Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானைக்கு ஒரு காலமென்ற எறும்புக்கு ஒரு காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு ஆண் யானையும் ஒரு பெண் எறும்பும் காதலித்து வந்தார்கள் (இதைதான் சொல்கிறது காதலுக்கு கண் இல்லையென்று) இது இரு வீட்டாருக்கும் தொரிய வந்த போது, ஆண் யானை குடும்பத்தினருக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பெண் எறும்பு வீட்டார் சொல்லி போட்டினம் நாங்க ஆண் யானையை பற்றி வடிவா விசாரித்துப்போட்டு எங்கட உறவினர்களுடன் கதைத்து முடிவு சொல்கிறோம் என்று,

அடுத்த நாள் சொல்லிச்சினம்எங்களுக்கு உங்கட மகனை பிடிக்கவில்லை, அவருக்கு பல்லு நீளமாக இருக்கு (. இதைதான் சொல்லுகிறது எங்கள் பெண் வீட்டாரின் குசும்புகள் என்று).

இதை கேட்ட நம்ம சகோதரன் பாரதியின் மீசையை முறிக்கிக் கொண்டு (அவரின் அம்மா ஆசை ஆசையாக மஞ்சள் பூசியதின் வினை) யார் காதலை பற்றி எழுதினாலும் கருத்து எழுதத் தவறுவதில்லை ".

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு நகைச்சுவையா?...உடையார் ஒருவரைக் குறி வைத்து தனிப்பட்ட தாக்குதல் நட‌த்தியுள்ளார்...இதெல்லாம் மட்டுறுத்தினர் கண்ணில் படாதோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு நகைச்சுவையா?...உடையார் ஒருவரைக் குறி வைத்து தனிப்பட்ட தாக்குதல் நட‌த்தியுள்ளார்...இதெல்லாம் மட்டுறுத்தினர் கண்ணில் படாதோ

"வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்

தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்

வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது”.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதினதில் பிழை இல்லாமலா எடிட்[திருத்தம்] செய்தீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உம்....நீர்தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ!

"உம் ...நீர்தான் ஜாக்சி துரைச்சியோ என்பவரோ!

"ஏது இவ்வளவு தூரம் .......

"நட்பு நாடியது ....அதனால் யாம் வந்தோம்....

"உன் மீது குற்றம் சுமத்துகிறேன்...

"என்னவென்று .......

"எடுத்துரைத்தால் கணக்கிலடங்காது...

"எண்ணிக்கிகை தெரியாத குற்றம் .....

"எனக்கா எண்ணிக்கை தெரியாது....சொல்கிறேன் கேள்...

வரி செலுத்தவில்லை, நீண்ட காலமாக கொள்ளவில்லை.....வட்டியும் செலுத்தவில்லை .....கிஸ்தியும்

செலுத்தவில்லை.....

"வரி....தொடர்பு ....வட்டி....கிஸ்தி. யாரைக்கேட்கிறாய் வரி! எதற்கு கேட்கிறாய் வட்டி! எங்களோடு வயலுக்கு வந்தாயா!நாற்று நட்டாயா!களை பறித்தாயா!ஏற்றம் இறைத்து நெடு வயல் பாயக்கண்டாயா! அங்கே கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்தாயா! அல்லது மாமியா மச்சாளா!"

ஓரு ஆண் யானையும் ஒரு பெண் எறும்பும் காதலித்து வந்தார்கள் (இதைதான் சொல்கிறது காதலுக்கு கண் இல்லையென்று) இது இரு வீட்டாருக்கும் தொரிய வந்த போது, ஆண் யானை குடும்பத்தினருக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பெண் எறும்பு வீட்டார் சொல்லி போட்டினம் நாங்க ஆண் யானையை பற்றி வடிவா விசாரித்துப்போட்டு எங்கட உறவினர்களுடன் கதைத்து முடிவு சொல்கிறோம் என்று,

அடுத்த நாள் சொல்லிச்சினம்எங்களுக்கு உங்கட மகனை பிடிக்கவில்லை, அவருக்கு பல்லு நீளமாக இருக்கு (. இதைதான் சொல்லுகிறது எங்கள் பெண் வீட்டாரின் குசும்புகள் என்று).

கற்பனை அபாரமாய் உள்ளது, உங்கள் சொந்த சிந்தனையோ?

இதெல்லாம் ஒரு நகைச்சுவையா?...உடையார் ஒருவரைக் குறி வைத்து தனிப்பட்ட தாக்குதல் நட‌த்தியுள்ளார்...

அண்மைக்காலத்தில் இங்கு இணைக்கப்பட்டதில் நல்லதொரு நகைச்சுவையாக உள்ளது. வாசித்தபோது எனக்கு சிரிப்பு வந்தது. கருத்துக்களத்தை முழுமையாக பார்க்க முடியாமையால் இங்கு ஏதாவது உள்குத்து காணப்பட்டால் அது பற்றி தெரியவில்லை. கதையை கற்பனையில் சிந்தித்து பாருங்கள், சிரிப்பு வரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

-----

அடுத்த நாள் சொல்லிச்சினம்எங்களுக்கு உங்கட மகனை பிடிக்கவில்லை, அவருக்கு பல்லு நீளமாக இருக்கு (. இதைதான் சொல்லுகிறது எங்கள் பெண் வீட்டாரின் குசும்புகள் என்று).

இதனை வாசித்து எனக்கு சிரிப்பு வந்தது. :rolleyes::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை அபாரமாய் உள்ளது, உங்கள் சொந்த சிந்தனையோ?

நன்றி கலைஞன் & தமிழ் சிறி,

இது அந்த மாதிரி ஒரு web ல் பார்த்துக் கொண்டிருக்கும் போது வந்த idea.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலத்தில் இங்கு இணைக்கப்பட்டதில் நல்லதொரு நகைச்சுவையாக உள்ளது. வாசித்தபோது எனக்கு சிரிப்பு வந்தது. கருத்துக்களத்தை முழுமையாக பார்க்க முடியாமையால் இங்கு ஏதாவது உள்குத்து காணப்பட்டால் அது பற்றி தெரியவில்லை. கதையை கற்பனையில் சிந்தித்து பாருங்கள், சிரிப்பு வரவில்லையா?

கலைஞன் இது வரைக்கும் எழுதினது சரி உங்களுக்கு பிடித்திருக்கு ஆனால் அவர் இதற்கு கீழ் என்னுமொரு பந்தி எழுதியிருந்தார் அது யாழ் கள உறவை மறைமுகமாக,தனிப்பட்ட முறையில் நக்கலடிப்பதாக பட்டது அதான் என் கருத்தை எழுதினேன் ஆனால் நான் எழுதின உடன் அவர் அப் பந்தியை நீக்கி விட்டார்...வேண்டுமானால் அவரை திருப்பி எழுத சொல்லுங்கள் உங்களுக்கு அப் பந்தி தனிப்பட்ட தாக்குதலாக தெரியா விட்டால் நான் மன்னிப்பு கேட்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் busy ஆக இருந்துவிட்டேன், நீக்கப்பட்ட பகுதியில் எதுவித தனிப்பட்ட தாக்குதலோ காழ்ப் உணர்ச்சியோ & பொறமையோ எதுவும் இல்லை, இணைத்தபின் யோசித்தபோது அப்பகுதி தேவை இல்லை போல் தோன்றியது அதனால் நீக்கிவிட்டேன்.

நான் ஒன்றும் சூப்பி போத்தலை சூப்பிக் கொண்டிருக்கும் வயதில் இல்லை,

நீக்கப்பட்ட பகுதியை யார் சொல்லியும் இணைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை, அதை வாசித்தவர்கள் யாரை தனிப்பட்ட ரீதியாக தாக்கியிருப்பதாக கற்பனை செய்தார்களோ அவருக்கு தெரிய படுத்துங்கள், அவர் அதை தன்னைதான் தாக்கி எழுதப்பட்டதாக நினைத்து நொந்து நூலாகினார் என்றால், நான் மொட்டை அடிக்கிறேன் (முக்கிய பின் குறிப்பு; நேற்று மொட்டை போட்டபடியால் அடுத்த மொட்டை போட இரண்டு கிழமை எடுக்கும்.

உள ( மன ) நோய்க்கு ஒரு மருந்து:

எதிலும் அவசரம் பரபரப்பு போன்றவை நிறைந்த இன்றைய நாளில் உள நோய் என்பது எளிமையாகி விட்டது .இந்த நோய் ஆளாளுக்கு வேறுபடுகிறது . இந்த நோயே இன்றைய எல்லா நோய்களுக்கும் காரணமாகிறது .

உளம் (மனம்) என்ற உறுப்பு

மனித உடலில் மனம் என்ற தனியான உறுப்பு ஒன்றுமில்லை . இந்த உளத்தை (மனம் ) மூளை மற்றும் நரம்பு மண்டலம் என நாம் கூறலாம். இதுதான் உளம் எனதமிழிலும் மனம் என வடமொழியிலும் வழங்கப்படுகிறது .

உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம் என்கிறார் திருமூலர்.

சினம் இறக்க கற்றலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் என் பராபரமே என்கிறார் தாயுமானவர் . அதனால்தான் அவர் தாயும் ஆனார்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்கிறார் திருமூலர் .

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் என்கிறார் வள்ளுவப் பேராசான் .

இவைகள் எல்லாமே உள்ளத்தை அடிப்படையாக கொண்டவைகளே .

வள்ளுவர் கூறும்போது ஒருவன் எந்த பொருளில் இருந்து பற்று அற்று விலகி நிற்கிறானோ அந்த பொருளினாலே துன்பம் இல்லை என்கிறார் . ஆக இன்றைய உள நோய்களுக்கு வீணான தேவையில்லாத ஏக்கங்களும் கனவுகளும் மூகமையான காரணமாகிறது .

மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர்

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக் கேடும்நோய் என பதிவு செய்கிறார்

விருப்பு வெறுப்பு அறியாமை ஆகிய இந்த குற்றங்கள் இல்லாமல் விட்டொழித்து வாழ்ந்தால் நமக்கு வருவதுற்குரிய துன்பங்கள் இல்லை என்கிறார் வள்ளுவப் பேராசான் .

உள (மன ) நோய் என்பது .

மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்கிறார் நம் பாட்டி ஔவை . தனி மனிதனின் மன நிலை அரக்கனின் தொழிற்சாலை என்கிறான் ஒருவன் . இந்த மன பிழற்ச்சி நோய்க்கு அடிப்படை காரணமே ஏதாவது ஒன்றின் மேல் எண்ணத்தை ஊன்றி தனக்கென ஒரு காரணத்தை கற்பித்துக்கொண்டு அதை நடைமுறை படுத்தும்போது அதில் தோல்வி அடைந்தால் அதை மன நோயாக பதிவு செய்கிறோம்.

நல்ல கணவன் இல்லை,நல்லமனைவி இல்லை ,தாய்தந்தை இல்லை ,என உறவுகளுக்காக ஏங்குவது ஒருவித மனநோய் இல்லாத ஒன்றை தானே கற்பிதம் செய்துகொண்டு நோயாளியாவது ஒருவகை

இந்த உலகில் என்னைபோல சிறந்த அறிவாளி இல்லை என சிலர் கற்பிதம் செய்து கொள்ளுகின்றனர் தான் சொல்லுவதை யாரும் கேட்பதில்லை என்பார்கள் கேட்கிறமாதிரி சொன்னீர்களா என கேட்டால் விழிப்பார்கள் . ஆக நோயும் நோய்க்கு மருந்தும் நீயே என வள்ளுவர் காமத்து பாலில் ஒரு இடத்தில் பதிவு செய்து இருப்பார் அக அதுமாதிரி இவர்கள் தன்னுடைய நோய்க்கு தானே காரணமகிறனர் .

அறிஞ்சர் பெருமக்கள்

எம் இனமான வாழும் ஒரே தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுவார்கள் பாதையை தேடாதே உருவாக்கிகொள் . என்பார் அதுபோல நாம் பாதையை நாமே உருவாக்கி கொண்டால் சிக்கல் தீரும்தனே .

காரல் மார்கஸ் அவர்களை உங்களுக்கு பிடித்தனமது எது என கேட்டதற்கு அவர் உடனே சொன்னது போராட்டம்என எதனைபோருக்கு இந்த போராட்டம் பிடிக்கும் ஆக மனிதன் வாழ்வை எங்கோ தேடிக்கொண்டு இருக்கிறான் . ஆனால் வாழ்வு அவனுள்ளே இருக்கிறது .

மந்திரமல்ல வாழ்வு

மந்திரத்தால் மாங்காய் விழவேண்டும் அதுவும் தான் மடியில் விழவேண்டும் என நினைகிறார்கள் இது அறியமையான்றி வேறல்ல . நமது இலக்கு எதுவுமே முயன்று தேடாமல் கிடைத்துவிடுவதில்லை தேடவேண்டும் . தேடும்போது தான் கிடைக்கும் தேடாமல் எதுவும் கிடைபதில்லை . தேடலுக்கான முறையான காரணமும் இருக்கவேண்டும் .

மனிதன் களிமண் அல்ல

சிலரின் குண நலனும் ஒரு சிலரை பாதித்து மன நோயாளி யாகிவிடுகிறனர். மனிதனுக்கு மனிதன் தனியான குண நலன்கள் இருக்கிறது எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க இயலாது . இந்த வேறுபாட்டை நாம் உள்வாங்கி கொண்டால்தான் நாம் நிம்மதியாக வாழ இயலும் .

வீண் கவலைகள்

சிலர் தானே ஒரு கருத்தை உருவாக்கி கொண்டு எந்த முன்னேர்பாட்டையும் செய்து கொள்ளாமல் எனக்கு வெற்றி கிடைக்க வில்லை என கவலை கொள்ளுகிறனர் . உங்களுக்கான உண்மையான தேடலை முறையான வழிகாட்டலை உரியவரிடம் கேட்டு வெற்றிக்கான பாதையை உருவாக்கி கொள்ளவேண்டும்

எல்லா கவலைகளும் தீர்க்க கூடியதே

மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும் என பதிவு செய்கிறார் திருமூலர் அதாவது உள நோய்க்கு மருந்து உண்டு என்பது திருமூலரின் வாதம் .மன நோய்க்கான காரணங்களை பட்டியலிடுங்கள் பார்வையில் படும்போது எல்லாம் கூர்தீட்டுங்கள் பின்னர் அதன்மீது நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள் என்கிறார் ஒரு மன நல மருத்துவர் நாம் நினைத்து கொண்டிருப்பது போல எல்லா சிக்கல் களும் தீர்க்க முடியாதவைகள் அல்ல தீர்க்க கூடியதே .

சித்தர்கள் உலகில் அறிவில் சிறந்தவர்கள் மனிதனின் எல்லா நோய்களுக்கும் அதன் அறிவியல் அடிப்படையில் இருந்தே மருந்தை கண்டார்கள் . மன நோய்க்கு அடிப்படை காரணம் பித்தம் மிகையாதல் இந்த பித்தத்தின் சீற்றத்தினால்தான் . நோய் தோற்றம் கொள்ளுகிறது என அறிவிக்கிறனர் இந்த நோய்க்கு மருந்து களையும் சொல்லுகின்றனர் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் தூய்மை அடையவும் துரிதமாக பணியாற்றவும் இந்த மருந்துகள் உதவிடகூடும்.

அதிமதுரம் , கோட்டம், மஞ்சிட்டி ஏலக்காய், நெல்லிமுள்ளி ,சிறுநாகப்பூ , சடமாஞ்சில்,சந்தனம்,கிராம்பு, தாளிசபத்திரி,சீரகம் . இவைகளை முறைப்படி உண்டு வர நல்ல உளவற்றால் கிடைத்து வாழ்க்கை இனிக்கும் .

இது குறித்து பின்னர் விரிவாக ஆய்வு செய்வோம்

http://polurdhayanithi.blogspot.com

post-8644-0-98462300-1313977421_thumb.jp

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் அண்ணா................அக்கோய் அழ போறா....இப்படிலாம் நீங்க அவாவ கடிக்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையை வாசித்து முதலில் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள் பிறகு மற்றவருக்கு அறிவுரை சொல்லலாம்...நீக்கப்பட்ட பகுதியில் எவ்வித தனிப்பட்ட தாக்குதல் இல்லா விட்டால் எதற்காக நான் சொன்ன பிறகு அதை நீக்கினீர்கள்? மனசாட்சி உறுத்தியதாக்கும்...சூப்பி போத்தலை சூப்பிக் கொண்டு இருப்போர் நியாயமாய் தான் எழுதுகிறார்கள் ஆனால் தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களுக்கு தான் எதை எழுத வேண்டும்,எழுதக் கூடாது எனத் தெரியாது...தனிப்பட்ட ரீதியில் அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களைப் பற்றித் தான் எழுதி இருக்குது என்று சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...உங்களுக்கு தைரியம் இருந்தால் முதல் எழுதினதை அப்படியே திருப்பி எழுதுங்கள் இல்லா விட்டால் விட்டுட்டு போயிட்டே இருங்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் அண்ணா................அக்கோய் அழ போறா....இப்படிலாம் நீங்க அவாவ கடிக்கலாமோ?

நல்லா உசுப்பேத்திடிங்க கூத்துபார்க்க......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.