Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி வலையில் வீழ்ந்த ஜெயலலிதா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

வென்றாலும் வீழ்ந்தாலும் அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தொடங்குவதற்கு முன்பே, ''இந்தத் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டி!'' என்று கருணாநிதி அறிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக சவாரி பாலிடிக்ஸ் செய்துவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியின் அறிவிப்புக்குக் கருத்து சொல்லாத தங்கபாலு, ''காங்கிரஸும் தனித்துப் போட்டி!'' என்று காமெடி பண்ணினார். ''இத... இதத்தான் எதிர்பார்த்தேன்' என்றார் இளங்கோவன். தீராத தலைவலியில் சிக்கி இருக்கும் சிதம்பரத்துக்கு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை. ஜி.கே.வாசன் இப்போது கப்பலைப்பற்றி மட்டுமே பேசுகிறார். கட்சிபற்றிப் பேசுவது இல்லை. தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் ஃபெவிக்கால் வைத்து ஒட்டும் காரியத்தை எப்போதும் பார்க்கும் காங்கிரஸ் பத்திரிகையான 'தேசிய முரசு’கூட, 'இது தி.மு.க-வுக் கும் நல்லது... காங்கிரஸுக்கும் நல்லது’ என்றது. தன்னைச் சமாதானப்படுத்த டெல்லியில் இருந்து யாராவது வருவார்கள் என்று கருணாநிதி காத்திருந்தார்; ஏமாந்தார். மக்களவைத் தேர்தலைத் தவிர, வேறு எதிலும் அக்கறை காட்டாத காங்கிரஸ் மேலிடத்துக்கு, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போகும் விஷயம் தெரியுமா என்றே தெரியவில்லை!

1.jpg

கருணாநிதியின் அறிவிப்பு தொல்.திருமாவளவனுக்கு மட்டும்தான் பெரும் தொல்லையாகப் போனது. ''காங்கிரஸைப் பழிவாங்குவதாக நினைத்து சிறுத்தைகளையும் ஒதுக்கிவிட்டார்!'' என்று அவரால் ஒப்பாரிவைக்கவே முடிந்தது. ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதிக்காக எல்லா வலிகளையும் தாங்கிய திருமாவை உதாசீனப்படுத்தியது, கருணாநிதியின் அரசியல் தீண்டாமையாகவே கணிக்க வேண்டியுள்ளது. அன்றைய முகமூடிக்கு திருமா தேவைப்பட்டார். இன்று வேண்டாம் என்று கருணாநிதி நினைக்கிறார்.

இந்த அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், சிறுத்தைகள் மூன்றுமே தேர்தலை தனித் தனியாகச் சந்திக்கின்றன!

அடுத்து அ.தி.மு.க!

சட்டமன்றத் தேர்தல் வெற்றிச் செய்தி வர வர... பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, ''இது தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார். மறு நாள் எம்.ஜி.ஆர். சிலைக்கு வெயிலில் மாலை அணிவித்து வணங்க வந்தபோது, ''இது அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார். தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமி என்று வலுவான கூட்டணி அமைத்து வென்றவர் மன நிலையில் அன்றே மாற்றம் தெரிந்தது. விஜயகாந்த்தை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர எத்தகைய திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளும் கெஞ்சல்களும் அ.தி.மு.க. தரப்பால் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிந்தவராகவே இருந்தாலும், வெற்றியை விஜயகாந்த்துடன் பங்கிட்டுக்கொள்ள ஜெயலலிதா தயாராக இல்லை என்று அப்போதே வெளிச்சத்துக்கு வந்தது!

2.jpg

இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் பக்கமாக அடித்த டார்ச்சை கருணாநிதி கட் செய்தது... ஜெயலலிதா சிந்தனையில் புது வெளிச்சம் பாய்ச்சியது. 'தோற்ற கருணாநிதியே தனியாக நிற்கும்போது, ஜெயித்த நமக்கு என்னவாம்?’ என்று ஜெயலலிதா நினைத்தார். சட்டமன்றத் தேர்தலில் தோற்ற கருணாநிதி, உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டால், பெரிய பிரச்னை எதுவும் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு இதில் சிறு சறுக்கல் ஏற்பட்டாலும் பெரும் சங்கடம் ஏற்படும் என்பதை அவரிடம் சொல்வதற்கு எவரும் இல்லை!

தே.மு.தி.க-வுக்கு அ.தி.மு.க-விடம் இருந்து அழைப்பே இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும்தான் பழகிய பாசத்துக்காக சீனியர் அமைச்சர்களிடம் பேசிப் பார்த்தார். ''அம்மா சொன்னதும் முதல் போன் உங்களுக்குத்தான் வரும்'' என்றார்கள் அமைச்சர் கள். ஜெ. சொல்லவும் இல்லை... போன் வரவும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும்தான், நிறைவேறாத கோரிக்கை என்று தெரிந்தும் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் இயல்பு உண்டு. மேயர் வேட்பாளர் 10 பேரை ஜெயலலிதா அறிவித்த பிறகும் நம்பிக்கையோடு பேச வந்தார்கள். 'இன்னுமா வருகிறீர்கள்?’ என்று நகராட்சிப் பட்டியலை விட்டார் ஜெ. 'இது சரியல்லவே’ என்று உடன்பாடான விமர்சனத்தையே மார்க்சிஸ்ட் விட்டது. 'இன்னுமா நம்புகிறீர்கள்?’ என்று ஊராட்சித் தலைவர் பட்டியலை விட்டார் ஜெ. மார்க்சிஸ்ட்டுகளுக்கு லேசாக ரோஷம் வந்தது. ஆனாலும், தா.பாண்டியனின் பக்தி தொடர்ந்தது. 'அவசரப்பட வேண்டாம்’ என்று மார்க்சிஸ்ட்டுகளுக்கு அறிவுரை சொன்னார். பெரிய வேட்டிகளே பறந்தபோது, சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமியால் என்ன செய்ய முடியும்? வேறு வழி இல்லாமல் தே.மு.தி.க. பட்டியலை வெளியிட்டது. மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. கடந்த தேர்தலில் 'வைகோ வேண்டாம்’ என்று முதலியே முடிவு எடுத்துக் காலம் கடத்தியது போல, இந்த முறை விஜயகாந்த், கம்யூனிஸ்ட்டுகள் விஷயத்தில் ஜெயலலிதா நடந்துகொண்டார். இது நல்ல அரசியலும் அல்ல... கூட்டணி தர்மமும் அல்ல. சக அரசியல் சக்திகளை வெறும் கறிவேப்பிலையாகக் கருதும் எண்ணம், எதிர்பாராத நேரத்தில் சறுக்கலையே கொடுக்கும். நல்லதையும் அல்லதையும் சொல்ல நண்பன் இல்லாதது சொந்த வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; பொது வாழ்க்கைக்கும் இழப்பாகவே ஜெயலலிதாவுக்கு இருக்கப்போகிறது!

1.jpg

இதை ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் உணர்வாரோ, இல்லையோ திருச்சி மேற்கு இடைத்தேர்தல் உணர்த்தும்!

'தி.மு.க, அ.தி.மு.க. இரண்டுடனும் கூட்டணி இல்லை’ என்று அறிவித்த வைகோ, எல்லா இடங்களுக்கும் வேட் பாளர் அறிவித்தார். பாரதிய ஜனதா எப்போதும் தனியாகவே இருக்கும். இப்போதும் அப்படியே. திருமாவளவனுடன் கூட்டணி போடலாம் என்று நினைத்த டாக்டர் ராமதாஸ், அதையும் செய்யாமல் தனியே நிற்கிறார். இப்படி எல்லோருமே தனியாக நிற்கிறார்கள்.தமிழ் மக்கள் பார்ப்பது வித்தியாசமான காட்சி. எல்லாக் கட்சிகளும் இப்படி தனித்து எப்போதும் நின்றது இல்லை. ''தனித்துப் போட்டியிடும் தைரியம் எனக்கு மட்டும்தான் உண்டு'' என்ற விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் சேர்ந்தார். ''எல்லோரும் தனித்து நின்றால் நானும் தயார்'' என்ற டாக்டர் ராமதாஸ் எல்லாக் கூட்டணியிலும் இருந்துவிட்டார். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் திட்டமிடல்களும் இல்லாமலேயே கட்சிகள் பிரிந்துவிட்டன. முதன்முதலாக தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதைத் தெரிந்துகொள்ளப்போகிறோம். மொத்த வாக்காளர்களைக் கட்சிரீதியாகக் கணக்கிடப்போகிறோம்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல்தான் முன்னோட்டம். ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலத்தைக் காட்டி, அந்தத் தேர்தலில் கூட்டணி அமைக்க இதுவே அடித்தளம் அமைக்கப்போகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கருணாநிதி நாட்டுக்கு நல்லதே செய்திருக்கிறார்!

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை. இணைப்பிற்கு நன்றி கந்தப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12.jpgட்சியிலோ, பதவியிலோ ம.தி.மு.க. இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணித்து விட்ட நிலையில், ம.தி.மு.க.வில் இருந்து ஒவ்வொருவராய் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், நெல்லை மாநாட்டில் கூடிய கூட்டத்தைப் பார்த்து, ‘‘நாம ஆளுங்கட்சி ஆயிட்டோமா?’’ என்று வைகோவே வியந்து போனார்.

அண்ணா பிறந்தநாளையொட்டி, நெல்லையில் ம.தி.மு.க. சார்பில் மாநாடு நடைபெறும் என்று வைகோ அறிவித்ததும் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு சற்று நெருடல். நிதி நெருக்கடிதான் அதற்குக் காரணம். ‘‘மாநாட்டிற்கு 50 லட்ச ரூபாய் செலவாகும். இருபது லட்ச ரூபாய் நிதி பிரித்து விடலாம், மீதிப் பணத்தை தலைமைக் கழகம் தந்து விட வேண்டும்’’ என்று நிர்வாகிகள் சொன்னதில் வைகோவுக்கு சற்று ஏமாற்றம்தான். ஆனாலும் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால், நடந்தது வேறு. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் பம்பரமாய் சுழன்று 45 லட்ச ரூபாய் நிதியை வைகோவிடம் ஒப்படைக்க, உற்சாகமானார் வைகோ. இது தவிர, நெல்லை மாவட்டத்தில் நிதி வசூல் செய்ய அவரது நண்பர் குட்டி என்ற சண்முகசுந்தரம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர்.

வைகோ கைகாட்டிய தொழிலதிபர்களைப் போய் அவர்கள் பார்க்க, மாநாட்டு நிதி வசூல் மட்டுமே 76 லட்சத்தைத் தாண்ட வைகோவுக்கே ஒன்றும் புரியவில்லை. 18 ஆ ண்டு காலம் எந்த அரசியல் அதிகார பலத்திலும் இல்லாத நிலையில், இவ்வளவு பணம் கிடைத்ததுதான் அதற்குக் காரணம்.

இதனைத் தொடர்ந்து மாநாட்டுப் பணிகள் தொடங்கின. நகர் முழுவதும் ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், ‘‘எனது படத்திற்குப் பதில் அண்ணா படத்தைப் போடுங்கள். அவர் சொன்ன சிந்தனை வாக்கியங்களை மட்டும் எழுதி வையுங்கள்’’ என்பது வைகோவின் உத்தரவு. ஆனால், யாரும் அவர் சொன்னதைக் கேட்கவே இ ல்லை. பேனர்களில் தொடர்ந்து வைகோ படம் மட்டும் இடம்பெறவே, கடுப்பான வைகோ, ‘‘மற்ற மாவட்டத்துக்காரர்கள் நான் சொல்வதைக் கேட்பார்கள். ஆனால், திருநெ ல்வேலிக்காரர்கள் மட்டும் நான் சொல்வதைக் கேட்கவே மாட்டார்கள்’’ என்று கோபப்பட்டார்.

உடனடியாக, தலைமைக் கழகம் மூலம் நூறு போர்டுகள் தயார் செய்யப்பட்டு, அதில் அண்ணாவின் படம், அவர் சொன்ன வாசகங்கள் மட்டும் எழுதப்பட்டு நகர் முழுக்க வைக்க உத்தரவிட்டார்.

தவிர, கட்சி நிர்வாகிகள் தங்குவதற்கு நெல்லையில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் 115 அறைகள் புக் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வைகோ கடந்த 14-ம் தேதி இரவே நெல்லை வந்து அவரது தம்பி ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தார். மாநாடு நடைபெறும் அன்று வெளிவந்த அனைத்து பத்திரிகைகளிலும், வைகோவை வரவேற்று விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர், ‘‘நாம் ஆளும் கட்சி ஆயிட்டோமா’’ என்றும் தன் வியப்பை வெளிப்படுத் தியிருக்கிறார்.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

இப்படி பக்கா முன்னேற்பாடுகளைத் தொடர்ந்து மாநாடு தொடங்கியது. மாலை 4 மணிக்குத் தொடங்கிய மாநாட்டை இரவு 10.30 மணிக்கு முடித்து விட வேண்டும் என்று வைகோ கட்டளையிட்டிருந்தார். ஆனால், நிலைமை தலைகீழாய் மாறியது. சாரை சாரையாய் தொண்டர்கள் பஸ், வேன்களில் அணிவகுத்து வந்து கொண்டே இருந்தது தான் இதற்குக் காரணம்.

தொண்டர்களின் கூட்டத்தைப் பார்த்து உற்சாகமான வைகோ, மாநாட்டு நேரத்தை நீடிக்குமாறு நாஞ்சில் சம்பத்திற்கு சிக்னல் கொடுக்க, இரவு 9.30 மணிக்கு மைக் பிடித் தவர் 11.15 மணிக்குத்தான் முடித்தார். இதனைத் தொடர்ந்து பேச எழுந்த வைகோ சுமார் இரண்டரை மணி நேரம் பேசி இரவு 1.35 மணி வரை கூட்டத்தைக் கட்டிப் போட்டார். அவரது பேச்சை அவரது மனைவி ரேணுகாதேவி, மகள் ராஜேஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினர் முன் வரிசையிலிருந்து ரசித்தனர்.

மாநாட்டில் சென்னை அண்ணாநகர் தி.மு.க. கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் தி.மு.க.வினர் ம.தி.மு.க.வில் இணைந்ததை பலரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர். மாநாட்டு முகப்பில் மருத்துவ அணியினர் மூன்று மருத்துவர்களைக் கொண்டு மினி மருத்துவமனையையே நடத்தி, 300-க்கும் அதிகமான தொண்டர்களுக்கு சிகிச்சையளித்தனர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல் வெண்கலப் புலிக்குட்டி ஒன்றை வைகோவுக்குப் பரிசளித்த போது அரங்கம் அதிர்ந்தது. வைகோ வழக்கம் போல் இலங்கைத் தமிழர்கள், ராஜிவ் கொலையாளிகளைத் தூக்கிலிடக்கூடாது, முல்லைப்பெரியாறு அணையை உடைக்க முயற்சி எடுக்கும் கேரள அரசைக் கண்டித்தும் முழங்கினார்.

ஆளும் கட்சியாய் இல்லை, எதிர்க்கட்சியாய் இல்லை, எந்தப் பதவியிலும் இருந்ததில்லை, என்றாலும் இத்தனை தொண்டர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டது எப்படி என்றுதான் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறது உளவுத்துறை.

இந்த மாநாடு தந்த உற்சாகம்தான் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்கிற முடிவை எடுக்க வைகோவைத் தூண்டியது என்கிறார்கள். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களைக் குறிவைத்து முஸ்லிம் பெண் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வைகோ முடிவு செய்திருப்பது அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

அ.துரைசாமி- குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு பகிர்வுக்கு, வைகோவிற்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு அண்ணை

இந்த முறை சற்று வித்தியாசமாகத்தான் இருக்கின்றது.

ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய பலத்தைக் காண முயற்சிக்கின்றார்கள்.

இருந்தாலும் அடுத்த கூட்டணி தி மு க + தே மு தி க தான்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் எதுவுமே நடக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.