Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதனிலிருந்து மின்சாரம்: ஜப்பானின் புதிய முயற்சி

Featured Replies

உலகம் தற்போது எதிர்நோக்கி வரும் பிரதான சவால்களில் ஒன்று மின் சக்திப் பற்றாக்குறையாகும்.

வளர்ந்து வரும் நாடுகள் முதல் வளர்ச்சியடைந்த நாடுகள் வரை அனைத்தும் இதற்கு முகங்கொடுத்து வருகின்றன.

குறிப்பாக ஜப்பான் தற்போது மிகப் பெரியளவில் மின்சக்தி பற்றாக்குறைக்கு முகங்கொடுத்து வருகின்றது.

அண்மையில் அந்நாட்டைத் தாக்கிய சுனாமியால் அங்கு காணப்பட்ட பல அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

இதனால் ஜப்பான் வரலாறு காணாத மிக மோசமான மின்சாரப் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்துள்ளது.

இதனை ஈடுசெய்யும் முகமாக தற்போது ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் புதுவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒன்றே மனித அசைவுகள் மற்றும் செயற்பாடுகளிலிருந்து மின்சக்தியைப் பெற்றுக் கொள்ளுதலாகும்.

நமது ஒவ்வொரு அசைவுகளிலும் குறிப்பிட்ட அளவு சக்தி வெளியாகிறது.

இச்சக்தியை சரியான விதத்தில் பயன்படுத்தி மின்சக்தியாக மாற்றுதலே அவர்களின் முயற்சியாக உள்ளது.

பல்வேறு விதங்களில் இவற்றைப் பயன்படுத்த ஆராய்ச்சியளர்கள் முயன்று வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விளக்கத்திற்கு இக்காணொளியை பார்க்கவும்

MTQ3MGU5MmZmMTM5YjMmb2Y9MA==.gif

இத்தகைய முயற்சிகள் இலங்கை போன்ற மின்சக்திப் பற்றாக்குறைக்கு முகங்கொடுக்கும் நாடுகளுக்கு பெரும் உதவியாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

http://www.virakesar...asp?key_c=33822

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் இணைப்பிற்கு, ஆமாம், அது சரிதானே, நம்ம சம்சாரம் ஒரு மின்சாரமே..........

பெண்களில் மின் சேமிப்பு கலன்களை உடைகள் மதிரி தயாரித்துவிட்டால், பெண்களுக்கும் பாதுகாப்பா (தொட்டா சாக் அடிக்கும், பார்த்தாலே சாக்கடிக்கும்...) இருக்கும், வீட்டுக்கு வெளிச்சமும் ஆச்சு,

அதுதான் விசுகுவிற்கு (சாரி நடிகர் விசு) தெரிச்சி பாட்டு பாடியிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி இந்தியாவையும், சீனாவையும் அசைக்கேலாது எண்டு சொல்லுறியள்!!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
http://www.youtube.com/watch?v=8wV7AlZ3waU&feature=related

Edited by உடையார்

ஒரு நாடு முன்னேற, முன்னேறிய நாடுகள் தொடர்ந்தும் அதை தக்கவைக்க மின்சாரம் மலிவான விலையில்

உற்பத்திசெய்யப்படல் வேண்டும். அதேவேளை அண்மைக்கால அணு மின்னாலைகள் விபத்தும் பாதுகாப்பும் முக்கியமாகின்றது. அந்த வகையில் நீர்மின்சார உற்பத்தியே மலிநாவதும் பாதுகாப்பானதுமாக இதுவரை உள்ளது. அதை 'மனித மின்சாரம்' முறியடிக்குமா?, பார்க்கலாம்.

வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்: ஆய்வாளர் தகவல்

மின்சாரத்தின் பயன் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மின்சாரத்தின் உபயோகம் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது.

ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் கிரைண்டர் மிக்சிகள் ஆனது போல் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கனரக எந்திரங்கள் மூலம் இயங்கும் தொழிற்சாலைகள் வரை மின்சாரத்தை நம்பித்தான் உள்ளன.

அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களும் மின்சாரத்தை நம்பியே இருக்கும் நிலையில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி இருக்கிறது.

மின்சார தட்டுப்பாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு நாடும் பல்வேறு மாற்று திட்டங்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு ஆர்வம் காட்டி வருகின்றன.

அணு மின்சக்தி, தண்ணீர், கடல் அலை, காற்று மற்றும் எரிவாயு போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை பயன்படுத்தி மின்சார தட்டுப்பாட்டை போக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். அழுகும் நிலையில் இருக்கும் வாழைப்பழம் மற்றும் விற்பனைக்கு லாயக்கு இல்லை என்று கழிக்கப்படும் சிறிய வாழைப்பழங்கள் போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று அவுஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் பில் கிளார்க் மற்றும் அவரது குழுவினர் இணைந்து வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய நாட்டின் வாழைப்பழ உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அணுகி எங்களிடம் ஆண்டுதோறும் ஏராளமான அளவு வாழைப்பழங்கள் அழுகிப் போகின்றன.

மேலும் விற்பனைக்கு பயன்படாத நிலையில் உள்ள வாழைப்பழங்களும் வீணாக தெருக்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் வீசப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி ஏதாவது நல்லது செய்ய முடிந்தால் பாருங்கள் என்று கூறினார்கள்.

இதை மனதில் கொண்டு பில் கிளார்க் மற்றும் அவரது குழுவினர் வீணாகப் போகும் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கினார்கள்.

அப்போதுதான் வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தனர். இதற்காக ஆய்வுக்கூடத்தில் பெரிய தொட்டி ஒன்றை அமைத்தனர். இதில் வாழைப் பழங்களை போட்டு காற்று புகுந்து விடாதபடி சீல்வைத்து மூடினார்கள்.

வாழைப்பழம் விரைந்து அழுக வேண்டும் என்பதற்காக சில வேதிப் பொருட்களும் அதனுடன் கலந்தனர். இதன் காரணமாக வாழைப்பழம் அழுகி அதில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவில் வெளிப்பட ஆரம்பித்தது.

இந்த மீத்தேன் வாயு மூலம் ஜெனரேட்டர் ஒன்றை இயக்கி அதன்மூலம் மின்சாரம் தயாரித்து காட்டினார்கள். இந்த கண்டுபிடிப்பு குறித்து பில் கிளார்க் கூறும் போது, ஆய்வுக்கூடத்தில் எங்கள் பரிசோதனைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து பெரிய அளவில் தொழிற்சாலைகள் நிறுவி அதன் மூலம் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்.

இந்தப்பணி சாதாரணமாக இருக்காது. இது சவால் நிறைந்த பணியாகும். காரணம் மற்ற மின்சாரம் தயாரிக்கும் முறையில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகும்.

வியாபாரிகளின் கணக்குப்படி ஆண்டு தோறும் சுமார் 20 ஆயிரம் டன்கள் எடை அளவு வாழைப் பழங்கள் குப்பைக்கு வருகிறது. இவை அனைத்தையும் சேகரித்து தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும்.

பின்னர் இவற்றை தரம் பிரித்து சுத்தம் செய்து பெரிய தொட்டிக்குள் போட வேண்டும். அதோடு அவை விரைவில் மக்கிப்போய் அழுக வேண்டும் என்பதற்காக உரிய வேதிப் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.

இந்தக் கலவை ஒருசில நாட்கள் அப்படியே இருக்கவேண்டும். அதன் பிறகு அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிப்படும். இந்த மீத்தேன் வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டர்களை இயக்கி அதன் மூலம் வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை இயக்கலாம்.

தற்போதைய கணக்குப்படி 60 கிலோ வாழைப்பழத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் ஒரு மின் விசிறியை 30 மணி நேரம் தொடர்ந்து ஓட வைக்க முடியும்.

இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் விரிவடையும்போது அதிக அளவு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறி இருக்கிறார் ஆராய்ச்சியாளர் பில் கிளார்க்.

http://www.lankasrit...e4q09racb3lOe42

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கலவை ஒருசில நாட்கள் அப்படியே இருக்கவேண்டும். அதன் பிறகு அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிப்படும். இந்த மீத்தேன் வாயுவை பயன்படுத்தி ஜெனரேட்டர்களை இயக்கி அதன் மூலம் வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை இயக்கலாம்.

மனிதர்களும், மாடுகளும் வெளி விடுகின்ற மீத்தேன் வாயு, ஓசோன் கவசத்தை உடைப்பதில் பிரதான பங்கு வகிப்பதாகச் சொல்லப் படுகின்றது!

மாடுகள் வெளிவிடும் ஓசோன் வாயுவைச் சேமிக்க ஒரு வழி கண்டு பிடித்தால், பல பிரச்சனைகளை, சுலபமாகத் தீர்த்து விடலாம்!

இணைப்புக்கு நன்றிகள், குட்டி!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.