Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் மலர் தான் மலிவல்ல...?!

Featured Replies

பெண் மலர் தான் மலிவல்ல...?!

பெண் மலர் தான் மலிவல்ல...

சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது ,

சில்லிட்டு உறையாமல்

சிக்காமல் மீண்டு எழுந்தால்;

பெண் மலர் தான் மலிவல்ல...!

ஆப்பிள் தேவதைகள் தான் ...

அழுகிப் போகாமல் காக்கும் வரை;

சாக்லேட் தேவதைகள் தான் ...

சாக்கடையில் நழுவாமல்

தன்னைத் தானே காக்கும் வரை;

பெண் மலர் தான் மலிவல்ல!

ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்...

ஏவல்களில் தேய்ந்து போன

பெண்ணியத்தின் முதுகெலும்பில்

விரிசல்களை எண்ணக்கூட

வராதொழிக்கும் ஆதாமை

சட்டை செய்யாது

விட்டு விடுதலையாகி

சிட்டுப் போல் சிறகு விரித்து

பறந்து திரிந்து

ஊரில் பல

பாரில் பல

கற்றுத் தெளிந்தாளானால்

பெண் மலர் தான் மலிவல்ல!

நாசாவில் ஏறி விண்வெளிக்குப் போனவள்

கல்பனா சாவ்லா;

நாளுக்கு நாள்

தெருவுக்குத் தெரு ,

புறம் பேசியே

நாசமாகிப் போனவள்

எதிர் வீட்டுக் கமலா...

அவளும் பெண்ணே!

இவளும் பெண்ணே!

தன்னைத் தானுணர்ந்து

வாழும் வகை புரிந்துவிடின்

பெண் மலர் தான் மலிவல்ல!

சந்தோசம் சில நேரம்...

சங்கடங்கள் பல நேரம் ,

எல்லாம் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்...!!!

பெண்ணுக்குப் பெண்ணே எதிராகி

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொழுத்துவோம்;

பட்டங்கள் ஆள்வதும்

சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்தும் முன்னே

நிமிர்ந்த நன்னடை

நேர் கொண்ட பார்வை

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நீர்மை

தனக்குத் தானே

உருவேற்றிக் கொண்டு

மனதில் உறுதி கொள்

வாக்கினிலே தெளிவு கொள்

பெண்ணே நீ

மலர் தான் மலிவல்ல என்றுமே!!!

-கார்த்திகா

  • கருத்துக்கள உறவுகள்

"ஆப்பிள் தேவதைகள் தான் ...

அழுகிப் போகாமல் காக்கும் வரை" - சூப்பர் வசனம்

குட்டி நல்ல கவிதை இணைப்பிற்கு நன்றி, பெண் பெண்ணுக்கு மட்டுமல்ல எதிரி, எல்லாரையுமே நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள்.

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே மனிதர் யாரும் இல்லையோ

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான்

இறைவன் என்பவனே

கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த

இறைவன் கொடியவனே இறைவன் கொடியவனே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்

வணங்குவேன் தாயே

இன்று மட்டும் அமைதி தந்தால்

உறங்குவேன் தாயே ஓ.. உறங்குவேன் தாயே

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இசை : விஸ்வநாதன்–ராமமூர்த்தி

படம்: புதிய பறவை

பாடல்: கவிஞர் கண்ணதாசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை குட்டி..இணைப்பிற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.