Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜொள்ளு பூசாரி கை நீளவே பெண்களே தந்தனர் செருப்படி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனுமான் கோயிலில் ஒரு பெண்ணின் கையை பிடித்து தவறாக நடக்க முயன்ற பூசாரியை, கோயில் வெளியே இழுத்துப்போட்டு, பெண்களே செருப்படி தந்தனர்.

ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் முதாப்பள்ளி என்ற பகுதியில் பிரபலமான அனுமான் கோயில் உள்ளது. அங்கு பூசாரியாக இருப்பவர் சேகர். வயது 35. கோயிலுக்கு முக்கிய விசேஷ நாட்களில், பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

உள்ளூரில் பெண்கள் அடிக்கடி கோயிலுக்கு வருவர். அப்படி வந்து கொண்டிருந்தவர் தான் இந்த 25 வயது பெண். அவர் கணவர், சமீபத்தில் தான் துபாயில் வேலை கிடைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவர் பற்றிய விவரம் எல்லாம் அடிக்கடி பூசாரியிடம் சொல்லி, கடவுளிடம் வேண்டிக்கொண்டு கிளம்புவார்.

இப்படி பழக்கத்தை வைத்துக்கொண்ட பூசாரியிடம், திடீர் என்று "ஜொள்ளு' பூதம் கிளம்பிவிட்டது போலும். குங்குமம் தருவது போல, அடிக்கடி கையை பிடிப்பார். அதனால் நெளிந்து போய்விடுவார் பெண். ஏதேச்சையாகத்தான் இப்படி நடக்கிறது என்று நினைத்திருந்தார் பெண். ஆனால், கையை தொட்டும் எதுவும் மறுப்பு சொல்லவில்லையே என்று அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தார்.

அனுமான் பிரசாதம் என்று சொல்லி அடிக்கடி, வடைகளை கொண்டு கொடுத்துவிட்டு, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க நேரம் பார்த்தார். ஒரு நாள், குடிக்க தண்ணீர் கேட்டு, திரும்பி வரும் போது, பெண்ணை கட்டிப்பிடித்து விட்டார்.

பெண் கத்தவே, பூசாரி, கமுக்கமாக வெளியில் தப்பிச்சென்று விட்டார். இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று போலீசில் புகார் செய்தார் பெண். ஆனால், போலீசாரிடம் பூசாரி சரிகட்டவே, அவர்கள் புகாரை எடுக்கவே இல்லை.

இதை அறிந்த பெண், சிலரின் உதவியோடு, உள்ளூர் பெண்கள் அமைப்பான "ஸ்வசக்தி'யிடம் புகார் செய்தார். அவ்வளவு தான், அந்த பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லாம் திரண்டு, கோயிலில் இருந்து பூசாரியை இழுத்து வந்து விட்டனர். கோயில் வாசலில் நிறுத்தி, ஆளாளுக்கு செருப்படி தந்தனர்.

இந்த சம்பவத்தை பார்த்த ஆண்கள் பலரும் விக்கித்துப் போய்விட்டனர். பூசாரியை அடிப்பதை தடுக்கவில்லை. பெரும் பதட்டம் காணப்படவே போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் பூசாரி தப்பி ஒடிவிட்டார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Thanks:Dinamalar........

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் செ(ரு)ப்படி வித்தை!! :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து கோவில் ஒன்றில் மணி ஜய்யர் என்ற புூசாரி இருக்கின்றார். அவரும் உப்படித் தான் திருநீறு வைக்கின்ற சாட்டில் பெண்களின் கையைக் கிள்ளுவாராம்.

அதனால் பலர் அவரைக் கிள்ளுமணி ஜய்யர் என்று தான் கேலி பண்ணுவார்கள்.

நீண்ட காலமா பாக்கிறம்.. பெண்கள் செருப்பதைத் தவிர கெவியா ஒன்றாலும் அடிக்கிறாங்க இல்ல..அதாலதான் இப்படி ஆக்களிட ஜொள்ளுக் குறையாம இருக்குது..! :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலமா பாக்கிறம்.. பெண்கள் செருப்பதைத் தவிர கெவியா ஒன்றாலும் அடிக்கிறாங்க இல்ல..அதாலதான் இப்படி ஆக்களிட ஜொள்ளுக் குறையாம இருக்குது..! :wink:  :P

இப்ப உறுட்டுக்கட்டையாலும் அடிக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள்!! :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் என்ன அய்டியா கொடுக்கிறிங்களா? :oops: :oops: :twisted: :evil:

யோவ் என்ன அய்டியா கொடுக்கிறிங்களா?  :oops:  :oops:  :twisted:  :evil:

பின்ன ஜொள்ளுப் பாட்டிக்கு வாளி வைக்கவா சொல்லுறேள்..! :wink: :)

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன ஜொள்ளுப் பாட்டிக்கு வாளி வைக்கவா சொல்லுறேள்..! :wink: :)

வாளி காணுமோ? :wink:

நீண்ட காலமா பாக்கிறம்.. பெண்கள் செருப்பதைத் தவிர கெவியா ஒன்றாலும் அடிக்கிறாங்க இல்ல..அதாலதான் இப்படி ஆக்களிட ஜொள்ளுக் குறையாம இருக்குது..! :wink:  :P

இப்படி செருப்பாலை அடிச்ச நிறையப்பேர் அந்தப் பெடியனைத்தான் லவ் பண்ணி சுத்தித் திரிஞ்சதை கண்டிருக்கிறன் அப்ப அவங்களும் ஒரு ஜடியாவோடைதான் காயம் வராமல் அடிக்கிறாங்கள் போலக் கிடக்கு.............

இப்படி செருப்பாலை அடிச்ச நிறையப்பேர் அந்தப் பெடியனைத்தான் லவ் பண்ணி சுத்தித் திரிஞ்சதை கண்டிருக்கிறன் அப்ப அவங்களும் ஒரு ஜடியாவோடைதான் காயம் வராமல் அடிக்கிறாங்கள் போலக் கிடக்கு.............

இப்படியும் ஒரு ஐடியா வைச்சிருக்காங்களோ...எல்லாம் தூய்ஸ் சொன்னது போல செ(ரு)ப்படி வித்தை..கண்டியளோ..! :wink: :)

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் வாங்குகின்ற அடிகளுக்கெல்லாம் செருப்பு ஒரு தூசு!!

அடிவாங்காத நாளே கிடையாது!

அடி வாங்கினாலும் ஓடினது கிடையாது!

இல்லையா முகத்தார்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது என்னவோ உண்மை தான்ப்பா....மோதல்லா தான் காதலே ஆரம்பிச்சு இருக்கு....

அது என்னவோ உண்மை தான்ப்பா....மோதல்லா தான் காதலே ஆரம்பிச்சு இருக்கு....

முகத்தார் அதுதானே சொல்லுறார்... மோதலில ஆரம்பிச்சு மோதிக்கிட்டே இருக்குன்னு...- முத்தார் லோ..நியூட்டனின் முதலாம் லோ வோட ஒத்துப் போகுது கொஞ்சம்- வாழ்க்கைப்பாடம் கேட்டுப் படிக்கனும்..புத்தகத்திலா எழுதுவாங்க..! :wink: :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதான் படிச்சிட்டு இருக்கோம்ல............ :)

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் அதுதானே சொல்லுறார்... மோதலில ஆரம்பிச்சு மோதிக்கிட்டே இருக்குன்னு...- முத்தார் லோ..நியூட்டனின் முதலாம் லோ வோட ஒத்துப் போகுது கொஞ்சம்- வாழ்க்கைப்பாடம் கேட்டுப் படிக்கனும்..புத்தகத்திலா எழுதுவாங்க..! :wink: :)

தடைகள் அதிகமாச்சு என்றால் மெதுவாக ஓய்விற்கு வந்திடும் என்று சொல்கின்றார்களே! :idea:

அதான் படிச்சிட்டு இருக்கோம்ல............ :)

தெரிஞ்சுக்கிறமில்ல...சுண்டல் கடல போடேக்கையே..! :wink: :lol:

முகத்தார் வாங்குகின்ற அடிகளுக்கெல்லாம் செருப்பு ஒரு தூசு!!

அடிவாங்காத நாளே கிடையாது!

அடி வாங்கினாலும் ஓடினது கிடையாது!

இல்லையா முகத்தார்!!

15 வயசிலை முதலிலை வாங்கினது இப்பவும் தொடருது என்ன செய்ய இருந்தாலும் என்ரை அனுபவத்திலை ஒரு ஜடியா கழட்ட முடியாத (சான்டில்ஸ்) செருப்பு போட்டவர்களுடன் பகிடி விட்டிங்க எண்டா செருப்பை கழட்ட முன்னம் ஓடியிடலாம் எல்லோ......... (இப்பிடியான ஜடியாக்கே தனிய காசு வாங்க வேணும்)

  • கருத்துக்கள உறவுகள்

15 வயசிலை முதலிலை வாங்கினது இப்பவும் தொடருது என்ன செய்ய இருந்தாலும் என்ரை அனுபவத்திலை ஒரு ஜடியா கழட்ட முடியாத (சான்டில்ஸ்) செருப்பு போட்டவர்களுடன் பகிடி விட்டிங்க எண்டா செருப்பை கழட்ட முன்னம் ஓடியிடலாம் எல்லோ......... (இப்பிடியான ஜடியாக்கே தனிய காசு வாங்க வேணும்)

அவர்கள் எங்களை வேகமாகத் துரத்தினால்??

அவர்கள் எங்களை வேகமாகத் துரத்தினால்??

வாழைப்பழத் தோலை..வீசிட்டு ஓடுங்க..! :wink: :)

வாழைப்பழத் தோலை..வீசிட்டு ஓடுங்க..!

அதுசரி............. இனி வீட்டைவிட்டு வெளிக்கிடேக்கை வாழைப்பழத்தையும் கொண்டு போக வேண்டியதுதான்.....

புசாரிகள் என்ற பெயரில் இருக்கும் இந்த ஆசாமிகள் எப்ப தான் திருத்தப்போகின்றார்களோ தெரியாது? :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதான் கைவசம் நான் எண்ணெய் கொண்டு போறனான் திறத்தினா ஊத்திட்டு ஒட....... :oops: :oops:

கிருலப்பனையை கலக்கும் "கிறீஸ்" ஆசாமிகள்

மடக்கிப் பிடிக்கும் முயற்சியில் பொது மக்கள்

கொழும்பு கிருலப்பனையில் கிறீஸ் தடவிக் கொண்டு இரவில் நடமாடித் திரியும் மர்மக் கும்பல் ஒன்றினால் பெண்களிடம் பெரும் பீதியேற்பட்டுள்ளது.

இக் கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளவர்களில் ஒரு சிலர் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை இக்கும்பலை மடக்கி பிடிக்க ஆண்கள் இரவில் காவல்காத்து வருவதாகவும் பொலிஸார் கிறீஸ் ஆசாமிகளை பிடிக்க வலை விரித்துள்ளரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரகாலமாக கிருலப்பனையிலுள்ள பல இடங்களில் நால்வர் அடங்கிய கிறீஸ் ஆசாமிகளிடம் பெண்கள் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மேலும் சிலர் நடந்தவற்றை வெளியே தெரிவிக்க முடியாமலுள்ளனர்.

குறிப்பாக தனிமையில் இருக்கும் பெண்களும் தங்குமிடங்களில் உள்ள பெண்களுமே அதிகளவில் கிறீஸ் ஆசாமிகளின் சேஷ்டைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

உடம்பு முழுவதும் கிறீஸை பூசிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் நடமாடி வரும் இக் கும்பல் எவரிடமாவது மாட்டிக் கொள்ள நேரிட்டால் தப்பிச் செல்ல கைகளில் கத்தியை வைத்திருப்பதாகவும் அதே கத்தியை காட்டி மாட்டிக் கொள்ளும் பெண்களிடம் தமது சேஷ்டைகளை புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெண்களை பெரும்பாடாய் படுத்தி வரும் இக் கும்பலைச் சேர்ந்த ஆசாமிகளை பிடிப்பதில் கடந்த இரண்டு தினங்களாக கிருலப்பனை பொது மக்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதும் இந்த விடயம் குறித்து தெரிந்து கொண்ட அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்

தினக்குரல்

அதான் கைவசம் நான் எண்ணெய் கொண்டு போறனான் திறத்தினா ஊத்திட்டு ஒட.......

தம்பி சுண்டல் இப்பிடி ஒரு செய்தி அவுஸ்ரேலியா பேப்பர்களிலை வராமல் பாத்துக்கொள்ளும்.....அப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருலப்பனையை கலக்கும் "கிறீஸ்" ஆசாமிகள்

மடக்கிப் பிடிக்கும் முயற்சியில் பொது மக்கள்

கொழும்பு கிருலப்பனையில் கிறீஸ் தடவிக் கொண்டு இரவில் நடமாடித் திரியும் மர்மக் கும்பல் ஒன்றினால் பெண்களிடம் பெரும் பீதியேற்பட்டுள்ளது.

இக் கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளவர்களில் ஒரு சிலர் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை இக்கும்பலை மடக்கி பிடிக்க ஆண்கள் இரவில் காவல்காத்து வருவதாகவும் பொலிஸார் கிறீஸ் ஆசாமிகளை பிடிக்க வலை விரித்துள்ளரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரகாலமாக கிருலப்பனையிலுள்ள பல இடங்களில் நால்வர் அடங்கிய கிறீஸ் ஆசாமிகளிடம் பெண்கள் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மேலும் சிலர் நடந்தவற்றை வெளியே தெரிவிக்க முடியாமலுள்ளனர்.

குறிப்பாக தனிமையில் இருக்கும் பெண்களும் தங்குமிடங்களில் உள்ள பெண்களுமே அதிகளவில் கிறீஸ் ஆசாமிகளின் சேஷ்டைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

உடம்பு முழுவதும் கிறீஸை பூசிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் நடமாடி வரும் இக் கும்பல் எவரிடமாவது மாட்டிக் கொள்ள நேரிட்டால் தப்பிச் செல்ல கைகளில் கத்தியை வைத்திருப்பதாகவும் அதே கத்தியை காட்டி மாட்டிக் கொள்ளும் பெண்களிடம் தமது சேஷ்டைகளை புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெண்களை பெரும்பாடாய் படுத்தி வரும் இக் கும்பலைச் சேர்ந்த ஆசாமிகளை பிடிப்பதில் கடந்த இரண்டு தினங்களாக கிருலப்பனை பொது மக்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதும் இந்த விடயம் குறித்து தெரிந்து கொண்ட அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்

தினக்குரல்

தம்பி சுண்டல் இப்பிடி ஒரு செய்தி அவுஸ்ரேலியா பேப்பர்களிலை வராமல் பாத்துக்கொள்ளும்.....அப்பு

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவை கலக்கும் எண்ணை ஆசாமி.......

:lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.