Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தாமதமாவதால் ஈழத்தமிழருக்கு இந்திய நேரடி நிதியுதவி; ஒவ்வொருவருக்கும் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தாமதமாவதால் ஈழத்தமிழருக்கு இந்திய நேரடி நிதியுதவி; ஒவ்வொருவருக்கும் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானம்

news

50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி இலங்கை ரூபா மதிப்பில் ஒவ் வொருவருக்கும் தலா ரூபா 5 இலட்சத்து 50 ஆயிரம் (இந்திய ரூபா மதிப்பில் 2 லட்சத்து 45 ஆயிரம்) வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதற்காக ரூபா 1,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்க ளுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்திய அரசு உறுதியளித்தது. இதன்படி தமிழர் பகுதிகளான மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் பகுதி யில் 1,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டில் அங்கு 52 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளன எனக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், பயனாளிகளுக்கு நேரடியாகப் பணத்தை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டது என்றும் அதன் ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருக்கிறோம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பணத்தை நேரடியாக வழங்குமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால், இத் திட்டத்தைச் செயற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.கடந்த ஒக்டோபரில் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுச் செயலர் ரஞ்\ன் மத்தாய், இந்திய அரசு சார்பில் தமிழர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

home

03 நவெம்பர் 2011, வியாழன் 9:25 மு.ப

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=58388626903693911

இரஞ்சன் மத்தாய் வந்து சென்றதன் பின்னராக எடுக்கப்பட்ட நல்ல முடிவு போல தென்படுகின்றது.

"பணத்தை நேரடியாக வழங்குமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால்"

வீ டாக கொடுத்தால் அதில் பெரும் பாகம் இந்தியன் கொம்பனிகளுக்கும் போகிரதி. காசு என்றால் டக்கி மிச்சம் எல்லாவற்றையும் கவனித்து கொள்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

"பணத்தை நேரடியாக வழங்குமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால்"

வீ டாக கொடுத்தால் அதில் பெரும் பாகம் இந்தியன் கொம்பனிகளுக்கும் போகிரதி. காசு என்றால் டக்கி மிச்சம் எல்லாவற்றையும் கவனித்து கொள்வார்.

ஊரிலுள்ள சிங்கள இராணுவம் எடுத்த மிச்சம் தான் டக்ளஸின் கைக்கு வந்து சேரும்.

முழுமையாக அந்தப் பணம், பாதிக்கப்பட்ட்வர்களுக்கு கிடைக்கின்றதா... என்பதையும் இந்தியா உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வார 50 தில் 50 வரவே வராது............

அது இலங்கைக்கு கொடுத்த கணக்கில் இந்திய வங்கியில் இருந்து வந்து மீண்டும் இந்தியா போகும் மற்ற 50 இந்த நடக்திட்கு உதவிய உள்ளூர் காரருக்கு போகும் அனால் ஒரு ௫ பேரை அழைத்து எதோ கொஞ்சம் கொடுத்து சில போட்டோ எடுத்து தமது பதிரிக்கியில் போடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வீட்டுத் திட்டத்திற்கு நேரடியாக நிதி வழங்க இந்தியா முடிவு!

Published on November 5, 2011-8:28 am

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதாக இந்திய அரசு உறுதியளித்திருந்த நிலையில் இப்போது அத்திட்டத்திற்கு நேரடியாக நிதியுதவியை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தமிழர் பகுதிகளான மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்தியா திட்டமிட்டிருந்தது.

கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் பகுதியில் 1,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஓராண்டில் அங்கு 52 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் பயனாளிகளுக்கு நேரடியாக பணத்தை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இலங்கை ரூபாய் மதிப்பில் ஒவ்வொருவருக்கும் தலா 5.5 இலட்சம் ரூபா (இந்திய ரூபா மதிப்பில் 2.45 இலட்சம்) வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்தத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டது. அதன் ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருக்கிறோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். பணத்தை நேரடியாக வழங்குமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால் இத் திட்டத்தை செயற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபரில் இலங்கை சென்ற இந்திய மத்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாய் இந்திய அரசு சார்பில் தமிழர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்திருந்தார்.

http://www.saritham.com/?p=39983

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.