Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செனல்4 ஆவணப்படம் போலியானது – உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செனல்4 ஆவணப்படம் போலியானது – உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு

26 ஜூலை 2011

செனல்4 ஆவணப்படம் போலியானது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த ஆவணப்படம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக செனல்4 ஊடகம் அண்மையில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த ஆவணப்படம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் குறித்த ஆவணப்படம் பரீட்சிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவணப்படத்தின் சில காட்சிகள் பல சந்தர்ப்பங்களில் தொகுக்கப்பட்டுள்ளதாகவும், சில காட்சிகள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னணி காட்சிகளும் போலியானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் தொடர்பான விசாரணை அறிக்கையும் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64685/language/ta-IN/article.aspx

போர்க்குற்றம் புரிந்த சிங்கள அரச பயங்கரவாதிகளால் நியமிக்கப்பட்டு, சிங்களப் பயங்கரவாதி சில்வா தலைமைமையில் "உண்மையைக் கண்டறியும் குழு" என்ற பெயரில் இயங்கும் குழுவை பயங்கரவாதக் குழுவாக சர்வதேசம் அறிவிக்க வேண்டும்.

Edited by ஆராவமுதன்

நல்ல தீர்ப்பு. இதை ஐ.நா. இந்தியா, அமெரிக்க போன்றவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். விஷடமாக ரொபேட் பிளேக் போன்றோர், மற்ற அமெரிக்கர்களின் முயற்சிகளை, இன நலெண்ண முன்னெடுப்புகள் என்ற போர்வையில் பின்னடிக்க வைக்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

சூப்பரான காமெடி

தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியாகிவிட்டேன். ஜநா சபையால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு என்று.

உள்ளே போய் வசித்தன் பின் சிரிப்பு தான் வந்தது. :D

' உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு' ஏன் பொய் அறிக்கை விடுகிறது? <_<

இந்த 'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு' யாரால் நியமிக்கப் பட்டது என்பதையும் தெளிவா இந்த செய்தியில் சேர்த்து இருக்கலாமே? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் குறித்த ஆவணப்படம் பரீட்சிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதன முத்தாக்கள் சின்ன உலகத்தில் வசிக்கினம். :lol::lol:

' உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு' ஏன் பொய் அறிக்கை விடுகிறது? <_<

இந்த 'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு' யாரால் நியமிக்கப் பட்டது என்பதையும் தெளிவா இந்த செய்தியில் சேர்த்து இருக்கலாமே? :rolleyes:

அது ;பொய்; தானா சொல்லுது என்று கண்டு பிடிக்க ஒரு ஆணைக் குழ்வை நாம தான் நியமிக்கவேண்டும்......... :)

நாங்கள் நியமிக்கும் ஆணைக்குழுவுக்கு தலைவராக டங்குவார் என்ற இசைக்கலைஞனையும், அவருக்கு உதவியாக நிழலியையும் கிருபன் அவர்களையும் நியமிக்கலாம் . இவர்களை மேற்பார்வை பாற்பதுக்கும் சகோதர முரன்பாடுகளை தவிர்க்கும் முகமாகவும் திருவாளர் தோழர் அர்ஜீனை நியமிக்கலாம்..................... :D

அது ;பொய்; தானா சொல்லுது என்று கண்டு பிடிக்க ஒரு ஆணைக் குழ்வை நாம தான் நியமிக்கவேண்டும்......... :)

நாங்கள் நியமிக்கும் ஆணைக்குழுவுக்கு தலைவராக டங்குவார் என்ற இசைக்கலைஞனையும், அவருக்கு உதவியாக நிழலியையும் கிருபன் அவர்களையும் நியமிக்கலாம் . இவர்களை மேற்பார்வை பாற்பதுக்கும் சகோதர முரன்பாடுகளை தவிர்க்கும் முகமாகவும் திருவாளர் தோழர் அர்ஜீனை நியமிக்கலாம்..................... :D

:huh::mellow::blink:

:huh::mellow::blink:

சிங்களவன் உண்மையை அறிய முன்னம் எங்களோட கூட இருப்பவர்களும் உண்மையை கண்டு அறியவேண்டும் என்பதுக்காக தான். தோழர் அர்ஜீனை மேற்பார்வையாக போடலாம் என்று இருக்கேன்.

இஅவர்களின் பேச்சாளராக திருவாளர் நெடுக்ஸ்சை போடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையை கண்டு அறியும் ஆனைக்குழுவின் விசாரனையை நம்பி இருக்கும் சர்வதேசத்தினருக்கு இந்த விடயத்தை கொண்டு போக வேண்டும், உறுதிசெய்யபட்ட ஒரு கானொளிக்கே இந்த விதமான நீதியை வழங்குபவர்களின், நீதியின் மேல் எப்படி நீங்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள் என்று. சர்வதேச விசாரனையை தவிர எந்த விதமான விசாரனையும் உண்மையை கொண்டுவரப்போவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அது ;பொய்; தானா சொல்லுது என்று கண்டு பிடிக்க ஒரு ஆணைக் குழ்வை நாம தான் நியமிக்கவேண்டும்......... :)

நாங்கள் நியமிக்கும் ஆணைக்குழுவுக்கு தலைவராக டங்குவார் என்ற இசைக்கலைஞனையும், அவருக்கு உதவியாக நிழலியையும் கிருபன் அவர்களையும் நியமிக்கலாம் . இவர்களை மேற்பார்வை பாற்பதுக்கும் சகோதர முரன்பாடுகளை தவிர்க்கும் முகமாகவும் திருவாளர் தோழர் அர்ஜீனை நியமிக்கலாம்..................... :D

தலைவர் பதவியைத் தவிர வேறு எதுவும் எனக்குச் சரிவராது. எனவே டங்குவார் மனமுவந்து பதவியை விட்டுக்கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுக்குழு, துரோகக்குழு, மாற்றுக்குழு என்று தொடர்ந்து சொல்லி அவரை அப்படியாக்கவேண்டி வந்திடும். ^_^

தலைவர் பதவியைத் தவிர வேறு எதுவும் எனக்குச் சரிவராது. எனவே டங்குவார் மனமுவந்து பதவியை விட்டுக்கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுக்குழு, துரோகக்குழு, மாற்றுக்குழு என்று தொடர்ந்து சொல்லி அவரை அப்படியாக்கவேண்டி வந்திடும். ^_^

தமிழர்களை பொறுத்த மட்டில் தலைவர் என்ர சொல் ஒருவருக்கு தான் பொருந்தும் ( இப்ப அவரையும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்ந்துவிட்டார்கள்) /.........

' உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு' ஏன் பொய் அறிக்கை விடுகிறது? <_<

இந்த 'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு' யாரால் நியமிக்கப் பட்டது என்பதையும் தெளிவா இந்த செய்தியில் சேர்த்து இருக்கலாமே? :rolleyes:

அரை வேக்காட்டு தமிழ் ஊடகவியலாளர்கள் விடும் மாபெரும் தவறு இது தான்.

அரைவேக்காட்டு தமிழ் ஊடகவியலாளர்கள் தமிழின விரோதிகளின் பின்னணியை வழங்கும் முறையைக் கற்றுக்கொள்ள

உதாரணம் 1:

போர்க்குற்றம் புரிந்த சிங்கள அரச பயங்கரவாதிகளால் நியமிக்கப்பட்டு, சிங்களப் பயங்கரவாதி சில்வா தலைமைமையில் "உண்மையைக் கண்டறியும் குழு" என்ற பெயரில் இயங்கும் குழுவை பயங்கரவாதக் குழுவாக சர்வதேசம் அறிவிக்க வேண்டும்.

உதாரணம் 2:

"லங்கா ரத்னா" பரிசு பெற்ற சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலி இந்து ராம், தமிழ் நாட்டு மண்ணிலிருந்துகொண்டு இந்திய அரச பயங்கரவாதிகளின் காலை வாரிவிடுவதை பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு இந்திய அரச பயங்கரவாதிகள் சிங்கள பயங்கரவாதிகளிடம் இலஞ்சம் பெற்றுள்ளனர்.

உதாரணம் 3:

லியம் பாக்ஸ் என்பவன் சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலி. முன்னர் ஐ. தே. க. இவனை காசுகொடுத்து சில வேலைகளுக்கு அமர்த்தியிருந்தது.

இந்தியாவில் ஒரு ராம் போல், இங்கிலாந்தில் லியம் பாக்ஸ். பணம், பொருள், போதை, பெண்களைப் பெற்றுக்கொண்டு சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு இவர்கள் செய்யும் ஊழியம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் தமது முன்னைய பதவியை வைத்து எங்காவது நடுநிலையாளர்கள் வேடத்தில் உட்புகுந்து குழப்ப முயற்சிப்பார்கள்.

இவ்வாறான கைகூலிகள் நடுநிலையாக பேசமாட்டார்கள்.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

' உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு' ஏன் பொய் அறிக்கை விடுகிறது? <_<

இந்த 'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு' யாரால் நியமிக்கப் பட்டது என்பதையும் தெளிவா இந்த செய்தியில் சேர்த்து இருக்கலாமே? :rolleyes:

குட்டி,

இந்தத் செய்தியின் தலைப்பால்... பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது உண்மை.

எமது தமிழ் ஊடகங்கள் இப்படியான தவறுகளை தெரிந்தே செய்கின்றனவா, தவறுதலாகச் செய்கின்றனவா என்று புரியவில்லை.

சனல் 4, மிகவும் சிரமப்பட்டு எமக்கு ஆதரவான ஆவணங்களை சேகரித்து வெளியிடும் போது....

தமிழ் ஊடகங்கள் போடுற தலைப்பையாவது ஒழுங்காய்... போட்டால் குறைஞ்சா போய்விடுவார்கள். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.