Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் சீனாவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு – மேலும் இராணுவ உதவிகள் வழங்க இணக்கம்

Featured Replies

[ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 01:03 GMT ] [ கார்வண்ணன் ] Gota%20meet%20china.jpg

சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு விவகாரத் தலைவர் மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான இந்தக் குழுவினர் நேற்றுக்காலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளையும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

China%20del.1.jpg

அத்துடன் கொழும்பிலுள்ள பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு 10 மில்லியன் யுவான் பெறுமதியான கருவிகளை வழங்குவதற்கான உடன்பாடு ஒன்றும் இந்தச் சந்திப்பின போது கையெழுத்திடப்பட்டுள்ளது.

பின்னர் சீன பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெனத் ஜெயசூரியவை சந்தித்து இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா இராணுவம் நடத்தும் நிபுணத்துவ பயிற்சிகளுக்கு சீன இராணுவ அதிகாரிகளை அதிகளவில் அனுப்பி வைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் சிறிலங்கா இராணுவத்துக்கு கண்ணிவெடிகளை அகற்றும் 100 கருவித் தொகுதிகளை வழங்கவும், சீன போர்ப்பயிற்சிக் கல்லூரிகளில் சிறிலங்காப் படை அதிகாரிகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் இருநாட்டு அதிகாரிகளும் இணக்கம் கண்டுள்ளனர்.

China%20del.3.jpg

சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா 25 ஆண்டுகளுக்கு மேலாக உதவி வருவதாகவும், போரின் போது மட்டுமன்றி சமாதான காலத்திலும் இந்த உதவிகள் தொடரும் என்றும் சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிவிவகார பணியக தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் “ஒப்பரேசன் நீர்க்காகம்“ போரப்பயிற்சியில் சீன இராணுவப் பிரதிநிதிகளை கலந்து கொள்வதற்கும் சிறிலங்கா இராணுவத் தளபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தியத்தலாவ இராணுவப் பயிற்சி நிலையத்துடன் சீன இராணுவம் நெருக்கமாக இணைந்து செயற்படவும் இந்தச் சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

China%20del.2.jpg

சிறிலங்கா வந்துள்ள இந்தக் குழுவில் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மொழியாக்கப் பிரிவின் பணிப்பாளர் மூத்த கேணல் சூ ஹுய், ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் இராணுவ உதவி அலகின் பிரதிப் பணிப்பாளர் மூத்த கேணல் சொங் சியாகு, போர்க்கருவிகள் ஆராய்ச்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கேணல் தியன் பென், தேசிய பாதுகாப்பு அமைச்சின் ஆசிய விவகாரப் பிரிவின் நிர்வாக அதிகாரி கேணல் கூ ஹொங்ராவோ, 6வது கவசப்படைப் பிரிவின் பிரதித் தலைமை அதிகாரியும் பெய்ஜிங் இராணுவப் பிரதேச தளபதியுமான கேணல் சங் ஜின் பூ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

http://www.puthinappalakai.com/view.php?20111014104865

வாழ்க வளர்க சீன - சிறிலங்கா பாதுகாப்பு உறவுகள் (உஸ்ஸ்.... நீங்கள் இந்தியாவுக்கு எதிராக ஒருநாளும் செயற்படமாட்டீர்கள், உண்மையில் இந்தியாவுக்காக சீனாவில் உளவுபார்க்கின்றீர்கள்) .

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ உறவுகளை வலுப்படுத்த சீனா இலங்கைக்கு அழைப்பு!

Published on October 14, 2011-11:25 am

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியிலான உறவுகளை பலப்படுத்த சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை வந்துள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத் தபளதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்து உரையாடிய போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் க்யான் லிஹு, வெளிவிவகார பிரதான அலுவலகம், தேசிய பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்றுள்ள க்யான் லிஹு இலங்கை இராணுவத்தினருக்கு தொழில்முறை பயிற்சி, உடற்பயிற்சி என்பவற்றை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் 100 இலங்கை படையினருக்கு கண்ணிவெடி அகற்றப் பயன்படும் கவசங்களை வழங்க சீனா முன்வந்துள்ளது.

இதேவேளை கண்ணிவெடி அகற்றும் படையினர் சிலர் சீனாவில் பயிற்சி பெற்றுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு தாம் உதவியதாகவும் தொடர்ந்தும் அவ்வுதவிகளை வழங்கத் தயார் எனவும் சீன மக்கள் விடுதலை இராணுவ மேஜர் ஜெனரல் க்யான் லிஹு கூறியுள்ளார்.

இதேவேளை, சீனாவின் இராணு பயிற்சி கல்லூரிக்கு அனுமதிக்கப்படும் இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் சீனா இலங்கையுடன் கலந்துரையாடியுள்ளது.

http://www.saritham.com/?p=37579

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை, ஸ்ரீலங்காவில் காலூன்ற அனுமதித்த இந்தியா தனது தவறை இனியாவது உணரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்போது அண்ணார்ந்து பார்க்கின்றது!

சுவரில் ஒரு பல்லி ;சத்தம் போடுகின்றது!

திடீரென அந்தப் பல்லி சிவப்பு நிறமாக மாற, இந்தியா தனது சோதிடப் புத்தகங்களில் விளக்கம் தேடுகின்றது! :D

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: :rolleyes: :rolleyes:

திருமலையிலும், யாழ் தீவகத்திலும் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகளைகள் நிறுவும் ஒப்பந்தம் கையழுத்தாச்சா இல்லையா? :D

:rolleyes: :rolleyes: :rolleyes:

திருமலையிலும், யாழ் தீவகத்திலும் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகளைகள் நிறுவும் ஒப்பந்தம் கையழுத்தாச்சா இல்லையா? :D

சீனா எதிரிகளின் ஏவுகணைகளின் கண்கள் / காதுகளை பிடுங்கிவிடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது பூமியைச்சுற்றி இருக்கும் எதிரிகளின் செயற்கோள்களை 'லேசர்' மூலம் செயலிழக்க செய்தல் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.