Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுவார்த்தையை தொடருவதற்கு அரசாங்கத்துக்கு நிபந்தனை! 2 வாரங்கள் காலக்கெடு!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தையை தொடருவதற்கு அரசாங்கத்துக்கு நிபந்தனை! 2 வாரங்கள் காலக்கெடு!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Friday, August 5, 2011, 0:29சிறீலங்கா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டு தரப்புக்கும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக இன்று 10 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உறுதியான பதில் ஒன்றை வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்தக் கோரிக்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் தரப்படவேண்டும் என்று நிபந்தனையையும் விதித்துள்ளது.

இல்லையேல் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை தொடருவதா, இல்லையா என்பது குறித்து சிந்திக்கவேண்டி வரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

10 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அரசாங்கம் இதுவரை, பிரயோசனமான எந்த பதிலையும் வழங்கவில்லை. எனவே தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் பதில் கூறவேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிடும் என்றும் மாவை கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா இன்று தெரிவித்துள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

http://www.tamilthai.com/?p=23355

கூட்டமைப்பு சரியான நகர்வை மேற்கொண்டுள்ளது.

இப்பொழுதுதான் தருணம்: ஐ.நா. உட்பட்ட சர்வதேச அழுத்தங்கள், மேலாக தாயக மக்கள் தந்த ஆணை, தமிழக ஆதரவு, புலம்பெயர் மக்கள் ஆதரவு - இவை அனைத்தும் பின் புலத்தில் பலமாக உள்ளன. களத்தில் இவர்களின் ஆதரவுடன் திடமாக நகரவேண்டிய நேரம் இது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசங்களில் மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களுக்கு தயாராகவேண்டும் ௬ ட்டமைப்பு இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். உலக நாடுகளின் தூதுவர்களை நாடி நிலைமைகளை விளக்க வேண்டும் அதை விடுத்து சும்மா அறிக்கை விடுவதோடு நின்றால் ஒரு மாற்றமும் நிகழாது.

சஜின் வாஸ் குணவர்தன, ஐ.ம.சு.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் :

ஆட்சிமுறையின் கட்டமைப்பு, மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் ஒதுக்கப்படும் துறைகள், வரி மற்றும் நிதியில் பரவலாக்கம்; தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக 10 நாட்களுக்குள் அரசாங்கத் தூதுக்குழுவினர் எழுத்து மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவிக்க வேண்டும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது என அவர் கூறினார்.

எல்.ரி.ரி.ஈ.யினால் வெளிப்படுத்தப்பட்ட அணுகுமுறையை ஒத்ததான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலக்கெடுவானது உதவிகரமானதாகவோ சாதகமான பெறுபேறொன்றை அடைவதற்கு ஆக்கபூர்வ செயற்பாடாகவோ அமையும் என நாம் எண்ணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/25845-2011-08-04-19-10-38.html

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இதனையும் ஏளனம் செய்யும். அதை தனக்கு சாதகமாக்கி காய் நகர்த்தும். சம்பந்தப்பட்டவர்கள் நிதானமாக இருப்பதுடன் உடனுக்குடன் விபரங்களை வெளியில் கொண்டுவருதல் எல்லோருக்கும் பயன் தரும்

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வார்த்தை என்ற ரீதியில் சிங்கள அரசுகளுக்கு கால அவகாசங்களை வழங்கி தமிழர்கள் ஏமாந்த வரலாறே அதிகம். அவற்றில் இருந்து பாடங்கள் கவனமாகவும் நுட்பமாகவும் கற்கப்பட்டு நகர்வுகள் இராஜதந்திர நலன் வேண்டி மேற்கொள்ளப்பட வேண்டும்.

கூட்டமைப்பின் காலக்கெடு.. வெறும் உறுதிமொழி நோக்கியதாக மட்டும் நின்று விட்டால்.. அதைச் சிங்களம் உலகை.. இந்தியத்தை அனுசரிக்க வழங்கிவிட்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து தாம் தப்பிக்கவும் குறட்டை விடவுமே பாவிக்கும்.

எத்தனையோ எழுதப்பட்ட ஒப்பந்தங்களையே மிகவும் திட்டமிட்டு மீறிய சிங்களத்திற்கு ஒரு உறுதிமொழியை இழுத்தடித்து தந்துவிட்டு மீறுவது என்பது பெரிய விடயம் அன்று.

அதுவும் சீனா என்ற அசுர வளர்ச்சி கண்டு வரும்.. அரக்கனின் தயவில் உள்ள சிங்களத்திற்கு.. இப்போது சொல் புத்தி ஏறும் நிலை இல்லை. கேள் புத்தியும் இல்லை. அந்த வகையில் கூட்டமைப்பு வெறுமனவே இந்தியாவின் தயவை நம்பி செயற்பட்டுக் கொண்டிராமல்.. இந்தியாவின் தேவைப்பாடுகளோடு ஒட்டி இருந்து கொள்வது போன்ற ஒரு நிலையை வைத்துக் கொண்டு.. சர்வதேச சமூகத்தினையும் அரவணைக்க வேண்டும். புலம்பெயர் மற்றும் தமிழக.. உலகத் தமிழ் மக்களின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும்.

உலகத்தமிழர்களில் ஒன்றிணையக் கூடியவர்களை உள்ளடக்கிய ஒரு சமாந்திர அரசியல் இராஜதந்திர நகர்வின் மூலமே சிங்களத்தின் சதிகளை முறியடிக்க முடியும். நேரிடையான வழிமுறைகளில் சிங்களத்தை எதிர்கொள்வது தற்போதைய பூகோள அரசியல் இராணுவ பொருண்மிய நிலையில் கடினம்.

அண்மையில் வைகோ போன்றவர்கள்.. இந்திய ஆளும் நடுவன் அரசோடு பேசி உள்ள நிலையில்.. ஜெயலலிதா மீண்டும் சிறீலங்கா மீதான பொருண்மியத் தடையை வலியுறுத்தி உள்ள நிலையில்.. திமுக உட்பட்ட தமிழக கட்சிகள்.. அவற்றிற்கு ஆதரவளித்திருக்கும் நிலையில்.. தாய் தமிழகத்தின் அறிவுரையையும் ஆதரவையும் நமதாக்கி நகர்வுகளை மேற்கொள்வதும் அவசியம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமும் இந்தியமும் சேர்ந்து நடிக்கும் நாடகத்தில் கூட்டமைப்பு தடுமாறாமல் இருக்குமா?

பேச்சு வார்த்தை தோல்வியுறுகிறது. கூட்டமைப்பு அத்திகாரபூர்வமான போர்குற்ற வழக்கை இலங்கை கோடு ஒன்றில் தாக்கல் செய்ய வேண்டும். இலங்கையில் கடமையாற்ற கூடிய வெளிநாட்டு(அமெரிக்க, பிரித்தானிய) வக்கீல்களை கடமையில் ஈடுபடுத்தலாம். U.N, Channel-4, சுவிஸ் TV ஆவணங்களை சாட்சியங்களாக்கலாம்.

இலங்கை கோடு வழக்கை நிராகரித்தவுடன் ஐ.நா தான் தனது விசாரணையை துவக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேச்சு ஏமாற்று நாடகமே தவிர வேறென்றும் இல்லை புலிகள் காலத்தில் (சமாதான பேச்சுவார்த்தை காலத்தில்) தேசத்தின்குரல் சுடர்ஒளி வார பத்திரிகைக்கு பேட்டி ஒன்று வழங்கியிருந்தார் அதில் பேச்சுக்கள் நடைபெறாது அப்படி நடந்தாலும் தீர்வ சிங்களம் தராது தந்தாலும் மறுவளத்தால் துாண்டி குழப்பம் வரும் என்று தெளிவாக சொல்லியிருந்தார். அனுபவ பகிர்வுகளோட பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கனும் சம்பந்தன் ஜயா பழுத்த கொழுத்த அரசியல்வாதி என்கின்றனர் ஆனால் சாணக்கியத்தோட இறங்கியிருக்கனும் என்னதான் கதைத்தாலும் சிங்களத்தோடு பேசி தீர்வு சரிவராது அடித்துதான் அவனோடபேசனும்! பேச வைக்கனும்!!

Edited by tigertel

இந்த பேச்சு ஏமாற்று நாடகமே தவிர வேறென்றும் இல்லை புலிகள் காலத்தில் (சமாதான பேச்சுவார்த்தை காலத்தில்) தேசத்தின்குரல் சுடர்ஒளி வார பத்திரிகைக்கு பேட்டி ஒன்று வழங்கியிருந்தார் அதில் பேச்சுக்கள் நடைபெறாது அப்படி நடந்தாலும் தீர்வ சிங்களம் தராது தந்தாலும் மறுவளத்தால் துாண்டி குழப்பம் வரும் என்று தெளிவாக சொல்லியிருந்தார். அனுபவ பகிர்வுகளோட பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கனும் சம்பந்தன் ஜயா பழுத்த கொழுத்த அரசியல்வாதி என்கின்றனர் ஆனால் சாணக்கியத்தோட இறங்கியிருக்கனும் என்னதான் கதைத்தாலும் சிங்களத்தோடு பேசி தீர்வு சரிவராது அடித்துதான் அவனோடபேசனும்! பேச வைக்கனும்!!

முன்னைய பேச்சுவார்த்தைகளை விட இது வித்தியாசமானது.

மாறியுள்ள புதிய உலக கொள்கைகள், போர்குற்றங்கள் - அதனோடு தொடர்புடைய அழுத்தங்கள், பலதையும் உதாசீனம் செய்யும் மகிந்தர் கூட்டம் என கள நிலைமை மாறியுள்ளது. இந்த மாற்றங்களை வைத்து, இழந்த இழப்புக்களுக்கு மேலாக எந்த ஒரு உயிரையும் இழக்காமல், விடுதலை பெற வேண்டும்.

நிபந்ததனைகளை விதித்து அதற்கு ஒரு காலக்கெடுவும் விதித்ததன் மூலம் கூட்டமைப்பு ஒரு செயல்திட்டத்தை வைத்தே இவ்வாறு செயல்படுகின்றது என நம்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிபந்தனைகள் காலக்கெடு விதித்தல் மூலம் எதையும் சாதிக்குமா கூட்டமைப்பு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.