - என்ன நியூஸ் ஐயா இது. ஆரோ சதாரண தெரு காடைகளுக்கு போய் நம்ம கியூ டிவிசன் துரைகளுக்கு கொடுக்கிற மரியாதை கொடுத்து.........

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

ஈழப்பெண் தமிழகத்தில் பாலியல் வல்லுறவின் பின் கொலை

இலங்கை ஆமியும், இந்திய ஆமியும் இவற்றை போர் ஆயுதமாகப் பாவிக்கும் போது இப்படி ஒரு தலைப்பு தனி நபர் குற்றத்திற்கு அவசியமா?

"மர்ம நபர்களால்" - என்ன நியூஸ் ஐயா இது. ஆரோ சதாரண தெரு காடைகளுக்கு போய் நம்ம கியூ டிவிசன் துரைகளுக்கு கொடுக்கிற மரியாதை கொடுத்து.........

[/quot

குற்றம் இலங்கை ஆமியும் இந்தியன் ஆமியும் செய்ததைத்தான் இந்த கயவர்களும் செய்தால் அப்படித்தான் போடவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.