Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதி மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதம்: இந்தியப் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி ஏற்றுக் கொள்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதி மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதம்: இந்தியப் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி ஏற்றுக் கொள்கிறார்

[Monday, 2011-07-11 22:56:48]

போரினால் பாதிப்புகளுக்கு உள்ளாகிய வடபகுதி மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ளதாக இந்தியப் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.

ஆரம்ப கட்டமாக, ஆயிரம் வீடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.வடக்கு மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இந்தியா ஒன்றிணைந்த சக்தியாகத் தொடர்ந்து செயற்படும் எனவும் இந்தியப் பிரதித் தூதுவர் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் ரயில் பாதைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆகியவற்றை நேரடியாகப் பார்வையிடுவதற்காக சென்றுள்ள இந்தியப் பிரதித் தூதுவர், வவுனியா அரசாங்க அதிபரைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் பின்னர், மீள்குடியேறியுள்ள ஒரு தொகுதி குடும்பங்களுக்கான கூரைத்தகடுகளையும் விவசாய உபகரணங்களையும் அவர் வழங்கினார்.

இந்தியப் பிரதி தூதுவர் நிவாரணப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வுஇடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவினால் அமைக்கப்படும் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள நீண்ட தாமதம் குறித்து அவர் பிபிசிக்கு விளக்கமளிக்கையில், வீடுகளை அமைப்பதற்கான இடங்களை தமது ஒப்பந்தக்காரர்களிடம் கையளிப்பது தொடக்கம், பயனாளிகளைத் தெரிவு செய்வது வரையில் பல விடயங்களில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள், தாமதங்களினால் இந்தத் திட்டம் தாமதமாகியிருக்கின்றது என அவர் கூறினார்.

அத்துடன் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கின்ற இந்தத் திட்டமானது உலகத்திலேயே இந்தியாவினால் மேற்கொள்ளப்படுகின்ற மிகவும் பெரியதோர் வேலைத்திட்டம். எனவே இதனை தாங்கள் மிகவும் கவனமாகக் கையாள வேண்டியிருக்கின்றது. எனினும் இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாகிய ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட்டு விடும் என்று இந்தியப் பிரதித் தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இன்னும் இரண்டு வாரங்களில் இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் 40 அல்லது 50 வீடுகள் முற்றாகக் கட்டி முடிக்கப்பட்டுவிடும். அந்த வீடுகளை இந்த மாத இறுதிக்குள் பயனாளிகளுக்கு வழங்குவதற்கும் திட்டமிட்டிருக்கின்றது என்றார்.

அதனைத் தொடர்ந்து எஞ்சிய 49 ஆயிரம் வீடுகளையும் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்டிருப்பதாகவும் இந்தியப் பிரதித் தூதுவர் தமிழோசையிடம் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46331&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேலைத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இன்னும் இரண்டு வாரங்களில் இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் 40 அல்லது 50 வீடுகள் முற்றாகக் கட்டி முடிக்கப்பட்டுவிடும். அந்த வீடுகளை இந்த மாத இறுதிக்குள் பயனாளிகளுக்கு வழங்குவதற்கும் திட்டமிட்டிருக்கின்றது என்றார்.

அதனைத் தொடர்ந்து எஞ்சிய 49 ஆயிரம் வீடுகளையும் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்டிருப்பதாகவும் இந்தியப் பிரதித் தூதுவர் தமிழோசையிடம் கூறினார்.

ஹா! ஹா!! ஹா!!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடமாய்... 50, 000 வீடு கட்டுவது என்று சொல்லி... 1000 வீடுகள் கூட, இந்தியாவால் கட்டிக் கொடுக்க முடியவில்லை.

புலிகளை அழிக்க காட்டிய அவசரத்தில், ஒரு வீதமாவது காட்டப்படவில்லை.

தமிழன் இழந்த நிலத்தை மீட்டுத் தந்தாலே..... மிகுதியை ஈழத் தமிழன் பார்த்துக் கொள்வான்.

பிரச்சினை எங்கோ.... இருக்க, இந்தியா சும்மா... புலம்பிக் கொண்டிருக்கப் படாது.

தமிழினப் படுகொலையாளர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளுடன் சேர்ந்து அனைவரையும் ஏமாற்றும் நாடகம்.

இந்தக் காட்டுமிராண்டிகளின் 500 கோடி கடனும், 50,000 வீடமைப்பு அறிவிப்பும் கரிசனையுடைய சர்வதேசம் தமிழருக்கு உதவி செய்வதை, தரமான வீடுகள் பாதிக்கப்பட்ட தமிழருக்கு கிடைப்பதை தடுத்து நிறுத்தவே என்பது யாழில் உள்ள இந்தப் பயங்கரவாதிகளின் முகாம் (தூதரகம் என்றும் சொல்வார்கள்) பொறுப்பாளர்களில் ஒருவர் போதையில் உளறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு வருடமாய்... 50, 000 வீடு கட்டுவது என்று சொல்லி... 1000 வீடுகள் கூட, இந்தியாவால் கட்டிக் கொடுக்க முடியவில்லை.

புலிகளை அழிக்க காட்டிய அவசரத்தில், ஒரு வீதமாவது காட்டப்படவில்லை.

தமிழன் இழந்த நிலத்தை மீட்டுத் தந்தாலே..... மிகுதியை ஈழத் தமிழன் பார்த்துக் கொள்வான்.

பிரச்சினை எங்கோ.... இருக்க, இந்தியா சும்மா... புலம்பிக் கொண்டிருக்கப் படாது.

எந்த ஈழத்தமிழன் பார்த்துக்கொள்வான்? அதையும் சொல்லணும் ! இப்டியெல்லாம் ஓவரா உணர்ச்சிவசபட படாது! அசிங்கமா இல்லையா ..இது அண்ணனுக்கு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.