Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா அப்படி என்னதான் செய்யப்போகின்றது?

Featured Replies

அமெரிக்கா என்ன செய்யப்போகின்றது? கூட்டமைப்பினை ஏன் அழைத்துள்ளார்கள்? நோர்வே மீண்டும் ஏன் களத்தில் இறங்கியுள்ளது? இந்தியா அமைதியாக உள்ளதே, இந்தியாவை மீறி அமெரிக்காவால் ஏதும் செய்ய முடியுமா?

.

இப்படி பல கேள்விகள் எம்முன் விரிகின்றது. அமெரிக்காவிற்கு நாளை கூட்டமைப்பு விஜயம் ஒன்றை செய்யப்போவதாக கூறும் நிலையில் அவர்களில் சிலருக்கு இன்னமும் வீசா ஒழுங்குகள் கூட சரிவரவில்லை. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்னமும் ஹிலாரி கிளிங்டனை சந்திக்கவோ அல்லது முக்கிய இராஜ தந்திரிகளைச் சந்திக்கவோ நேர அட்டவணை கொடுக்கவில்லை.

.

ஆனால் பல அமைப்புக்கள், தமிழ் அரசியல் கட்சிகள், பத்திரிகைகள் உட்பட ஏதோ இந்த நடவடிக்கையினை ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக பிரச்சாரப்படுத்தியும்,அமெரிக்கா ஏதோ என்னமோ செய்யப்போகின்றது என்ற தோற்றப்பாட்டினை, நம்பிக்கையினை உருவாக்கி வருகின்றனர். இதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு இது கூட்டமைப்பின் முக்கியஸ்தர் மாவை சேனாதிராஜாவின் கருத்தும் கூட.

.

இதே வேளை கூட்டமைப்பினரை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதி, ஆலோசனை இன்றி வெளி நாடு ஒன்றிற்கு அழைத்து பேசுவது, அரசியல் தீர்வு பற்றியோ அல்லது உள் நாட்டு விடயங்கள் பற்றியோ கலந்துரையாடுவது அமெரிக்க- சிறிலங்கா இராஜதந்திர நியமங்களை புறம் தள்ளுவதாக அமையும் என சிறிலங்கா போர்க்கொடி தூக்கிவருகின்றது.

.

சிறிலங்காவின் இந்த எதிர்ப்பினை சமாளிக்கவே அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா சிறிலங்காவிற்கான வரிச்சலுகையினை நீடிப்பதாக அறிவித்துள்ளார். இந்த விடயத்தினை நாம் ஆழமாக பார்ப்போமானால் கூட்டமைப்பினை கூப்பிட்டு கதைக்கப்போகின்றோம் என்ற செய்திக்கு மட்டும் சிறிலங்காவிற்கு கொடுக்கும் வெகுமதி அல்லது சிறிலங்கா அமெரிக்காவிடம் பெற்ற வெகுமதி மூன்று வருடத்திற்கான வரிச்சலுகை அதாவது கிட்டத்தட்ட 600 மில்லியன் டொலர்கள்.

.

ஆனால் கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும் இதுவரை சந்திக்கபோகின்றோம் என்ற செய்தி மட்டுமே. யாரை எப்போது? எங்கே/ எதைப்பற்றி சந்திக்கபபோகின்ரோம் என்ற தெளிவே இன்னமும் கொடுக்கப்படவில்லை (வீசா கூட இன்னும் கொடுக்கப்படவில்லை என்பது வேறு விடயம்).

.

இப்போ சிறிலங்காவிற்கு வரிச்சலுகை கொடுப்பதற்காக தமிழர் தரப்பினை சமாதானபப்டுத்த கூட்டமைப்பினை அழைத்தார்களா என்று கூட ஜோசிக்க இடமுண்டு.

.

ஒரு செய்திக்கே சிறிலங்காவிற்கு இவ்வளவு வெகுமதி என்றால் கூட்டமைப்பினரை சந்தித்து, பேசுவதற்கு அமெரிக்கா சிறிலங்காவிற்கு கொடுக்கப்போகும் வெகுமதி எவ்வளவு? அல்லது அரசியல் பேச்சுவார்த்தை தொடர்பில் பேசுவதற்கு என்ன விலை? நிச்சயமாக அது ஒரு மிகப்பெரிய விலையாகத்தான் இருக்கும்.

.

இங்குதான் நோர்வே அரசாங்கத்தின் கருத்து மிகவும் ஆபத்தானதொன்று, கூடவே ஐக்கிய நாடுகளும் இதனைத்தான் கூறுகின்றன. அதாவது சிறிலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை தணிக்க வேண்டுமானால் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை கொடுக்கவேண்டும் அத்துடன் நாம் கூறும் சில விடயங்களையும் செய்யவேண்டும் என்பதே. இன்னும் மேலோட்டமாக பார்க்கப்போனால் இந்த திட்டத்தினை செயற்படுத்த நோர்வேதான் முக்கிய பங்காளியாக இருக்கப்போகின்றது. நோர்வே அரசாங்கம் தான் அமெரிக்காவில் இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்ததாகவும் தகவல்.

.

அமெரிக்காவிடம் கூட்டமைப்பிற்கு சந்திப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தினால் சிறிலங்காவை தன்வசம் வளைத்துப்பொடலாம் என்ற சொல்கைம்மின் திட்டம் சில நாட்களிலேயே நடந்தமை குறிப்பிடத்தகக்து. அதாவது சொல்கைம் அவர்கள் கூட்டமைப்பு சுமந்திரனை அழைத்துப்பேசிய அடுத்த வாரத்திலேயே சிங்களப் பிரதிநிதி நிமால் சிறி டி பால சில்வா நோர்வே சென்று அமைச்சர் சொல்கைம் அவர்களைச் சந்தித்துள்ளார்.

.

நோர்வே, அமெரிக்கா உட்பட கூட்டமைப்பினரை சந்திப்பது சில வேலைத்திட்டங்களை நகர்த்துவது என்பது மிக இரகசியமாக வைக்கப்படவேண்டும் என்பது திட்டமாகவே இருந்துவந்துள்ளது. நோர்வே கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா தரப்பினை சந்தித்தது. அமெரிக்கா கூட்டமைப்பினரை அழைத்து பேசும் முயற்சிகள் என்பன இரகசியமாகவே நடந்தன. ஆகையால்தான் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்னமும் தமது நிகழ்ச்சி நிரலையே கூறவில்லை.

.

இதற்கு காரணம் நோர்வே அமெரிக்க தரப்புக்கள் கூறுவது கூட்டமைப்பினரை சந்திப்பது புரொட்டொக்கோல் பிரச்சினை.சிறிலங்கா அரசாங்கம் போர்க்கொடி தூக்கும் என கூறப்பட்டுள்ளது. இதில் சிறுஅளவு உண்மை இருந்தாலும் இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் கூட்டமைப்பினரை சந்தித்து அமெரிக்கா பேசப்போவது என்றாலே முதலில் உசாராகப்போவது புலம்பெயர் மக்கள்தான்.

.

போர்க்குற்றத்தில் சிறிலங்காவை திக்குமுக்காட செய்யும் மனித உரிமை அமைப்புக்களும், புலம்பெயர் தமிழ் மக்களும் கூட்டமைப்பின் சந்திப்பானது சிறிலங்காவை போர்க்குற்றத்தில் இருந்து பாதுகாக்க பயன்படக்கூடாது என வாதிடுவர். சுய நிர்ணைய உரிமை தமிழீழம் என வாதிடுவர். இந்த இரண்டு விடயன்களும் நோர்வே, சிறிலங்கா, அமெரிக்கா உட்பட பலருக்கும் ஒவ்வாமை வியாதியை தோற்றுவிக்கும். அவர்களைப்பொறுத்தவரை இந்த விடயங்களானது சிறிலங்காவை பணியவைக்கும் கருவிகளே.

.

ஏன் இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை ஆகியன கூட அப்படித்தான் சிந்திக்கின்றன. அதே போல கூட்டமைப்புக்கும் இரகசியத்தை பேணுவதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒன்று கூட்டமைப்புடன் சேர்ந்து இருக்கின்ற கட்சிகள், அரசாங்கம் எதிர்க்கலாம், சில சூழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்டுத்தி அமெரிக்க விஜயத்தினை தடுக்கலாம். பிற தமிழ்க்கட்சிகள் குளப்பி விடுவார்களோ என்ற பிரச்சினை அல்லது எங்களையும் கூட்டிக்கொண்டு போங்கள் என்று அவர்கள் தர்க்கம் புரியலாம் ( சிவாஜிலிங்கம் ஏற்கனவே கூறியுள்ளார்). அடுத்து புலம்பெயர்ந்த மக்கள் உட்பட பல தமிழ் அமைப்புக்கள் கூட்டமைப்பு என்ன பேசவேண்டும் என நிபந்தனைகளை அல்லது ஆலோசனைகளை விதிக்கலாம். அவ்வாறு சொன்னபடி கூட்டமைப்பு கேட்காவிட்டால் னம்பிக்கை துரோகிகள் என பட்டம் சூட்டிவிட்டு உள்ளூர் அரசியல் நடத்தலாம். இவைதான் கூட்டமைப்பிற்கு உள்ள பீதிகள்.

.

எது எப்படி இருந்தாலும் போர்க்குற்றத்தை கைவிடுகின்றோம், அரசியல் தீர்வினை கொடுங்கள் இதுதான் பேச்சுவார்த்தை நடக்குமாயின் அதன் கருப்பொருள். இந்த கருப்பொருள் இப்போது உருவாகவில்லை. முள்ளீவாய்க்காலில் போர் நடக்கும்போதோ அல்லது அதற்கு முன்னரோ உருவாக்கப்பட்டது.

.

ஆனால் கூட்டமைப்பு சுய நிர்ணைய உரிமை, போர்க்குற்ற நடவடிக்கைகளை தாம் விட்டுக்கொடுக்கமாட்டோம் என கூறியுள்ளார்கள். கூடவே தீர்விற்கு சர்வதேசத்தின் உத்தரவாதம் ஒன்றும் அவசியம் என கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்துகொண்டால் அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் அடுத்த கட்டமாக என்ன செய்யும்? அடுத்து புலத்து தமிழர்களுடன் பேசும் அல்லது மேலும் சிறிலங்காவிற்கு சலுகைகளை கொடுத்து தமிழர்களை ஆத்திரமூட்டச்செய்யலாம்.

மூலம்

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி இந்தியா,அமெரிக்கா,சிறிலங்கா அரசுகள் சொல்வதை தான் கேட்டு நடக்கிறது.அவர்களுக்கு என ஒரு திட்டமோ அல்லது ஒன்றை கேட்டு பெற்றுக்கொள்ளும் சக்தியோ இல்லாமல் உள்ளார்கள்.முக்கியமாக இந்தியாவின் சொல்லை கேட்டு ஆடுகிறார்கள்.அமெரிக்காவும் நோர்வேயும் மீண்டும் ஒரு நாடகம் ஆட உள்ளார்கள் என்ற உணர்வு தான் ஏற்படுகிறது.பின்புலத்தில் இந்தியா நிச்சயமாக செயற்படுகிறது.போர்க்குற்ற விசாரணயை இல்லாமல் செய்ய இந்தியா தன்னாலான எல்லாவற்றையும் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ நடக்குது நடக்கட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பவை நல்லதாகவே நடக்கும் என்றிராமல் புலம்பெயர் தமிழ்மக்கள்   அவற்றைக் கூர்ந்து அவதானித்து தேவையேற்படின் ஆதரவாகவும் ஈழத்தமிழருக்கு  எதிராக அவர்கள் செயற்படும் பட்சத்தில் அதற்கெதிராகவும் குரல் கொடுக்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும்

நல்லாவே ஆயுறீங்க....... ஆனா ரொம்பவே ஆயாதீங்க...........

ஏன்னா.............. அமெரிக்க , தெற்காசிய விவகாரங்களுக்கான , திட்டமிடல் எல்லாம்,

உமை சொல்வது போல் , லம்பாடா டான்ஸ் இல்ல!

அது உமைக்கும் நல்லாவே தெரியும்!

இருந்தும் ஏன் இந்த Fireworks?

எதுவாயினும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது

வாயப் பொத்திக்கொண்டு மகிந்த போடப்போற எலும்புத்துண்டுதான் உங்களுக்கு அதாவது தமிழருக்கு தீர்வு அதை கட்டாயம் நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று சொல்லப்போகினம்.அமெரிக்காவில் கூப்பிட்டுவைத்து சொல்லப்போகினம்.

இதை மே 2009 க்கு முன்னர் யார் யார் அமெரிக்கா இறங்கப்போகுது எல்லாரையும் காப்பாற்றப் போகுது என்டு படம் காட்டிச்சினமோ அதே ஆக்கள் தான் இப்ப அமெரிக்கா கூட்டமைப்புக்கு அங்கிகாரம் கொடுக்குது என்று எல்லாரையும் அடிமுட்டாள் ஆக்கிற வேலையை இந்தியாவின் பிரதிநிதிகளா நின்று செய்யினம்.

சீனாவின் பிடியை தளர்த்த எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிரா செயற்படப்போறதில்லை.ஏதோ போர்க்குற்றம் பற்றி விசாரிக்கிறம் ஐ நா பையில பிரேரணை நிறைவேற்றப் போறம் என்று சொல்லிச் சொச்ல்லியே காலத்த கடத்தி கொதி நிலையில இருக்கிற தமிழரின் உணர்வுகளை ஆறவைத்து இல்லாமல் செய்வதே இவர்களின் வேலை இப்போது.

சீனாவிக் செல்வாக்கை இலங்கையில் இருந்து அகற்ற இந்தியா உட்பட்ட மேற்குலகின் தெரிவு ''தமிழரின் தேவைகளை தட்டிக்களித்து தேவையேற்பட்டால் ஒட்டுமொத்த தமிழர்களையும் அழிப்பதற்கு துணைநின்று எப்படியாவது இலங்கைக்குள் காலுண்டுவதே''.

இந்த மூலச்செய்தியில் உள்ள பல விடயங்கள் சில ஆதாரங்கள் அற்று உண்மைக்கு புறம்பானவையாக உள்ளதா?

சிறிலங்காவின் இந்த எதிர்ப்பினை சமாளிக்கவே அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா சிறிலங்காவிற்கான வரிச்சலுகையினை நீடிப்பதாக அறிவித்துள்ளார். இந்த விடயத்தினை நாம் ஆழமாக பார்ப்போமானால் கூட்டமைப்பினை கூப்பிட்டு கதைக்கப்போகின்றோம் என்ற செய்திக்கு மட்டும் சிறிலங்காவிற்கு கொடுக்கும் வெகுமதி அல்லது சிறிலங்கா அமெரிக்காவிடம் பெற்ற வெகுமதி மூன்று வருடத்திற்கான வரிச்சலுகை அதாவது கிட்டத்தட்ட 600 மில்லியன் டொலர்கள்.

சிங்களத்திற்கு மட்டும் தான் ஜி.எஸ்.பி இது நீடிக்கப்பட்டது போன்று இங்கு கூறப்பட்டுள்ளது. உண்மையில் 130 நாடுகளுக்கு நீடிக்கப்பட்டது.

http://sundaytimes.lk/111023/News/nws_04.html

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93157

சிறிலங்காவின் இந்த எதிர்ப்பினை சமாளிக்கவே அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா சிறிலங்காவிற்கான வரிச்சலுகையினை நீடிப்பதாக அறிவித்துள்ளார். இந்த விடயத்தினை நாம் ஆழமாக பார்ப்போமானால் கூட்டமைப்பினை கூப்பிட்டு கதைக்கப்போகின்றோம் என்ற செய்திக்கு மட்டும் சிறிலங்காவிற்கு கொடுக்கும் வெகுமதி அல்லது சிறிலங்கா அமெரிக்காவிடம் பெற்ற வெகுமதி மூன்று வருடத்திற்கான வரிச்சலுகை அதாவது கிட்டத்தட்ட 600 மில்லியன் டொலர்கள்.

அமெரிக்காவிடம் கூட்டமைப்பிற்கு சந்திப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தினால் சிறிலங்காவை தன்வசம் வளைத்துப்பொடலாம் என்ற சொல்கைம்மின் திட்டம் சில நாட்களிலேயே நடந்தமை குறிப்பிடத்தகக்து. அதாவது சொல்கைம் அவர்கள் கூட்டமைப்பு சுமந்திரனை அழைத்துப்பேசிய அடுத்த வாரத்திலேயே சிங்களப் பிரதிநிதி நிமால் சிறி டி பால சில்வா நோர்வே சென்று அமைச்சர் சொல்கைம் அவர்களைச் சந்தித்துள்ளார்.

இந்த சலுகையை எந்த நேரமும் அமெரிக்கா நிற்பாட்டலாம். எனவே அமெரிக்கா 600 மில்லியன்களை ஒரு துரும்பாகவும் பாவிக்கலாம்.

ஆனால் கூட்டமைப்பு சுய நிர்ணைய உரிமை, போர்க்குற்ற நடவடிக்கைகளை தாம் விட்டுக்கொடுக்கமாட்டோம் என கூறியுள்ளார்கள். கூடவே தீர்விற்கு சர்வதேசத்தின் உத்தரவாதம் ஒன்றும் அவசியம் என கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்துகொண்டால் அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் அடுத்த கட்டமாக என்ன செய்யும்? அடுத்து புலத்து தமிழர்களுடன் பேசும் அல்லது மேலும் சிறிலங்காவிற்கு சலுகைகளை கொடுத்து தமிழர்களை ஆத்திரமூட்டச்செய்யலாம்.

போர்குற்றம் பற்றிய எந்த முன்னெடுப்புக்களையும் கூட்டமைப்பால் செய்யமுடியாது என்பது பரகசியம். அவர்கள் தாயகத்தில் தம்மையே அழித்த இராணுவத்தால் சூழப்பட்டுள்ளனர். புலம்பெயர் மக்களால் மட்டுமே இது சாத்தியம்.

இதெல்லாத்தையும் மீறி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வருமெண்டால் அது சர்வதேசத்தையும் தமிழர் தரப்பையும் எதிர்த்து சிங்களவங்கள் ஒரு தீர்வை முன்வைத்தால்தான் தமிழர்களுக்கு ஒரு விடிவு.

இந்த ஆசிரியர் என்ன சொல்ல கஸ்படுகிறார் என்பதை அவர் தொகுத்துபோட்டிருக்கும் சில பழைய படங்கலிருந்து விளங்கலாம்

Hilari%20Jaya%20meeting008.jpg

Erick%20and%20MR.jpg

obama.jpg

எது எப்படி இருந்தாலும் போர்க்குற்றத்தை கைவிடுகின்றோம், அரசியல் தீர்வினை கொடுங்கள் இதுதான் பேச்சுவார்த்தை நடக்குமாயின் அதன் கருப்பொருள். இந்த கருப்பொருள் இப்போது உருவாகவில்லை. முள்ளீவாய்க்காலில் போர் நடக்கும்போதோ அல்லது அதற்கு முன்னரோ உருவாக்கப்பட்டது

இப்போ சிறிலங்காவிற்கு வரிச்சலுகை கொடுப்பதற்காக தமிழர் தரப்பினை சமாதானபப்டுத்த கூட்டமைப்பினை அழைத்தார்களா என்று கூட ஜோசிக்க இடமுண்டு.

.

ஒரு செய்திக்கே சிறிலங்காவிற்கு இவ்வளவு வெகுமதி என்றால் கூட்டமைப்பினரை சந்தித்து, பேசுவதற்கு அமெரிக்கா சிறிலங்காவிற்கு கொடுக்கப்போகும் வெகுமதி எவ்வளவு? அல்லது அரசியல் பேச்சுவார்த்தை தொடர்பில் பேசுவதற்கு என்ன விலை? நிச்சயமாக அது ஒரு மிகப்பெரிய விலையாகத்தான் இருக்கும்.

இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில் -நல்வழி

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.