Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவிற்கு வழியில்லா மக்களுக்கு சிங்கள அரசின் கடனிற்கு வீடமைப்பு

Featured Replies

அன்றாடம் உணவிற்கே வடபகுதி மக்கள் கஸ்டபப்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அண்மையில் சுட்டிக்காட்டியது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் வெளி நாடுகளிடம் மீழ் குடியேற்றத்திற்கு நிதிகளைப்பெற்று வடபகுதியில் மீழ் குடியேறியுள்ள மக்களுக்கு கடன் அடிப்படையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கின்றது.

மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்கில் மீள்குடியேற்றப்படும்மக்களுக்கு வழங்கப்படும் ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ்வழங்கப்படும் இரண்டு லட்சம் ரூபா, மீள செலுத்த வேண்டிய கடன்அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புவெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள் குடியேற்ற அமைச்சினால், தேசிய வீடமைப்பு நிர்மாணஅபிவிருத்தி அதிகாரச் சபையின் ஊடாக ஒரு மாவட்டத்திற்கு 20 வீடு என்ற அடிப்படையில், 05 மாவட்டங்களுக்கு, 1000வீடுகள் நீர்மாணித்து கொடுக்கப்படவுள்ளது.

ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சு ஒரு லட்சம் ரூபாவையும், வீடமைப்பு நிர்மாண அபிவிருத்தித்அதிகாரச் சபை 2 லட்சம் ரூபாவையும், செலவிடவுள்ளன.

இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 50வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட உள்ள இந்தவீடுகளுக்காக வீடுகளை பெறுபவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபா மீள அறவிடப்பட உள்ளதாக அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

ஈழநாதம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இரண்டு வருசத்துக்கு முன்னம் 55,000 வீடு கட்டிக் கொடுப்பதாக சொல்லிச்சுது.

எல்லாம் கட்டி முடிச்சுதா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இரண்டு வருசத்துக்கு முன்னம் 55,000 வீடு கட்டிக் கொடுப்பதாக சொல்லிச்சுது.

எல்லாம் கட்டி முடிச்சுதா?

இன்னமும் தூக்கத்திலிருந்து மீளலையா?

  • தொடங்கியவர்

கொழும்பை வந்தடைந்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலர் ரஞ்சன் மாத்தாய் முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து மட்டுமே தமிழக முதல்வர் மத்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ரஞ்சன் மாத்தாயிடம் எடுத்துக் கூறியுள்ளார் என தமிழக செய்திகள் கூறுகின்றன.

நேற்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் இவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து முதல்வர் எடுத்துக்கூறினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாவும் வீடமைப்பு திட்டம் பற்றி பேசவில்லை. ஆனால் ரஞ்சன் மாத்தாய் மதவாச்சி இரயில் வே புனரமைப்பு திட்டத்தைத்தான் பார்க்கப்போகின்றாராம்.

இந்திய வீடமைப்பு திட்டம் ஓர் சிதம்பர ரகசியமாகவே இருக்கு. ஒருவருமே ஒழுங்காக சொல்லுகினம் இல்லை

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் தூக்கத்திலிருந்து மீளலையா?

நான் கண்டது... கனவா, நனவா... எண்று கிள்ளிப் பாத்தன் வன்னியன்.rolleyes.gif

அன்றாடம் உணவிற்கே வடபகுதி மக்கள் கஸ்டபப்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அண்மையில் சுட்டிக்காட்டியது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் வெளி நாடுகளிடம் மீழ் குடியேற்றத்திற்கு நிதிகளைப்பெற்று வடபகுதியில் மீழ் குடியேறியுள்ள மக்களுக்கு கடன் அடிப்படையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கின்றது.

ஈழநாதம்

இதில என்னதான் பொஸிட்டிவா& நெகட்டிவா ,, நியூஸ் இருக்கு உமை?!

அன்றாடம் உணவிற்கே வடபகுதி மக்கள் கஸ்டபப்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அண்மையில் சுட்டிக்காட்டியது.

+

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் வெளி நாடுகளிடம் மீழ் குடியேற்றத்திற்கு நிதிகளைப்பெற்று வடபகுதியில் மீழ் குடியேறியுள்ள மக்களுக்கு கடன் அடிப்படையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கின்றது.

இதால அந்த மக்களுக்கு என்ன கொடுமை வரும் ,,உமை?

ஓவரா , செய்தி பஞ்சமா உங்களுக்கு ?

Shame on you Buddy !!

ஒரு போலியான அபிவிருத்தியை மக்களுக்கும் உலகத்திற்கும் காட்ட சிங்களம் எத்தனிக்கின்றது. இது பற்றி சர்வதேச நாணய நிதியம் சிங்களத்தை குறைகூறியுள்ளது.

சிங்களம் தான் கடனாளியாவதுடன் தனது பங்காளியாக மக்களை இணைப்பது மூலம் சர்வதேசம் கடனின் பெரும் பகுதியை 'மன்னித்து விடும்' எனக்கணக்கு போடுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.