Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுதில்லி உயநீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு இரண்டு பேர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுதில்லி உயநீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு இரண்டு பேர் பலி.

07 செப்டம்பர் 2011

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த புதுதில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்நாம் நுழைவாயிலில் இன்று காலை 10-17 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியார்கள், வழக்கு தொடர்புடையோர் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது இந்த குண்டு வெடிப்பின் காரணமாக சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது.

இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் மரணித்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்க முடியாத நிலையில் மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

சென்ற ஏழாம் நுழைவாயிலில் வெடித்த நிலையில் இன்று நடந்துள்ளது இரண்டாவது குண்டு வெடிப்பாகும். இதனால் இந்தியா முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூட்கேஸ் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்திருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/66792/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆக.. ரெண்டு பேரா... செத்தான்.

ச்சீய்... குண்டுக்கே, மரியாதை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக.. ரெண்டு பேரா... செத்தான்.

ச்சீய்... குண்டுக்கே, மரியாதை இல்லை.

இது ஒரு பிள்ளையார் சுழி மட்டும் தான்!

இனித்தான் கடிதத்தின் ஆரம்பமே இருக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி (காணொளி)

1699641598images.jpgடெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அருகே நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 9 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளன‌ர். 45க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எ‌ப்போது‌‌ம் பரபர‌ப்புட‌ன் காண‌ப்படு‌ம் டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ன் 5வது நுழைவு வா‌யி‌ல் அருகே இ‌ன்று காலை ச‌க்‌தி வா‌ய்‌ந்த கு‌ண்டு வெடி‌த்ததாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

பல‌த்த ச‌த்த‌‌த்துடன‌் இ‌ந்த கு‌ண்டுவெடி‌த்ததாகவு‌ம் அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 27க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ள் அனைவ‌‌ரு‌ம் அ‌ரு‌கி‌ல் உ‌ள்ள மரு‌த்துவமனை‌‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த கு‌ண்டுவெடி‌ப்பு கு‌றி‌த்து தகவ‌ல் அ‌றி‌ந்து‌ம் காவ‌ல்துறை‌யின‌‌ர் வ‌ந்து ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டன‌ர். ஆனா‌ல் இ‌ந்த கு‌ண்டுவெடி‌ப்பை ‌நிக‌ழ்‌த்‌தியவ‌ர்க‌ள் யா‌ர் எ‌ன்று தெ‌ரிய‌வி‌ல்லை.

தடய‌விய‌ல், வெடிகு‌‌ண்டு ‌நிபுண‌ர்க‌ள் ‌விரை‌ந்து வ‌ந்து சோதனை மே‌ற்கொ‌‌ண்டன‌ர்.

கு‌ண்டுவெடி‌ப்பை தொட‌ர்‌ந்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் பெரு‌ம் பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் காவல‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

http://youtu.be/b-xJCpsNN8o

http://www.tamilthai.com/?p=26162

இது டெல்லியில் நடந்த முப்பதாவது குண்டு வெடிப்பு. பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும் இந்தியாவின் பலம் என்னவென்று :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி தீவிரவாத (Huji-ஹூஜி) அமைப்பு பொறுப்பேற்புள்ளது.

இது தொடர்பாக அந்த தீவிரவாத இயக்கத்திடமிருந்து இ-மெயில் வந்துள்ளது. harkatuljihadi2011@gmail.com என்ற ஐடியிலிருந்து வந்துள்ள அந்த மெயிலில், இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் எல்லா முக்கிய நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.

(சமீபத்தில் ராஜிவ் கொலை விவகாரத்தில் தூக்கு தண்டனை பெற்ற மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

இந்த மெயில் வந்துள்ளதை மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (National Investigation Agency) உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது குறித்து முழுமையாக விசாரித்த பின்னரே ஹூஜிக்கு இதில் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று என்ஐஏ டைரக்டர் ஜெனரல் சின்ஹா கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் ஹூஜி அமைப்புக்கு தொடர்பு இருந்தது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

26/11 மும்பை தாக்குதலில் கொலாபாவில் உள்ள சபத் ஹவுஸ் மையத்தில் தாக்குதல் நடத்தியது இந்த அமைப்பு தான்.

இந் நிலையில் டெல்லி குண்டுவெடிப்புக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு வங்கதேசம், பாகிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசம் சென்றுள்ள நிலையில் டெல்லியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் ஹூஜி அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2011/09/07/harkat-ul-jihad-al-islami-huji-claims-responsibility-aid0090.html

குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இந்தியாவின் எல்லா முக்கிய நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.

போட்டு தள்ளுங்கப்பா எல்லா இந்திய அநீதி மன்றங்களிலும்.

பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசம் சென்றுள்ள நிலையில் டெல்லியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் ஹூஜி அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.on...ty-aid0090.html

சிங்கர் வங்கத்திலேயென்றால் வங்கத்தையும் சேர்த்துகொள்ளுங்க.

தில்லி தாக்குதல் உள்நாட்டு பயங்கரவாதிகள் செயல்: சிதம்பரம்

இந்தியத் தலைநகர் தில்லியின் உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்த வாரம் நடத்தப்பட்டிருந்த குண்டுத் தாக்குதலை இந்தியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலின் பின்னர் முதல்தடவையாக பேட்டியளித்துள்ள சிதம்பரம், இந்தியாவில் நடக்கின்ற தாக்குதல்களில் எல்லை தாண்டிய தீவிரவாதமே முக்கிய பங்கு வகிக்கிறது என்றூ இனிமேலும் சொல்ல முடியாது என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல் இப்போதும் இருக்கவே செய்கிறது என்றாலும், உள்நாட்டிலேயே தலைதூக்கியுள்ள பயங்கரவாத குழுக்கள் மீது தாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.

தில்லி உயர்நீதிமன்ற வாயிலில் கடந்த புதனன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டும் எழுபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருந்தனர் .

http://www.bbc.co.uk/tamil/india/2011/09/110909_chidambaramiv.shtml

  • கருத்துக்கள உறவுகள்

தில்லி தாக்குதல் உள்நாட்டு பயங்கரவாதிகள் செயல்: சிதம்பரம்

புலியை இந்தியா அழிச்சதால்.... உள் நாட்டுப் பயங்கரம், என்று சொல்ல வேண்டிய நிலைமைக்கு சிதம்புறம் வந்திட்டார்.

பாகிஸ்தானை நேரடியாக குற்றம் சாட்ட, வக்கில்லாத இந்திய காங்கிரஸ் அரசியல்வாதிகள். கடைசியில் தங்களின் மக்கள் மேல் பழி போட்டு தப்பிக்கும், சுத்த அரசியல் கோழைத்தனம்.

நல்ல அரசியல் வாதியாக இருந்தால்... தனக்கு பொருத்தமில்லாத பதவியை, தூக்கி எறிஞ்சுட்டு... மாடு மேய்க்கப் போயிருப்பான்.

புலியை இந்தியா அழிச்சதால்.... உள் நாட்டுப் பயங்கரம், என்று சொல்ல வேண்டிய நிலைமைக்கு சிதம்புறம் வந்திட்டார்.

பாகிஸ்தானை நேரடியாக குற்றம் சாட்ட, வக்கில்லாத இந்திய காங்கிரஸ் அரசியல்வாதிகள். கடைசியில் தங்களின் மக்கள் மேல் பழி போட்டு தப்பிக்கும், சுத்த அரசியல் கோழைத்தனம்.

நல்ல அரசியல் வாதியாக இருந்தால்... தனக்கு பொருத்தமில்லாத பதவியை, தூக்கி எறிஞ்சுட்டு... மாடு மேய்க்கப் போயிருப்பான்.

ஆனால் பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிகளவு முஸ்லீம்கள் உள்ளார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிகளவு முஸ்லீம்கள் உள்ளார்களே?

இந்தியாவின் காந்தியக் கொள்கைக்கு கிடைச்ச பரிசு, இது தான்....

காந்தியின்ரை பேரைச் சொல்லி.... இங்கிலாந்திலை கோப்பை களுவின நோனியாவும் காந்தி ஆயிட்டா....

8514045D8DE9E4FA658AA7_Large1.jpgedwina_nehru.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிய குழு ஒன்றினால் தான் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டதாக இங்குள்ள சீக்கியர்கள் கூறுகிறார்கள்.நீதி மன்றத்துக்கு வழக்குக்காக வந்த சீக்கியர் தான் தாக்குதல் இலக்கு என்று கூறுகிறார்கள்.இதை தான் சிதம்பரமும் மறைமுகமாக கூறுகின்றாரா என தெரியவில்லை.

சீக்கிய குழு ஒன்றினால் தான் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டதாக இங்குள்ள சீக்கியர்கள் கூறுகிறார்கள்.நீதி மன்றத்துக்கு வழக்குக்காக வந்த சீக்கியர் தான் தாக்குதல் இலக்கு என்று கூறுகிறார்கள்.இதை தான் சிதம்பரமும் மறைமுகமாக கூறுகின்றாரா என தெரியவில்லை.

மாமியார் பொற்கோயிலை தாக்கினார். மருமகள்? முடியுமா? விரும்பினால் முடியும், மனமோகம் சிங்கு அதற்கும் ஆமா போடத்தான் வேண்டும்.

மலையாளிகள் சோனியாவுக்காக பாதுகாப்புகொள்கை வகுக்க தொடங்கிய நாள் முதல் இந்தியாவின் ஆள்புலக் கட்டுறுதி (territorial integrity ) சிதறடிக்க பட்டுவிட்டது. இதில் நிறைவு காண்பது மலையாளிகளின் பொக்கெட்டும், சோனியாவின் மனமும் மட்டுமே.

இந்தியா எவ்வளவுக்கு பேவாரியென்று காட்டிக்கொள்கிறதோ அவ்வளவுக்கு சீனன் இலங்கைகுள் காலடி எடுத்து வைப்பான். சீனன் எத்தனை அடி முன்னுக்கு வைக்கிறனோ அத்தனை மடங்காலை சிங்களவன் தமிழனை அடிப்பான். எவ்வளவுக்கு சீனனுக்கு தான் லஞ்சம் கொடுத்து அலுவல் செய்ய ராசபக்சாக்கள் ஆட்சியில் இருக்க வேணுமோ அவ்வளவுக்கு நமக்கு இந்தியாவில் பகுத்தறிவான அரசு உருவாகுவதற்கு காங்கிரஸ் போச்சேர வேண்டும். கருணாநிதி போய்ச்சேர்ந்தவுடன் எவ்வளவு திருப்ப்திகர உணர்வு பெற்றுக்கொண்டோமோ, அவ்வளவு திருப்தி திரும்ம வரும் காங்கிரஸ் போனவுடனும். ஆகையால் கடந்த தேர்தலில் எவ்வளவு ஆதரவு சீமானுக்கு கொடுத்தீர்களோ அவ்வளவு ஆதரவு இந்தமுறை சீமானுக்கும் அன்ன கசாருக்கும் கொடுக்க தயாராக இருங்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.