Jump to content

வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி

சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும், சாந்தமும், சூடும் பறந்த பேட்டியிலிருந்து

விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா, சந்தோஷமாக இருக்கு...

அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள், பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற பதவிசு எல்லாமே என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. வானவில் மாதிரி வெளிச்சமும் நீரும் ஒளிந்து விளையாடுகிற விளையாட்டு இருக்கே, கொஞ்சநேரம் ஆச்சர்யப்படுத்துகிற நேரத்திற்கு நின்னு பாத்திட்டு போலோமே அதுமாதிரி இந்தப்படத்தில் நடத்திருக்கு. அரவிந்தசாமியும், கௌதமியும், ரஞ்சிதாவும் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்காங்க. கடைசி கடைசியாக நாமும் நகரத்தார்களின் மென்மையான வாழ்க்கையை பதிவு செய்திட்டோம். நியாயம் செய்திட்டோம் என்ற சந்தோஷம் வருது. அந்த சந்தோஷம் உங்களுக்கு வந்துவிட்டால் இது ஒரு வெற்றிப்படம். இதில் நடிக்கிற ஒவ்வொருவருக்கும் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வளவு விற்பன்னர்கள், அற்புதமான டெக்னிஷியன்கள் இருந்தும் தமிழ்சினிமா பெரிய ஏன் அளவுக்கு போனதில்லை?

நல்ல சினிமான்னு நினைச்சாலே போதும். இங்கே பெரிய வேடிக்கை என்னவென்றால், நம்ம டெக்னிஷியன்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவங்க கிடையாது. அப்படியிருந்தும் இன்னிக்கும் டி.வி.டி.யை பார்த்துத்தான் படம் பண்றோம். படம் பார்த்து படம் பண்றோம். சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அப்படியே அடிக்கு அடி காப்பி பண்ணி படம் செய்திருக்காங்க. அதை செய்திட்டு கதை, வசனம் என்று வேறே பேரைப் போடுறாங்க. என்ன அசிங்கம். மேற்கொண்டு இங்கே ஆஸ்கார் அவார்டுக்கு வேறே போட்டி. ஆஸ்காரே பெரிய அவார்டு கிடையாது. கேன்ஸ் பட விழா தான் பெரிய அவார்டு. இதையே நம்ம ஆட்கள் இன்னும் புரிஞ்சுக்கலை. அதுதான் வேதனை. ஒரு எம்.ஜி.ஆர்., சிவாஜி எங்கவாது பார்க்க முடிஞ்சதா? இளையராஜா மாதிரி மேதை இங்கே தானே கிடைச்சார். எவ்வளவு விஷயங்கள் கிடைத்தும், மேற்கொண்டு பயணம் போகாமல் அப்படியே உட்கார்ந்திருக்கோம்.

தமிழீழம் போய் இருந்திங்க போலேயிருக்கு?

அங்கே போனாலும் தமிழ்நாட்டில் இருக்கிற தமிழனுக்கு காதலைத் தவிர வேறு பிரச்சினையே இல்லையான்னு கேட்கிறாங்க. உங்களுக்கு பிரச்சினை எப்படியாவது ஐ லவ் யு சொல்லியாகணும். இதைத்தானே காட்டுறீங்கன்னு வேதனைப்படுறாங்க. 'உதிரிப்பூக்கள்' மாதிரி படம் காணோமே என்கிறார்கள். இன்னும் என்னைத் தாண்டி தமிழ்சினிமா வரவில்லையா என்று எனக்கே வேதனையாக இருக்கு. அவங்க வேதனை நியாயமாக இருக்கு. கேரள ஆடியன்ஸ் பாருங்க, அவங்களுக்கு வவீனீமீ ணீஸீபீ னீஷீஸீமீஹ் ஸ்மீக்ஷீஹ் ஜீக்ஷீமீநீவீஷீரள இங்கே நம்முடைய ரசிகனுக்கு நேரத்தின் அருமையும் தெரியாது. பணத்தின் அருமையும் தெரியாது. அது அவங்க குற்றமில்லை. நாம் அதற்கு பழக்கப்படுத்தி வைச்சிருக்கோம். அதே சமயம் நம்ம ஆடியன்ஸிடம் ஒரு நல்ல குணம் உண்டு. ரொம்ப பரிட்சார்ந்த படங்களையும் பார்த்திருங்காங்க. மொழி புரியாமல்கூட பார்த்திருக்காங்க. இவங்க மட்டும் ஒரு தீர்மானத்திற்கு வந்துட்டாங்கன்னா நிச்சயம் நல்ல படங்கள் உருவாகும்.

தமிழீழத்தில் என்ன செய்தீர்கள்?

அங்கே கிளிநொச்சியில் ஆதவன் திரைப்படக்கல்லூரி இருக்கு. சினிமாவை சொல்லித்தர கூப்பிட்டாங்க. மூணு மாசம் போய் இருந்தேன். போரும், துப்பாக்கி வாசனையின் எச்சமும் இருந்தாலும், அங்கே சகஜவாழ்க்கை வந்துவிட்டது. தமிழ்வடிவத்தின் பலவித பிரிவுகளை ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. '1996' என்று அரைமணி நேரம் ஓடக்கூடிய படம் எடுத்தோம். நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத தமிழீழ மக்களை நடிக்கவச்சேன். அவங்க வாழ்க்கையை எடுத்து, அவர்களுக்கே பாடம் சொல்லித்தந்தேன். 'நடிப்பு என்பது' பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். நின்னு நிதானிச்சு ஆழமாக வாழ்க்கையின் தரிசனத்தை தந்த இடம் தமிழீழம். பெரிய மரியாதையோடு என்னை வைச்சு நடத்தினாங்க. இங்கேயிருந்து பயணப்படுகிற தூரத்தில் இருந்துகிட்டு, ரத்தமும் சதையுமாக வேறே மாதிரி வாழ்க்கை இருக்கு. வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி தமிழீழம்.

நீங்க ஊருக்கு போயிருந்த சமயத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சிருக்கார்...

சினிமா எடுத்த ஒரு பாமரன் மாதிரித்தான் நான் பேசுறேன். பெரிய பெரிய கொள்கைகள், யோசனைகள் சொன்னவங்களை எல்லாம் பார்த்தாச்சு. கொள்கையின்னு சொல்லாமல் இருக்கிறதே பெரிய கொள்கையாக இருக்கு. கொள்கைன்னு சொல்லிட்டு, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொல்லிட்டு குடும்பத்திற்காகவே பாடுபடுறாங்க இல்லையா, அப்படி எதுவும் சொல்லாமல் இருக்கார் இல்லையா, அதுதான் சிறந்த கொள்கை. யார் வேண்டுமானாலும் சொல்லாமல் செய்தால் நல்லது. யார் வேண்டுமானாலும் சத்தம் போடாமல் நல்லது செய்திட்டுப் போங்கள். உரக்க சத்தம் போட்டு, கூவிப் பார்த்து நமக்கே அலுத்துப்போச்சு இல்லையா.

உங்கள் மகன் 'சச்சின்' ஜான் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?

அவன் சினிமா பக்கமே போகாமல் படிப்பு உண்டு, தான் உண்டுன்னு தான் இருந்தான். ராஜாதான் அவனை இசையில் அக்கறைப்பட வைச்சார். இன்னிக்கும் ஜான் இசையில் ரொம்ப நேர்த்தியானவன். எந்தப்பாடலை கேட்டாலும், எந்த இசையை கேட்க நேர்ந்தாலும் அதனோட ஆதி அந்தம் சொல்வான். அவனோட பலம், பலவீனம் எல்லாம் நான் டைரக்டராக இருப்பதுதான். என்னை மாதிரியே படம் எடுக்கணும்னு நினைப்பாங்க. இன்னொரு மகேந்திரன் எதுக்குன்னு நினைக்கமாட்டாங்க. விஜய் படக்கதையை நான் ஜான்கிட்டே கேட்கவும் இல்லை. அவன் சொல்லவும் இல்லை. அவன் படத்தில் சில குறைகள் இருந்தது. எல்லாவற்றையும் களைந்து அவன் சிறந்த டைரக்டராக வெளிப்படுவான்னு எனக்கு எண்ணம் இருக்கு.

இனிமேல் படங்களில் சிகரெட் பிடிக்கிற காட்சி இடம்பெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்போறாங்க?

பெண்களை படங்களில் எவ்வளவு கீழ்த்தனமாக காண்பிக்க முடியுமோ, அவ்வளவும் கூச்சப்படாமல் செய்கிறோம். டபுள்மீனிங், எல்லா குளோசப்பும் தொப்புளை நோக்கிப் போகுது. படங்களில் ஏராளமாக வன்முறையை அனுமதிக்கிறோம். ஆனால் நமக்கு என்னடா என்றால் புகைபிடிக்கக்கூடாது. ஒரு சர்வாதிகார நாட்டில் கூட இதுமாதிரி ஒரு சட்டம் கொண்டு வரமாட்டாங்க. மதுக்கடைகளை திறந்து வைச்சிருக்கோம். ஆனால் குடி குடியைக்கெடுக்கும் என்ற வாசகம். எங்கே பார்த்தாலும் சிகரெட் வகைவகையாய் கிடைக்கும். ஆனால் சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது. நிஜமாகவே சட்டம் போடுகிற ஆட்சியாளர்களை நினைச்சால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

இப்ப இருக்கிற இயக்குநர்களைப் பற்றிச் சொல்லுங்க?

பாலாகிட்டே இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவரைப்பருங்க புரடியூசராக மாறிக்கிட்டு இருக்கார். அதையும் தப்புச்சொல்ல முடியாது. நல்ல பெயரை கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கலாம். சேரன் இன்னிக்கும் தனித்தன்மையோடு செயல்படுகிறார். இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில் இதுவே பெரிய விஷயம். எஸ்.ஜே.சூர்யா பண்றது செக்ஸ் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. மூடி மறைச்சு, மூடி மறைச்சு என்னத்தைக் கண்டோம். அதை அவர் அழகுணர்ச்சியோடு செய்தால் போதும். ஆனால் அவர் எல்லாத்தையும் ஈஸியாக எடை போடுகிறார். நடிக்கிறதை விட டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக வெளிப்படுவார். நல்ல கமர்ஷியல் படங்கள் செய்வது கஷ்டம். கே.எஸ்.ரவிக்குமார் அந்த விதத்தில் நேர்த்தி. அவரும் ரஜினியும் பிரிஞ்சதது மனசுக்கு கஷ்டமாக இருக்கு. இரண்டு பேரும் நல்ல காம்பினேஷன். கமர்ஷியல் சினிமாவில் ரவிக்குமார், ரஜினி காம்பினேஷன் அவ்வளவு கச்சிதம். ரஜினியை 100 சதவீதம் புரிந்தவர் ரவிக்குமார். ரஜினிக்கேற்ற மாதிரி நான் கூட கச்சிதமாக படம் பண்ணலை. இதை சாதாரணமாக படம் பார்க்கிற பாமரனாகப் பேசுறேன். டிக்கெட் வாங்கி படம் பார்க்கிற ஆளாகத்தான் பேசுறேன்.

இன்றைய நடிகர்களை யாரைப்பிடிச்சிருக்கு?

கார்த்திக் மாதிரி சிறந்த ரஸீபீமீக்ஷீஜீறீணீஹ் பண்ற நடிகர் கிடையாது. அவர் இப்ப வில்லனாகப் பண்றாராம். சரி, அதில் கூட வித்தியாசம் காட்டுவார். அமிதாப்பச்சன் மாதிரி இன்னும் இருபது வருஷம் கழிச்சு விக்ரம் வருவார்னு தோணும். எல்லா வேடங்களையும் அவரால் செய்ய முடியும். விஜய் வேறு வகை. அவரையும் குழந்தகளுக்கு பிடிக்குது. அவர் ரொம்ப மெனக்கெடாமல் மனசை கொள்ளை அடிச்சிட்டுப் போய்விடுவார். நம்பிக்கை அளிக்கிற இன்னொரு வரவு சூர்யா. எனக்கென்னவோ ஹீரோக்களை விட காமெடியன்களை மெச்சத்தோணும். தமிழ்நாட்டு காமெடியன்களை நாம் கொண்டாடணும். ரொம்ப நாளாக சிரிச்சு கைதட்டி அவங்களை மறந்திட்டு வர்றோம்.

குஷ்புவும், சுகாசினியும் ஏற்படுத்திய பிரச்சினைகள்...

எப்பவும் செய்தியில் அடிபடணும்னு சில பேர் நினைக்கிறாங்க, அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி, யாராவது குதர்க்கமாகப் பேசினால், நாம் சகித்துக்கொண்டே இருப்போம். இந்த மாதிரி பப்ளிசிட்டி தேடுகிறவர்களை பற்றி என்ன அபிப்பிராயம் சொல்ல.

குமுதம்

நா.கதிர்வேலன்,

தகவல் மூலம்- நிதர்சனம்.கொம்

Link to comment
Share on other sites

வாழ்க்கையை கற்றுக்கொடுக்கின்ற பூமி நமது தாயகம் என்று சொல்லி பெருமையடைய வைத்திருக்கின்றார் இயக்குனார் மகேந்திரன்.

தகவல்களை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் மேகநாதன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.