Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூவரையும் தூக்கிலிட வேண்டும்: மத்திய அரசு

Featured Replies

மூவரையும் தூக்கிலிட வேண்டும்: மத்திய அரசு பதில் மனு

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிட உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராஜீவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தங்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருந்துவிட்டு, பிறகு நிராகரித்திருப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இவர்களின் மனுவிற்கு 8 வார காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், மனுவின் மீதான தீர்ப்பு அளிக்கப்படும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் நேர் நின்ற கூடுதல் தலைமை வழக்குரைஞர் எம்.இரவீந்திரன், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிடுவதே சரியான வழிமுறையாகும் என்றும், இதில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் வாதிட்டார்.

அதுமட்டுமின்றி, மூவரின் மனு மீதான விசாரணையை தமிழ்நாட்டில் இருந்து வேறொரு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை சுட்டிக்காட்டிய மத்திய அரசு வழக்குரைஞர் இரவீந்திரன், உச்ச நீதிமன்றம் அந்த மனு மீது தீர்ப்பு வழங்கும்வரை விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூவர் மனு மீதான விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று மட்டுமே மத்திய அரசு வழக்குரைஞர் வாதிட்டுள்ளார். அவர்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுக்காலம் கழித்து நிராகரித்ததற்கு காரணம் என்ன என்பதைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webduni...111028021_1.htm

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

என்னே மனிதாபிமானம்

என்னே ஒரு கொலைவெறி பிடித்த காந்தி தேசம்???

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட வேண்டும் மத்திய அரசு வாதம்.

28 அக்டோபர் 2011

மூவரின் தூக்கை ரத்து செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் தேவை - வைகோ.

GTN.special_CI.jpg

மூவரின் தூக்கிற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் பதிலோடு இன்று மனு விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘‘தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருப்பவர்கள் எத்தனை முறை வேண்டுமென்றாலும் கருணை மனுவைத் தாக்கல் செய்யலாம்.இது அரசியல் சட்டம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமை 11 ஆண்டுகாலம் கழித்து அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகக் கருதுகிறோம். அதனால்தான் மத்திய அரசு இப்படி ஒரு வழக்கு நடைபெறுவதையே விரும்பவில்லை. இந்த மூவரின் உயிர்காக்க தமிழக சட்டமன்ற தீர்மானம் வரவேற்ககத் தக்கது. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் நளினியின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது அமைச்சரவைத் தீர்மானத்தினால்தான் ஒரு கைதியின் தூக்கை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அமைச்சரவைக்கு உண்டு என்னும் நிலையில் தமிழக அமைச்சரவை மூவரின் தூக்கை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்’ என்று பேசினார் வைகோ.

பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட வேண்டும் மத்திய அரசு வாதம்.

சென்னை உயர் நீதிமன்றில் தன்னிடம் கோரப்பட்ட பதிலுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலடவேண்டும் என்றே தனது வாதத்தை முன்வைத்துள்ளது மத்திய அரசு.

ராஜிவ் கொலை வழக்கில் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மூவரின் தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராம்ஜெட்மலானி ஆஜரான நிலையில் அந்த வழக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்குக் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு இன்று பதிலளித்துள்ளது மத்திய அரசு. அந்தப்பதிலில் // ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை பெற்றுள்ள மூவரும் குற்றம் புரிந்தவர்கள். இவர்கள் மூவருமே ஜனாதிபதியிடம் கருணை காட்டுமாறு கோரியிருந்தனர் ஜனாதிபதி அவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து விட்ட நிலையில் அவர்கள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்// என்று வாதிட்டார். மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 29 _ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

மகிந்தா, கிட்லர் மாதிரி பேசுபவர்கள் குரல்வளைகளை நெரித்து கொலைசெய்து அடக்க பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கும், இறைவன் கண்களில் இந்தத் தலைப்பு கண்களில் படாததேனோ......

இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கும், இறைவன் கண்களில் இந்தத் தலைப்பு கண்களில் படாததேனோ......

இந்தியாவிற்கு வக்காலத்து வாங்கும் எவரும் எல்லா விடயத்திற்கும் வக்காலத்து வாங்குவதில்லை தவறையும் சுட்டிக்காட்டி கொண்டும் உண்மையான தவறுகளை ஒப்புக்கொண்டும் தான் இருக்கிறோம் என்று தாழ்மையோடு தேவையின்றி மூக்கை நுழைத்து தெரிவித்து கொள்கிறேன்

இந்த தூக்கு தண்டனை விடயத்தில் கூட பல மாற்று கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன . எனினும் அவற்றில் எனக்கு உடன்பாடு இல்லாததால் இந்த விடயத்தில் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்க விரும்பவில்லை . நான் சேம் சைடு கோல் நிலைமையில் தான் உள்ளேன் . என்னைபோல பலர் உள்ளனர் . நன்றி

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்

இது தமிழில் உள்ள குறள். இதுபோல வட மொழிகளில் எதுவும் இல்லையோ என்னவோ ???????????

எதற்கு எடுத்தாலும் பிடிவாதம் பிடித்தே அலைகிறது எங்கள் மத்திய அரசு . என்ன செய்வது . எது எப்படியிருந்தாலும் மத்திய அரசை எதிர்த்து எந்த தமிழனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே கடந்த ஐந்து வருடங்களில் கசப்பான யதார்த்தமாக உள்ளது

தமிழ் அரசியல் வாதிகள் அனைவரும் நடிகர்களே என்பதும் தற்போது மீண்டும் நிருபிக்க பட உள்ளது போல தற்போதைய நிலைமை உள்ளது ( உள்ளாட்சி வெற்றிக்கு பின்னர் தமிழக அரசின் போக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது )

இப்போது தமிழர்கள் ஆண்டவனை மட்டுமே நம்ப வேண்டிய காலம் வந்து விட்டது . ஏனெனில் ஆண்டவன் மட்டுமே கண்ணுக்கு புலப்படாதவர் . கண்ணுக்கு புலப்படும் மனிதர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களுக்கு துரோகமும் துயரமும் தொல்லையும் தான் கொடுக்கின்றனர்

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு வக்காலத்து வாங்கும் எவரும் எல்லா விடயத்திற்கும் வக்காலத்து வாங்குவதில்லை தவறையும் சுட்டிக்காட்டி கொண்டும் உண்மையான தவறுகளை ஒப்புக்கொண்டும் தான் இருக்கிறோம் என்று தாழ்மையோடு தேவையின்றி மூக்கை நுழைத்து தெரிவித்து கொள்கிறேன்

இந்த தூக்கு தண்டனை விடயத்தில் கூட பல மாற்று கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன . எனினும் அவற்றில் எனக்கு உடன்பாடு இல்லாததால் இந்த விடயத்தில் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்க விரும்பவில்லை . நான் சேம் சைடு கோல் நிலைமையில் தான் உள்ளேன் . என்னைபோல பலர் உள்ளனர் . நன்றி

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்

இது தமிழில் உள்ள குறள். இதுபோல வட மொழிகளில் எதுவும் இல்லையோ என்னவோ ???????????

எதற்கு எடுத்தாலும் பிடிவாதம் பிடித்தே அலைகிறது எங்கள் மத்திய அரசு . என்ன செய்வது . எது எப்படியிருந்தாலும் மத்திய அரசை எதிர்த்து எந்த தமிழனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே கடந்த ஐந்து வருடங்களில் கசப்பான யதார்த்தமாக உள்ளது

தமிழ் அரசியல் வாதிகள் அனைவரும் நடிகர்களே என்பதும் தற்போது மீண்டும் நிருபிக்க பட உள்ளது போல தற்போதைய நிலைமை உள்ளது ( உள்ளாட்சி வெற்றிக்கு பின்னர் தமிழக அரசின் போக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது )

இப்போது தமிழர்கள் ஆண்டவனை மட்டுமே நம்ப வேண்டிய காலம் வந்து விட்டது . ஏனெனில் ஆண்டவன் மட்டுமே கண்ணுக்கு புலப்படாதவர் . கண்ணுக்கு புலப்படும் மனிதர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களுக்கு துரோகமும் துயரமும் தொல்லையும் தான் கொடுக்கின்றனர்

தமிழ் பைத்தியம் , உங்கள் கதையை பார்த்தால் ..... கடந்த ஐந்து வருடமாகத்தான்.... தமிழனுக்கு பிரச்சினை போலுள்ளது.

நீங்கள் , அம்மா கட்சியா?

உங்கள் கருத்துக்கு நன்றி.

தமிழ் பைத்தியம் , உங்கள் கதையை பார்த்தால் ..... கடந்த ஐந்து வருடமாகத்தான்.... தமிழனுக்கு பிரச்சினை போலுள்ளது.

நீங்கள் , அம்மா கட்சியா?

உங்கள் கருத்துக்கு நன்றி.

பிரச்னை என்பது மனிதன் மறையும் வரை கூடவே வருவதுதான்

ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக மட்டுமே தமிழர் மற்றும் தமிழர் கூற்று அனைத்தும் சிறிதும் மதிக்க படாமல் மிதிக்க பட்டு கொண்டு இருக்கிறது என கூற வந்தேன் .

  • தொடங்கியவர்

நூறு மில்லியன்கள் தமிழர்கள் இருந்தும் இவ்வாறு நாங்கள் அவதிப்படுவதற்கு காரணம் - ஒரு தலைமை இல்லாமையே.

இனப்பற்றுள்ள, துணிவுள்ள ஒரு தலைமை இருந்தால் உலகத்தமிழினம் ஒன்றுபடும், பலப்படும். அதன்மூலம் எமது இனத்தின் பெறுமதியும் கூடும்( currency of the nation).

அந்தக்காலம் மீண்டும் வரும்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.