Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆணித்தரமான, ஆனால் உறுதியான செய்தி அது - தாயகத்திலிருந்து ராசேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆணித்தரமான, ஆனால் உறுதியான செய்தி அது - தாயகத்திலிருந்து ராசேந்திரன்

theesiyam_20110728_1045038436.jpg

முள்ளிவாய்க்கால் கரை மௌனமாகிய நாளில் இருந்து எல்லோருமே மௌனமாகி விட்டார்களோ என்று ஏங்கும் அளவுக்கு இங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் இடங்களிலும் அடர்ந்த மௌனமே நிலவியது.

அச்சம் தரும் மௌனம் இது. எங்களின் விடுதலைப்போர் மூச்சு இழந்து போய்விட்டதோ என்று நானும் என்னைப் போன்ற பலரும் நித்தமும் எமக்குள்ளேயே மௌனமாக கதறுவோம். வாழ்நாளில் இனி எமது இனம் எழுந்துவிட்டது என்ற செய்தியை கேட்காமலேயே மரித்துப்போய் விடுவோமோ என்று இரவுகளில் கண்ணீர் சிந்தி இருக்கிறேன்.

ஆனால் எல்லா இரவுகளும் ஒருநாள் விடிந்தே தீரும் என்ற நம்பிக்கை இப்போது மெதுவாக முளைவிடத்தொடங்கியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வின் காணொளியையும், புகைப்படங்களையும் போனவாரம்தான் இங்கு இணையத்தில் பார்த்தேன். எங்கள் தாயகத்தின் மக்களின் நிரந்தரமான நிம்மதியான சுதந்திர வாழ்வுக்காக இன்னும் எமது புலத்து மக்கள் பேரெழுச்சி கொண்டு நிற்கிறார்கள் என்று பார்க்கும்போது மரணித்த எமது செல்வங்களின் கனவுகள் ஒருநாள் நனவாகியே தீரும் என்ற பெரும் நம்பிக்கை தோன்றுகின்றது.

தாயகத்தில் கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வுகளில் காணப்பட்ட சீரானதும் நேர்த்தியானதுமான ஒழுங்கமைப்பை ஜெனீவா பொங்கு தமிழில் பார்க்ககூடியதாக இருந்தது. நிகழ்வின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எமது சுதந்திரவாழ்வுக்காக உலகத்தை நோக்கி விடுக்கப்பட்ட வேண்டுகோள்களாக அமைந்திருந்தன.

மண்டபங்களுக்குள் நான்குபேர் கூடிகதைத்து விட்டு தீர்மானங்கள் என்ற பெயரில் வெளியிடும் போலித்தனம் இல்லாமல் மக்களின் எழுச்சியை முன்னுறுத்தி அதற்கூடான குரலாக தீர்மானங்களை வடித்திருந்தது நிச்சயமாக சேரவேண்டிய காதுகளுக்கு போய்ச்சேரும் என்ற நம்பிக்கையை தருகின்றது.

எதையும் குழப்புவதற்கு இரண்டு முட்டாள்களே போதும். ஆனால் இதனைப்போன்ற எழுச்சி நிகழ்வுகளை உருவாக்குவதற்கும் அதனை நேர்த்தியாக நடாத்தி முடிப்பதற்கும் ஒரு கட்டுப்பாடான அமைப்பும் அதன் செயற்பாட்டாளர்களும் மிக முக்கியம். ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்கள் அதற்கு உதாரணமாக இயங்குவது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.

முன்னர் தாயகத்தில் நடாத்தப்படும் தாக்குதல்களும், செயல்களும் புலம்பெயர் தேசங்களில் எழுச்சியை உருவாக்கின. இப்போது தாயகத்தில் நாம் ஊமைகளாக ராணுவ அடக்குமுறைக்குள் வாழ்கிறோம். எமக்கான புத்துணர்ச்சியையும், ஊக்கத்தையும் புலத்தில் நிகழ்த்தப்படும் பொங்குதமிழ் நிகழ்வுகள் மூலம்தான் தரல்வேண்டும்.

ஓவ்வாரு நாடுகளிலும் பொங்குதமிழ் நிகழ்வுகள் எழுச்சியுடன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களால் நடாத்தப்படவேண்டும். விரைவில் கனடாவில் நடாத்தப்பட இருக்கும் பொங்குதமிழ் நிகழ்வுக்கு எமது மக்கள் லட்சக்கணக்காக திரண்டு சென்றால் அதன் எழுச்சி இங்கிருக்கும் நீண்ட உறக்கத்தை கலைத்து எமது மக்களை விடுதலைக்காக அணிதிரளவைக்கும் என நம்புகின்றேன்.

http://www.eeladhesa...ndex.php?option

கனடா பொங்குதமிழ் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பொங்குதமிழ் வெற்றி பெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் எப்போது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நடக்கவிருக்கும் பொங்கு தமிழ் நிகழ்வுக்கு பெரும்பான்மையான மக்கள் கலந்து வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.