Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நீதிக்கான நடைப்பயணம்” MANCHESTER இலிருந்து LONDON வரைக்கும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

P1-v5-150x150.jpg

“நீதிக்கான நடைப்பயணம்” MANCHESTER இலிருந்து LONDON வரைக்கும் (சனிக்கிழமை,29-10-2011 இலிருந்து, திங்கட்கிழமை 07-11-2011 வரைக்கும்)

என் இனிய ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களுக்கு,

ஜெயசங்கர் முருகையா ஆகிய நான், இலங்கையில் எங்கள் மக்கள் பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களுக்காக, பிரித்தானிய மக்களிடமும் பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு மன்செஸ்டர் நகரிலிருந்து லண்டன் மாநகரம் வரைக்கும், எதிர்வரும் சனிக்கிழமை 29-10-11 ஆம் நாளிலிருந்து, திங்கட்கிழமை 07-11-11 ஆம் நாள் வரைக்கும் நடைப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளுவதற்கு திட்டமிட்டுள்ளேன். பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நான் முன்வைக்கின்ற என்னுடைய ஐந்து கோரிக்கைகள் ஆவன:

1) ஈழத்தமிழர்களின் மீதான ஸ்ரீலங்காவின் அரச-பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.

2) ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு, தமிழீழத்தில் சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்தத்துடன் கூடிய ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.

3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இன-அழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் தனியாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும்.

4) ஸ்ரீ லங்காவின் கொடுஞ்சிறைகளினுள்ளே அடைபட்டு, துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழ் பொதுமக்களும், முன்னாள் போராளிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.

5) தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படல் வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய என்னுடைய அறிக்கையினை பிரித்தானியப் பிரதமரிடமும், அமைச்சர்களிடமும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் நடைப்பயணத்தின் போது கையளிக்கவுள்ளேன். மேலும், “நீதிக்கான நடைப்பயணத்தின்” ஒரு பகுதியாக, Manchester, Stoke-On-Trent, Birmingham, Coventry, Milton Keynes, Luton, London ஆகிய நகர மையங்கள் எங்கினும் Channel-4, Headline Today போன்ற ஊடங்களினால் வெளியிடப்பட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” காணொளிகளை பிரித்தானிய மக்களுக்கு திறந்த வெளி அரங்கினில் போட்டுக் காண்பிக்க இருக்கின்றோம் (காலை 10:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரைக்கும்).

அத்துடன், என்னுடைய ஐந்து கோரிக்கைகளுக்கும் ஆதரவு கேட்டு, பிரித்தானிய மக்களிடம் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றினை பிரித்தானிய அரசாங்கத்திற்கும், ஏனைய சர்வதேச மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் அனுப்பி வைப்பதற்கும் உள்ளோம். “நீதிக்கான நடைப்பயணத்தின்” போது, இலங்கையில் ஈழத்தமிழர்கள் பட்டுக்கொண்டிருக்கின்ற துன்பங்கள் பற்றியும், ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டம் பற்றியதுமான துண்டுப் பிரசுரங்களும் பிரித்தானிய மக்களுக்கு விநியோகிக்கப்படும். அத்தோடு, தமிழ் உணவுகளும் பிரித்தானிய மக்களுக்கு வழங்குவதற்கு இருக்கின்றோம்.

எனது இந்த “நீதிக்கான நடைப்பயணத்தில்” என்னோடு சேர்ந்து நடக்க விரும்புபவர்கள் அனைவரையும் நான் அன்போடு வரவேற்று நிற்கின்றேன். “நீதிக்கான நடைப்பயணத்தில்” வேறு எந்த வகையிலாவது பங்கேற்றுக் கொள்ள விரும்புபவர்களும், “நீதிக்கான நடைப்பயணத்திற்குத்” தேவையான உதவிகளை எந்த விதத்திலாவது செய்ய விரும்புபவர்களும், தயவுசெய்து தாமதியாது என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். “நீதிக்கான நடைப்பயணத்திற்குத்” தேவையான வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு இன்னமும் நிறையவே இருக்கின்றன. ஆகவே, உங்கள் உதவிகள் எவையாயினும், அவை மிகவும் பெறுமதி வாய்ந்தவையாகக் கருதப்படும் – நன்றி.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

உண்மை அன்புடன்,

ஜெயசங்கர் முருகையா

மின்னஞ்சல் முகவரி: jeya_shanker@hotmail.com,

தொலைபேசி இலக்கம்: 07960125257.

P1-v5-1024x730.jpgP2-V5-1024x730.jpg

http://youtu.be/P75ahPF4PaA

http://www.tamilthai.com/?p=27743

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசங்கர் முருகையா உங்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பரப்புரை வெற்றிபெற வாழ்த்துக்கள்..! அத்துடன் ஜெயசங்கர் முருகையா அவர்களுக்கு நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், எந்த இடையூறும் இல்லாமல் போரட்டம் வெற்றி பெறனும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஐயா.

இந்தப் பரப்புரை வெற்றிபெற வாழ்த்துக்கள்..! அத்துடன் ஜெயசங்கர் முருகையா அவர்களுக்கு நன்றிகள்..!

  • முடிந்தளவு உள்ளூர் ஊடகங்களுக்கு அறிவித்தல்
  • செல்லும் வழியெல்லாம் துண்டுப்பிரசுரம் கொடுத்தல்
  • போர்க்குற்றம் சம்பந்தமாக கையெழுத்து சேர்த்தல்
  • அரசியல்வாதிகள் ஆதரவை கோருதல்

ஜெயசங்கர் முருகையாஅவர்களின் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் இவர்கள் நடக்கும் போது பாதுகாப்புக்காக(சிங்கள கைகூலிகளினால் ஏற்படும் ஆபத்தினைத் தவிர்க்க) சிலர் பக்கத்தில் நடந்தும் அல்லது வாகனத்திலும் சென்றால் நன்றாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.