Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு அனுமதிக்க மாட்டேன் : ராஜபக்சே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு

அனுமதிக்க மாட்டேன் : ராஜபக்சே

இலங்கை அதிபர் ராஜபக்சே, யாழ்ப்பாணம், கோப்பாய், நாவலர் மகா வித்யாலய மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, உரையாற்றியுள்ள்ளார்.

அப்போது அவர், ‘’இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். இது எங்கள் நாடு. நாங்கள் பிறந்த நாடு. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் நாடு.

நான் அதிக பணம் செலவு செய்வது வட மாகாணத்துக்கே. எனது ஒரே இலக்கு வட மாகாணத்தின் அபிவிருத்தியே. உங்கள் பிரதேசம் முக்கியமாக கல்வியில் மீண்டும் சிறப்பாக வருவதற்காக நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

இனவாத அரசியல் இனி வேண்டாம். இனம், குலம் பார்த்து நான் வேலை செய்வதில்லை. ஏன் என்றால் நான் இந்த நாட்டின் தலைவன். நீங்கள் தவறான வழியில் வழிநடத்தப்படுகிறீர்கள் என நான் அறிகிறேன்.

இனிமேல் இந்த நாட்டில் பயங்கரவாதம் வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி இனி நீங்கள் யோசியுங்கள். நாம் அனைவரும் ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைவதன் மூலம் வளமான எதிர்காலத்தை அனுபவிக்க முடியும்’’ என தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58004

’இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்
’இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்

ஆனால் துண்டு துண்டாக கூறு போட்டு நல்ல விலைக்கு விற்பதற்கு தயாராயிருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

’இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்

ஆனால் துண்டு துண்டாக கூறு போட்டு நல்ல விலைக்கு விற்பதற்கு தயாராயிருக்கிறேன்.

மன்னார் ஒருநாட்டுக்கும் திருகோணமலையை இன்னொருனாட்டுக்கும் கம்பான்தொட்டையை ........?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு

அனுமதிக்க மாட்டேன் : ராஜபக்சே

catch (HibernateException e)

{

t2.rollback();

throw new RuntimeException(e);

}

உடனடியா ராஜபக்சே ஒரிசாவுக்கு கிளம்பணும்..

நாட்டை பிரிக்க சொல்லவில்லை நம் நாட்டை பறிக்காதே

நாட்டை பிரிக்க சொல்லவில்லை நம் நாட்டை பறிக்காதே என்றுதான் சொல்கின்றோம்.

சிங்களவர்களின் நாட்டு ஜனாதிபதி ராசபட்சே எங்கள் ஈழநாட்டுக்குள் வந்து நின்றுகொண்டு நாட்டை பிரிக்க அனுமதியேன் என்று வரலாறு தெரியாத குழந்தைபோல பேசிசென்றது வரலாறும் உண்மையும் தெரிந்த ஈழத்து கல்விமான்களையும் சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை 60 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்து நொந்துபோயிருக்கும் ஈழ தமிழ்மக்களின் நெஞ்சங்களையும் மீண்டும் படுகாயப்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழினத்தின் சுவாசத்தோடு ஒன்றிய ஈழம் இன்று சிங்கள தேசத்துடன் இணைந்து இருப்பதனால் ஈழம் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லி மாளாது. இதையெல்லாம் நன்குணர்ந்தும் சில தமிழ்தேசிய விரோதர்கள் தமது சுயநல வாழ்வுக்காக சிங்கள ஆதிக்க வெறியர்களுக்கு சாமரம் வீசுவது அவர்களின் அறிவீனமே,

ஈழநாட்டை சிங்களம் தங்களுடையது என்று பட்டப்பகல் கொள்ளை அடித்து பறித்து வைத்திருப்பதை உலகப்பெருந்தலைமைகள் சனநாயக வாழ்வின்மீது பெருமரியாதை வைத்திருப்பதாக சொல்லிக்கொள்வோர் சிங்களத்தின் சிறுபிள்ளைத்தனத்தை பக்குவமின்மையை கண்டுகொண்டு ஆயுத முனையில் பழம்பெரும் தமிழினத்தை அடக்கியாளும் சிங்கள அரசை உலகப்பெருந்தலைமைகள் தமது பலத்தால் அரசியல் நுட்பத்தால் தமிழினத்தின் சொந்த மண்ணான ஈழத்தை சனநாயக முறைமையிலோ அன்றி தங்களின் பலத்தை பாவித்தோ தமிழர்களுக்கு அவர்களின் சனநாயகம் கிடைக்க வழி செய்வார்களா?

ஏற்கனவே தமிழினம் தங்களுக்குரிய அரசினை நிறுவி வழிமுறைகளை அமைத்து வாழ்ந்தவர்களே ஈழநாட்டில், பின்னர் நாடுகளை பிடித்து வர்த்தகம் புரிந்த பிரித்தானியரினால் 1833 ம் ஆண்டு அவர்களின் தேவைகளுக்காக தமிழர்கள் நாடு முறையின்றி தமிழர்கள் விருப்புகளை கேட்காமலே

சிங்கள நாட்டுடன் வர்த்தக போக்குவரத்துகளுக்காக பிரித்தானியரினால் இணைக்கப்பட்டது , அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் ஈழத்தின் இருக்கை அன்னியரின்பாலே உள்ளது, நீதி அறிந்தவர்களே பெரும் கல்விமான்களே உண்மையினை சொல்லுங்கள் ,வாழ்வியலிலும் கல்வியிலும் மகத்துவம் அடைந்திருக்கும் இன்றைய நாகரிக உலகிலும் தமிழர்களின் நிலம் அன்னியரான சிங்களவர்களிடமா இருக்க வேண்டும்?

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொல பான்மை கெட்டு நாமமது தமிழர் என கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்? சனநாயகம் இல்லாத நாட்டில் அடிமையாக தன்னும் ஒருநாள் போய் மாடிவீடு கட்டி வாழ்வோம் என்ற கனவில் காசுகாசு என்று சேர்த்து நிரப்பும் ஆசையுடன் ஒரு கூட்டம் ஏதிலார் நிலத்தில் நெளிகின்றது வேறு ஒரு கவலையும் இல்லை அம்மனிதர்களுக்கு நாடாவது உரிமையாவது சும்மா போவியா என்பார்கள் பெரும் பொறுப்பானவர் போல் முகத்தை வைத்துகொண்டு. சிங்களத்தினால் இழைக்கப்பட்ட பெருங்கொடுமைகளுக்கு ஈழத்தமிழினம் ஆளாகிய பின்னும் அன்பும் நீதியும் மனிதமும் நிறைந்தோரால் நிம்மதி கொள்ள முடியுமா? தமிழனே நினைத்துப்பார் இனியும் அரக்கத்தனமிக்க சிங்களவர்களுடன் சேர்ந்து நீ வெற்றிலை போடலாமா என்று.

வேதனையின் வடிப்பு

ம. இரமேசு

http://www.alaikal.com/news/?p=76836

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு

அனுமதிக்க மாட்டேன் : ராஜபக்சே

நான் அதிக பணம் செலவு செய்வது வட மாகாணத்துக்கே. எனது ஒரே இலக்கு வட மாகாணத்தின் அபிவிருத்தியே.

அம்பாந்தோட்டை என்ன வடக்கு மாகாணத்தில் தான் இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு

அனுமதிக்க மாட்டேன் : ராஜபக்சே

இலங்கை இவரது குடும்பச் சொத்து மாதிரியல்லவா இவரது பேச்சுப் போகின்றது!

நான் பதவியிலிருக்கும் வரை, என்று இவர் சொல்லியிருக்க வேண்டும்!

உனது அனுமதிக்காக நாம் காத்திருக்கப் போவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய அனுமதியும் பெற்று நடப்பதல்ல சுதந்திர போராட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.